Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى * - تەرجىمىلەر مۇندەرىجىسى


مەنالار تەرجىمىسى ئايەت: (114) سۈرە: ئەنئام
اَفَغَیْرَ اللّٰهِ اَبْتَغِیْ حَكَمًا وَّهُوَ الَّذِیْۤ اَنْزَلَ اِلَیْكُمُ الْكِتٰبَ مُفَصَّلًا ؕ— وَالَّذِیْنَ اٰتَیْنٰهُمُ الْكِتٰبَ یَعْلَمُوْنَ اَنَّهٗ مُنَزَّلٌ مِّنْ رَّبِّكَ بِالْحَقِّ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِیْنَ ۟
6.114. தூதரே! அல்லாஹ்வுடன் மற்றவர்களையும் சேர்த்து வணங்கும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நான் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை எனக்கும் உங்களுக்குமிடைய தீர்ப்பாளனாக ஏற்றுக்கொள்வது எவ்வாறு சாத்தியம்? அவன்தான் உங்கள் மீது எல்லா விஷயங்களையும் உள்ளடக்கி தெளிவுபடுத்தக்கூடிய குர்ஆனை இறக்கியுள்ளான். தவ்ராத் என்னும் வேதம் வழங்கப்பட்ட யூதர்களும் இன்ஜீல் என்னும் வேதம் வழங்கப்பட்ட கிறிஸ்தவர்களும் அவர்களின் வேதங்களில் காணப்படும் ஆதாரங்களினால் குர்ஆன் சத்தியத்தைப் பொதிந்ததாக உமக்கு அல்லாஹ்விடமிருந்து இறக்கப்படுகிறது என்பதை அறிவார்கள். நாம் உமக்கு அறிவித்தவற்றில் சந்தேகம் கொள்வோரில் ஆகிவிடாதீர்.
ئەرەپچە تەپسىرلەر:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• يجب أن يكون الهدف الأعظم للعبد اتباع الحق، ويطلبه بالطرق التي بيَّنها الله، ويعمل بذلك، ويرجو عَوْن ربه في اتباعه، ولا يتكل على نفسه وحوله وقوته.
1. சத்தியத்தைப் பின்பற்றுவதே அடியானுடைய முக்கிய இலக்காக இருக்க வேண்டும். அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ள வழிகளில் அதனைத் தேட வேண்டும். அதன்படி செயல்பட வேண்டும். அதனைப் பின்பற்றுவதற்கு அல்லாஹ்வின் உதவியையே அடியான் எதிர்பார்க்க வேண்டும். தன் மீதோ தன் ஆற்றலின் மீதோ சார்ந்திருக்கக்கூடாது.

• من إنصاف القرآن للقلة المؤمنة العالمة إسناده الجهل والضلال إلى أكثر الخلق.
2. படைப்புகளில் பொரும்பாலானவர்கள் அறியாமையிலும் வழிகேட்டிலும் உள்ளனர் என குர்ஆன் குறிப்பிடுவதன் மூலம் அறிவுள்ள சிறுபான்மையினரான முஃமின்களுக்கு நீதி வழங்கியுள்ளது.

• من سنّته تعالى في الخلق ظهور أعداء من الإنس والجنّ للأنبياء وأتباعهم؛ لأنّ الحقّ يعرف بضدّه من الباطل.
3. தூதர்களுக்கும் அவர்களைப் பின்பற்றுபவர்களுக்கும் மனித, ஜின் இனத்திலிருந்து எதிரிகள் உருவாவது படைப்பினங்களில் அல்லாஹ்வின் வழிமுறையாகும். ஏனெனில் சத்தியம், அதற்கு எதிரான அசத்தியத்தைக் கொண்டே அறியப்படுகிறது.

• القرآن صادق في أخباره، عادل في أحكامه،لا يُعْثَر في أخباره على ما يخالف الواقع، ولا في أحكامه على ما يخالف الحق.
4. குர்ஆன் தான் வழங்கும் செய்திகளில் உண்மையானது, சட்டங்களில் நீதியானது. அதன் செய்திகளில் நிதர்சனத்திற்கு மாற்றமானதையோ அதன் சட்டங்களில் சத்தியத்திற்கு மாற்றமானதையோ காணமுடியாது.

 
مەنالار تەرجىمىسى ئايەت: (114) سۈرە: ئەنئام
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى - تەرجىمىلەر مۇندەرىجىسى

قۇرئان تەتقىقاتى تەپسىر مەركىزى چىقارغان.

تاقاش