Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى * - تەرجىمىلەر مۇندەرىجىسى


مەنالار تەرجىمىسى سۈرە: ياسىن   ئايەت:
اِنَّ اَصْحٰبَ الْجَنَّةِ الْیَوْمَ فِیْ شُغُلٍ فٰكِهُوْنَ ۟ۚ
36.55. நிச்சயமாக சுவனவாசிகள் அந்த நாளில் தாங்கள் காணும் நிலையான அருட்கொடை மற்றும் மகத்தான வெற்றியினால் மற்றவர்களைப் பற்றி சிந்திக்க நேரமற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் மகிழ்ச்சியடைந்தோராக அதில் திளைத்திருப்பார்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
هُمْ وَاَزْوَاجُهُمْ فِیْ ظِلٰلٍ عَلَی الْاَرَآىِٕكِ مُتَّكِـُٔوْنَ ۟ۚ
36.56. அவர்களும் அவர்களின் மனைவியரும் பசுமையான சுவனத்தின் நிழலில் கட்டிலின் மீது சாய்ந்திருப்பார்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
لَهُمْ فِیْهَا فَاكِهَةٌ وَّلَهُمْ مَّا یَدَّعُوْنَ ۟ۚ
36.57. அந்த சுவனத்தில் அவர்களுக்கு திராட்சை, அத்தி, மாதுளம் ஆகிய நல்ல பலவகையான பழங்களும் அவர்கள் விரும்பும் சுவையான அத்தனை இன்பங்களும் உண்டு. அவர்கள் வேண்டுவதெல்லாம் அவர்களுக்குக் கிடைக்கும்.
ئەرەپچە تەپسىرلەر:
سَلٰمٌ ۫— قَوْلًا مِّنْ رَّبٍّ رَّحِیْمٍ ۟
36.58. அந்த அருட்கொடைகளுக்கு மேலாக கருணை மிகுந்த இறைவனிடமிருந்து அவர்களுக்கு சலாமும் கூறப்படும். அவன் அவர்களுக்கு சலாம் கூறிவிட்டால் அவர்கள் அமைதியின் அனைத்து வடிவங்களையும் பெற்றுவிடுவார்கள். அவர்கள் மிக உயர்ந்த முகமனைப் பெறுவார்கள். அதற்கு மேலாக எந்த முகமனும் இல்லை.
ئەرەپچە تەپسىرلەر:
وَامْتَازُوا الْیَوْمَ اَیُّهَا الْمُجْرِمُوْنَ ۟
36.59. மறுமை நாளில் இணைவைப்பாளர்களிடம் கூறப்படும்: “நம்பிக்கையாளர்களை விட்டு தனித்து நில்லுங்கள். அவர்களின் பண்புகளும் உங்களின் பண்புகளும் அவர்கள் பெறும் கூலியும் நீங்கள் பெறும் கூலியும் வேறுவேறாக இருப்பதால் அவர்கள் உங்களுடன் நிற்பது தகுதியற்றதாகும்.
ئەرەپچە تەپسىرلەر:
اَلَمْ اَعْهَدْ اِلَیْكُمْ یٰبَنِیْۤ اٰدَمَ اَنْ لَّا تَعْبُدُوا الشَّیْطٰنَ ۚ— اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟ۙ
36.60. ”ஆதமின் மக்களே! நீங்கள் நிராகரித்து பல வகையான பாவங்கள் புரிந்து ஷைத்தானுக்குக் கட்டுப்படாதீர்கள். நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகிரங்கமான பகைவனாவான்” என்று என் தூதர்களின் மூலம் ஏவி நான் உங்களுக்கு உறுதிமொழி வழங்கவில்லையா? தனது பகைமையைத் தெளிவாக வெளிப்படுத்தும் தனது எதிரிக்கு ஒரு அறிவாளி எவ்வாறு கட்டுப்படலாம்?!
ئەرەپچە تەپسىرلەر:
وَّاَنِ اعْبُدُوْنِیْ ؔؕ— هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟
