ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - فهرس التراجم


ترجمة معاني سورة: المرسلات   آية:

سورة المرسلات - ஸூரா அல்முர்ஸலாத்

من مقاصد السورة:
الوعيد للمكذبين بالويل يوم القيامة.
பொய்ப்பிப்பவர்களுக்கு மறுமையில் கேடு உண்டு என எச்சரித்தல்

وَالْمُرْسَلٰتِ عُرْفًا ۟ۙ
77.1. குதிரையின் பிடரி மயிரைப்போன்று தொடர்ந்து வரக்கூடிய காற்றுகளைக் கொண்டு அல்லாஹ் சத்தியம் செய்கிறான்.
التفاسير العربية:
فَالْعٰصِفٰتِ عَصْفًا ۟ۙ
77.2. அவன் கடுமையான புயல் காற்றுகளைக்கொண்டு சத்தியம் செய்கிறான்.
التفاسير العربية:
وَّالنّٰشِرٰتِ نَشْرًا ۟ۙ
77.3. மழையைப் பரப்பிவிடும் காற்றுகளைக் கொண்டு அவன் சத்தியம் செய்கிறான்.
التفاسير العربية:
فَالْفٰرِقٰتِ فَرْقًا ۟ۙ
77.4. சத்தியத்தையும் அசத்தியத்தையும் வேறுபடுத்திக் காட்டக்கூடியதைக் கொண்டு இறங்கும் வானவர்களைக் கொண்டு அவன் சத்தியம் செய்கிறான்.
التفاسير العربية:
فَالْمُلْقِیٰتِ ذِكْرًا ۟ۙ
77.5. வஹியைக்கொண்டு இறங்கும் வானவர்களைக்கொண்டு அவன் சத்தியம் செய்கிறான்.
التفاسير العربية:
عُذْرًا اَوْ نُذْرًا ۟ۙ
77.6. அல்லாஹ் மக்களுக்கு வழிகாட்டியதற்கு ஆதாரமாக அமைவதற்காகவும் மக்களை அவனுடைய வேதனையிலிருந்து எச்சரிப்பதற்காகவும் வானவர்கள் வஹியைக் கொண்டு இறங்குகிறார்கள்.
التفاسير العربية:
اِنَّمَا تُوْعَدُوْنَ لَوَاقِعٌ ۟ؕ
77.7. நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்படுபவையான மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவது, விசாரணை செய்வது, கூலி வழங்குவது போன்றவை சந்தேகம் இல்லாமல் நிச்சயமாக நிறைவேறியே தீரும்.
التفاسير العربية:
فَاِذَا النُّجُوْمُ طُمِسَتْ ۟ۙ
77.8. தம் ஒளியை நட்சத்திரங்கள் இழந்துவிடும்போது,
التفاسير العربية:
وَاِذَا السَّمَآءُ فُرِجَتْ ۟ۙ
77.9. வானவர்கள் இறங்குவதால் வானம் பிளந்துவிடும்போது,
التفاسير العربية:
وَاِذَا الْجِبَالُ نُسِفَتْ ۟ۙ
77.10. மலைகள் அவற்றின் இடங்களிலிருந்து பெயர்க்கப்பட்டு தூசி போன்று தூள் தூளாக்கப்படும்போது,
التفاسير العربية:
وَاِذَا الرُّسُلُ اُقِّتَتْ ۟ؕ
77.11. தூதர்கள் குறிப்பிட்ட நேரத்திற்காக ஒன்றுதிரட்டப்படும்போது,
التفاسير العربية:
لِاَیِّ یَوْمٍ اُجِّلَتْ ۟ؕ
77.12. அந்த மகத்தான நாளுக்காக, தம் சமூகங்களுக்கு எதிராக சாட்சி கூறுவதற்காக அவர்கள் தாமதப்படுத்தப்பட்டார்கள்.
التفاسير العربية:
لِیَوْمِ الْفَصْلِ ۟ۚ
77.13. அடியார்களிடையே தீர்ப்பு வழங்கப்படும் நாளுக்காக, அந்நாளில் அசத்தியவாதிகளில் சத்தியவாதிகள் யார்? துர்பாக்கியசாலிகளில் நற்பாக்கியசாலிகள் யார்? என்பது தெளிவாகிவிடும்.
التفاسير العربية:
وَمَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الْفَصْلِ ۟ؕ
77.77.14. -தூதரே!- தீர்ப்பு நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
التفاسير العربية:
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
77.15. அல்லாஹ்விடமிருந்து தூதர்கள் கொண்டு வந்ததை மறுத்தோருக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும்.
التفاسير العربية:
اَلَمْ نُهْلِكِ الْاَوَّلِیْنَ ۟ؕ
77.16. நாம் அல்லாஹ்வை நிராகரித்து அவனது தூதர்களை பொய்ப்பித்த முந்தைய சமூகங்களை அழிக்கவில்லையா?
التفاسير العربية:
ثُمَّ نُتْبِعُهُمُ الْاٰخِرِیْنَ ۟
77.17. பின்னர் பின்னால் வரும் மறுப்பாளர்களை அவர்களைப் பின்தொடரச் செய்தோம். நாம் முந்தையவர்களை அழித்ததைப்போன்றே அவர்களையும் அழிப்போம்.
التفاسير العربية:
كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِیْنَ ۟
77.18. அந்த சமூகங்களை நாம் அழித்ததுபோன்றே முஹம்மது கொண்டுவந்த தூதை மறுக்கும் குற்றவாளிகளையும் அழிப்போம்.
التفاسير العربية:
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
77.19. பாவிகளுக்கு தண்டனையிருப்பதாக அல்லாஹ்வின் எச்சரிக்கையை மறுப்போருக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும்.
التفاسير العربية:
من فوائد الآيات في هذه الصفحة:
• خطر التعلق بالدنيا ونسيان الآخرة.
1. உலகத்தின்மீது மோகம்கொண்டு மறுமையை மறப்பதன் விளைவு.

