Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى * - تەرجىمىلەر مۇندەرىجىسى


مەنالار تەرجىمىسى سۈرە: تەھرىم   ئايەت:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا تُوْبُوْۤا اِلَی اللّٰهِ تَوْبَةً نَّصُوْحًا ؕ— عَسٰی رَبُّكُمْ اَنْ یُّكَفِّرَ عَنْكُمْ سَیِّاٰتِكُمْ وَیُدْخِلَكُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۙ— یَوْمَ لَا یُخْزِی اللّٰهُ النَّبِیَّ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ ۚ— نُوْرُهُمْ یَسْعٰی بَیْنَ اَیْدِیْهِمْ وَبِاَیْمَانِهِمْ یَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَتْمِمْ لَنَا نُوْرَنَا وَاغْفِرْ لَنَا ۚ— اِنَّكَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
66.8. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்கள் பாவங்களிலிருந்து உண்மையாகவே அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். உங்கள் இறைவன் உங்கள் பாவங்களைப் போக்கி மறுமை நாளில் உங்களை சுவனங்களில் பிரவேசிக்கச் செய்திடலாம். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அந்நாளில் அல்லாஹ் தூதரையும் அவரோடு நம்பிக்கைகொண்டவர்களையும் நரகத்தில் பிரவேசிக்கச்செய்து இழிவுபடுத்தமாட்டான். பாலத்தில் அவர்களுக்கு முன்னாலும் வலது புறமும் அவர்களின் ஒளி இலங்கிக்கொண்டிருக்கும். அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நாங்கள் சுவனத்தில் நுழையும்பொருட்டு எங்களின் ஒளியை பரிபூரணப்படுத்துவாயாக. பாலத்தில் ஒளி அணைந்துவிட்ட நயவஞ்சகர்களைப்போன்று நாங்கள் ஆகிவிடக்கூடாது. எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக. நிச்சயமாக நீ எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றாய். எங்களின் ஒளியை பரிபூரணப்படுத்துவதும் எங்களின் பாவங்களை மன்னிப்பதும் உன்னால் இயலாதது அல்ல.
ئەرەپچە تەپسىرلەر:
یٰۤاَیُّهَا النَّبِیُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنٰفِقِیْنَ وَاغْلُظْ عَلَیْهِمْ ؕ— وَمَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ— وَبِئْسَ الْمَصِیْرُ ۟
66.9. தூதரே! வாளைக் கொண்டு நிராகரிப்பாளர்களுடனும் நாவின் மூலமும் ஆதாரங்களை நிலைநாட்டுவதன் மூலமும் நயவஞ்சகர்களுடனும் ஜிஹாத் செய்வீராக. அவர்கள் உம்மை அஞ்சும்பொருட்டு அவர்களுடன் கடுமையாக நடந்துகொள்வீராக. மறுமை நாளில் அவர்களின் தங்குமிடம் நரகம்தான். அது அவர்கள் திரும்பக்கூடிய மோசமான இடமாகும்.
ئەرەپچە تەپسىرلەر:
ضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّلَّذِیْنَ كَفَرُوا امْرَاَتَ نُوْحٍ وَّامْرَاَتَ لُوْطٍ ؕ— كَانَتَا تَحْتَ عَبْدَیْنِ مِنْ عِبَادِنَا صَالِحَیْنِ فَخَانَتٰهُمَا فَلَمْ یُغْنِیَا عَنْهُمَا مِنَ اللّٰهِ شَیْـًٔا وَّقِیْلَ ادْخُلَا النَّارَ مَعَ الدّٰخِلِیْنَ ۟
66.10. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தவர்களுக்கு நிச்சயமாக முஃமின்களுடன் உள்ள தொடர்பின் எவ்விதப் பலனும் அளிக்காது என்பதற்கு அல்லாஹ்வின் இரு நபிமார்களான நூஹ் மற்றும் லூத் ஆகிய இருவரின் மனைவிமார்களை உதாரணம் கூறுகிறான். அவர்கள் இருவரும் நம்முடைய இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களைத் தடுத்தும் தங்களின் சமூகத்திலுள்ள நிராகரிப்பாளர்களுக்கு உதவிசெய்தும் தங்களின் கணவர்களுக்கு துரோகமிழைத்தார்கள். நம்முடைய நல்லடியார்களான இவ்விருவருக்கும் மனைவியராக இருந்தது அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை. அவர்கள் இருவரிடமும் கூறப்பட்டது: “நரகத்தில் நுழையும் நிராகரிப்பாளர்கள் மற்றும் பாவிகளுடன் சேர்ந்து நீங்களும் நுழையுங்கள்.”
ئەرەپچە تەپسىرلەر:
وَضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّلَّذِیْنَ اٰمَنُوا امْرَاَتَ فِرْعَوْنَ ۘ— اِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِیْ عِنْدَكَ بَیْتًا فِی الْجَنَّةِ وَنَجِّنِیْ مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهٖ وَنَجِّنِیْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟ۙ
66.11. அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கைகொண்டவர்கள் சத்தியத்தின் மீது உறுதியாக நிலைத்து நின்றால் நிராகரிப்பாளர்களுடனான உறவு அவர்களுக்கு எந்த தீங்கையும் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதற்கு பிர்அவ்னின் மனைவியின் நிலையை உதாரணமாகக் கூறுகிறான். அவள் கூறினாள்: “என் இறைவா! எனக்கு உன்னிடத்தில் சுவனத்தில் ஒரு வீட்டை கட்டுவாயாக. ஃபிர்அவ்னின் அடக்குமுறையிலிருந்தும் அதிகாரத்திலிருந்தும் அவனது தீய செயல்களிலிருந்தும் என்னைப் பாதுகாப்பாயாக. அவனுடைய வரம்புமீறல் மற்றும் அநியாயத்தில் அவனைப் பின்தொடர்ந்து தமக்குத் தாமே அநீதி இழைத்துக்கொண்ட அநியாயக்கார மக்களிடமிருந்து என்னைப் பாதுகாப்பாயாக.”
ئەرەپچە تەپسىرلەر:
وَمَرْیَمَ ابْنَتَ عِمْرٰنَ الَّتِیْۤ اَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِیْهِ مِنْ رُّوْحِنَا وَصَدَّقَتْ بِكَلِمٰتِ رَبِّهَا وَكُتُبِهٖ وَكَانَتْ مِنَ الْقٰنِتِیْنَ ۟۠
66.12. அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கைகொண்டவர்களுக்கு அவன் இம்ரானின் மகள் மர்யமின் நிலமையை உதாரணமாகக் கூறுகிறான். அவள் தம் கற்பை விபச்சாரத்திலிருந்து பேணிக்கொண்டாள். அல்லாஹ் ஜிப்ரீலை மர்யமுள் ஊதுமாறு கட்டளையிட்டான். எனவே அல்லாஹ்வின் வல்லமையால் மர்யம் ஈஸாவை தந்தையின்றி கருவுற்றாள். மர்யம் அல்லாஹ்வின் ஷரீஅத்துகளையும் அவன் தன் தூதர்கள்மீது இறக்கிய வேதங்களையும் உண்மைப்படுத்தினாள். அவர் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனுக்குக் கீழ்ப்படிபவர்களில் ஒருவராக இருந்தாள்.
ئەرەپچە تەپسىرلەر:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• التوبة النصوح سبب لكل خير.
1. உண்மையான முறையில் பாவமன்னிப்புக்கோருவது அனைத்து நலவுகளுக்குமான ஒரு காரணியாகும்.

