Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አል ሐሽር   አንቀጽ:
وَالَّذِیْنَ جَآءُوْ مِنْ بَعْدِهِمْ یَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِاِخْوَانِنَا الَّذِیْنَ سَبَقُوْنَا بِالْاِیْمَانِ وَلَا تَجْعَلْ فِیْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِیْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِیْمٌ ۟۠
59.10. அவர்களுக்குப் பின்வந்து அவர்களை மறுமை நாள்வரை மனத்தூய்மையுடன் பின்பற்றுபவர்கள் கூறுகிறார்கள்: “எங்கள் இறைவா! எங்களையும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கைகொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்கள் இஸ்லாமிய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக. எங்களின் உள்ளங்களில் நம்பிக்கையாளர்களில் யாரைக் குறித்தும் குரோதத்தையோ, பொறாமையையோ ஏற்படுத்திவிடாதே. எங்கள் இறைவா! நிச்சயமாக நீ உன் அடியார்களோடு மிகுந்த பரிவுடையவனாகவும் கருணையாளனாகவும் இருக்கின்றாய்.”
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ نَافَقُوْا یَقُوْلُوْنَ لِاِخْوَانِهِمُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ اَهْلِ الْكِتٰبِ لَىِٕنْ اُخْرِجْتُمْ لَنَخْرُجَنَّ مَعَكُمْ وَلَا نُطِیْعُ فِیْكُمْ اَحَدًا اَبَدًا ۙ— وَّاِنْ قُوْتِلْتُمْ لَنَنْصُرَنَّكُمْ ؕ— وَاللّٰهُ یَشْهَدُ اِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟
59.11. தூதரே! நிராகரிப்பை மறைத்து நம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடியவர்களை நீர் பார்க்கவில்லையா? நிராகரிப்பில் தங்களின் சகோதரர்களான திரிக்கப்பட்ட தவ்ராத்தைப் பின்பற்றும் யூதர்களிடம் அவர்கள் கூறுகிறார்கள்: “உங்களின் வீடுகளில் உறுதியாக இருங்கள். நாங்கள் உங்களை ஒருபோதும் கைவிட மாட்டோம். முஸ்லிம்கள் உங்களை வெளியேற்றினால் உங்களுக்கு ஆதரவளிப்பதற்காக நாங்களும் வெளியேறுவோம். உங்களுடன் வெளியேறுவதை விட்டும் எங்களைத் தடுக்க நினைக்கும் யாருக்கும் நாங்கள் கீழ்ப்படிய மாட்டோம். அவர்கள் உங்களுடன் போரிட்டால் அவர்களுக்கு எதிராக நாங்கள் உங்களுக்கு உதவி புரிவோம்.” நிச்சயமாக இந்த நயவஞ்சகர்கள் யூதர்கள் வெளியேற்றப்பட்டால் நாமும் வெளியேறுவோம் அவர்கள் உங்களுடன் போரிட்டால் நாங்களும் அவர்களோடு போரிடுவோம் என்று தாங்கள் கூறும் விஷயத்தில் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
لَىِٕنْ اُخْرِجُوْا لَا یَخْرُجُوْنَ مَعَهُمْ ۚ— وَلَىِٕنْ قُوْتِلُوْا لَا یَنْصُرُوْنَهُمْ ۚ— وَلَىِٕنْ نَّصَرُوْهُمْ لَیُوَلُّنَّ الْاَدْبَارَ ۫— ثُمَّ لَا یُنْصَرُوْنَ ۟
59.12. முஸ்லிம்கள் அவர்களை வெளியேற்றினால் இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள். முஸ்லிம்கள் அவர்களுடன் போரிட்டால் இவர்கள் அவர்களுக்கு உதவ மாட்டார்கள். இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்தாலும் அவர்களைக் கண்டு வெருண்டோடி விடுவார்கள். அதன் பின்னர் நயவஞ்சகர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள். மாறாக அல்லாஹ் அவர்களை இழிவுபடுத்தியே தீருவான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
لَاَنْتُمْ اَشَدُّ رَهْبَةً فِیْ صُدُوْرِهِمْ مِّنَ اللّٰهِ ؕ— ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَفْقَهُوْنَ ۟
59.13. -நம்பிக்கையாளர்களே!- இந்த நயவஞ்சகர்கள் மற்றும் யூதர்களின் உள்ளங்களில் அல்லாஹ்வை விட உங்களைப் பற்றிய அச்சமே உள்ளது. அவர்கள் உங்களைக் கண்டு அஞ்சி அல்லாஹ்வை அஞ்சுவதில் பலஹீனர்களாக இருப்பதற்குக் காரணம் அவர்கள் புரியாத மக்களாக இருக்கிறார்கள் என்பதேயாகும். அவர்கள் புரிந்திருந்தால் அல்லாஹ்வே அஞ்சுவதற்குத் தகுதியானவன் என்பதை அறிந்திருப்பார்கள். ஏனெனில் அவனே அவர்கள் மீது உங்களை ஆதிக்கம் கொள்ளச் செய்தான்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
لَا یُقَاتِلُوْنَكُمْ جَمِیْعًا اِلَّا فِیْ قُرًی مُّحَصَّنَةٍ اَوْ مِنْ وَّرَآءِ جُدُرٍ ؕ— بَاْسُهُمْ بَیْنَهُمْ شَدِیْدٌ ؕ— تَحْسَبُهُمْ جَمِیْعًا وَّقُلُوْبُهُمْ شَتّٰی ؕ— ذٰلِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَعْقِلُوْنَ ۟ۚ
59.14. -நம்பிக்கையாளர்களே!- கோட்டைகளில் இருந்துகொண்டோ அல்லது சுவருக்குப் பின்னாலிருந்தோ தவிர யூதர்கள் ஒன்றுசேர்ந்து உங்களுடன் போரிட மாட்டார்கள். அவர்களின் கோழைத்தனத்தினால் அவர்களால் உங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாது. அவர்களிடையே காணப்படும் பகையோ மிகக் கடுமையானது. நிச்சயமாக அவர்கள் ஒரே கருத்தில் ஒரணியில் ஒற்றுமையாக இருப்பதுபோல் நீர் எண்ணுவீர். உண்மையில் அவர்களின் உள்ளங்களோ பிளவுபட்டுக் கிடக்கின்றன. அவர்களிடையே காணப்படும் இந்த பகைமைக்கான காரணம், அவர்கள் விளங்கிக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள் என்பதேயாகும். அவர்கள் விளங்கியிருந்தால் சத்தியத்தை அறிந்து அதனைப் பின்பற்றியிருப்பார்கள். அதிலே முரண்பட்டிருக்க மாட்டார்கள்.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
كَمَثَلِ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ قَرِیْبًا ذَاقُوْا وَبَالَ اَمْرِهِمْ ۚ— وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟ۚ
59.15. இந்த யூதர்கள் தங்களின் நிராகரிப்பிலும் அவர்கள் மீது இறங்கிய வேதனையிலும் அண்மையில் வாழ்ந்த மக்காவின் இணைவைப்பாளர்களைப் போன்றவர்களாவர். அவர்கள் நிராகரிப்பின் தீய விளைவை அனுபவித்தார்கள். பத்ருப்போரில் அவர்களில் சிலர் கொல்லப்பட்டார்கள், சிலர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு மறுமையில் வேதனைமிக்க தண்டனை உண்டு.
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
كَمَثَلِ الشَّیْطٰنِ اِذْ قَالَ لِلْاِنْسَانِ اكْفُرْ ۚ— فَلَمَّا كَفَرَ قَالَ اِنِّیْ بَرِیْٓءٌ مِّنْكَ اِنِّیْۤ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِیْنَ ۟
59.16. அவர்கள் நயவஞ்சகர்களிடம் காதுகொடுத்துக் கேட்பதற்கு உதாரணம் ஷைத்தான் மனிதனுக்கு நிராகரிப்பதை அலங்கரித்துக் காட்டி நிராகரித்து விடு என்று கூறியதைப் போன்றதாகும். ஷைத்தானின் அலங்கரிப்பில் மயங்கி மனிதன் நிராகரித்தபோது ஷைத்தான் அவனிடம் கூறினான்: “நான் உன் நிராகரிப்பைவிட்டும் விலகிவிட்டேன். நான் படைப்புகள் அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்.”
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• رابطة الإيمان لا تتأثر بتطاول الزمان وتغير المكان.
1. ஈமானால் ஏற்படும் தொடர்பு காலம் செல்வதாலோ, இடம் மாறுவதாலோ மாற்றமடையாது.

• صداقة المنافقين لليهود وغيرهم صداقة وهمية تتلاشى عند الشدائد.
2. யூதர்கள், ஏனையவர்களுடனான நயவஞ்சகர்களின் நட்பு துன்பங்களின் போது மறைந்துவிடும் போலியான நட்பாகும்.

• اليهود جبناء لا يواجهون في القتال، ولو قاتلوا فإنهم يتحصنون بِقُرَاهم وأسلحتهم.
3. யூதர்கள் போரில் நேருக்கு நேர் மோதமுடியாத கோழைகள். அவர்கள் போரிட்டால் நிச்சயமாக அவர்கள் தமது கோட்டைகள் மற்றும் ஆயதங்களின் மூலம் தம்மை பாதுகாத்துக்கொள்வார்கள்.

 
የይዘት ትርጉም ምዕራፍ: አል ሐሽር
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት