Check out the new design

Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. * - Tippudi firooji ɗii


Firo maanaaji Simoore: Simoore koreeji imraan   Aaya:
وَاِنَّ مِنْهُمْ لَفَرِیْقًا یَّلْوٗنَ اَلْسِنَتَهُمْ بِالْكِتٰبِ لِتَحْسَبُوْهُ مِنَ الْكِتٰبِ وَمَا هُوَ مِنَ الْكِتٰبِ ۚ— وَیَقُوْلُوْنَ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ وَمَا هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ ۚ— وَیَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ وَهُمْ یَعْلَمُوْنَ ۟
3.78. யூதர்களில் சிலர் தவ்ராத்தில் உள்ளதைப் படிப்பதைப் போன்று அதில் இல்லாததையும் தமது நாவுகளை வளைத்து படிக்கிறார்கள், அவர்கள் தவ்ராத்திலிருந்துதான் படிக்கிறார்கள் என்று நீங்கள் எண்ணுவதற்காக அவ்வாறு செய்கிறார்கள். ஆனால் உண்மையில் அவை தவ்ராத்தில் இல்லை. மாறாக தாங்கள் இட்டுக்கட்டிய பொய்களைத்தான் படிக்கிறார்கள். அல்லாஹ்விடமிருந்து வராததைப் படித்துவிட்டு, நாங்கள் படிப்பது அல்லாஹ் இறக்கிய வேதத்தைத்தான் என்று அவர்கள் கூறுகிறார்கள். அல்லாஹ்வின்மீதும் அவன் தூதர்கள்மீதும் பொய்யுரைக்கிறோம் என அறிந்துகொண்டே அவன் மீது பொய்கூறுகிறார்கள்.
Faccirooji aarabeeji:
مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّؤْتِیَهُ اللّٰهُ الْكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ثُمَّ یَقُوْلَ لِلنَّاسِ كُوْنُوْا عِبَادًا لِّیْ مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰكِنْ كُوْنُوْا رَبّٰنِیّٖنَ بِمَا كُنْتُمْ تُعَلِّمُوْنَ الْكِتٰبَ وَبِمَا كُنْتُمْ تَدْرُسُوْنَ ۟ۙ
3.79. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதத்தையும், ஞானத்தையும் சரியான புரிதலையும் அளித்து அவரைத் தூதராகவும் தேர்ந்தெடுத்தபின் அவர் மக்களிடம், “நீங்கள் அல்லாஹ்வை விடுத்து எனக்கு அடிமைகளாக ஆகிவிடுங்கள்” என்று கூறமாட்டார். மாறாக அவர், “நீங்கள் மக்களுக்கு வேதத்தை கற்றுக் கொடுப்பதனாலும் அதனைக் கற்பதனாலும் அதன்படி செயல்படக்கூடிய அறிஞர்களாகவும் மக்களுக்கு வழிகாட்டிகளாகவும் சீர்திருத்தவாதிகளாகவும் ஆகிவிடுங்கள்” என்றே கூறுவார்.
Faccirooji aarabeeji:
وَلَا یَاْمُرَكُمْ اَنْ تَتَّخِذُوا الْمَلٰٓىِٕكَةَ وَالنَّبِیّٖنَ اَرْبَابًا ؕ— اَیَاْمُرُكُمْ بِالْكُفْرِ بَعْدَ اِذْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟۠
3.80. அதேபோன்று “அல்லாஹ்வை விடுத்து வானவர்களையும் தூதர்களையும் வணங்கப்படும் கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்றும் அவர் உங்களை ஏவுவது அவருக்குத் தகுந்ததல்ல. நீங்கள் அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்பட்ட பிறகு அவனை நிராகரிக்கும்படி உங்களை ஏவுவது ஆகுமாகுமா?
Faccirooji aarabeeji:
وَاِذْ اَخَذَ اللّٰهُ مِیْثَاقَ النَّبِیّٖنَ لَمَاۤ اٰتَیْتُكُمْ مِّنْ كِتٰبٍ وَّحِكْمَةٍ ثُمَّ جَآءَكُمْ رَسُوْلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهٖ وَلَتَنْصُرُنَّهٗ ؕ— قَالَ ءَاَقْرَرْتُمْ وَاَخَذْتُمْ عَلٰی ذٰلِكُمْ اِصْرِیْ ؕ— قَالُوْۤا اَقْرَرْنَا ؕ— قَالَ فَاشْهَدُوْا وَاَنَا مَعَكُمْ مِّنَ الشّٰهِدِیْنَ ۟
3.81. தூதரே! தூதர்களிடம் அல்லாஹ் பின்வருமாறு கூறி உறுதிமொழி வாங்கியதை நினைவுகூர்வீராக: “நான் உங்களுக்கு வேதத்தை வழங்கி ஞானத்தையும் கற்றுக்கொடுத்து நீங்கள் அடைய வேண்டிய நிலையையும் அடைந்துவிட்ட பிறகு உங்களிடமுள்ள வேதத்தையும் ஞானத்தையும் உண்மைப்படுத்தக்கூடிய தூதர்(அவர்தான் முஹம்மத் (ஸல்) அவர்கள்) என்னிடமிருந்து வந்தால் நீங்கள் அவர் கொண்டுவந்ததன்மீது நம்பிக்கைகொண்டு அவரைப் பின்பற்றி அவருக்கு உதவிபுரிய வேண்டும். தூதர்களே! நீங்கள் இதனை ஏற்றுக்கொண்டு அதற்கு எனக்கு உறுதிமொழியும் வழங்குகிறீர்களா?”. அதற்கு, தூதர்கள் “நாங்கள் இதனை ஏற்றுக்கொண்டோம்” என்று கூறினார்கள். அல்லாஹ் கூறினான்: “உங்கள் மீதும் உங்கள் சமூகங்களின்மீதும் நீங்களே சாட்சியாக இருங்கள்.உங்கள்மீதும் அவர்கள்மீதும் உங்களுடன் சேர்ந்து நானும் சாட்சியாக இருக்கிறேன்.
Faccirooji aarabeeji:
فَمَنْ تَوَلّٰی بَعْدَ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۟
3.82. அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர்களின் சாட்சியம் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் பின்னரும் புறக்கணிப்பவர்கள்தாம் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் அவனுக்கு அடிபணிவதை விட்டும் வெளியேறியவர்கள்.
Faccirooji aarabeeji:
اَفَغَیْرَ دِیْنِ اللّٰهِ یَبْغُوْنَ وَلَهٗۤ اَسْلَمَ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَیْهِ یُرْجَعُوْنَ ۟
3.83. அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு வெளியேறிய இவர்கள் தனது அடியார்களுக்கு அவன் தெரிவு செய்த இஸ்லாம் அல்லாத வேறு ஒரு மார்க்கத்தையா விரும்புகிறார்கள். நம்பிக்கையாளர்களைப்போன்று விரும்பியோ நிராகரிப்பாளர்களைப்போன்று விரும்பாமலோ வானங்களிலும் பூமியிலும் உள்ள படைப்புகள் அனைத்தும் அவனுக்கே கட்டுப்பட்டுள்ளன. மறுமைநாளில் விசாரித்து, கூலி வழங்கப்படுதற்காக படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் பக்கமே திரும்புவார்கள்.
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• ضلال علماء اليهود ومكرهم في تحريفهم كلام الله، وكذبهم على الناس بنسبة تحريفهم إليه تعالى.
1. யூத அறிஞர்கள் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் சூழ்ச்சி செய்து திரித்து வழிகெட்டனர். போதாக்குறைக்கு அந்தத் திரிபை அல்லாஹ்வின் வார்த்தை எனவும் மக்களிடம் பொய்யுரைத்தனர்.

• كل من يدعي أنه على دين نبي من أنبياء الله إذا لم يؤمن بمحمد عليه الصلاة والسلام فهو ناقض لعهده مع الله تعالى.
2. முஹம்மது நபியை ஏற்றுக்கொள்ளாமல் இறைத்தூதர்களில் ஒருவரைப் பின்பற்றுகிறோம் என்று கூறுபவர் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை முறித்துவிட்டார்.

• أعظم الناس منزلةً العلماءُ الربانيون الذين يجمعون بين العلم والعمل، ويربُّون الناس على ذلك.
3. கற்ற கல்வியின்படி செயல்பட்டு மக்களையும் அவ்வாறு பண்படுத்தும் அறிஞர்களே மக்களில் உயர்ந்த அந்தஸ்தை உடையவர்கள்.

• أعظم الضلال الإعراض عن دين الله تعالى الذي استسلم له سبحانه الخلائق كلهم بَرُّهم وفاجرهم.
4. நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற வித்தியாசமின்றி அனைவரும் கட்டுப்படும் இறைவனான அல்லாஹ்வின் மார்க்கத்தைப் புறக்கணிப்பதே மிகப் பெரிய வழிகேடாகும்.

 
Firo maanaaji Simoore: Simoore koreeji imraan
Tippudi cimooje Tonngoode hello ngoo
 
Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. - Tippudi firooji ɗii

iwde e galle Firo jaŋdeeji Alkur'aana.

Uddude