Check out the new design

আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - আল-মুখতাচাৰ ফী তাফছীৰিল কোৰআনিল কাৰীমৰ তামিল অনুবাদ * - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ


অৰ্থানুবাদ ছুৰা: আল-জ্বিন   আয়াত:

அல்ஜின்

ছুৰাৰ উদ্দেশ্য:
إبطال دين المشركين، ببيان حال الجنّ وإيمانهم بعد سماع القرآن.
ஜின்களின் நிலையையும், அல்குர்ஆனைச் செவிமடுத்த பின் அவர்கள் விசுவாசம் கொண்டதையும் தெளிவுபடுத்துவதன் மூலம் இணைவைப்பளார்களின் மதம் தவறு என்பதை நிரூபித்தல்

قُلْ اُوْحِیَ اِلَیَّ اَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوْۤا اِنَّا سَمِعْنَا قُرْاٰنًا عَجَبًا ۟ۙ
72.1. -தூதரே!- நீர் உம் சமூகத்திற்குக் கூறுவீராக: “அல்லாஹ் எனக்குப் பின்வருமாறு வஹி அறிவித்துள்ளான், “நான் குர்ஆன் ஓதியதை ஜின்களில் ஒரு குழுவினர் ‘பத்னு நஹ்லா’ என்ற இடத்தில் வைத்து செவியுற்றார்கள். அவர்கள் தங்கள் சமூகத்தினரிடம் திரும்பிச் சென்றபோது அவர்களிடம் கூறினார்கள்: “தன் தெளிவிலும் உரைநடையிலும் கவர்ச்சிமிக்க ஓதப்படக்கூடிய ஒரு பேச்சை நிச்சயமாக நாங்கள் செவியுற்றோம்.”
আৰবী তাফছীৰসমূহ:
یَّهْدِیْۤ اِلَی الرُّشْدِ فَاٰمَنَّا بِهٖ ؕ— وَلَنْ نُّشْرِكَ بِرَبِّنَاۤ اَحَدًا ۟ۙ
72.2. நாங்கள் செவியுற்ற அந்த பேச்சு (குர்ஆன்) கொள்கை, சொல், செயல் ஆகியவற்றில் சரியானவற்றுக்கு வழிகாட்டுகிறது. எனவே நாங்கள் அதனை நம்புகிறோம். அதனை இறக்கிய எங்கள் இறைவனுக்கு இணையாக நாங்கள் யாரையும் ஆக்க மாட்டோம்.
আৰবী তাফছীৰসমূহ:
وَّاَنَّهٗ تَعٰلٰی جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَّلَا وَلَدًا ۟ۙ
72.3. எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்துவிட்டது. அவன் இணைவைப்பாளர்கள் கூறுவதுபோல தனக்கு மனைவியையோ, மகனையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பதை நாம் நிச்சயமாக நம்பிக்கை கொண்டோம்.
আৰবী তাফছীৰসমূহ:
وَّاَنَّهٗ كَانَ یَقُوْلُ سَفِیْهُنَا عَلَی اللّٰهِ شَطَطًا ۟ۙ
72.4. நிச்சயமாக இப்லீஸ்தான் ‘அல்லாஹ்வுக்கு மனைவி உண்டு, மகன் உண்டு’ என்று அவன் மீது தவறான கருத்தை இணைத்து, இட்டுக்கட்டிக் கூறிக்கொண்டிருந்தான்.
আৰবী তাফছীৰসমূহ:
وَّاَنَّا ظَنَنَّاۤ اَنْ لَّنْ تَقُوْلَ الْاِنْسُ وَالْجِنُّ عَلَی اللّٰهِ كَذِبًا ۟ۙ
72.5. இணைவைத்த மனிதர்களோ, ஜின்களோ அல்லாஹ்வுக்கு மனைவி உண்டு, மகன் உண்டு என்று கூறியபோது அவர்கள் பொய் கூற மாட்டார்கள் என்றே நிச்சயமாக நாங்கள் எண்ணியிருந்தோம். எனவேதான் அவர்களை அப்படியே பின்பற்றி அவர்கள் கூறியதையும் உண்மைப்படுத்தினோம்.
আৰবী তাফছীৰসমূহ:
وَّاَنَّهٗ كَانَ رِجَالٌ مِّنَ الْاِنْسِ یَعُوْذُوْنَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوْهُمْ رَهَقًا ۟ۙ
72.6. அறியாமைக் காலத்தில் மனிதர்களில் சில ஆண்கள் ஏதேனும் பயமுறுத்தக்கூடிய இடத்தில் தங்க நேர்ந்தால் ஜின்களிலுள்ள ஆண்களிடம் பாதுகாவல் தேடுபவர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒருவர் கூறுவார்: “நான் இந்தப் பள்ளத்தாக்கின் தலைவரிடம் அவர் சமூகத்து மூடர்களின் தீங்குகளிலிருந்து பாதுகாவல் தேடுகிறேன்.” இதனால் மனிதர்களிலுள்ள ஆண்கள் ஜின்களிலுள்ள ஆண்களை அதிகம் அஞ்சக்கூடியவர்களாகி விட்டார்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
وَّاَنَّهُمْ ظَنُّوْا كَمَا ظَنَنْتُمْ اَنْ لَّنْ یَّبْعَثَ اللّٰهُ اَحَدًا ۟ۙ
72.7. -ஜின்களே!- உங்களில் யாரேனும் மரணித்துவிட்டால் அவர்களை விசாரணைக்காகவும் கூலிகொடுப்பதற்காகவும் அல்லாஹ் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்ப மாட்டான் என்று நீங்கள் எண்ணியதுபோன்றே மனிதர்களும் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
وَّاَنَّا لَمَسْنَا السَّمَآءَ فَوَجَدْنٰهَا مُلِئَتْ حَرَسًا شَدِیْدًا وَّشُهُبًا ۟ۙ
72.8. நாங்கள் வானத்தின் செய்தியைத் தேடினோம். நாங்கள் திருட்டுத்தனமாக செவியேற்றுக்கொண்டிருந்ததைத் தடுக்கும் பலம்மிக்க காவலாளிகளான வானவர்களாலும் வானத்தை நெருங்கும் ஒவ்வொருவருக்கும் எறியப்படும் தீச்சுவாலைகளாலும் அது நிரம்பியிருப்பதைக் கண்டோம்.
আৰবী তাফছীৰসমূহ:
وَّاَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ ؕ— فَمَنْ یَّسْتَمِعِ الْاٰنَ یَجِدْ لَهٗ شِهَابًا رَّصَدًا ۟ۙ
72.9. இதற்கு முன்னர் நாங்கள் வானத்தில் நிலைகளை அமைத்து அங்கு நடக்கும் வானவர்களின் உரையாடலை செவியேற்று பூமியிலுள்ள ஜோதிடர்களுக்கு அறிவிப்பவர்களாக இருந்தோம். ஆனால் விஷயம் மாறிவிட்டது. இப்போது நம்மில் யார் செவியேற்கிறாரோ அவர் தமக்காக தயார்நிலையிலுள்ள நெருப்பையே கண்டுகொள்வார். அவர் நெருங்கிச் சென்றால் தீப்பந்தம் எரியப்பட்டு அவரை அது அழித்துவிடும்.
আৰবী তাফছীৰসমূহ:
وَّاَنَّا لَا نَدْرِیْۤ اَشَرٌّ اُرِیْدَ بِمَنْ فِی الْاَرْضِ اَمْ اَرَادَ بِهِمْ رَبُّهُمْ رَشَدًا ۟ۙ
72.10. இந்த கடுமையான காவலுக்கான காரணத்தை, இதனால் பூமியிலுள்ளவர்களுக்கு தீங்கு நாடப்படுகிறதா அல்லது அல்லாஹ் அவர்களுக்கு நன்மை நாடிவிட்டானா என்பதை நாங்கள் அறிய மாட்டோம். வானத்தின் செய்தி எங்களை விட்டும் தடைபட்டுவிட்டது.
আৰবী তাফছীৰসমূহ:
وَّاَنَّا مِنَّا الصّٰلِحُوْنَ وَمِنَّا دُوْنَ ذٰلِكَ ؕ— كُنَّا طَرَآىِٕقَ قِدَدًا ۟ۙ
72.11. -ஜின் சமூகமே!- நிச்சயமாக (நாம் குர்ஆனிலிருந்து செவியுற்றபிறகு) நம்மில் அவனை அஞ்சக்கூடிய நல்லவர்களும் இருக்கிறார்கள்; அவனை நிராகரிப்பவர்களும் பாவிகளும் இருக்கிறார்கள். நாங்கள் பல்வேறு வகையினராக, பலவாறான விருப்பங்கள் கொண்டவர்களாக இருக்கின்றோம்.
আৰবী তাফছীৰসমূহ:
وَّاَنَّا ظَنَنَّاۤ اَنْ لَّنْ نُّعْجِزَ اللّٰهَ فِی الْاَرْضِ وَلَنْ نُّعْجِزَهٗ هَرَبًا ۟ۙ
72.12. அல்லாஹ் எங்களை ஏதேனும் செய்ய நாடினால் நிச்சயமாக நாங்கள் அவனிடமிருந்து எங்கும் தப்பிவிட முடியாது, அவன் எம்மைச் சூழ்ந்துள்ளதால் தப்பியோடவும் முடியாது என்பதை உறுதியாக அறிந்துகொண்டோம்.
আৰবী তাফছীৰসমূহ:
وَّاَنَّا لَمَّا سَمِعْنَا الْهُدٰۤی اٰمَنَّا بِهٖ ؕ— فَمَنْ یُّؤْمِنْ بِرَبِّهٖ فَلَا یَخَافُ بَخْسًا وَّلَا رَهَقًا ۟ۙ
72.13. நாங்கள் நேரான வழியைக் காட்டும் குர்ஆனைச் செவியுற்றபோது அதன்மீது நம்பிக்கைகொண்டோம். தன் இறைவனின்மீது நம்பிக்கைகொள்பவர் தான் செய்த நன்மைகள் குறைக்கப்பட்டுவிடும் என்றோ முந்தைய பாவங்களுடன் இன்னும் பாவங்கள் அதிகரிக்கப்பட்டுவிடும் என்றோ அஞ்சமாட்டார்.
আৰবী তাফছীৰসমূহ:
এই পৃষ্ঠাৰ আয়াতসমূহৰ পৰা সংগৃহীত কিছুমান উপকাৰী তথ্য:
• تأثير القرآن البالغ فيمَنْ يستمع إليه بقلب سليم.
1. ஆரோக்கியமான உள்ளத்துடன் குர்ஆனைச் செவியேற்பவர் மீது குர்ஆன் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

