Check out the new design

আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - আল-মুখতাচাৰ ফী তাফছীৰিল কোৰআনিল কাৰীমৰ তামিল অনুবাদ * - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ


অৰ্থানুবাদ ছুৰা: আল-মুজাদালাহ   আয়াত:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا نَاجَیْتُمُ الرَّسُوْلَ فَقَدِّمُوْا بَیْنَ یَدَیْ نَجْوٰىكُمْ صَدَقَةً ؕ— ذٰلِكَ خَیْرٌ لَّكُمْ وَاَطْهَرُ ؕ— فَاِنْ لَّمْ تَجِدُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
நபித்தோழர்கள் நபியவர்களுடன் அதிகமாக இரகசியமாக உரையாடிய போது, அல்லாஹ் கூறினான்:
58.12. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களே! நீங்கள் தூதருடன் இரகசியம் பேச விரும்பினால் அதற்கு முன்னால் தர்மம் அளித்துவிடுங்கள். அதில் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுதல் அடங்கியிருப்பதால் அவ்வாறு தர்மம் செய்வது சிறந்ததும் தூய்மையானதுமாகும். தர்மம் செய்ய நீங்கள் எதையும் பெறவில்லையெனில் தூதருடன் இரகசியம் பேசுவதில் எவ்விதக் குற்றமுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். எனவேதான் அவர்களால் இயன்றதையே அவர்களுக்கு கடமையாக்குகிறான்.
আৰবী তাফছীৰসমূহ:
ءَاَشْفَقْتُمْ اَنْ تُقَدِّمُوْا بَیْنَ یَدَیْ نَجْوٰىكُمْ صَدَقٰتٍ ؕ— فَاِذْ لَمْ تَفْعَلُوْا وَتَابَ اللّٰهُ عَلَیْكُمْ فَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَطِیْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ— وَاللّٰهُ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟۠
58.13. தூதருடன் இரகசியம் பேசும்போது நீங்கள் வழங்கும் தர்மத்தினால் வறுமை ஏற்பட்டுவிடும் என்று அஞ்சுகிறீர்களா? அல்லாஹ் கட்டளையிட்டவாறு நீங்கள் செய்யாதபோது அதனை விட்டுவிடுவதற்கு அனுமதியளித்து அவன் உங்களை மன்னித்துவிட்டான். எனவே தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுங்கள். உங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தை வழங்கிவிடுங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் செய்பவற்றை அவன் நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.
আৰবী তাফছীৰসমূহ:
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ تَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللّٰهُ عَلَیْهِمْ ؕ— مَا هُمْ مِّنْكُمْ وَلَا مِنْهُمْ ۙ— وَیَحْلِفُوْنَ عَلَی الْكَذِبِ وَهُمْ یَعْلَمُوْنَ ۟ۚ
58.14. -தூதரே!- தங்களின் நிராகரிப்பு , பாவங்களினால் அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளான யூதர்களுடன் நட்புக் கொள்ளும் நயவஞ்சகர்களை நீர் பார்க்கவில்லையா? இந்த நயவஞ்சகர்கள் நம்பிக்கையாளர்களைச் சார்ந்தவர்களோ, யூதர்களைச் சார்ந்தவர்களோ அல்ல. மாறாக இங்குமங்கும் தடுமாறித் திரியக்கூடியவர்களாவர். இந்த நயவஞ்சகர்கள் தங்களை முஸ்லிம்கள் என்றும் முஸ்லிம்கள் குறித்த செய்திகளை யூதர்களிடம் எடுத்துரைக்கவில்லை என்றும் சத்தியம் செய்கின்றனர். அவர்கள் தங்களின் சத்தியத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
