Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى * - تەرجىمىلەر مۇندەرىجىسى


مەنالار تەرجىمىسى سۈرە: ساپپات   ئايەت:
مَا لَكُمْ ۫— كَیْفَ تَحْكُمُوْنَ ۟
37.154. இணைவைப்பாளர்களே! உங்களுக்கு என்னவாயிற்று? அல்லாஹ்வுக்குப் பெண் பிள்ளைகளையும் உங்களுக்கு ஆண் பிள்ளைகளையும் எடுத்து, இவ்வாறு அநியாயமாக தீர்ப்பளிக்கின்றீர்களே?
ئەرەپچە تەپسىرلەر:
اَفَلَا تَذَكَّرُوْنَ ۟ۚ
37.155. உங்களின் இந்த தீய கொள்கை தவறு என்பதை சிந்தித்துப் பார்க்க மாட்டீர்களா? நிச்சயமாக நீங்கள் சிந்தித்திருந்தால் இக்கருத்தைக் கூறியிருக்க மாட்டீர்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
اَمْ لَكُمْ سُلْطٰنٌ مُّبِیْنٌ ۟ۙ
37.156. அல்லது உங்களிடம் இதற்கு வேதத்திலிருந்தோ தூதரிடமிருந்தோ தெளிவான ஆதாரம், சான்று இருக்கின்றதா?
ئەرەپچە تەپسىرلەر:
فَاْتُوْا بِكِتٰبِكُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
37.157. உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கான ஆதாரத்தைத் தாங்கியுள்ள வேதத்தைக் கொண்டு வாருங்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
وَجَعَلُوْا بَیْنَهٗ وَبَیْنَ الْجِنَّةِ نَسَبًا ؕ— وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ اِنَّهُمْ لَمُحْضَرُوْنَ ۟ۙ
37.158. வானவர்கள் அல்லாஹ்வின் மகள்கள் என்று எண்ணி இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வுக்கும் அவர்களை விட்டும் மறைவான வானவர்களுக்கும் இடையே உறவுமுறையை ஏற்படுத்திவிட்டார்கள். இணைவைப்பாளர்களை அல்லாஹ் விசாரணைக்காக கொண்டுவருவான் என்பதை வானவர்கள் அறிந்து வைத்துள்ளனர்.
ئەرەپچە تەپسىرلەر:
سُبْحٰنَ اللّٰهِ عَمَّا یَصِفُوْنَ ۟ۙ
37.159. இணைவைப்பாளர்கள் வர்ணிக்கும் பிள்ளை, இணை, மற்றும் ஏனைய பொருத்தமற்ற பண்புகளை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.
ئەرەپچە تەپسىرلەر:
اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟
37.160. ஆனால் மனத்தூய்மையுள்ள அல்லாஹ்வுடைய அடியார்களைத் தவிர. நிச்சயமாக அவர்கள் அவனுக்கு தகுதியான மகத்துவமும் பூரணத்துவமும் மிக்க பண்புகளைத் தவிர வேறெதனைக் கொண்டும் அவனை வர்ணிக்க மாட்டார்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
فَاِنَّكُمْ وَمَا تَعْبُدُوْنَ ۟ۙ
37.161. -இணைவைப்பாளர்களே!- நிச்சயமாக நீங்களும் அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வணங்கும் தெய்வங்களும்
ئەرەپچە تەپسىرلەر:
مَاۤ اَنْتُمْ عَلَیْهِ بِفٰتِنِیْنَ ۟ۙ
37.162. சத்திய மார்க்கத்தை விட்டு யாரையும் வழிகெடுக்க முடியாது.
ئەرەپچە تەپسىرلەر:
اِلَّا مَنْ هُوَ صَالِ الْجَحِیْمِ ۟
37.163. ஆயினும் யாரைக் குறித்து அவர் நரகவாசி என்று அல்லாஹ் முடிவு செய்துவிட்டானோ அவரைத் தவிர. எனவே நிச்சயமாக அவன் விடயத்தில் அல்லாஹ்வின் விதி செல்லுபடியாகி நிராகரித்து நரகம் செல்கிறான். உங்களுக்கும் உங்கள் தெய்வங்களுக்கும் அதனைச் செய்வதற்கு எந்த ஆற்றலும் இல்லை.
