Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى * - تەرجىمىلەر مۇندەرىجىسى


مەنالار تەرجىمىسى سۈرە: نىسا   ئايەت:
وَاِنِ امْرَاَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوْزًا اَوْ اِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَیْهِمَاۤ اَنْ یُّصْلِحَا بَیْنَهُمَا صُلْحًا ؕ— وَالصُّلْحُ خَیْرٌ ؕ— وَاُحْضِرَتِ الْاَنْفُسُ الشُّحَّ ؕ— وَاِنْ تُحْسِنُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرًا ۟
4.128. ஒரு பெண் தன் கணவன் தன்மீது விருப்பமின்றி தன்னைப் புறக்கணித்துவிடுவான் என்று அஞ்சினால் - செலவுசெய்தல், இரவுதங்குதல் போன்ற - கடமையாக்கப்பட்ட தனது சில உரிமைகளை மனைவி விட்டுக்கொடுத்து இருவரும் சமாதானம் செய்துகொள்வதில் இருவர்மீதும் எந்தக்குற்றமும் இல்லை. விவாகரத்து செய்வதைவிட சமாதானம் செய்வதே சிறந்ததாகும். உள்ளங்கள் பேராசை, கஞ்சத்தனம் கொண்டதாகவே படைக்கப்பட்டுள்ளன. எனவேதான் அந்த உள்ளம் தன் உரிமைகளை விட்டுக்கொடுக்க விரும்பாது. கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல், நன்மை செய்தல் ஆகிய பண்புகளுக்கு தங்களின் மனதைப் பண்படுத்தி இத்தீயகுணத்தை மாற்றிகொள்ள வேண்டும். உங்களின் எல்லா விவகாரங்களிலும் நீங்கள் நல்லமுறையில் நடந்துகொண்டால், அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சினால் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்யக்கூடியவற்றை நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
ئەرەپچە تەپسىرلەر:
وَلَنْ تَسْتَطِیْعُوْۤا اَنْ تَعْدِلُوْا بَیْنَ النِّسَآءِ وَلَوْ حَرَصْتُمْ فَلَا تَمِیْلُوْا كُلَّ الْمَیْلِ فَتَذَرُوْهَا كَالْمُعَلَّقَةِ ؕ— وَاِنْ تُصْلِحُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟
4.129. கணவர்களே! நீங்கள் என்னதான் விரும்பினாலும் உள்ளத்தில் ஏற்படும் அன்பில் உங்கள் மனைவியரிடையே உங்களால் முழுமையாக நீதிசெலுத்த முடியாது. சில சமயங்களில் அது உங்களின் விருப்பத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கும். ஆனால் நீங்கள் நேசிக்காத பெண்ணை முழுமையாகப் புறக்கணித்து- கணவனின் உரிமையைப் பெறாதவளாகவும் வேறு திருமணமும் செய்ய முடியாதவளாகவும் - விட்டுவிடாதீர்கள். உங்கள் மனம் விரும்பாத மனைவியரின் உரிமையை அளிப்பதற்கு உங்களை நீங்கள் தயார்படுத்தி உங்களிடையே சமாதானம் செய்துகொண்டு, அந்த மனைவியின் விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சினால் - நிச்சயமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் உங்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
ئەرەپچە تەپسىرلەر:
وَاِنْ یَّتَفَرَّقَا یُغْنِ اللّٰهُ كُلًّا مِّنْ سَعَتِهٖ ؕ— وَكَانَ اللّٰهُ وَاسِعًا حَكِیْمًا ۟
விவாகரத்து அல்லது குல்உ மூலம் தம்பதியினர் பிரிந்துவிட்டால் அவர்களின் இருவரின் தேவையையும் அல்லாஹ் தன் விசாலமான அருளிலிருந்து பூர்த்திசெய்வான். அல்லாஹ் விசாலமான அருளும் கருணையும் உடையவன். தனது திட்டமிடலிலும் நிர்ணயித்திலும் ஞானமுள்ளவன்.
ئەرەپچە تەپسىرلەر:
وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَلَقَدْ وَصَّیْنَا الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَاِیَّاكُمْ اَنِ اتَّقُوا اللّٰهَ ؕ— وَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَكَانَ اللّٰهُ غَنِیًّا حَمِیْدًا ۟
4.131. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை, அவையிரண்டிற்கு இடையிலுள்ளவையின் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. வேதம் வழங்கப்பட்ட யூதர்களிடமும் கிருஸ்தவர்களிடமும் உங்களிடமும் நாம் வாக்குறுதி வாங்கினோம். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருங்கள் என்று. நீங்கள் இந்த வாக்குறுதிக்கு மாறாகச் செயல்பட்டால் உங்களுக்கு நீங்களேதான் தீங்கிழைத்துக் கொள்கிறீர்கள். உங்களின் கீழ்ப்படிதலைவிட்டும் அல்லாஹ் தேவையற்றவன். வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றின் ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. அவன் படைப்புகள் அனைவரையும்விட்டு தேவையற்றவன். தன் அனைத்துப் பண்புகளுக்காகவும் செயல்களுக்காகவும் புகப்படுபவன்.
ئەرەپچە تەپسىرلەر:
وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَكَفٰی بِاللّٰهِ وَكِیْلًا ۟
4.132. வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றின் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன்தான் வழிபடுவதற்குத் தகுதியானவன். படைப்புகளின் விவகாரங்கள் அனைத்தையும் நிர்வகிப்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
ئەرەپچە تەپسىرلەر:
اِنْ یَّشَاْ یُذْهِبْكُمْ اَیُّهَا النَّاسُ وَیَاْتِ بِاٰخَرِیْنَ ؕ— وَكَانَ اللّٰهُ عَلٰی ذٰلِكَ قَدِیْرًا ۟
4.133. மனிதர்களே! அவன் நாடினால் உங்கள் அனைவரையும் அழித்துவிட்டு, அவனுக்குக் கட்டுப்படுகின்ற, அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படாத நீங்கள் அல்லாத வேறொரு மக்களைக் கொண்டு வருவான். அல்லாஹ் இதற்கு சக்தியுடையவனாகவே இருக்கிறான்.
ئەرەپچە تەپسىرلەر:
مَنْ كَانَ یُرِیْدُ ثَوَابَ الدُّنْیَا فَعِنْدَ اللّٰهِ ثَوَابُ الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؕ— وَكَانَ اللّٰهُ سَمِیْعًا بَصِیْرًا ۟۠
4.134. மனிதர்களே! உங்களில் தம் செயல்களின்மூலம் இவ்வுலக நன்மையை மட்டும் விரும்புவர், அல்லாஹ்விடம்தான் இவ்வுலக நன்மையும் மறுவுலக நன்மையும் உள்ளது என்பதை அறிந்துகொள்ளட்டும். எனவே அவனிடமே ஈருலக நன்மைகளும் வேண்டப்பட வேண்டும். நீங்கள் பேசுவதை அல்லாஹ் செவியேற்கக்கூடியவனாகவும் உங்களின் செயல்களை பார்க்கக்கூடியவனாகவும் இருக்கின்றான். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
ئەرەپچە تەپسىرلەر:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• استحباب المصالحة بين الزوجين عند المنازعة، وتغليب المصلحة بالتنازل عن بعض الحقوق إدامة لعقد الزوجية.
1. பிரச்சினை ஏற்படும்போது திருமண உறவை நிலைத்திருக்கச் செய்யும்பொருட்டு ஒருவருக்கொருவர் உரிமைகளை விட்டுக் கொடுத்து கணவன், மனைவி இருவரும் சமாதானம் செய்துகொள்வதே சிறந்ததாகும்.