اَعَدَّ اللّٰهُ لَهُمْ عَذَابًا شَدِیْدًا ؕ— اِنَّهُمْ سَآءَ مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
58.15. அல்லாஹ் அவர்களுக்காக மறுமையில் கடும் வேதனையைத் தயார்படுத்தி வைத்துள்ளான். அவர்கள் நரகத்தின் அடித்தளத்தில் நுழைவார்கள். நிச்சயமாக அவர்கள் உலகில் செய்துகொண்டிருந்த நிராகரிப்பான செயல்கள் மிகவும் மோசமானதாகும்.
আৰবী তাফছীৰসমূহ:
اِتَّخَذُوْۤا اَیْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ فَلَهُمْ عَذَابٌ مُّهِیْنٌ ۟
58.16. அவர்கள் தங்களின் சத்தியங்களை நிராகரிப்பின் காரணமாக கொலை செய்யப்படுவதை விட்டும் தங்களைக் காத்துக் கொள்ளும் கேடயமாக ஆக்கிக் கொண்டார்கள். தங்களின் உயிர்களையும் செல்வங்களையும் பாதுகாப்பதற்காக அவர்கள் பொய்ச் சத்தியங்கள் மூலம் இஸ்லாத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் முஸ்லிம்களை பலவீனப்படுத்தி மக்களை சத்தியத்தைவிட்டும் திருப்பினார்கள். அவர்களுக்கு இழிவுமிக்க வேதனை உண்டு. அது அவர்களை இழிவுபடுத்திவிடும்.
আৰবী তাফছীৰসমূহ:
لَنْ تُغْنِیَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَیْـًٔا ؕ— اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ؕ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟
58.17. அவர்களின் செல்வங்களோ, பிள்ளைகளோ அல்லாஹ்விடம் அவர்களுக்குச் சிறிதும் பயனளிக்காது. அவர்கள்தாம் நரகத்தில் நுழைந்து நிரந்தரமாக வீழ்ந்து கிடக்கும் நரகவாசிகளாவர். அதன் வேதனை அவர்களை விட்டும் என்றும் முடிவுறாதது.
আৰবী তাফছীৰসমূহ:
یَوْمَ یَبْعَثُهُمُ اللّٰهُ جَمِیْعًا فَیَحْلِفُوْنَ لَهٗ كَمَا یَحْلِفُوْنَ لَكُمْ وَیَحْسَبُوْنَ اَنَّهُمْ عَلٰی شَیْءٍ ؕ— اَلَاۤ اِنَّهُمْ هُمُ الْكٰذِبُوْنَ ۟
58.18. அல்லாஹ் அவர்கள் அனைவரையும் எழுப்பும் நாளில் அவர்களில் யாரையும் கூலிகொடுப்பதற்காக எழுப்பாமல் விட்டுவைக்கமாட்டான். தாங்கள் நிராகரிப்பிலோ, நயவஞ்சகத்திலோ இருக்கவில்லை என்றும் அல்லாஹ்வை திருப்திபடுத்தும் செயல்களைச் செய்யும் நம்பிக்கையாளர்களாக இருந்தார்கள் என்றும் அவர்கள் சத்தியமிட்டுக் கூறுவார்கள். -நம்பிக்கையாளர்களே!- உலகில் நிச்சயமாக உங்களிடம் அவர்கள் நாங்கள் முஸ்லீம்கள் என்று சத்தியமிட்டுக் கொண்டிருந்ததைப் போலவே மறுமையிலும் அவர்கள் சத்தியமிடுவார்கள். அல்லாஹ்விடம் அவர்கள் செய்யும் இந்த சத்தியங்களின் மூலம் தங்களுக்கு நன்மையளிக்கவோ அல்லது தங்களைவிட்டும் தீங்கினை அகற்றவோ முடியும் என்று அவர்கள் எண்ணுவார்கள். அறிந்துகொள்ளுங்கள், அவர்கள்தாம் இவ்வுலகிலும் மறுவுலகிலும் தமது சத்தியங்களில் உண்மையான பொய்யர்களாவர்.