36.61. -ஆதமின் மக்களே!- நீங்கள் என்னை மட்டுமே வணங்குங்கள். எனக்கு யாரையும் இணையாக்காதீர்கள். என்று உங்களுக்கு நான் ஏவியிருந்தேன். ஏனெனில் என்னை மட்டுமே வணங்கி எனக்குக் கட்டுப்படுவதுதான் என் திருப்தியின் பக்கமும் , சுவனத்தின் பக்கமும் கொண்டு செல்லும் நேரான வழியாகும். ஆயினும் நான் ஏவியபடி, உங்களிடம் உறுதிமொழி எடுத்தபடி நீங்கள் செயல்படவில்லை.
ئەرەپچە تەپسىرلەر:
وَلَقَدْ اَضَلَّ مِنْكُمْ جِبِلًّا كَثِیْرًا ؕ— اَفَلَمْ تَكُوْنُوْا تَعْقِلُوْنَ ۟
36.62. ஷைத்தான் உங்களில் அதிகமானோரை வழிகெடுத்துவிட்டான். இறைவனை மட்டுமே வணங்குமாறும் அவனுக்கு மட்டுமே கட்டுப்படுமாறும் உங்களின் பகிரங்க எதிரியான ஷைத்தானுக்குக் கட்டுப்படாமல் எச்சரிக்கையாக இருக்குமாறும் உங்களுக்குக் கட்டளையிடும் அறிவு உங்களுக்கு இருக்கவில்லையா?
ئەرەپچە تەپسىرلەر:
هٰذِهٖ جَهَنَّمُ الَّتِیْ كُنْتُمْ تُوْعَدُوْنَ ۟
36.63. நிராகரிப்பின் காரணமாக உலகில் உங்களுக்கு எச்சரிக்கப்பட்ட நரகம் இதுதான். அது உங்களை விட்டும் மறைவாக இருந்தது. இன்றைய தினம் நீங்கள் அதனை நேரடியாகக் காண்கிறீர்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
اِصْلَوْهَا الْیَوْمَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ ۟
36.64. உங்களின் உலக வாழ்வில் அல்லாஹ்வை நிராகரித்ததனால் இன்றைய தினம் அதில் நுழைந்து அதன் வெப்பத்தை அனுபவியுங்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
اَلْیَوْمَ نَخْتِمُ عَلٰۤی اَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَاۤ اَیْدِیْهِمْ وَتَشْهَدُ اَرْجُلُهُمْ بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
36.65. இன்றைய தினம் அவர்களின் வாய்களுக்கு முத்திரையிட்டு விடுவோம். தங்களின் நிராகரிப்பான செயல்கள் மற்றும் அவர்கள் செய்த பாவங்களை மறுத்து பேச முடியாத ஊமைகளாகி விடுவார்கள். அவர்கள் உலகில் செய்து கொண்டிருந்தது குறித்து அவர்களின் கைகள் நம்மிடம் பேசும். அவர்கள் செய்து கொண்டிருந்த பாவங்கள், அதன்பால் நடந்து சென்றவைகள் குறித்து அவர்களின் கால்கள் நம்மிடம் சாட்சி கூறும்.
ئەرەپچە تەپسىرلەر:
وَلَوْ نَشَآءُ لَطَمَسْنَا عَلٰۤی اَعْیُنِهِمْ فَاسْتَبَقُوا الصِّرَاطَ فَاَنّٰی یُبْصِرُوْنَ ۟
36.66. அவர்களின் பார்வையை நாம் போக்க நாடியிருந்தால் அதனைப் போக்கியிருப்போம். அவர்கள் பார்க்க முடியாமல் சென்றிருப்பார்கள். அவர்கள் சுவனத்தின்பால் செல்லும் பாதையைக் கடந்து செல்ல போட்டி போடுவார்கள் . அவர்களின் பார்வை பறிபோன நிலையில் அவர்களால் அதனை கடக்க முடியாது.
ئەرەپچە تەپسىرلەر:
وَلَوْ نَشَآءُ لَمَسَخْنٰهُمْ عَلٰی مَكَانَتِهِمْ فَمَا اسْتَطَاعُوْا مُضِیًّا وَّلَا یَرْجِعُوْنَ ۟۠
