قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - تەرجىمىلەر مۇندەرىجىسى


مەنالار تەرجىمىسى ئايەت: (79) سۈرە: سۈرە نىسا
مَاۤ اَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللّٰهِ ؗ— وَمَاۤ اَصَابَكَ مِنْ سَیِّئَةٍ فَمِنْ نَّفْسِكَ ؕ— وَاَرْسَلْنٰكَ لِلنَّاسِ رَسُوْلًا ؕ— وَكَفٰی بِاللّٰهِ شَهِیْدًا ۟
4.79. ஆதமுடைய மகனே! உனக்கு கிடைக்கக்கூடிய செல்வங்கள், குழந்தைகள் போன்ற இன்பங்கள் அல்லாஹ்விடமிருந்தே உனக்குக் கிடைப்பவையாகும். அது அல்லாஹ் உன்மீது பொழியும் அருளாகும். அவற்றில் உனக்கு வரக்கூடிய துன்பங்கள் நீ செய்த பாவங்களினால் ஏற்பட்ட விளைவேயாகும். தூதரே! மனிதர்கள் அனைவருக்கும் அல்லாஹ்விடமிருந்து தூதுச் செய்தியை எடுத்துரைக்கும் தூதராக நாம் உம்மை அனுப்பியுள்ளோம். அல்லாஹ்விடமிருந்து எடுத்துரைப்பவற்றில் நீர் உண்மையாளரே என்பதற்கு அல்லாஹ்வே போதுமான சாட்சியாளன். அவன் உமக்கு அதற்கான ஆதாரங்களையும் சான்றுகளையும் வழங்கியுள்ளான்.
ئەرەپچە تەپسىرلەر:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• وجوب القتال لإعلاء كلمة الله ونصرة المستضعفين، وذم الخوف والجبن والاعتراض على أحكام الله.
1. அல்லாஹ்வின் வார்த்தையை மேலோங்கச் செய்வதற்காகவும் பலவீனர்களுக்கு உதவிசெய்வதற்காகவும் போர்செய்வது கடமையாகும். பயம், கோழைத்தனம், அல்லாஹ்வின் சட்டங்களை ஆட்சேபித்தல் ஆகிய பண்புகள் இகழப்பட்டுள்ளன.

• الدار الآخرة خير من الدنيا وما فيها من متاع وشهوات لمن اتقى الله تعالى وعمل بطاعته.
2. அல்லாஹ்வை அஞ்சி, அவனுக்குக் கட்டுப்பட்டு நடப்போருக்கு இந்த உலகம் மற்றும் அதிலுள்ள இன்பங்கள் அனைத்தைக்காட்டிலும் மறுமையின் இன்பங்களே சிறந்தவையாகும்.

• الخير والشر كله بقدر الله، وقد يبتلي الله عباده ببعض السوء في الدنيا لأسباب، منها: ذنوبهم ومعاصيهم.
3.அனைத்து நலவுகளும் தீமைகளும் அல்லாஹ்வின் விதிப்படியே நிகழ்கின்றன. பாவங்கள் போன்ற சில காரணங்களினால் சில துன்பங்களைக்கொண்டு தனது அடியார்களை அல்லாஹ் இவ்வுலகில் சோதிப்பான்.

 
مەنالار تەرجىمىسى ئايەت: (79) سۈرە: سۈرە نىسا
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - تەرجىمىلەر مۇندەرىجىسى

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

تاقاش