• أوجب الله تعالى العدل بين الزوجات خاصة في الأمور المادية التي هي في مقدور الأزواج، وتسامح الشرع حين يتعذر العدل في الأمور المعنوية، كالحب والميل القلبي.
2. கணவனின் சக்திக்குட்பட்ட உலக விவகாரங்களில் மனைவியரிடையே நீதிசெலுத்துவதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். அன்பு நேசம் போன்ற நீதிசெலுத்தமுடியாத மனரீதியான செயல்பாடுகளில் நீதமாக நடப்பது சாத்தியமற்ற கட்டங்களில் மார்க்கம் விட்டுக்கொடுத்துள்ளது.

• لا حرج على الزوجين في الفراق إذا تعذرت العِشْرة بينهما.
3. கணவன், மனைவி சேர்ந்து வாழ்வது சிரமமாக இருந்தால் இருவரும் பிரிந்துவிடுவது குற்றமாகாது.

• الوصية الجامعة للخلق جميعًا أولهم وآخرهم هي الأمر بتقوى الله تعالى بامتثال الأوامر واجتناب النواهي.
4. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருப்பதன் மூலம் அல்லாஹ்வை அஞ்சவேண்டும் என்பதே, ஆரம்பம் முதல் இறுதிவரையுள்ள அனைத்து மனிதர்களுக்குமான பொருள்செறிந்த அறிவுரையாகும்.

 
مەنالار تەرجىمىسى سۈرە: نىسا
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى - تەرجىمىلەر مۇندەرىجىسى

قۇرئان تەتقىقاتى تەپسىر مەركىزى چىقارغان.

تاقاش