• مشيئة العبد تابعة لمشيئة الله.
2. அடியானின் விருப்பம் அல்லாஹ்வின் விருப்பத்திற்குக் கட்டுப்பட்டதாகும்.

• إهلاك الأمم المكذبة سُنَّة إلهية.
3. மறுக்கும் சமூகங்களை அழிப்பது இறைநியதியாகும்.

اَلَمْ نَخْلُقْكُّمْ مِّنْ مَّآءٍ مَّهِیْنٍ ۟ۙ
77.20. -மனிதர்களே!- நாம் உங்களை அற்பமான சிறிதளவு நீரான விந்திலிருந்து படைக்கவில்லையா?
التفاسير العربية:
فَجَعَلْنٰهُ فِیْ قَرَارٍ مَّكِیْنٍ ۟ۙ
77.21. அந்த அற்ப நீரை நாம் பாதுகாப்பான இடமான பெண்ணின் கருவறையில் வைத்தோம்,
التفاسير العربية:
اِلٰی قَدَرٍ مَّعْلُوْمٍ ۟ۙ
77.22. குறிப்பிட்ட தவணையான கர்ப்ப காலம் முடியும் வரை.
التفاسير العربية:
فَقَدَرْنَا ۖۗ— فَنِعْمَ الْقٰدِرُوْنَ ۟
77.23. குழந்தையின் பண்பு, அளவு, நிறம் மற்றும் இன்னபிறவற்றையும் நாம் நிர்ணயித்தோம். அவையனைத்தையும் நிர்ணயம் செய்யும் நாமே சிறந்தவர்களாகிவிட்டோம்.
التفاسير العربية:
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
77.24. அல்லாஹ்வின் ஆற்றலை மறுத்தவர்களுக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும்.
التفاسير العربية:
اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ كِفَاتًا ۟ۙ
77.25. நாம் பூமியை மனிதர்கள் அனைவரையும் அணைத்துக் கொள்ளக்கூடியதாக ஆக்கவில்லையா?
التفاسير العربية:
اَحْیَآءً وَّاَمْوَاتًا ۟ۙ
77.26. அது அவர்களில் உயிருடன் உள்ளோரை அதன் மீது வாழ்தல் மற்றும் அதனை வளப்படுத்தல் மூலமும் தன்னில் அடக்கம் செய்யப்படுவதன் மூலம் இறந்தவர்களையும் அணைத்துக் கொள்கிறது.
التفاسير العربية:
وَّجَعَلْنَا فِیْهَا رَوَاسِیَ شٰمِخٰتٍ وَّاَسْقَیْنٰكُمْ مَّآءً فُرَاتًا ۟ؕ
77.27. அது ஆட்டம் கண்டுவிடாமல் தடுத்து அதில் உறுதியான, உயரமான மலைகளையும் நாம் ஏற்படுத்தினோம். -மனிதர்களே!- நாம் உங்களுக்குச் சுவையான நீரை புகட்டுகின்றோம். இவற்றையெல்லாம் படைத்தவன் உங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்கு இயலாதவன் அல்ல.
التفاسير العربية:
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
77.28. அல்லாஹ் தம்மீது பொழிந்த அருட்கொடைகளை மறுத்தவர்களுக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும்.
التفاسير العربية:
اِنْطَلِقُوْۤا اِلٰی مَا كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ۟ۚ
77.29. தம் தூதர்கள் கொண்டுவந்ததை மறுத்தவர்களிடம் கூறப்படும்: -“பொய்யாக்கியோரே!- நீங்கள் பொய்யாக்கிக்கொண்டிருந்த வேதனையின்பால் செல்லுங்கள்.
التفاسير العربية:
اِنْطَلِقُوْۤا اِلٰی ظِلٍّ ذِیْ ثَلٰثِ شُعَبٍ ۟ۙ
77.30. மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்ட நரகப் புகையின் நிழலின்பால் செல்லுங்கள்.
التفاسير العربية:
لَّا ظَلِیْلٍ وَّلَا یُغْنِیْ مِنَ اللَّهَبِ ۟ؕ
77.31. அது குளிர்ச்சி தரும் நிழலல்ல. அது நரகத்தின் தீச்சுவாலையோ, வெப்பமோ உங்களை அடைவதை விட்டும் தடுக்காது.
التفاسير العربية:
اِنَّهَا تَرْمِیْ بِشَرَرٍ كَالْقَصْرِ ۟ۚ
77.32. நிச்சயமாக நரகம் தீப்பொறிகளை வீசி எறியும். ஒவ்வொரு தீப்பொறியும் பெரும் கோட்டையைப் போன்று பெரிதாக இருக்கும்.
التفاسير العربية:
كَاَنَّهٗ جِمٰلَتٌ صُفْرٌ ۟ؕ
77.33. அவ்வாறு வீசி எறியும் தீப்பொறிகள் கருப்பு நிறத்தில், அதன் பிரமாண்டத்தில் கருப்புநிற ஒட்டகங்களைப் போன்றும் இருக்கும்.
التفاسير العربية:
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
77.34. அல்லாஹ்வின் வேதனையை மறுத்தவர்களுக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும்.
التفاسير العربية:
هٰذَا یَوْمُ لَا یَنْطِقُوْنَ ۟ۙ
77.35. இது அவர்கள் எதையும் பேச முடியாத நாளாகும்.
التفاسير العربية:
وَلَا یُؤْذَنُ لَهُمْ فَیَعْتَذِرُوْنَ ۟
77.36. அவர்கள் தங்கள் இறைவனிடம் தாங்கள் செய்த நிராகரிப்பான, பாவமான காரியங்களுக்கு சாக்குப்போக்குகள் கூற அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனாலும் அவர்கள் அவனிடம் நியாயம் கூறுவார்கள்.
التفاسير العربية:
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
77.37. இந்த நாள் பற்றிய செய்திகளை மறுத்தவர்களுக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும்.
التفاسير العربية:
هٰذَا یَوْمُ الْفَصْلِ ۚ— جَمَعْنٰكُمْ وَالْاَوَّلِیْنَ ۟
77.38. இது படைப்பினங்களிடையே தீர்ப்பளிக்கப்படும் நாளாகும். நாம் உங்களையும் முந்தைய சமூகங்களையும் ஒரு மைதானத்தில் ஒன்றுதிரட்டுவோம்.
التفاسير العربية:
فَاِنْ كَانَ لَكُمْ كَیْدٌ فَكِیْدُوْنِ ۟
77.39. உங்களால் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தந்திரம் செய்து தப்பிக்க முடிந்தால் எனக்கு தந்திரம் செய்து தப்பித்துக் கொள்ளுங்கள்.
التفاسير العربية:
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟۠
77.40. தீர்ப்பு நாளை மறுத்தவர்களுக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும்.
التفاسير العربية:
اِنَّ الْمُتَّقِیْنَ فِیْ ظِلٰلٍ وَّعُیُوْنٍ ۟ۙ
77.41. நிச்சயமாக தம் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள் அடர்ந்த மரங்களுடைய சுவனத்தின் தோட்டங்களின் நிழலிலும் சுவையான ஓடக்கூடிய நீரோடையிலும் இருப்பார்கள்.
التفاسير العربية:
وَّفَوَاكِهَ مِمَّا یَشْتَهُوْنَ ۟ؕ
77.42. அவர்கள் உண்ண விரும்பும் பழங்களையும் (அவர்கள் பெறுவார்கள்).
التفاسير العربية:
كُلُوْا وَاشْرَبُوْا هَنِیْٓـًٔا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
77.43. அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் உலகில் செய்து கொண்டிருந்த நற்செயல்களுக்காக தூய்மையானவற்றை உண்ணுங்கள், எவ்வித கலப்படமுமற்ற இன்பம் தரும் பானத்தைப் பருகுங்கள்.
التفاسير العربية:
اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟
77.44. நிச்சயமாக நாம் உங்களுக்குக் அளித்த இக்கூலியைப் போன்றே நற்செயல்கள் புரிபவர்களுக்குக் கூலி அளிக்கின்றோம்.
التفاسير العربية:
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
77.45. அல்லாஹ் இறையச்சமுடையோருக்கு தயார் செய்திருப்பவற்றை மறுத்தவர்களுக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும்.
التفاسير العربية:
كُلُوْا وَتَمَتَّعُوْا قَلِیْلًا اِنَّكُمْ مُّجْرِمُوْنَ ۟
77.46. மறுப்பாளர்களிடம் கூறப்படும்: “உலகில் குறுகிய காலம்வரை உண்ணுங்கள். வாழ்வின் இன்பங்களை அனுபவியுங்கள். நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை நிராகரித்து அவனது தூதர்களை பொய்யாக்கியதனால் குற்றவாளிகளாக இருக்கின்றீர்கள்.
التفاسير العربية:
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
77.47. மறுமை நாளில் அவர்களுக்கு கூலி வழங்கப்படும் என்பதை மறுத்தவர்களுக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும்.
التفاسير العربية:
وَاِذَا قِیْلَ لَهُمُ ارْكَعُوْا لَا یَرْكَعُوْنَ ۟
77.48. இந்த பொய்ப்பிப்பாளர்களிடம் “அல்லாஹ்வுக்காக தொழுங்கள்” என்று கூறப்பட்டால் அவர்கள் அவனுக்காக தொழுவதில்லை.
التفاسير العربية:
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟
77.49. அல்லாஹ்விடமிருந்து தூதர்கள் கொண்டுவந்தவற்றை மறுத்தவர்களுக்கு அந்த நாளில் அழிவும் வேதனையும் இழப்புமே கிடைக்கும்.
التفاسير العربية:
فَبِاَیِّ حَدِیْثٍ بَعْدَهٗ یُؤْمِنُوْنَ ۟۠
77.50. தங்கள் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட இந்த குர்ஆனின்மீது அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லையெனில் வேறு எந்த செய்தியைத்தான் அவர்கள் நம்பிக்கைகொள்ளப் போகிறார்கள்.
التفاسير العربية:
من فوائد الآيات في هذه الصفحة:
• رعاية الله للإنسان في بطن أمه.
1. தாயின் வயிற்றில் அல்லாஹ் மனிதனைப் பராமரிப்பு.

• اتساع الأرض لمن عليها من الأحياء، ولمن فيها من الأموات.
2. பூமி தன்மீது வாழக்கூடியவர்களுக்கும் தன்னுள்ளே இருக்கும் இறந்தவர்களுக்கும் போதுமானளவு விசாலமானது.

• خطورة التكذيب بآيات الله والوعيد الشديد لمن فعل ذلك.
3. அல்லாஹ்வின் அத்தாட்சிகளை மறுப்பதன் விபரீதமும் அவ்வாறு செய்பவர்களுக்கான கடுமையான எச்சரிக்கையும்.

 
ترجمة معاني سورة: المرسلات
فهرس السور رقم الصفحة
 
ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - فهرس التراجم

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

إغلاق