Check out the new design

আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - আল-মুখতাচাৰ ফী তাফছীৰিল কোৰআনিল কাৰীমৰ তামিল অনুবাদ * - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ


অৰ্থানুবাদ ছুৰা: আন-নিছা   আয়াত:
لَا یَسْتَوِی الْقٰعِدُوْنَ مِنَ الْمُؤْمِنِیْنَ غَیْرُ اُولِی الضَّرَرِ وَالْمُجٰهِدُوْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ ؕ— فَضَّلَ اللّٰهُ الْمُجٰهِدِیْنَ بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ عَلَی الْقٰعِدِیْنَ دَرَجَةً ؕ— وَكُلًّا وَّعَدَ اللّٰهُ الْحُسْنٰی ؕ— وَفَضَّلَ اللّٰهُ الْمُجٰهِدِیْنَ عَلَی الْقٰعِدِیْنَ اَجْرًا عَظِیْمًا ۟ۙ
4.95. அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்யாமல் பின்தங்கிய நம்பிக்கையாளர்களும் - நோய், பார்வையின்மை போன்ற காரணங்களால் பின்தங்கியவர்களைத்தவிர - அவனுடைய பாதையில் தங்கள் செல்வங்களாலும் உயிர்களாலும் ஜிஹாதுசெய்தவர்களும் சமமாக மாட்டார்கள். போரைவிட்டு பின்தங்கியிருப்பவர்களைவிட தங்கள் செல்வங்களாலும் உயிர்களாலும் ஜிஹாது செய்பவர்களை அந்தஸ்தில் அல்லாஹ் சிறப்பித்துள்ளான். முஜாஹிதுகள்,தகுந்த காரணத்தினால் பின்தங்குபவர்கள் என ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் அவர்களுக்குத் தகுந்த கூலியை வைத்துள்ளான்.பின்தங்குபவர்களை விட முஜாஹிதுகளுக்கு அல்லாஹ் பெரும் நன்மைகளை வழங்கி சிறப்பித்துள்ளான்.
আৰবী তাফছীৰসমূহ:
دَرَجٰتٍ مِّنْهُ وَمَغْفِرَةً وَّرَحْمَةً ؕ— وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟۠
4.96. இந்த நன்மை, அல்லாஹ்வின் பாவமன்னிப்பு, கருணை என்பற்றுடன் கூடிய ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்த அந்தஸ்துக்களாகும். அல்லாஹ் தன் அடியார்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
আৰবী তাফছীৰসমূহ:
اِنَّ الَّذِیْنَ تَوَفّٰىهُمُ الْمَلٰٓىِٕكَةُ ظَالِمِیْۤ اَنْفُسِهِمْ قَالُوْا فِیْمَ كُنْتُمْ ؕ— قَالُوْا كُنَّا مُسْتَضْعَفِیْنَ فِی الْاَرْضِ ؕ— قَالُوْۤا اَلَمْ تَكُنْ اَرْضُ اللّٰهِ وَاسِعَةً فَتُهَاجِرُوْا فِیْهَا ؕ— فَاُولٰٓىِٕكَ مَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ— وَسَآءَتْ مَصِیْرًا ۟ۙ
4.97.முஸ்லிமல்லாத அந்நிய நாட்டிலிருந்து இஸ்லாமிய நாட்டை நோக்கி புலம்பெயராமல் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்டவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது அவர்களை எச்சரிக்கும் விதமாக அவர்களிடம் கேட்பார்கள், “நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்; இணைவைப்பாளர்களை விட்டும் எவ்விதத்தில் நீங்கள் வேறுபட்டிருந்தீர்கள்?” அதற்கு அவர்கள், “நாங்கள் பலவீனர்களாக இருந்தோம். எங்களிடம் எம்மை் பாதுகாத்துக்கொள்ளுமளவு எந்தப் பலமும் இருக்கவில்லை ” என்று சாட்டுப்போக்குக் கூறுவார்கள். வானவர்கள் அவர்களைப் பழித்துக் கூறுவார்கள், “அல்லாஹ்வின் பூமி விசாலமாக இருக்கவில்லையா? நீங்கள் புலம்பெயர்ந்து அங்குசென்று உங்களின் மார்க்கத்தையும் இழிவிலிருந்தும் அடக்குமுறையலிருந்தும் உங்களையும் பாதுகாத்திருக்கலாம் அல்லவா?”. புலம்பெயராத இவர்களின் தங்குமிடம் நரகம்தான். அது மிகவும் மோசமான தங்குமிடமாகவும் திரும்புமிடமாகவும் இருக்கின்றது.
আৰবী তাফছীৰসমূহ:
اِلَّا الْمُسْتَضْعَفِیْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالْوِلْدَانِ لَا یَسْتَطِیْعُوْنَ حِیْلَةً وَّلَا یَهْتَدُوْنَ سَبِیْلًا ۟ۙ
