আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ


অৰ্থানুবাদ আয়াত: (27) ছুৰা: ছুৰা আন-নাহল
ثُمَّ یَوْمَ الْقِیٰمَةِ یُخْزِیْهِمْ وَیَقُوْلُ اَیْنَ شُرَكَآءِیَ الَّذِیْنَ كُنْتُمْ تُشَآقُّوْنَ فِیْهِمْ ؕ— قَالَ الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ اِنَّ الْخِزْیَ الْیَوْمَ وَالسُّوْٓءَ عَلَی الْكٰفِرِیْنَ ۟ۙ
16.27. பின்னர் மறுமை நாளில் அல்லாஹ் அவர்களை வேதனையால் இழிவுபடுத்துவான். அவன் அவர்களிடம் கேட்பான்: “நீங்கள் வணக்கத்தில் எனக்கு இணையாக்கிக் கொண்டிருந்த எனக்கு நிகரானவர்கள் எங்கே? அவற்றினால்தானே என் தூதர்களையும் நம்பிக்கையாளர்களையும் எதிர்த்துக் கொண்டிருந்தீர்கள்?” இறைவனுக்குக் கட்டுப்பட்ட அறிஞர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக மறுமை நாளில் இழிவும் வேதனையும் நிராகரிப்பாளர்களைத் தாக்கியே தீரும்.”
আৰবী তাফছীৰসমূহ:
এই পৃষ্ঠাৰ আয়াতসমূহৰ পৰা সংগৃহীত কিছুমান উপকাৰী তথ্য:
• فضيلة أهل العلم، وأنهم الناطقون بالحق في الدنيا ويوم يقوم الأشهاد، وأن لقولهم اعتبارًا عند الله وعند خلقه.
1. அறிஞர்களின் சிறப்பு தெளிவாகிறது. அவர்கள் இவ்வுலகிலும் சாட்சிகள் நிலை பெறும் மறுமை நாளிலும் சத்தியத்தைக் கொண்டு பேசுவார்கள். அவர்களின் வார்த்தைக்கு அல்லாஹ்விடத்திலும் படைப்புகளிடத்திலும் மதிப்பு உண்டு.

• من أدب الملائكة مع الله أنهم أسندوا العلم إلى الله دون أن يقولوا: إنا نعلم ما كنتم تعملون، وإشعارًا بأنهم ما علموا ذلك إلا بتعليم من الله تعالى.
2. நீங்கள் செய்துகொண்டிருந்ததை நாங்கள் அறிவோம் என்று வானவர்கள் கூறாமல் அல்லாஹ் அறிந்துவைத்துள்ளான் எனக் கூறியமை அல்லாஹ்வுடன் அவர்கள் பேணும் ஒழுக்கமாகும். நிச்சயமாக அதை அல்லாஹ் அவர்களுக்கு கற்றுக்கொடுத்தாலே தவிர அவர்கள் அறிந்து கொள்ள முடியாது என்பதை உணர்த்தும் விதமாகவே அவ்வாறு கூறுகின்றனர்.

• من كرم الله وجوده أنه يعطي أهل الجنة كل ما تمنوه عليه، حتى إنه يُذَكِّرهم أشياء من النعيم لم تخطر على قلوبهم.
3. சுவனவாதிகள் ஆசைவைக்கும் அனைத்தையும் அவர்களுக்கு அல்லாஹ் வழங்குவது அவனது கொடையாகும். எந்தளவுக்கெனில் அவர்களது உள்ளங்களில் தோன்றாத இன்பங்களையும் அவர்களுக்கு அவன் நினைவூட்டுவான்.

• العمل هو السبب والأصل في دخول الجنة والنجاة من النار، وذلك يحصل برحمة الله ومنَّته على المؤمنين لا بحولهم وقوتهم.
4. சுவனத்தில் நுழைவதற்கும் நரகில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கும் அடிப்படையும் காரணமாக அமைவதும் செயல்களே. அது நம்பிக்கையாளர்களின் மீது அல்லாஹ் காட்டும் கருணையினாலும் அருளினாலுமே ஏற்படுமே அன்றி அவர்களது பலத்தினாலோ ஆற்றலினாலோ அல்ல.

 
অৰ্থানুবাদ আয়াত: (27) ছুৰা: ছুৰা আন-নাহল
ছুৰাৰ তালিকা পৃষ্ঠা নং
 
আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

বন্ধ