ئەرەپچە تەپسىرلەر:
وَمَا مِنَّاۤ اِلَّا لَهٗ مَقَامٌ مَّعْلُوْمٌ ۟ۙ
37.164. வானவர்கள் தாங்கள் அல்லாஹ்விற்கு தம் அடிமைத்துவத்தைத் தெளிவுபடுத்தியவர்களாகவும், இணைவைப்பாளர்கள் எண்ணுவதை விட்டும் தம்மை விடுவித்தவர்களாகவும் கூறுவார்கள்: “எங்களிலுள்ள ஒவ்வொருவருக்கும் அல்லாஹ்வை வணங்குவதில், அவனுக்குக் கட்டுப்படுவதில் ஒரு குறிப்பிட்ட இடம் இருக்கின்றது.”
ئەرەپچە تەپسىرلەر:
وَّاِنَّا لَنَحْنُ الصَّآفُّوْنَ ۟ۚ
37.165,166. நிச்சயமாக -நாங்கள் வானவர்கள்- அல்லாஹ்வை வணங்குவதற்காக, வழிப்படுவதற்காக வரிசையாக நிற்கக்கூடியவர்கள். திட்டமாக அவனுக்குப் பொருத்தமில்லாத பண்புகளை, வர்ணனைகளை விட்டும் அவனை தூய்மைப்படுத்துவார்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
وَاِنَّا لَنَحْنُ الْمُسَبِّحُوْنَ ۟
37.165,166. நாங்கள் அல்லாஹ்வை வணங்குவதற்காக வரிசையாக நிற்கக்கூடியவர்கள். அவனுக்குப் பொருத்தமில்லாத பண்புகளைவிட்டும் அவனது தூய்மையைப் பறைசாற்றக்கூடியவர்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
وَاِنْ كَانُوْا لَیَقُوْلُوْنَ ۟ۙ
37.167-170. நிச்சயமாக மக்காவைச் சேர்ந்த இணைவைப்பாளர்கள் முஹம்மது தூதராக அனுப்பப்படுவதற்கு முன்னர், “முன்னோர்களுக்கு வழங்கப்பட்ட தவ்ராத் போன்ற ஒரு வேதம் எங்களுக்கும் வழங்கப்பட்டிருந்தால் நாங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்கியிருப்போம்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் பொய்யர்களாவர். ஏனெனில் முஹம்மது அவர்களிடம் குர்ஆனைக் கொண்டு வந்துள்ளார். ஆனால் அவர்கள் அதனை நிராகரித்துவிட்டார்கள். மறுமை நாளில் தங்களுக்காக காத்திருக்கும் கடுமையான வேதனையை அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
لَوْ اَنَّ عِنْدَنَا ذِكْرًا مِّنَ الْاَوَّلِیْنَ ۟ۙ
37.167-170. மக்காவைச் சேர்ந்த இணைவைப்பாளர்கள் முஹம்மது தூதராக அனுப்பப்படுவதற்கு முன்னர், “முன்னோர்களுக்கு வழங்கப்பட்ட தவ்ராத் போன்ற ஒரு வேதம் எங்களுக்கும் வழங்கப்பட்டிருந்தால் நாங்கள் அல்லாஹ்வை மட்டுமே வழங்கியிருப்போம்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் பொய்யர்களாவர். ஏனெனில் முஹம்மது அவர்களிடம் குர்ஆனைக் கொண்டு வந்துள்ளார். ஆனால் அவர்கள் அதனை நிராகரித்துவிட்டார்கள். மறுமைநாளில் தங்களுக்காக காத்திருக்கும் கடுமையான வேதனையை அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
لَكُنَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟
37.167-170. மக்காவைச் சேர்ந்த இணைவைப்பாளர்கள் முஹம்மது தூதராக அனுப்பப்படுவதற்கு முன்னர், “முன்னோர்களுக்கு வழங்கப்பட்ட தவ்ராத் போன்ற ஒரு வேதம் எங்களுக்கும் வழங்கப்பட்டிருந்தால் நாங்கள் அல்லாஹ்வை மட்டுமே வழங்கியிருப்போம்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் பொய்யர்களாவர். ஏனெனில் முஹம்மது அவர்களிடம் குர்ஆனைக் கொண்டு வந்துள்ளார். ஆனால் அவர்கள் அதனை நிராகரித்துவிட்டார்கள். மறுமைநாளில் தங்களுக்காக காத்திருக்கும் கடுமையான வேதனையை அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