4.98,99. இந்த எச்சரிக்கையிலிருந்து காரணங்களுடைய பலவீனர்கள் விதிவிலக்கானவர்கள் ஆவர். அவர்கள் ஆண்களாக அல்லது பெண்களாக அல்லது குழந்தைகளாக இருந்தாலும் சரியே. அநியாயத்தையும் அடக்குமுறையையும் தடுப்பதற்கு அவர்களிடம் எந்தப்பலமும் இல்லை. அவற்றிலிருந்து தப்பிச்செல்வதற்கான எந்த வழியும் அவர்களுக்குத் தெரியாது. அல்லாஹ் தன் அருளால் அவர்களை மன்னித்துவிடலாம். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றான்.
আৰবী তাফছীৰসমূহ:
فَاُولٰٓىِٕكَ عَسَی اللّٰهُ اَنْ یَّعْفُوَ عَنْهُمْ ؕ— وَكَانَ اللّٰهُ عَفُوًّا غَفُوْرًا ۟
4.98,99. இந்த எச்சரிக்கையிலிருந்து காரணங்களுடைய பலவீனர்கள் விதிவிலக்கானவர்கள் ஆவர். அவர்கள் ஆண்களாக அல்லது பெண்களாக அல்லது குழந்தைகளாக இருந்தாலும் சரியே. அநியாயத்தையும் அடக்குமுறையையும் தடுப்பதற்குரிய எந்தப் பலமும் அவர்களிடம் இல்லை. அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழியும் அவர்களுக்குத் தெரியாது. அல்லாஹ் தன் அருளால் அவர்களை மன்னித்துவிடலாம். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றான்.
আৰবী তাফছীৰসমূহ:
وَمَنْ یُّهَاجِرْ فِیْ سَبِیْلِ اللّٰهِ یَجِدْ فِی الْاَرْضِ مُرٰغَمًا كَثِیْرًا وَّسَعَةً ؕ— وَمَنْ یَّخْرُجْ مِنْ بَیْتِهٖ مُهَاجِرًا اِلَی اللّٰهِ وَرَسُوْلِهٖ ثُمَّ یُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ اَجْرُهٗ عَلَی اللّٰهِ ؕ— وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟۠
4.100. யார் நிராகரிப்பாளர்கள் வசிக்கும் ஊரிலிருந்து அல்லாஹ்வின் திருப்தியை நாடியவராக இஸ்லாமிய நாட்டினை நோக்கிப் புலம்பெயர்ந்தவராகப் புறப்பட்டாரோ அவர் புலம்பெயரும் பூமியில் அவர்விட்டுவந்த இடத்தை விட மாற்றமான இடத்தை கண்டுகொள்வார். அங்கு கண்ணியத்தையும் விசாலமான வாழ்வாதாரத்தையும் பெறுவார். யார் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோக்கி புலம்பெயர்ந்தவராகப் புறப்பட்டு பின்னர் அந்த இடத்தை அடைவதற்கு முன்னரே அவருக்கு மரணம் நேர்ந்துவிட்டால் அல்லாஹ்விடம் அவருக்கு கூலி உறுதியாகிவிட்டது. அவர் புலம்பெயர நாடிய இடத்தை அடையாததால் அவருக்கு எந்த இழப்பும் இல்லை. தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
আৰবী তাফছীৰসমূহ:
وَاِذَا ضَرَبْتُمْ فِی الْاَرْضِ فَلَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ اَنْ تَقْصُرُوْا مِنَ الصَّلٰوةِ ۖۗ— اِنْ خِفْتُمْ اَنْ یَّفْتِنَكُمُ الَّذِیْنَ كَفَرُوْا ؕ— اِنَّ الْكٰفِرِیْنَ كَانُوْا لَكُمْ عَدُوًّا مُّبِیْنًا ۟
4.101. நீங்கள் பூமியில் பயணம் செய்தால், நிராகரிப்பாளர்களால் ஏதேனும் தீங்கு உங்களுக்கு நேரலாம் என்று நீங்கள் அஞ்சினால் நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்தாக சுருக்கிக் கொள்வதில் உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. நிச்சயமாக நிராகரிப்பாளர்களின் உங்கள் மீதான எதிர்ப்பு பகிரங்கமானதாகும். யுத்தமற்ற பாதுகாப்பான நிலையிலும், பிராயணத்தில் கருக்ககுவதும் அனுமதிக்கப்பட்டதே என்ற சட்டம் ஆதாரபூர்வமான நபிவழியில் இடம்பெற்றுள்ளது.
আৰবী তাফছীৰসমূহ:
এই পৃষ্ঠাৰ আয়াতসমূহৰ পৰা সংগৃহীত কিছুমান উপকাৰী তথ্য:
• فضل الجهاد في سبيل الله وعظم أجر المجاهدين، وأن الله وعدهم منازل عالية في الجنة لا يبلغها غيرهم.
1. அல்லாஹ்வின் பாதையில் போராடுவது சிறப்புமிக்கது என்பதோடு அதில் ஈடுபடுவோருக்கான கூலியும் அபரிமிதமானது. அவர்களுக்கு சுவனத்தில் யாருமே அடையமுடியாத உயர்ந்த அந்தஸ்துகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

• أصحاب الأعذار يسقط عنهم فرض الجهاد مع ما لهم من أجر إن حسنت نيتهم.
2. தகுந்த காரணங்களுடையவர்களுக்கு ஜிஹாது கடமையல்ல. அவர்களின் எண்ணங்கள் சரியானதாக இருந்தால் ஜிஹாதில் கலந்து கொள்ளாமலேயே கலந்து கொண்டதற்கான கூலி கிடைக்கும்.

• فضل الهجرة إلى بلاد الإسلام، ووجوبها على القادر إن كان يخشى على دينه في بلده.
3. இஸ்லாமியப் பிரதேசத்துக்கு புலம்பெயர்வது சிறப்புக்குரியதாகும். இஸ்லாமிய நாடல்லாத தனது நாட்டில் மார்க்க அடிப்படையில் வாழமுடியாது என்று அஞ்சினால் இஸ்லாமிய நாட்டினை நோக்கி புலம்பெயர்வது அவசியமாகும்.

• مشروعية قصر الصلاة في حال السفر.
4. பயணத்தில் தொழுகையை சுருக்கிக் கொள்வதற்கு அனுமதியுள்ளது.

 
অৰ্থানুবাদ ছুৰা: আন-নিছা
ছুৰাৰ তালিকা পৃষ্ঠা নং
 
আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - আল-মুখতাচাৰ ফী তাফছীৰিল কোৰআনিল কাৰীমৰ তামিল অনুবাদ - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ

তাফছীৰ চেণ্টাৰ ফৰ কোৰানিক ষ্টাডিজৰ ফালৰ পৰা প্ৰচাৰিত।

বন্ধ