• الاستغاثة بالجن من الشرك بالله، ومعاقبةُ فاعله بضد مقصوده في الدنيا.
2. ஜின்களிடம் பாதுகாவல் தேடுவதும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதாகும். அதை செய்பவர் உலகில் எதை நாடினாரோ அதற்கு மாற்றமானதைக்கொண்டு தண்டிக்கப்படுவார்.

• بطلان الكهانة ببعثة النبي صلى الله عليه وسلم.
3. நபியவர்களின் தூதுத்துவத்திற்குப் பிறகு ஜோதிடம் பொய்யாக்கப்பட்டு விட்டது.

• من أدب المؤمن ألا يَنْسُبَ الشرّ إلى الله.
4. தீமையை அல்லாஹ்வுடன் இணைக்காமலிருப்பது ஒரு விசுவாசியின் ஒழுக்கமாகும்.

 
অৰ্থানুবাদ ছুৰা: আল-জ্বিন
ছুৰাৰ তালিকা পৃষ্ঠা নং
 
আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - আল-মুখতাচাৰ ফী তাফছীৰিল কোৰআনিল কাৰীমৰ তামিল অনুবাদ - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ

তাফছীৰ চেণ্টাৰ ফৰ কোৰানিক ষ্টাডিজৰ ফালৰ পৰা প্ৰচাৰিত।

বন্ধ