Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - تامىيلىيچە تەرجىمىسى - ئۆمەر شەرىپ * - تەرجىمىلەر مۇندەرىجىسى

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

مەنالار تەرجىمىسى سۈرە: ئەنكەبۇت   ئايەت:
وَلَمَّا جَآءَتْ رُسُلُنَاۤ اِبْرٰهِیْمَ بِالْبُشْرٰی ۙ— قَالُوْۤا اِنَّا مُهْلِكُوْۤا اَهْلِ هٰذِهِ الْقَرْیَةِ ۚ— اِنَّ اَهْلَهَا كَانُوْا ظٰلِمِیْنَ ۟ۚۖ
நமது (வானவத்) தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தியுடன் வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் இந்த ஊரில் வசிப்பவர்களை அழிக்கப் போகிறோம். நிச்சயமாக இதில் வசிப்பவர்கள் தீயவர்களாக இருக்கிறார்கள்.”
ئەرەپچە تەپسىرلەر:
قَالَ اِنَّ فِیْهَا لُوْطًا ؕ— قَالُوْا نَحْنُ اَعْلَمُ بِمَنْ فِیْهَا ؗ— لَنُنَجِّیَنَّهٗ وَاَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗ ؗ— كَانَتْ مِنَ الْغٰبِرِیْنَ ۟
(இப்ராஹீம்) கூறினார்: “நிச்சயமாக அதில் (-அவ்வூரில் நபி) லூத் இருக்கிறார்.” அவர்கள் கூறினார்கள்: அதில் உள்ளவர்களை நாங்கள் நன்கறிந்தவர்கள். நிச்சயமாக அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் பாதுகாப்போம், அவருடைய மனைவியைத் தவிர. அவள் (அழிவில்) தங்கிவிடக் கூடியவர்களில் ஆகிவிடுவாள்.
ئەرەپچە تەپسىرلەر:
وَلَمَّاۤ اَنْ جَآءَتْ رُسُلُنَا لُوْطًا سِیْٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَّقَالُوْا لَا تَخَفْ وَلَا تَحْزَنْ ۫— اِنَّا مُنَجُّوْكَ وَاَهْلَكَ اِلَّا امْرَاَتَكَ كَانَتْ مِنَ الْغٰبِرِیْنَ ۟
இன்னும், நமது (வானவத்) தூதர்கள் (நபி) லூத்திடம் வந்தபோது அவர் (தம்மிடம் வந்த வானவர்)களினால் கவலைப்பட்டார். இன்னும், அ(ந்த வான)வர்களால் அவர் மன நெருக்கடிக்கு உள்ளானார். (வானவர்கள்) கூறினார்கள்: “பயப்படாதீர்! இன்னும், கவலைப்படாதீர்! நிச்சயமாக நாம் உம்மையும் உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தையும் பாதுகாப்போம். (அழிவில்) தங்கிவிடுபவர்களில் அவள் ஆகிவிடுவாள்.”
ئەرەپچە تەپسىرلەر:
اِنَّا مُنْزِلُوْنَ عَلٰۤی اَهْلِ هٰذِهِ الْقَرْیَةِ رِجْزًا مِّنَ السَّمَآءِ بِمَا كَانُوْا یَفْسُقُوْنَ ۟
நிச்சயமாக நாம் இந்த ஊர்வாசிகள் மீது, அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறிக்கொண்டு இருந்ததால் வானத்திலிருந்து (கடுமையான) ஒரு தண்டனையை இறக்குவோம்.
ئەرەپچە تەپسىرلەر:
وَلَقَدْ تَّرَكْنَا مِنْهَاۤ اٰیَةً بَیِّنَةً لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟
சிந்தித்து புரிகின்ற மக்களுக்கு திட்டவட்டமாக அதில் தெளிவான ஓர் அத்தாட்சியை நாம் விட்டுவைத்துள்ளோம்.
ئەرەپچە تەپسىرلەر:
وَاِلٰی مَدْیَنَ اَخَاهُمْ شُعَیْبًا ۙ— فَقَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ وَارْجُوا الْیَوْمَ الْاٰخِرَ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟
இன்னும், ‘மத்யன்’ நகரவாசிகளுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நாம் அனுப்பினோம்). ஆக, அவர் கூறினார்: என் மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள்! இன்னும், மறுமை நாளை பயந்து கொள்ளுங்கள்! இன்னும், இந்த பூமியில் கெட்டதை செய்கின்ற தீயவர்களாக அளவு கடந்து அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
فَكَذَّبُوْهُ فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِیْ دَارِهِمْ جٰثِمِیْنَ ۟ؗ
ஆக, அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்களை நிலநடுக்கம் பிடித்தது. ஆக, அவர்கள் தங்கள் இல்லத்தில் இறந்தவர்களாக காலையில் ஆகிவிட்டனர்.
ئەرەپچە تەپسىرلەر:
وَعَادًا وَّثَمُوْدَاۡ وَقَدْ تَّبَیَّنَ لَكُمْ مِّنْ مَّسٰكِنِهِمْ ۫— وَزَیَّنَ لَهُمُ الشَّیْطٰنُ اَعْمَالَهُمْ فَصَدَّهُمْ عَنِ السَّبِیْلِ وَكَانُوْا مُسْتَبْصِرِیْنَ ۟ۙ
இன்னும், ஆதையும் சமூதையும் நினைவு கூருங்கள்! அவர்களின் தங்குமிடங்களில் இருந்து (அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது) உங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஷைத்தான், அவர்களுக்கு அவர்களின் செயல்களை அலங்கரித்தான். ஆக, அவன் அவர்களை (நேரான) பாதையிலிருந்து தடுத்தான். (நேர்வழி எது வழிகேடு எது என்பதில்) அவர்கள் தெளிவானவர்களாக இருந்தனர். (சத்தியத்தை அறிந்த பின்னர் அதை நிராகரித்தனர். வழிகேட்டைத் தெளிவாக அறிந்தும் அதில்தான் சென்றனர்.)
ئەرەپچە تەپسىرلەر:
 
مەنالار تەرجىمىسى سۈرە: ئەنكەبۇت
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - تامىيلىيچە تەرجىمىسى - ئۆمەر شەرىپ - تەرجىمىلەر مۇندەرىجىسى

شەيخ ئۆمەر شەرىپ ئىبنى ئابدۇسالام تەرجىمىسى.

تاقاش