ترجمهٔ معانی قرآن کریم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - لیست ترجمه ها


ترجمهٔ معانی آیه: (19) سوره: سوره نساء
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا یَحِلُّ لَكُمْ اَنْ تَرِثُوا النِّسَآءَ كَرْهًا ؕ— وَلَا تَعْضُلُوْهُنَّ لِتَذْهَبُوْا بِبَعْضِ مَاۤ اٰتَیْتُمُوْهُنَّ اِلَّاۤ اَنْ یَّاْتِیْنَ بِفَاحِشَةٍ مُّبَیِّنَةٍ ۚ— وَعَاشِرُوْهُنَّ بِالْمَعْرُوْفِ ۚ— فَاِنْ كَرِهْتُمُوْهُنَّ فَعَسٰۤی اَنْ تَكْرَهُوْا شَیْـًٔا وَّیَجْعَلَ اللّٰهُ فِیْهِ خَیْرًا كَثِیْرًا ۟
4.19. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! உங்களின் தந்தையரிடமிருந்து சொத்தை வாரிசாகப் பெறுவதுபோல் அவர்களின் மனைவியரை வாரிசாகப் பெறுவது உங்களுக்கு ஆகுமானதல்ல. அவர்களை நீங்கள் மணமுடித்துக் கொள்வதோ, நீங்கள் விரும்புபவர்களுக்கு மணமுடித்துக் கொடுப்பதோ, அவர்கள் திருமணம் செய்துகொள்வதைத் தடுப்பதோ கூடாது. நீங்கள் வெறுக்கும் உங்கள் மனைவியரை அவர்களுக்கு அளித்த மணக்கொடை மற்றும் ஏனையவற்றை திரும்பப் பெறும் எண்ணத்தில் அவர்களைத் துன்புறுத்துவதற்காகத் தடுத்துவைத்துக் கொள்வதும் உங்களுக்கு ஆகுமானதல்ல. ஆயினும் அவர்கள் பகிரங்கமான விபச்சாரத்தில் ஈடுபட்டாலே தவிர. அவர்கள் அவ்வாறு செய்தால் அவர்களுக்கு நீங்கள் அளித்த மணக்கொடையை திரும்பப் பெறுவதற்காக நெருக்கடியளிப்பதற்காக தடுத்து வைத்துக்கொள்வது உங்கள் மீது குற்றமாகாது. உங்கள் பெண்களுக்கு நோவினை கொடுக்காமலும் உபகாரம் புரிந்தும் நல்லமுறையில் வாழ்க்கை நடத்துங்கள். உலக காரியம் ஒன்றுக்காக நீங்கள் அவர்களை வெறுத்தால் அவர்களைச் சகித்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் வெறுக்கும் விஷயத்தில் ஏராளமான நன்மைகளை இவ்வுலகிலும் மறுமையிலும் அல்லாஹ் வைத்திருக்கலாம்.
تفسیرهای عربی:
از فواید آیات این صفحه:
• ارتكاب فاحشة الزنى من أكثر المعاصي خطرًا على الفرد والمجتمع؛ ولهذا جاءت العقوبات عليها شديدة.
1. விபச்சாரம் தனிமனிதன்மீதும் சமூகத்தின்மீதும் கடுமையான பாதிப்புகளை உண்டாக்கக்கூடிய பாவங்களில் ஒன்றாகும். எனவேதான் அதற்கான தண்டனையும் கடுமையாக இருக்கின்றது.

• لطف الله ورحمته بعباده حيث فتح باب التوبة لكل مذنب، ويسر له أسبابها، وأعانه على سلوك سبيلها.
2. அல்லாஹ் தன் அடியார்களுக்காக பாவமன்னிப்பின் வாசலை திறந்தே வைத்துள்ளான். அதனுடைய காரணிகளையும் இலகுபடுத்தியுள்ளான். அந்த வழியில் செல்வதற்கு உதவியும் புரிந்துள்ளான். இது அல்லாஹ் தன் அடியார்கள்மீது பொழிந்த பெருங்கருணையாகும்.

• كل من عصى الله تعالى بعمد أو بغير عمد فهو جاهل بقدر من عصاه جل وعلا، وجاهل بآثار المعاصي وشؤمها عليه.
3. வேண்டுமென்றோ தற்செயலாகவோ பாவங்களில் ஈடுபடும் அனைவரும் தான் மாறுசெய்துகொண்டிருக்கும் அல்லாஹ்வின் தகுதியையும் பாவங்கள் ஏற்படுத்தும் விளைவுகளையும் அறியாதவரே.

• من أسباب استمرار الحياة الزوجية أن يكون نظر الزوج متوازنًا، فلا يحصر نظره فيما يكره، بل ينظر أيضا إلى ما فيه من خير، وقد يجعل الله فيه خيرًا كثيرًا.
4. மணவாழ்க்கை உறுதியாக நிலைத்திருக்க கணவன் சமநிலைப் பார்வையுடையவனாக இருக்கவேண்டும். அவன் தான் வெறுக்கும் விஷயத்தை மாத்திரம் கவனிக்காது. மனைவியின் நல்லவிடயங்களையும் கவனத்தில்கொள்ள வேண்டும். சிலவேளை அல்லாஹ் அதில் ஏராளமான நன்மைகளை வைத்திருக்கலாம்.

 
ترجمهٔ معانی آیه: (19) سوره: سوره نساء
فهرست سوره ها شماره صفحه
 
ترجمهٔ معانی قرآن کریم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - لیست ترجمه ها

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

بستن