Check out the new design

Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana * - Sadržaj prijevodā


Prijevod značenja Ajet: (131) Sura: El-A'araf
فَاِذَا جَآءَتْهُمُ الْحَسَنَةُ قَالُوْا لَنَا هٰذِهٖ ۚ— وَاِنْ تُصِبْهُمْ سَیِّئَةٌ یَّطَّیَّرُوْا بِمُوْسٰی وَمَنْ مَّعَهٗ ؕ— اَلَاۤ اِنَّمَا طٰٓىِٕرُهُمْ عِنْدَ اللّٰهِ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
7.131. செழிப்பு, விளைச்சல், விலை குறைவு ஆகிய நன்மைகள் பிர்அவ்னின் கூட்டத்தாருக்கு ஏற்பட்ட போது, “இவையனைத்தும் எங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதென்றால் நாங்கள் அவற்றிற்குத் தகுதியானவர்கள் மற்றும் அவை எங்களுக்குரியது என்பதனால்தான்” என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு வறுமையோ பஞ்சமோ நோய்களோ வேறு சோதனைகளோ ஏற்பட்டால் மூஸாவினாலும் அவருடன் உள்ள இஸ்ரவேலர்களாலும் ஏற்பட்ட துர்ச்சகுனமாகக் கருதினார்கள். உண்மையில் அவர்களுக்கு ஏற்படும் அனைத்தும் அல்லாஹ் விதிப்படியே ஏற்படுகிறது. மூஸா அவர்களுக்கு எதிராக பிரார்த்தனை புரிந்ததைத் தவிர மூஸாவுக்கும் அவர்களின் விவகாரங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள். எனவேதான் அல்லாஹ் அல்லாதவர்களின்பால் அதனைத் தொடர்புபடுத்துகிறார்கள்.
Tefsiri na arapskom jeziku:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• الخير والشر والحسنات والسيئات كلها بقضاء الله وقدره، لا يخرج منها شيء عن ذلك.
1. நலவு, கெடுதி, நன்மைகள், தீமைகள் அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றன. எதுவும் அவனது விதியைவிட்டு வெளியேற முடியாது.

• شأن الناس في وقت المحنة والمصائب اللجوء إلى الله بدافع نداء الإيمان الفطري.
2. சோதனைகள் மற்றும் துன்பங்களின் போது இயல்பாகவே காணப்படும் நம்பிக்கையின் பிரகாரம் அல்லாஹ்விடம் திரும்புவது மனிதர்களின் பண்பாகும்.

• يحسن بالمؤمن تأمل آيات الله وسننه في الخلق، والتدبر في أسبابها ونتائجها.
3. நம்பிக்கையாளன் அல்லாஹ்வின் சான்றுகளையும், படைப்புகளில் அவன் ஏற்படுத்தியுள்ள வழிமுறைகளையும் உற்றுநோக்குவதோடு அதற்கான காரணங்கள் மற்றும் விளைவுகளைக் குறித்தும் சிந்திக்க வேண்டும்.

• تتلاشى قوة الأفراد والدول أمام قوة الله العظمى، والإيمان بالله هو مصدر كل قوة.
4. தனிமனித பலமும் நாட்டின் பலமும் அல்லாஹ்வின் ஆற்றலுக்கு முன்னால் ஒன்றுமில்லாமல் போய்விடுகின்றன. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்வது பலத்தின் மூலமாகும்.

• يكافئ الله تعالى عباده المؤمنين الصابرين بأن يمكِّنهم في الأرض بعد استضعافهم.
5. நம்பிக்கைகொண்ட, பொறுமையைக் கடைப்பிடித்த தன் அடியார்களுக்கு பலவீனத்துக்குப் பின் அல்லாஹ் பூமியில் ஆட்சியதிகாரம் வழங்கி வெகுமதி வழங்குகிறான்.

 
Prijevod značenja Ajet: (131) Sura: El-A'araf
Indeks sura Broj stranice
 
Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana - Sadržaj prijevodā

Izdavač: centar za kur'anske studije "Tefsir".

Zatvaranje