Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: ሁድ   አንቀጽ:
یَقْدُمُ قَوْمَهٗ یَوْمَ الْقِیٰمَةِ فَاَوْرَدَهُمُ النَّارَ ؕ— وَبِئْسَ الْوِرْدُ الْمَوْرُوْدُ ۟
11.98. மறுமை நாளில் பிர்அவன் தன் சமூகத்தை வழிநடத்தி தன்னையும் அவர்களையும் நரகத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பான். அவன் அவர்களைக் கொண்டுபோய் சேர்த்த இடம் மோசமானது.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاُتْبِعُوْا فِیْ هٰذِهٖ لَعْنَةً وَّیَوْمَ الْقِیٰمَةِ ؕ— بِئْسَ الرِّفْدُ الْمَرْفُوْدُ ۟
11.99. அல்லாஹ் அவர்களை இவ்வுலகில் மூழ்கடித்து அழித்ததுடன் தன் அருளை விட்டும் அவர்களைத் தூரமாக்கி விட்டான். மறுமை நாளிலும் அவர்கள் அவனுடைய அருளை விட்டும் தூரமாக்கப்படுவார்கள். இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவர்களுக்குக் கிடைத்த சாபமும் வேதனையும் மிகவும் மோசமானதாகும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ذٰلِكَ مِنْ اَنْۢبَآءِ الْقُرٰی نَقُصُّهٗ عَلَیْكَ مِنْهَا قَآىِٕمٌ وَّحَصِیْدٌ ۟
11.100. -தூதரே!- நாம் இந்த அத்தியாயத்தில் எடுத்துரைக்கப்பட்ட சமூகங்களின் அந்த செய்திகளை நாமே உமக்கு அறிவிக்கிறோம் அவற்றுள் சிலவற்றின் அடையாளங்கள் நிலைத்திருக்கின்றன. சிலவற்றின் அடையாளங்கள் எவ்வித தடையமுமின்றி அழிந்து விட்டன.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَمَا ظَلَمْنٰهُمْ وَلٰكِنْ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ فَمَاۤ اَغْنَتْ عَنْهُمْ اٰلِهَتُهُمُ الَّتِیْ یَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مِنْ شَیْءٍ لَّمَّا جَآءَ اَمْرُ رَبِّكَ ؕ— وَمَا زَادُوْهُمْ غَیْرَ تَتْبِیْبٍ ۟
11.101. நாம் அவர்களுக்கு அளித்த தண்டனையின் மூலம் அவர்கள் மீது நாம் அநீதி இழைக்கவில்லை. மாறாக அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து அழிவிற்கான காரணிகளைத் தேடி தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டார்கள். -தூதரே- அவர்களை அழிக்குமாறு அல்லாஹ்வின் கட்டளை வந்த போது அவர்கள் மீது இறங்கிய தண்டனையை அவனை விடுத்து அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்கள் எதுவும் அவர்களை விட்டும் தடுக்கவில்லை. இந்த தெய்வங்கள் அவர்களுக்கு நஷ்டத்தையும் அழிவையுமே அதிகப்படுத்தின.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَكَذٰلِكَ اَخْذُ رَبِّكَ اِذَاۤ اَخَذَ الْقُرٰی وَهِیَ ظَالِمَةٌ ؕ— اِنَّ اَخْذَهٗۤ اَلِیْمٌ شَدِیْدٌ ۟
11.102. எல்லா காலகட்டங்களிலும் இடங்களிலும் மறுக்கும் சமூகங்களைப் பிடிக்கும் அல்லாஹ்வின் பிடி அவ்வாறுதான் இருக்கும். நிச்சயமாக அநியாயக்கார ஊர்களை அல்லாஹ் பிடிக்கும் பிடி நோவினை மிக்க பலமான பிடியாகும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّمَنْ خَافَ عَذَابَ الْاٰخِرَةِ ؕ— ذٰلِكَ یَوْمٌ مَّجْمُوْعٌ ۙ— لَّهُ النَّاسُ وَذٰلِكَ یَوْمٌ مَّشْهُوْدٌ ۟
11.103. நிச்சயமாக அநியாயக்கார அந்த ஊர்களை அல்லாஹ் கடுமையாகப் பிடித்ததில் மறுமை நாளின் வேதனையை அஞ்சக்கூடியவர்களுக்கு படிப்பினையும் அறிவுரையும் அடங்கியுள்ளன. அந்த நாள் மனிதர்கள் அனைவரையும் விசாரணை செய்வதற்காக அல்லாஹ் ஒன்று திரட்டும் நாளாகும். அது மஹ்ஷர்வாசிகள் சமூகமளிக்கும் ஒரு நாளாகும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَمَا نُؤَخِّرُهٗۤ اِلَّا لِاَجَلٍ مَّعْدُوْدٍ ۟ؕ
11.104. சமூகமளிக்கும் அந்த நாளை எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட தவணைக்காகவே நாம் தாமதப்படுத்துகிறோம்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
