Check out the new design

قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ * - ترجمے کی لسٹ


معانی کا ترجمہ سورت: زُمر   آیت:
قُلْ اِنِّیْۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ اللّٰهَ مُخْلِصًا لَّهُ الدِّیْنَ ۟ۙ
39.11. -தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக நான் அல்லாஹ்வை மட்டுமே வணக்கத்தில் கலப்பற்றதாக வணங்க வேண்டும் என்று அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்.
عربی تفاسیر:
وَاُمِرْتُ لِاَنْ اَكُوْنَ اَوَّلَ الْمُسْلِمِیْنَ ۟
39.12. இந்த சமூகத்தில் அவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களில் முதலாமவனாக இருக்க வேண்டும் என அவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்.”
عربی تفاسیر:
قُلْ اِنِّیْۤ اَخَافُ اِنْ عَصَیْتُ رَبِّیْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟
39.13. -தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியாமல் அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டால் மாபெரும் நாளான மறுமை நாளின் வேதனையை அஞ்சுகின்றேன்.”
عربی تفاسیر:
قُلِ اللّٰهَ اَعْبُدُ مُخْلِصًا لَّهٗ دِیْنِیْ ۟ۙۚ
39.14. -தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக நான் அல்லாஹ்வை மட்டுமே வணக்கத்தில் கலப்பற்ற முறையில் வணங்குகின்றேன். அவனுடன் வேறுயாரையும் வணங்க மாட்டேன்.”
عربی تفاسیر:
فَاعْبُدُوْا مَا شِئْتُمْ مِّنْ دُوْنِهٖ ؕ— قُلْ اِنَّ الْخٰسِرِیْنَ الَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَاَهْلِیْهِمْ یَوْمَ الْقِیٰمَةِ ؕ— اَلَا ذٰلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِیْنُ ۟
39.15. -இணைவைப்பாளர்களே!- அவனை விடுத்து நீங்கள் விரும்பக்கூடிய சிலைகளை வணங்கிக் கொள்ளுங்கள்.” (இந்தக் கட்டளை அச்சுறுத்துவதற்காகும்) -தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக உண்மையில் நஷ்டமடைந்தவர்கள் யாரெனில் தங்களையும் தங்களின் குடும்பத்தினரையும் இழந்தவர்கள்தாம். அவர்கள் இவர்களைப் பிரிந்து தனியாக சுவனத்திற்குச் சென்றதனாலோ அல்லது இவர்களுடன் நரகத்தில் நுழைந்துவிட்டதனாலோ இவர்களைவிட்டும் பிரிந்துவிட்டதனால் அவர்கள் சந்திக்க முடியாது. ஒருபோதும் சந்தித்துக்கொள்ளமாட்டார்கள். அறிந்து கொள்ளுங்கள் இதுதான் உண்மையான, சந்தேகமற்ற தெளிவான இழப்பாகும்.
عربی تفاسیر:
لَهُمْ مِّنْ فَوْقِهِمْ ظُلَلٌ مِّنَ النَّارِ وَمِنْ تَحْتِهِمْ ظُلَلٌ ؕ— ذٰلِكَ یُخَوِّفُ اللّٰهُ بِهٖ عِبَادَهٗ ؕ— یٰعِبَادِ فَاتَّقُوْنِ ۟
39.16. அவர்களுக்கு மேலும் கீழும் புகையும் நெருப்பும் வெப்பமும் இருக்கும். மேல குறிப்பிடப்பட்ட இந்த வேதனைகளைக் கொண்டு அல்லாஹ் தன் அடியார்களை அச்சமூட்டுகிறான். என் அடியார்களே! என் கட்டளைகளைச் செயல்படுத்தி தடைகளை விட்டும் விலகி என்னை அஞ்சிக் கொள்ளுங்கள்.
عربی تفاسیر:
وَالَّذِیْنَ اجْتَنَبُوا الطَّاغُوْتَ اَنْ یَّعْبُدُوْهَا وَاَنَابُوْۤا اِلَی اللّٰهِ لَهُمُ الْبُشْرٰی ۚ— فَبَشِّرْ عِبَادِ ۟ۙ
39.17. சிலை வணக்கத்தையும் அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் அத்தனையையும் விலகி பாவமன்னிப்புக் கோரி அவன்பால் மீண்டவர்களுக்கு மரணிக்கும் வேளையிலும் அடக்கஸ்த்தலத்திலும் மறுமை நாளிலும் சுவனத்தைக் கொண்டு நற்செய்தி உண்டு. -தூதரே!- என் அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக.
عربی تفاسیر:
الَّذِیْنَ یَسْتَمِعُوْنَ الْقَوْلَ فَیَتَّبِعُوْنَ اَحْسَنَهٗ ؕ— اُولٰٓىِٕكَ الَّذِیْنَ هَدٰىهُمُ اللّٰهُ وَاُولٰٓىِٕكَ هُمْ اُولُوا الْاَلْبَابِ ۟
39.18. அவர்கள் வார்த்தையை காதுகொடுத்துக் கேட்டு அவற்றில் சரியானதையும் தவறானதையும் பிரித்துப் பார்க்கிறார்கள். அதில் பயனுள்ள சிறந்த வார்த்தையைப் பின்பற்றுகிறார்கள். இந்தப் பண்புகளால் வர்ணிக்கப்பட்டவர்கள்தாம் அல்லாஹ்வால் நேர்வழிபெற பாக்கியம் பெற்றவர்கள். இவர்கள்தாம் நல்லறிவுடையவர்கள்.
عربی تفاسیر:
اَفَمَنْ حَقَّ عَلَیْهِ كَلِمَةُ الْعَذَابِ ؕ— اَفَاَنْتَ تُنْقِذُ مَنْ فِی النَّارِ ۟ۚ
39.19. -தூதரே!- யார் மீது அவர்கள் நிராகரிப்பில், வழிகேட்டில் நிலைத்திருந்ததனால் வேதனையின் வாக்கு உறுதியாகிவிட்டதோ அவர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லாமல் உம்மால் நேர்வழியளிக்க முடியாது. இந்த பண்புகளை உடையவர்களை உம்மால் நரகத்திலிருந்து விடுவிக்க முடியுமா என்ன?
عربی تفاسیر:
لٰكِنِ الَّذِیْنَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِّنْ فَوْقِهَا غُرَفٌ مَّبْنِیَّةٌ ۙ— تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ۬— وَعْدَ اللّٰهِ ؕ— لَا یُخْلِفُ اللّٰهُ الْمِیْعَادَ ۟
39.20. ஆனால் தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அடுக்கடுக்காகக் கட்டப்பட்ட உயர்ந்த மாளிகைகள் இருக்கின்றன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அதனை அல்லாஹ் அவர்களுக்கு வாக்களித்துவிட்டான். அவன் தன் வாக்குறுதிக்கு மாறாகச் செயல்படுவதில்லை.
عربی تفاسیر:
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَسَلَكَهٗ یَنَابِیْعَ فِی الْاَرْضِ ثُمَّ یُخْرِجُ بِهٖ زَرْعًا مُّخْتَلِفًا اَلْوَانُهٗ ثُمَّ یَهِیْجُ فَتَرٰىهُ مُصْفَرًّا ثُمَّ یَجْعَلُهٗ حُطَامًا ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَذِكْرٰی لِاُولِی الْاَلْبَابِ ۟۠
39.21. நிச்சயமாக அல்லாஹ்தான் வானத்திலிருந்து மழையை இறக்கி அதனை பூமியில் ஊற்றுக்களில் ஓடச்செய்கிறான் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். பின்னர் அதனை ஊற்றுகளாகவும் ஆறுகளாகவும் ஓடச் செய்கிறான். பின்னர் அந்த நீரைக்கொண்டு பல்வேறு நிறமுடைய பயிர்களை வெளிப்படுத்துகின்றான். பின்னர் பயிர்கள் காய்ந்துவிடுகிறது. -பார்க்கக்கூடியவனே!- பசுமையாக இருந்த பின்னர் அது மஞ்சள் நிறமாகிவிடுவதை நீ காண்கின்றாய். பின்னர் அது காய்ந்த பிறகு சருகுகளாகி நொறுங்கி விடுகிறது. நிச்சயமாக மேலே கூறப்பட்டவைகளிலே உயிரோட்டமான உள்ளமுடையோருக்கு நினைவூட்டல் இருக்கின்றது.
عربی تفاسیر:
حالیہ صفحہ میں آیات کے فوائد:
• إخلاص العبادة لله شرط في قبولها.
1. வணக்க வழிபாடு அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு உளத்தூய்மை நிபந்தனையாகும்.

• المعاصي من أسباب عذاب الله وغضبه.
2. பாவங்கள் அல்லாஹ்வின் வேதனை மற்றும் கோபத்திற்கான காரணிகளாகும்.

• هداية التوفيق إلى الإيمان بيد الله، وليست بيد الرسول صلى الله عليه وسلم.
3. ஈமானின்பால் நேர்வழியளிக்கும் அதிகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. அது தூதரின் கைவசம் இல்லை.

 
معانی کا ترجمہ سورت: زُمر
سورتوں کی لسٹ صفحہ نمبر
 
قرآن کریم کے معانی کا ترجمہ - المختصر فی تفسیر القرآن الکریم کا تمل ترجمہ - ترجمے کی لسٹ

مرکز تفسیر للدراسات القرآنیۃ سے شائع ہوا ہے۔

بند کریں