• في اقتران جهاد العلم والحجة وجهاد السيف دلالة على أهميتهما وأنه لا غنى عن أحدهما.
2. அறிவு, ஆதாரம் என்பவற்றால் போராடுவதும் வாளினால் போராடுவதும் இணைந்து இடம்பெற்றிருப்பதில் அவ்விரண்டின் முக்கியத்துவமும் ஒன்றை விட்டு ஒன்று தேவையற்றிருக்க முடியாது என்பதும் புலனாகிறது.

• القرابة بسبب أو نسب لا تنفع صاحبها يوم القيامة إذا فرّق بينهما الدين.
3. மறுமை நாளில் எவரும் உறவால் அல்லது வேறு காரணத்தால் உண்டாகும் நெருக்கமானவர்களுக்கு அவர்கள் இருவரின் மார்க்கமும் வேறாக இருந்தால் பயனளிக்க முடியாது.

• العفاف والبعد عن الريبة من صفات المؤمنات الصالحات.
4. கற்பைப் பேணிக்கொள்வது, சந்தேகங்களைவிட்டும் தவிர்ந்திருப்பது நம்பிக்கைகொண்ட ஸாலிஹான பெண்களின் பண்புகளில் உள்ளவையாகும்.

 
مەنالار تەرجىمىسى سۈرە: تەھرىم
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى - تەرجىمىلەر مۇندەرىجىسى

قۇرئان تەتقىقاتى تەپسىر مەركىزى چىقارغان.

تاقاش