فَكَفَرُوْا بِهٖ فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟
37.167-170. மக்காவைச் சேர்ந்த இணைவைப்பாளர்கள் முஹம்மது தூதராக அனுப்பப்படுவதற்கு முன்னர், “முன்னோர்களுக்கு வழங்கப்பட்ட தவ்ராத் போன்ற ஒரு வேதம் எங்களுக்கும் வழங்கப்பட்டிருந்தால் நாங்கள் அல்லாஹ்வை மட்டுமே வழங்கியிருப்போம்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் பொய்யர்களாவர். ஏனெனில் முஹம்மது அவர்களிடம் குர்ஆனைக் கொண்டு வந்துள்ளார். ஆனால் அவர்கள் அதனை நிராகரித்துவிட்டார்கள். மறுமைநாளில் தங்களுக்காக காத்திருக்கும் கடுமையான வேதனையை அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا الْمُرْسَلِیْنَ ۟ۚۖ
37.171-173. நம் தூதர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள சான்றுகளாலும் பலத்தாலும் அவர்கள் தங்கள் எதிரிகளை வென்று விடுவார்கள், அல்லாஹ்வின் பாதையில் அவனுடைய வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக போரிடும் நம் படையினருக்கே வெற்றி என்ற நமது தூதர்களுக்கான நம்முடைய வார்த்தை முந்திவிட்டது.
ئەرەپچە تەپسىرلەر:
اِنَّهُمْ لَهُمُ الْمَنْصُوْرُوْنَ ۪۟
37.171-173. நம் தூதர்களுக்கு நாம் வழங்கியுள்ள சான்றுகளாலும் பலத்தாலும் அவர்கள் மேலோங்கி விடுவார்கள், அல்லாஹ்வின் பாதையில் அவனுடைய வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக போரிடும் நம் படையினருக்கே வெற்றி என்ற நமது தூதர்களுக்கான நம்முடைய வார்த்தை முந்திவிட்டது.
ئەرەپچە تەپسىرلەر:
وَاِنَّ جُنْدَنَا لَهُمُ الْغٰلِبُوْنَ ۟
37.171-173. நம் தூதர்களுக்கு நாம் வழங்கியுள்ள சான்றுகளாலும் பலத்தாலும் அவர்கள் மேலோங்கி விடுவார்கள், அல்லாஹ்வின் பாதையில் அவனுடைய வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காக போரிடும் நம் படையினருக்கே வெற்றி என்ற நமது தூதர்களுக்கான நம்முடைய வார்த்தை முந்திவிட்டது.
ئەرەپچە تەپسىرلەر:
فَتَوَلَّ عَنْهُمْ حَتّٰی حِیْنٍ ۟ۙ
37.174. -தூதரே!- பிடிவாதம் கொண்ட இந்த இணைவைப்பாளர்களை அல்லாஹ் அறிந்த தவணையில் வேதனை அவர்களை வந்தடையும் நேரம் வரை புறக்கணித்து விடுவீராக.
ئەرەپچە تەپسىرلەر:
وَّاَبْصِرْهُمْ فَسَوْفَ یُبْصِرُوْنَ ۟
37.175. வேதனை அவர்கள் மீது இறங்கும் போது அவர்களை நோக்குவீராக.கண்ணால் பார்ப்பது அவர்களுக்கு எந்தப் பயனும் அளிக்காத அச்சந்தர்ப்பத்தில் அவர்களும் பார்ப்பார்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
اَفَبِعَذَابِنَا یَسْتَعْجِلُوْنَ ۟
37.176. இந்த இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வின் வேதனையை விரைவாக வேண்டுகிறார்களா?