یَوْمَ یَاْتِ لَا تَكَلَّمُ نَفْسٌ اِلَّا بِاِذْنِهٖ ۚ— فَمِنْهُمْ شَقِیٌّ وَّسَعِیْدٌ ۟
11.105. அந்த நாள் வரும் போது எவரும் அவனுடைய அனுமதியின்றி ஆதாரத்துடன் பேசவோ அல்லது பரிந்துரை செய்யவோ முடியாது. அப்போது மனிதர்கள் இரு வகையினராக இருப்பார்கள். (முதல் வகையினர்), நரகத்திற்குச் செல்லும் துர்பாக்கியசாலிகள். (இரண்டாவது வகையினர்), சுவனத்திற்குச் செல்லும் பாக்கியசாலிகள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَاَمَّا الَّذِیْنَ شَقُوْا فَفِی النَّارِ لَهُمْ فِیْهَا زَفِیْرٌ وَّشَهِیْقٌ ۟ۙ
11.106. நிராகரிப்பினாலும் தீய செயல்களினாலும் துர்பாக்கியம் அடைந்தவர்கள் நரகத்தில் நுழைவார்கள். அதில் அவர்களை பீடிக்கும் சுவாலையின் அகோரம் தாங்க முடியாமல் அவர்களின் சப்தங்களும் மூச்சுகளும் உயர்ந்து விடும்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
خٰلِدِیْنَ فِیْهَا مَا دَامَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ اِلَّا مَا شَآءَ رَبُّكَ ؕ— اِنَّ رَبَّكَ فَعَّالٌ لِّمَا یُرِیْدُ ۟
11.107. அவர்கள் அங்கு நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் வரை அவர்களால் அங்கிருந்து வெளியேற முடியாது. அல்லாஹ் நாடினால் ஓரிறைக் கொள்கையில் நிலைத்திருந்து பாவம் செய்தவர்களைத் தவிர. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் தான் நாடியதைச் செய்யக்கூடியவன். யாரும் அவனை நிர்ப்பந்திக்க முடியாது.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَاَمَّا الَّذِیْنَ سُعِدُوْا فَفِی الْجَنَّةِ خٰلِدِیْنَ فِیْهَا مَا دَامَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ اِلَّا مَا شَآءَ رَبُّكَ ؕ— عَطَآءً غَیْرَ مَجْذُوْذٍ ۟
11.108. நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்து அல்லாஹ்வின் அருளைப் பெற்ற பாக்கியசாலிகள் வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் வரை சுவனத்தில் என்றென்றும் தங்கியிருப்பார்கள். சுவனம் நுழைய முன் விசுவாசிகளிலுள்ள பாவிகளில் நரகம் நுழைய வேண்டும் என அல்லாஹ் நாடியவர்களைத் தவிர. நிச்சயமாக சுவனவாசிகளுக்குக் கிடைக்கும் அல்லாஹ்வின் அருட்கொடைகள் முடிவே இல்லாதது.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• التحذير من اتّباع رؤساء الشر والفساد، وبيان شؤم اتباعهم في الدارين.
1. குழப்பம் விளைவிக்கும், தீய தலைவர்களைப் பின்பற்றுவதை விட்டும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.அவர்களைப் பின்பற்றுவதனால் ஈருலகிலும் ஏற்படும் விளைவுகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

• تنزه الله تعالى عن الظلم في إهلاك أهل الشرك والمعاصي.
2. அநியாயக்காரர்கள் மற்றும் பாவிகளை அழிப்பதில் அல்லாஹ் அநீதி இழைப்பதை விட்டும் பரிசுத்தமானவன்.

• لا تنفع آلهة المشركين عابديها يوم القيامة، ولا تدفع عنهم العذاب.
3. மறுமை நாளில் இணைவைப்பாளர்கள் வணங்கும் தெய்வங்கள் அவற்றை வணங்கியோருக்கு எந்தப் பயனையும் அளிக்காது. அவர்களை விட்டு வேதனையையும் அகற்றாது.

• انقسام الناس يوم القيامة إلى: سعيد خالد في الجنان، وشقي خالد في النيران.
4. மறுமை நாளில் மனிதர்கள் (இரு) வகையினராக இருப்பார்கள்: (ஒன்று), என்றென்றும் சுவனத்தில் தங்கியிருக்கும் பாக்கியசாலிகள். (இரண்டு), நெருப்பில் நிரந்தரமாக வீழ்ந்துகிடக்கும் துர்பாக்கியசாலிகள்.

 
የይዘት ትርጉም ምዕራፍ: ሁድ
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት