Check out the new design

Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana * - Sadržaj prijevodā


Prijevod značenja Sura: Hud   Ajet:
وَمَا مِنْ دَآبَّةٍ فِی الْاَرْضِ اِلَّا عَلَی اللّٰهِ رِزْقُهَا وَیَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا ؕ— كُلٌّ فِیْ كِتٰبٍ مُّبِیْنٍ ۟
11.6. பூமியின் மேற்பரப்பில் ஊர்ந்து செல்லும் எந்த படைப்பினமானாலும் அதற்கு வாழ்வாதாரம் அளிக்கும் பொறுப்பை தானாகவே விரும்பி அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். அது பூமியில் தங்குமிடத்தையும் மரணிக்கும் இடத்தையும் அல்லாஹ் அறிவான். படைப்புகள் ஒவ்வொன்றும், அவற்றிற்கான வாழ்வாதாரங்களும் அவை தங்குமிடங்களும் மரணிக்கும் இடங்களும் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் தெளிவான பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது.
Tefsiri na arapskom jeziku:
وَهُوَ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِیْ سِتَّةِ اَیَّامٍ وَّكَانَ عَرْشُهٗ عَلَی الْمَآءِ لِیَبْلُوَكُمْ اَیُّكُمْ اَحْسَنُ عَمَلًا ؕ— وَلَىِٕنْ قُلْتَ اِنَّكُمْ مَّبْعُوْثُوْنَ مِنْ بَعْدِ الْمَوْتِ لَیَقُوْلَنَّ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِیْنٌ ۟
11.7. அவன்தான் பிரமாண்டமான வானங்களையும் பூமியையும் அவையிரண்டிலும் உள்ளதையும் ஆறு நாட்களில் படைத்தான். அவையிரண்டையும் படைப்பதற்கு முன்னால் அவனுடைய அர்ஷ் நீரின் மீதிருந்தது. -மனிதர்களே!- உங்களில் அல்லாஹ்வைத் திருப்திப்படுத்தும் நற்செயல்கள் புரிபவர்கள் யார்? அவனுக்குக் கோபமுண்டாக்கும் தீய செயல்கள் புரிபவர்கள் யார்? என்பதை சோதிப்பதற்காகத்தான் அவற்றைப் படைத்தான். ஒவ்வொருவருக்கும் அவன் தகுந்த கூலியை வழங்கிடுவான். -தூதரே!- “மக்களே, நீங்கள் மரணித்த பிறகு விசாரணை செய்யப்படுவதற்காக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால் அல்லாஹ்வை நிராகரித்து மீண்டும் எழுப்பப்படுவதை மறுத்தவர்கள் கூறுவார்கள், “நீர் ஓதிக் காட்டும் குர்ஆன் தெளிவான சூனியமும் அசத்தியமுமாகும்.”
Tefsiri na arapskom jeziku:
وَلَىِٕنْ اَخَّرْنَا عَنْهُمُ الْعَذَابَ اِلٰۤی اُمَّةٍ مَّعْدُوْدَةٍ لَّیَقُوْلُنَّ مَا یَحْبِسُهٗ ؕ— اَلَا یَوْمَ یَاْتِیْهِمْ لَیْسَ مَصْرُوْفًا عَنْهُمْ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟۠
11.8. இவ்வுலக வாழ்வில் இணைவைப்பாளர்களை விட்டும் அவர்களுக்குரிய வேதனையை குறிப்பிட்ட காலம் வரை நாம் பிற்படுத்தினால், அவசரப்பட்டவர்களாகவும் பரிகாசம் செய்தவர்களாகவும் அவர்கள், “நம்மை விட்டும் வேதனையைத் தடுப்பது எது?” அறிந்துகொள்ளுங்கள், எனக் கூறுவார்கள். அவர்களுக்குரிய வேதனை வருவதற்கு அல்லாஹ்விடம் ஒரு நேரம் உண்டு. அது அவர்களிடம் வரும் நாளில் அவர்களை விட்டும் அதனை அகற்றும் எவரையும் அவர்கள் பெறமாட்டார்கள். அது அவர்கள் மீது நிகழ்ந்தே தீரும். அவர்கள் பரிகாசமாக அவசரப்பட்டுக் கொண்டிருந்த வேதனை அவர்களைச் சூழ்ந்துவிட்டது.
Tefsiri na arapskom jeziku:
وَلَىِٕنْ اَذَقْنَا الْاِنْسَانَ مِنَّا رَحْمَةً ثُمَّ نَزَعْنٰهَا مِنْهُ ۚ— اِنَّهٗ لَیَـُٔوْسٌ كَفُوْرٌ ۟
11.9. நாம் மனிதனுக்கு ஆரோக்கியம், செல்வம் போன்ற ஏதேனும் அருட்கொடையை வழங்கி பின்னர் அந்த அருட்கொடையைப் பறித்துக் கொண்டால் அல்லாஹ்வின் அருளை விட்டும் அவன் மிகவும் நம்பிக்கையிழந்தவனாகவும், அவனுடைய அருட்கொடைகளுக்கு மிகவும் நன்றி கெட்டவனாகவும் ஆகிவிடுகிறான். அந்த அருட்கொடையை அல்லாஹ் அவனிடமிருந்து பறித்துக்கொண்டால் அதனை மறந்து விடுகிறான்.
Tefsiri na arapskom jeziku:
وَلَىِٕنْ اَذَقْنٰهُ نَعْمَآءَ بَعْدَ ضَرَّآءَ مَسَّتْهُ لَیَقُوْلَنَّ ذَهَبَ السَّیِّاٰتُ عَنِّیْ ؕ— اِنَّهٗ لَفَرِحٌ فَخُوْرٌ ۟ۙ
11.10. அவனுக்கு ஏற்பட்ட வறுமைக்கும் நோய்க்கும் பிறகு அவனது வாழ்வாதாரத்தில் விசாலத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கினால், “தீங்கு என்னை விட்டு அகன்று விட்டது, துன்பம் என்னை விட்டு நீங்கி விட்டது” என்று கூறுகிறான். அதற்காக அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதில்லை. பெருமிதம் கொள்பவனாகவும் அல்லாஹ் தனக்கு அளித்த அருட்கொடைகளைக் கொண்டு மக்களை அதிகம் அவமதிப்பவனாகவும் பெருமை பேசித் திரிபவனாகவும் இருக்கின்றான்.
Tefsiri na arapskom jeziku:
اِلَّا الَّذِیْنَ صَبَرُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ؕ— اُولٰٓىِٕكَ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِیْرٌ ۟
11.11. ஆனால் வெறுப்பானவற்றைத் தாங்கிக்கொண்டு வழிபாடுகளிலும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்வதிலும் பொறுமையைக் கடைப்பிடித்து, நற்செயல்கள் புரிந்தவர்களைத் தவிர. அவர்களது நிலமை வேறு. விரக்தி, அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி மறத்தல், மக்களை அவமதித்தல். ஆகிய பண்புகள் அவர்களிடம் காணப்படாது. இந்த பண்புகளை உடையவர்களது பாவங்களுக்கு அவர்களது இறைவனிடம் மன்னிப்பு உண்டு. மறுமையில் அவர்களுக்கு மிகப் பெரும் கூலியும் உண்டு.
Tefsiri na arapskom jeziku:
فَلَعَلَّكَ تَارِكٌ بَعْضَ مَا یُوْحٰۤی اِلَیْكَ وَضَآىِٕقٌ بِهٖ صَدْرُكَ اَنْ یَّقُوْلُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ كَنْزٌ اَوْ جَآءَ مَعَهٗ مَلَكٌ ؕ— اِنَّمَاۤ اَنْتَ نَذِیْرٌ ؕ— وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ وَّكِیْلٌ ۟ؕ
11.12. தூதரே! -அவர்களின் நிராகரிப்பு, பிடிவாதம், சான்றுகளைக் கோருதல் ஆகியவற்றை நீர் எதிர்கொள்வதனால்- அல்லாஹ் உமக்கு அவர்களிடம் எடுத்துரைக்கும்படி கட்டளையிட்டவற்றில் அவர்களுக்குச் செய்வது சிரமமான சிலவற்றை நீர் எடுத்துரைக்காமல் விட்டு விடுவீர் போலும்; “இவர் மீது இவரைச் செல்வந்தராக்கும் ஒரு பொக்கிஷம் இறக்கப்படக் கூடாதா” அல்லது “இவருடன் இவரை உண்மைப்படுத்தும் வானவர் ஒருவர் வந்திருக்கக் கூடாதா” என்று அவர்கள் கூறாமல் இருப்பதற்காக அதனை எடுத்துரைப்பதன் மூலம் உமது உள்ளம் இறுகி விடும் போலும். இதன் காரணமாக உமக்கு அறிவிக்கப்பட்ட எதையும் விட்டு விடாதீர். உமக்கு அல்லாஹ் எடுத்துரைக்குமாறு கட்டளையிட்டதை எடுத்துரைத்து எச்சரிக்கை செய்பவர் மட்டுமே. அவர்கள் கேட்கும் சான்றுகளைக் கொண்டு வருவது உமது பணியல்ல. அல்லாஹ் ஒவ்வொன்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.
Tefsiri na arapskom jeziku:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• سعة علم الله تعالى وتكفله بأرزاق مخلوقاته من إنسان وحيوان وغيرهما.
1. அல்லாஹ்வின் அறிவு விசாலமானது. மனிதர்கள் மிருகங்கள் மற்றும் ஏனைய தனது படைப்புகளின் வாழ்வாதாரத்திற்கு அவன் பொறுப்பேற்றுக் கொண்டான்.

• بيان علة الخلق؛ وهي اختبار العباد بامتثال أوامر الله واجتناب نواهيه.
2. அடியார்கள் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருக்கிறார்களா என்பதை சோதிப்பதே படைப்பின் நோக்கமாகும்.

• لا ينبغي الاغترار بإمهال الله تعالى لأهل معصيته، فإنه قد يأخذهم فجأة وهم لا يشعرون.
3. பாவிகளுக்கு அல்லாஹ் அளிக்கும் அவகாசத்தைக் கண்டு ஏமாந்து விடக்கூடாது. அவர்கள் உணராத வகையில் திடீரென்று அவன் அவர்களைப் பிடித்துவிடுவான்.

• بيان حال الإنسان في حالتي السعة والشدة، ومدح موقف المؤمن المتمثل في الصبر والشكر.
4. இன்பத்திலும் துன்பத்திலும் மனிதனின் நிலை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நன்றியும் பொறுமையும் உடைய நம்பிக்கையாளனின் நிலைப்பாடு புகழ்ந்து கூறப்பட்டுள்ளது.

 
Prijevod značenja Sura: Hud
Indeks sura Broj stranice
 
Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana - Sadržaj prijevodā

Izdavač: centar za kur'anske studije "Tefsir".

Zatvaranje