ئەرەپچە تەپسىرلەر:
فَاِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَآءَ صَبَاحُ الْمُنْذَرِیْنَ ۟
37.177. அல்லாஹ்வின் வேதனை அவர்கள் மீது இறங்கி விட்டால் அந்த காலைப் பொழுது அவர்களுக்கு மிக மோசமான காலைப் பொழுதாக இருக்கும்.
ئەرەپچە تەپسىرلەر:
وَتَوَلَّ عَنْهُمْ حَتّٰی حِیْنٍ ۟ۙ
37.178. -தூதரே!- அல்லாஹ் தண்டனையைக்கொண்டு தீர்ப்பளிக்கும் வரை அவர்களைப் புறக்கணித்துவிடுவீராக.
ئەرەپچە تەپسىرلەر:
وَّاَبْصِرْ فَسَوْفَ یُبْصِرُوْنَ ۟
37.179. நீர் பார்த்துக் கொள்ளும். அவர்களும் தங்கள் மீது இறங்கப்போகும் இறைவேதனையை, தண்டனையைக் காண்பார்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
سُبْحٰنَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا یَصِفُوْنَ ۟ۚ
37.180. -முஹம்மதே!- பலத்தின் அதிபதியாகிய உம் இறைவன் இணைவைப்பாளர்கள் வர்ணிக்கும் குறைபாடான பண்புகளை விட்டும் தூய்மையானவன்.
ئەرەپچە تەپسىرلەر:
وَسَلٰمٌ عَلَی الْمُرْسَلِیْنَ ۟ۚ
37.181. கண்ணியமிக்க அவனுடைய தூதர்கள் மீது அல்லாஹ்வின் வாழ்த்தும் புகழும் உண்டாகட்டும்.
ئەرەپچە تەپسىرلەر:
وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟۠
37.182. புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே அதற்குத் தகுதியானவன். அவன் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவன். அவனைத்த விர அவர்களுக்கு வேறு இறைவன் இல்லை.
ئەرەپچە تەپسىرلەر:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• سُنَّة الله نصر المرسلين وورثتهم بالحجة والغلبة، وفي الآيات بشارة عظيمة؛ لمن اتصف بأنه من جند الله، أنه غالب منصور.
1. தூதர்களுக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும் ஆதாரங்களைக் கொண்டும் வெற்றியைக் கொண்டும் உதவி செய்வது அல்லாஹ்வின் வழிமுறையாகும். அல்லாஹ்வின் படையினர் என்ற பண்பைக்கொண்டு வர்ணிக்கப்படுபவர் வெற்றிபெறுவார் என்று மகத்தான நற்செய்தி இந்த வசனங்களில் அடங்கியுள்ளது.

• في الآيات دليل على بيان عجز المشركين وعجز آلهتهم عن إضلال أحد، وبشارة لعباد الله المخلصين بأن الله بقدرته ينجيهم من إضلال الضالين المضلين.
2. “இணைவைப்பாளர்களாலும் அவர்களின் தெய்வங்களாலும் ஒருவரைக்கூட வழிகெடுக்க முடியாது என்பதை தெளிவுபடுத்தி இவ்வசனங்களில் ஆதாரம் உள்ளது. நிச்சயமாக அல்லாஹ் தன்னை மட்டுமே வணங்கக்கூடிய அடியார்களை தன் வல்லமையால் வழிகெடுக்கக்கூடிய வழிகேடர்களின் வழிகேட்டிலிருந்து பாதுகாக்கிறான்” என்னும் நற்செய்தியையும் இவ்வசனங்கள் கூறுகின்றன.

 
مەنالار تەرجىمىسى سۈرە: ساپپات
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى - تەرجىمىلەر مۇندەرىجىسى

قۇرئان تەتقىقاتى تەپسىر مەركىزى چىقارغان.

تاقاش