আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

পৃষ্ঠা নং:close

external-link copy
58 : 21

فَجَعَلَهُمْ جُذٰذًا اِلَّا كَبِیْرًا لَّهُمْ لَعَلَّهُمْ اِلَیْهِ یَرْجِعُوْنَ ۟

அவர் அவற்றை (உடைக்கப்பட்ட) சிறுசிறு துண்டுகளாக ஆக்கிவிட்டார், அவர்களுக்குரிய பெரிய சிலையைத் தவிர. அவர்கள் அதனளவில் திரும்ப வருவதற்காக (அதை மட்டும் அவர் உடைக்கவில்லை). info
التفاسير:

external-link copy
59 : 21

قَالُوْا مَنْ فَعَلَ هٰذَا بِاٰلِهَتِنَاۤ اِنَّهٗ لَمِنَ الظّٰلِمِیْنَ ۟

அவர்கள் கூறினர்: எங்கள் கடவுள்களுக்கு இதை யார் செய்தார்? நிச்சயமாக அவர் அநியாயக்காரர்களில் ஒருவர் ஆவார். info
التفاسير:

external-link copy
60 : 21

قَالُوْا سَمِعْنَا فَتًی یَّذْكُرُهُمْ یُقَالُ لَهٗۤ اِبْرٰهِیْمُ ۟ؕ

அவர்கள் கூறினர்: அவற்றை விமர்சிக்கின்ற ஒரு வாலிபரை நாங்கள் செவியுற்றோம். அவருக்கு இப்ராஹீம் என்று சொல்லப்படும். info
التفاسير:

external-link copy
61 : 21

قَالُوْا فَاْتُوْا بِهٖ عَلٰۤی اَعْیُنِ النَّاسِ لَعَلَّهُمْ یَشْهَدُوْنَ ۟

அவர்கள் கூறினர்: ஆகவே, அவரை மக்களின் கண்களுக்கு முன் கொண்டு வாருங்கள், அவர்கள் (இவருக்கு கொடுக்கப்படும் தண்டனையைப்) பார்ப்பதற்காக. info
التفاسير:

external-link copy
62 : 21

قَالُوْۤا ءَاَنْتَ فَعَلْتَ هٰذَا بِاٰلِهَتِنَا یٰۤاِبْرٰهِیْمُ ۟ؕ

இப்ராஹீமே! நீர்தான் எங்கள் கடவுள்களுடன் இதை செய்தீரா? என்று கூறினர். info
التفاسير:

external-link copy
63 : 21

قَالَ بَلْ فَعَلَهٗ ۖۗ— كَبِیْرُهُمْ هٰذَا فَسْـَٔلُوْهُمْ اِنْ كَانُوْا یَنْطِقُوْنَ ۟

அவர் கூறினார்: மாறாக, இதை அவற்றில் (-அந்த சிலைகளில்) உள்ள இந்த பெரிய சிலைதான் செய்தது. ஆகவே, அவை (-அந்த சிலைகள்) பேசுபவர்களாக இருந்தால் அவற்றிடம் நீங்கள் கேளுங்கள். info
التفاسير:

external-link copy
64 : 21

فَرَجَعُوْۤا اِلٰۤی اَنْفُسِهِمْ فَقَالُوْۤا اِنَّكُمْ اَنْتُمُ الظّٰلِمُوْنَ ۟ۙ

பிறகு, அவர்கள் தங்கள் பக்கமே திரும்பினர். மேலும், “நிச்சயமாக நீங்கள்தான் அநியாயக்காரர்கள்” என்று கூறினர். info
التفاسير:

external-link copy
65 : 21

ثُمَّ نُكِسُوْا عَلٰی رُءُوْسِهِمْ ۚ— لَقَدْ عَلِمْتَ مَا هٰۤؤُلَآءِ یَنْطِقُوْنَ ۟

பிறகு, அவர்கள் தலைகீழாக மாறினர். (திகைத்தனர், பின்னர் இப்ராஹீமுடைய ஆதாரத்தை வைத்தே அவரிடம்) இவை பேசாது என்பதை நீர் திட்டவட்டமாக அறிவீர்” என்று கூறினர். info
التفاسير:

external-link copy
66 : 21

قَالَ اَفَتَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَنْفَعُكُمْ شَیْـًٔا وَّلَا یَضُرُّكُمْ ۟ؕ

அவர் கூறினார்: அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு அறவே எதையும் பலனளிக்காத (எதையும்) தீங்கிழைக்காதவற்றை வணங்குகிறீர்களா? info
التفاسير:

external-link copy
67 : 21

اُفٍّ لَّكُمْ وَلِمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟

சீச்சி! உங்களுக்கும் அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குபவர்களுக்கும் கேவலம்தான். சிந்தித்து புரியமாட்டீர்களா? info
التفاسير:

external-link copy
68 : 21

قَالُوْا حَرِّقُوْهُ وَانْصُرُوْۤا اٰلِهَتَكُمْ اِنْ كُنْتُمْ فٰعِلِیْنَ ۟

அவர்கள் கூறினர்: அவரை எரித்து விடுங்கள். நீங்கள் (ஏதும் உதவி) செய்பவர்களாக இருந்தால் உங்கள் கடவுள்களுக்கு (இந்த) உதவி செய்யுங்கள். info
التفاسير:

external-link copy
69 : 21

قُلْنَا یٰنَارُ كُوْنِیْ بَرْدًا وَّسَلٰمًا عَلٰۤی اِبْرٰهِیْمَ ۟ۙ

(இப்ராஹீமை நெருப்பில் போட்டபோது) நாம் கூறினோம்: “நெருப்பே! இப்ராஹீமுக்கு குளிர்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் ஆகிவிடு.” info
التفاسير:

external-link copy
70 : 21

وَاَرَادُوْا بِهٖ كَیْدًا فَجَعَلْنٰهُمُ الْاَخْسَرِیْنَ ۟ۚ

அவர்கள் அவருக்கு ஒரு சூழ்ச்சியை நாடினர். எனவே, நாம் அவர்களையே நஷ்டவாளிகளாக ஆக்கிவிட்டோம். info
التفاسير:

external-link copy
71 : 21

وَنَجَّیْنٰهُ وَلُوْطًا اِلَی الْاَرْضِ الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا لِلْعٰلَمِیْنَ ۟

அவரையும் லூத்தையும் அகிலத்தார்களுக்கு நாம் அதில் அருள்வளம் புரிந்த பூமியின் பக்கம் பாதுகாத்தோம் (-அந்த பூமிக்கு அழைத்துச் சென்று பாதுகாத்தோம்). info
التفاسير:

external-link copy
72 : 21

وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ ؕ— وَیَعْقُوْبَ نَافِلَةً ؕ— وَكُلًّا جَعَلْنَا صٰلِحِیْنَ ۟

நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் கொடையாக வழங்கினோம். அனைவரையும் நல்லவர்களாக ஆக்கினோம். info
التفاسير: