Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى * - تەرجىمىلەر مۇندەرىجىسى


مەنالار تەرجىمىسى ئايەت: (100) سۈرە: تەۋبە
وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِیْنَ وَالْاَنْصَارِ وَالَّذِیْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ ۙ— رَّضِیَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِیْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ— ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
9.100. தங்களின் நாட்டையும் வீடுகளையும் விட்டு விட்டு அல்லாஹ்வின்பால் புலம்பெயர்ந்தவர்களிலும் தூதருக்கு உதவி செய்த அன்சாரிகளிலும் நம்பிக்கைகொள்வதில் முந்திக்கொண்டவர்கள், மற்றும் முஹாஜிரீன்கள், அன்சாரிகள் என இரு சாராரையும் கொள்கையிலும் சொல்லிலும் செயலிலும் அழகிய முறையில் பின்பற்றியவர்கள் ஆகியோரின் விஷயத்தில் அல்லாஹ் திருப்தியடைந்துவிட்டான். அவர்களின் கீழ்ப்படிதலை ஏற்றுக் கொண்டான். அவர்களுக்கு அவன் வழங்கிய மகத்தான வெகுமதியின் காரணமாக அவர்கள் அவனைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்காக அவன் சுவனங்களை தயார்படுத்தி வைத்துள்ளான். அதன் மாளிகைகளுக்குக் கீழ் ஆறுகள் ஓடும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இந்த வெகுமதியே மகத்தான வெற்றியாகும்.
ئەرەپچە تەپسىرلەر:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• فضل المسارعة إلى الإيمان، والهجرة في سبيل الله، ونصرة الدين، واتباع طريق السلف الصالح.
1. ஈமான் கொள்வதன்பால் விரைதல், அல்லாஹ்வின் பாதையில் புலம்பெயர்தல், மார்க்கத்திற்கு உதவி செய்தல், முன்சென்ற நல்லவர்களின் ஸலபுகளின் வழியைப் பின்பற்றுதல் ஆகியவற்றின் சிறப்பு தெளிவாகிறது.

• استئثار الله عز وجل بعلم الغيب، فلا يعلم أحد ما في القلوب إلا الله.
2. மறைவானவற்றின் ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் மட்டுமே அறிவான்.

• الرجاء لأهل المعاصي من المؤمنين بتوبة الله عليهم ومغفرته لهم إن تابوا وأصلحوا عملهم.
3. பாவத்தில் ஈடுபட்ட இறை நம்பிக்கையாளர்கள் பாவமன்னிப்புக் கோரி தமது செயல்களை சீராக்கினால் அவர்களது பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்கலாம்.

• وجوب الزكاة وبيان فضلها وأثرها في تنمية المال وتطهير النفوس من البخل وغيره من الآفات.
4. ஸகாத் கட்டாயக் கடமையாகும் என்பதுடன் அதன் சிறப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் செல்வத்தில் வளர்ச்சி மற்றும் கஞ்சத்தனம், ஏனைய ஆபத்தானவற்றிலிருந்து உள்ளங்களைப் பரிசுத்தப்படுத்தல் போன்ற அதன் தாக்கங்களும் கூறப்பட்டுள்ளன.

 
مەنالار تەرجىمىسى ئايەت: (100) سۈرە: تەۋبە
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى - تەرجىمىلەر مۇندەرىجىسى

قۇرئان تەتقىقاتى تەپسىر مەركىزى چىقارغان.

تاقاش