36.67. நாம் அவர்களின் தோற்றத்தை மாற்றி அவர்களை அவர்களின் இடத்திலேயே ஆக்க நாடியிருந்தால் அவர்களின் தோற்றத்தை மாற்றி அவர்களை அவர்களுடையே இடத்திலே ஆக்கியிருப்போம். அப்போது முன்னால் அல்லது பின்னால் செல்ல முடியாமல் அதே இடத்திலேயே இருந்துவிடுவார்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
وَمَنْ نُّعَمِّرْهُ نُنَكِّسْهُ فِی الْخَلْقِ ؕ— اَفَلَا یَعْقِلُوْنَ ۟
36.68. நாம் மனிதர்களில் யாருடைய வாழ்நாளை நீடிக்கிறோமோ அவர்களை பலவீனமான நிலைக்கு திரும்பச் செய்கின்றோம். அவர்கள் தமது சிந்தனைகளால் சிந்தித்து, நிச்சயமாக இந்த உலகம் நிரந்தரமானதல்ல. மறுமையின் வீடே நிரந்தரமான வீடு என்பதை உணர்ந்து கொள்ள மாட்டார்களா?
ئەرەپچە تەپسىرلەر:
وَمَا عَلَّمْنٰهُ الشِّعْرَ وَمَا یَنْۢبَغِیْ لَهٗ ؕ— اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ وَّقُرْاٰنٌ مُّبِیْنٌ ۟ۙ
36.69. நாம் முஹம்மதுக்கு கவிதையை கற்றுக்கொடுக்கவில்லை. அது அவருக்குத் தகுமானதன்று. நிச்சயமாக அவர் கவிஞர் என நீங்கள் வாதிடுவது சரி என்பதற்கு கவிதை அவரது இயல்பு அல்ல. அவரது இயல்புக்கு அவசியமானதும் அல்ல. அவருக்கு நாம் கற்றுக்கொடுத்தது நினைவூட்டலும் சிந்திக்கக்கூடியவர்களுக்குத் தெளிவான குர்ஆனுமாகும்.
ئەرەپچە تەپسىرلەر:
لِّیُنْذِرَ مَنْ كَانَ حَیًّا وَّیَحِقَّ الْقَوْلُ عَلَی الْكٰفِرِیْنَ ۟
36.70. அது யாருடைய உள்ளம் அகவொளி பெற்று உயிருடன் உள்ளதோ அவருக்கு எச்சரிக்கை செய்வதற்காக. அவர் தான் அதனைக்கொண்டு பயனடைவார். (அது) நிராகரிப்பாளர்களின் மீது வேதனையை உறுதிப்படுத்துவதற்காகவும்தான். ஏனெனில், தூதர் அனுப்பப்பட்டு, அழைப்பு அவர்களை சென்றடைந்து அவர்களுக்கு எதிராக ஆதாரம் நிலைநாட்டப்பட்டுவிட்டது. சாட்டுப்போக்குக் கூறுவதற்கு எக்காரணமும் இல்லை.
ئەرەپچە تەپسىرلەر:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• في يوم القيامة يتجلى لأهل الإيمان من رحمة ربهم ما لا يخطر على بالهم.
3. மறுமை நாளில் நம்பிக்கையாளர்களுக்காக அவர்கள் கற்பனை செய்தும் பார்த்திராத இறைவனின் கருணை வெளிப்படும்.

• أهل الجنة مسرورون بكل ما تهواه النفوس وتلذه العيون ويتمناه المتمنون.
1. சுவனவாசிகள் தங்களின் மனம்விரும்பும், கண்களுக்கு குளிர்ச்சியான,விரும்பக்கூடியவர்கள் விரும்பக்கூடிய ஒவ்வொன்றையும் பெற்று மகிழ்ச்சியில் திளைத்திருப்பார்கள்.

• ذو القلب هو الذي يزكو بالقرآن، ويزداد من العلم منه والعمل.
2. உயிருள்ள) உள்ளம் உடையவன்தான் குர்ஆனைக் கொண்டு தூய்மையடைந்து மென்மேலும் அதனைக் கற்று செயற்படுவான்.

• أعضاء الإنسان تشهد عليه يوم القيامة.
3. மனிதனுடைய உறுப்புகள் மறுமை நாளில் அவனுக்கு எதிராக சாட்சி சொல்லும்.

 
مەنالار تەرجىمىسى سۈرە: ياسىن
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى - تەرجىمىلەر مۇندەرىجىسى

قۇرئان تەتقىقاتى تەپسىر مەركىزى چىقارغان.

تاقاش