আৰবী তাফছীৰসমূহ:
اِسْتَحْوَذَ عَلَیْهِمُ الشَّیْطٰنُ فَاَنْسٰىهُمْ ذِكْرَ اللّٰهِ ؕ— اُولٰٓىِٕكَ حِزْبُ الشَّیْطٰنِ ؕ— اَلَاۤ اِنَّ حِزْبَ الشَّیْطٰنِ هُمُ الْخٰسِرُوْنَ ۟
58.19. ஷைத்தான் அவர்களின்மீது ஆதிக்கம் செலுத்தி தன் ஊசலாட்டத்தின்மூலம் அல்லாஹ்வின் நினைவைவிட்டும் அவர்களை மறக்கடிக்கச் செய்துவிட்டான். அவர்கள் அல்லாஹ்வை திருப்திப்படுத்தும் செயல்களில் ஈடுபடவில்லை. மாறாக அவனைக் கோபத்திலாழ்த்தும் காரியங்களில் ஈடுபட்டார்கள். இந்த பண்புகளை உடையவர்கள்தாம் இப்லீஸின் படையினரும் அவனின் ஆதரவாளரும் ஆவார். நிச்சயமாக அவனது பட்டாளமும் ஆதவராளர்களுமே இவ்வுலகிலும் மறுவுலகிலும் நஷ்டமடைந்தவர்களாவர். அவர்கள் நேர்வழிக்குப் பகரமாக வழிகேட்டையும் சுவனத்திற்குப் பகரமாக நரகத்தையும் விலைக்கு வாங்கிக் கொண்டார்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
اِنَّ الَّذِیْنَ یُحَآدُّوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗۤ اُولٰٓىِٕكَ فِی الْاَذَلِّیْنَ ۟
58.20. நிச்சயமாக அல்லாஹ்வுடன் அவனுடைய தூதருடனும் பகைமை பாராட்டுபவர்கள் அவன் இவ்வுலகிலும் மறுவுலகிலும் இழிவுபடுத்திய நிராகரித்த மக்களுடன் இருப்பார்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
كَتَبَ اللّٰهُ لَاَغْلِبَنَّ اَنَا وَرُسُلِیْ ؕ— اِنَّ اللّٰهَ قَوِیٌّ عَزِیْزٌ ۟
58.21. “நானும் என் தூதர்களும் எங்களுடைய எதிரிகளுக்கு எதிராக ஆதாரத்தைக்கொண்டும் பலத்தைக் கொண்டும் வெற்றி பெற்றுவிடுவோம், என்று.” அல்லாஹ் முன்னரே தனது அறிவின் பிரகாரம் விதித்துவிட்டான். நிச்சயமாக தன் தூதர்களுக்கு உதவி செய்வதற்கு அல்லாஹ் ஆற்றலுடையவன். அவர்களின் எதிரிகளைத் தண்டிப்பதில் மிகைத்தவன்.
আৰবী তাফছীৰসমূহ:
এই পৃষ্ঠাৰ আয়াতসমূহৰ পৰা সংগৃহীত কিছুমান উপকাৰী তথ্য:
• لطف الله بنبيه صلى الله عليه وسلم؛ حيث أدَّب صحابته بعدم المشقَّة عليه بكثرة المناجاة.
1. தனது நபியுடன் அல்லாஹ்வின் மென்மை. அதனால்தான் அதிகமாக உறவாடி அவருக்கு சிரமம் ஏற்படுத்த வேண்டாம் என அவரது தோழர்களுக்கு வழிகாட்டுகிறான்.

• ولاية اليهود من شأن المنافقين.
2. யூதர்களுடன் நட்புக்கொள்வது நயவஞ்சகர்கிளின் பண்பாகும்.

• خسران أهل الكفر وغلبة أهل الإيمان سُنَّة إلهية قد تتأخر، لكنها لا تتخلف.
3. நம்பிக்கையாளர்கள் வெற்றியடைவதும் நிராகரிப்பாளர்கள் நஷ்டமடைவதும் இறைவன் ஏற்படுத்திய நியதியாகும். அது சிலவேளை தாமதமாகலாம். ஆனால் நடைபெறாமலிருக்காது.

 
অৰ্থানুবাদ ছুৰা: আল-মুজাদালাহ
ছুৰাৰ তালিকা পৃষ্ঠা নং
 
আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - আল-মুখতাচাৰ ফী তাফছীৰিল কোৰআনিল কাৰীমৰ তামিল অনুবাদ - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ

তাফছীৰ চেণ্টাৰ ফৰ কোৰানিক ষ্টাডিজৰ ফালৰ পৰা প্ৰচাৰিত।

বন্ধ