የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

የገፅ ቁጥር:close

external-link copy
24 : 22

وَهُدُوْۤا اِلَی الطَّیِّبِ مِنَ الْقَوْلِ ۖۗۚ— وَهُدُوْۤا اِلٰی صِرَاطِ الْحَمِیْدِ ۟

அவர்கள் (இவ்வுலகில்) பேச்சுகளில் நல்லதற்கு வழிகாட்டப்பட்டார்கள். இன்னும் புகழுக்குரியவனின் பாதைக்கு (-மார்க்கத்திற்கு) வழிகாட்டப்பட்டார்கள். info
التفاسير:

external-link copy
25 : 22

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَیَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَالْمَسْجِدِ الْحَرَامِ الَّذِیْ جَعَلْنٰهُ لِلنَّاسِ سَوَآءَ ١لْعَاكِفُ فِیْهِ وَالْبَادِ ؕ— وَمَنْ یُّرِدْ فِیْهِ بِاِلْحَادٍ بِظُلْمٍ نُّذِقْهُ مِنْ عَذَابٍ اَلِیْمٍ ۟۠

நிச்சயமாக நிராகரித்தவர்கள் இன்னும் அல்லாஹ்வின் பாதையிலிருந்தும் (-மார்க்கத்திலிருந்தும்) அல்மஸ்ஜிதுல் ஹராமிலிருந்தும் (முஃமின்களை) தடுப்பவர்கள்... (இவர்களுக்குக் கடுமையான வேதனையை சுவைக்க வைப்போம்.) அது (-அல்மஸ்ஜிதுல் ஹராம்) அதில் தங்கி இருப்பவருக்கும் வெளியிலிருந்து வருபவருக்கும் பொதுவானது. எவர் அதில் (-அந்த மஸ்ஜிதில்) அநியாயமாக வரம்பு மீறுவதை (-தவறு செய்வதை) நாடுவாரோ வலி தருகின்ற வேதனையை அவருக்கு நாம் சுவைக்க வைப்போம். info
التفاسير:

external-link copy
26 : 22

وَاِذْ بَوَّاْنَا لِاِبْرٰهِیْمَ مَكَانَ الْبَیْتِ اَنْ لَّا تُشْرِكْ بِیْ شَیْـًٔا وَّطَهِّرْ بَیْتِیَ لِلطَّآىِٕفِیْنَ وَالْقَآىِٕمِیْنَ وَالرُّكَّعِ السُّجُوْدِ ۟

இப்ராஹீமுக்கு (எனது) வீட்டுடைய இடத்தை (கஅபா இருந்த இடத்தை) நாம் உறுதிப்படுத்திய சமயத்தை நினைவு கூர்வீராக! (இப்ராஹீமே!) நீர் எனக்கு எதையும் இணைவைக்காதீர்! மேலும், எனது வீட்டை (அதை) தவாஃப் செய்பவர்களுக்காகவும் நின்று தொழுபவர்களுக்காகவும், குனிந்து தொழுபவர்களுக்காகவும், சிரம் பணிந்து தொழுபவர்களுக்காகவும் சுத்தமாக வைத்திருப்பீராக! info
التفاسير:

external-link copy
27 : 22

وَاَذِّنْ فِی النَّاسِ بِالْحَجِّ یَاْتُوْكَ رِجَالًا وَّعَلٰی كُلِّ ضَامِرٍ یَّاْتِیْنَ مِنْ كُلِّ فَجٍّ عَمِیْقٍ ۟ۙ

இன்னும், ஹஜ்ஜுக்காக மக்களுக்கு (மத்தியில்) அறிவிப்(புச் செய்து அழைப்)பீராக! அவர்கள் நடந்தவர்களாக உம்மிடம் வருவார்கள். இன்னும் தூரமான பாதைகளிலிருந்து வருகின்ற மெலிந்த எல்லா வாகனத்தின் மீதும் (வாகனித்தவர்களாகவும் வருவார்கள்). info
التفاسير:

external-link copy
28 : 22

لِّیَشْهَدُوْا مَنَافِعَ لَهُمْ وَیَذْكُرُوا اسْمَ اللّٰهِ فِیْۤ اَیَّامٍ مَّعْلُوْمٰتٍ عَلٰی مَا رَزَقَهُمْ مِّنْ بَهِیْمَةِ الْاَنْعَامِ ۚ— فَكُلُوْا مِنْهَا وَاَطْعِمُوا الْبَآىِٕسَ الْفَقِیْرَ ۟ؗ

அவர்கள் தங்களுக்குரிய பலாபலன்களை அடைவதற்காகவும், (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுத்த கால்நடை பிராணிகள் மீது குறிப்பிட்ட (அந்த ஹஜ்ஜுடைய) நாட்களில் (அவற்றை அறுக்கும் போது) அல்லாஹ்வுடைய பெயரை நினைவு கூர்வதற்காகவும் (அவர்களை ஹஜ்ஜுக்கு அழைப்பீராக!) ஆகவே, அவற்றிலிருந்து புசியுங்கள். வறியவருக்கும் ஏழைக்கும் (அவற்றிலிருந்து) உணவளியுங்கள். info
التفاسير:

external-link copy
29 : 22

ثُمَّ لْیَقْضُوْا تَفَثَهُمْ وَلْیُوْفُوْا نُذُوْرَهُمْ وَلْیَطَّوَّفُوْا بِالْبَیْتِ الْعَتِیْقِ ۟

பிறகு, அவர்கள் தங்களது அழுக்குகளை நீக்கிக் கொள்ளட்டும். தங்களது நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொள்ளட்டும். மிகப் பழமையான வீட்டை அவர்கள் தவாஃப் (சுற்றி அல்லாஹ்வை வழிபாடு) செய்யட்டும். info
التفاسير:

external-link copy
30 : 22

ذٰلِكَ ۗ— وَمَنْ یُّعَظِّمْ حُرُمٰتِ اللّٰهِ فَهُوَ خَیْرٌ لَّهٗ عِنْدَ رَبِّهٖ ؕ— وَاُحِلَّتْ لَكُمُ الْاَنْعَامُ اِلَّا مَا یُتْلٰی عَلَیْكُمْ فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الْاَوْثَانِ وَاجْتَنِبُوْا قَوْلَ الزُّوْرِ ۟ۙ

அவைதான் (-உங்களுக்கு ஏவப்பட்ட விஷயங்கள், அழுக்குகளை நீக்குவது, நேர்ச்சைகளை நிறைவேற்றுவது கஅபாவை தவாஃப் செய்வது- ஆகியவைதான். உங்கள் மீது கடமையாகும்.) எவர் அல்லாஹ்வுடைய புனிதங்களை (-மக்கா, ஹஜ், உம்ரா இன்னும் அவற்றில் தடுக்கப்பட்ட விஷயங்களை) மதிப்பாரோ அது அவருக்கு அவருடைய இறைவனிடம் மிகச் சிறந்தது. உங்களுக்கு கால்நடைகள் (அவற்றை அல்லாஹ்வின் பெயர்கூறி அறுத்து புசிப்பது) ஆகுமாக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு (இந்தக் குர்ஆனில் 5:3) ஓதிக்காட்டப்படுபவற்றைத் தவிர. (அவை உங்களுக்கு தடுக்கப்பட்டுள்ளன.) அசுத்தங்களை -சிலைகளை- (வணங்குவதை) விட்டு விலகிக் கொள்ளுங்கள். பொய்யான பேச்சை விட்டு விலகிக் கொள்ளுங்கள். info
التفاسير: