আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ


অৰ্থানুবাদ আয়াত: (217) ছুৰা: ছুৰা আল-বাক্বাৰাহ
یَسْـَٔلُوْنَكَ عَنِ الشَّهْرِ الْحَرَامِ قِتَالٍ فِیْهِ ؕ— قُلْ قِتَالٌ فِیْهِ كَبِیْرٌ ؕ— وَصَدٌّ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَكُفْرٌ بِهٖ وَالْمَسْجِدِ الْحَرَامِ ۗ— وَاِخْرَاجُ اَهْلِهٖ مِنْهُ اَكْبَرُ عِنْدَ اللّٰهِ ۚ— وَالْفِتْنَةُ اَكْبَرُ مِنَ الْقَتْلِ ؕ— وَلَا یَزَالُوْنَ یُقَاتِلُوْنَكُمْ حَتّٰی یَرُدُّوْكُمْ عَنْ دِیْنِكُمْ اِنِ اسْتَطَاعُوْا ؕ— وَمَنْ یَّرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِیْنِهٖ فَیَمُتْ وَهُوَ كَافِرٌ فَاُولٰٓىِٕكَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ۚ— وَاُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
2.217. தூதரே! புனிதமான மாதங்களான துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களில் போர்புரிவதைப் பற்றி மக்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் அவர்களிடம் கூறுவீராக: இந்த மாதங்களில் போர்புரிவது அல்லாஹ்விடத்தில் பாவமானதும் கண்டனத்திற்குரியதுமாகும். அதே போன்று அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கும் இணைவைப்பாளர்களின் செயலும் கெட்டதாகும். மஸ்ஜிதுல் ஹராமை விட்டு நம்பிக்கையாளர்களைத் தடுப்பது, அங்கு வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது அல்லாஹ்விடத்தில் புனித மாதத்தில் போரிடுவதை விடப் பெரிய பாவமாகும். அல்லாஹ்விற்கு இணையாக மற்றவர்களை ஆக்கும் அவர்களின் செயற்பாடு கொலையைவிடக் கொடியது. நம்பிக்கையாளர்களே! வாய்ப்புக் கிடைத்தால் உங்களை உண்மையான மார்க்கத்திலிருந்து திருப்பி தமதுபொய்யான மார்க்கத்திற்கு கொண்டுவரும்வரை, அநீதியில் இருக்கும் இந்த இணைவைப்பாளர்கள் உங்களுடன் ஓயாமல் போரிட்டுக் கொண்டே இருப்பார்கள். உங்களில் எவர் தம் மார்க்கத்தை விட்டுவிட்டு அல்லாஹ்வை நிராகரித்த நிலையில் மரணித்தும் விடுகிறாரோ அவரது நற்செயல்கள் அனைத்தும் வீணாகிவிடும். மறுமையில் அவர் நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்துகிடப்பார்.
আৰবী তাফছীৰসমূহ:
এই পৃষ্ঠাৰ আয়াতসমূহৰ পৰা সংগৃহীত কিছুমান উপকাৰী তথ্য:
• الجهل بعواقب الأمور قد يجعل المرء يكره ما ينفعه ويحب ما يضره، وعلى المرء أن يسأل الله الهداية للرشاد.
1. விஷயங்களின் பின்விளைவுகளைப் பற்றிய அறியாமையினால் மனிதன் தனக்குப் பயனளிக்கக்கூடியதை வெறுக்கிறான், தனக்குத் தீங்கிழைக்கக்கூடியதை விரும்புகிறான். மனிதன் அல்லாஹ்விடம் நேர்வழியைக் கோரி பிரார்த்திக்க வேண்டும்.

• جاء الإسلام بتعظيم الحرمات والنهي عن الاعتداء عليها، ومن أعظمها صد الناس عن سبيل الله تعالى.
2. இஸ்லாம் சில விஷயங்களைக் கண்ணியப்படுத்தி அவற்றில் வரம்புமீறுவதைத் தடைசெய்துள்ளது. அவற்றில் மிகப் பெரிய பாவம், அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களைத் தடுப்பதாகும்.

• لا يزال الكفار أبدًا حربًا على الإسلام وأهله حتَّى يخرجوهم من دينهم إن استطاعوا، والله موهن كيد الكافرين.
3. நிராகரிப்பாளர்கள் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக அவர்களை மார்க்கத்தை விட்டு வெளியேற்றும் வரை ஓயாமல் போரிட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆயினும் அல்லாஹ் நிராகரிப்பாளர்களின் சூழ்ச்சியைப் பலவீனப்படுத்திவிடுவான்.

• الإيمان بالله تعالى، والهجرة إليه، والجهاد في سبيله؛ أعظم الوسائل التي ينال بها المرء رحمة الله ومغفرته.
4. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொள்வது, அவன் பக்கம் புலம்பெயர்ந்து செல்வது, அவனுடைய பாதையில் ஜிஹாது செய்வது மனிதன் அல்லாஹ்வின் கருணையையும் மன்னிப்பையும் பெறுவதற்கான மிகச் சிறந்த வழிகளாகும்.

• حرّمت الشريعة كل ما فيه ضرر غالب وإن كان فيه بعض المنافع؛ مراعاة لمصلحة العباد.
5. அடியார்களின் நன்மையைக் கவனத்தில்கொண்டு குறைவான பயனையும் அதிகமான தீங்குளையும் பெற்ற அனைத்தையும் ஷரீஆ தடைசெய்துள்ளது.

 
অৰ্থানুবাদ আয়াত: (217) ছুৰা: ছুৰা আল-বাক্বাৰাহ
ছুৰাৰ তালিকা পৃষ্ঠা নং
 
আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

বন্ধ