Check out the new design

Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. * - Tippudi firooji ɗii


Firo maanaaji Simoore: Simoore koreeji imraan   Aaya:
وَلَىِٕنْ مُّتُّمْ اَوْ قُتِلْتُمْ لَاۡاِلَی اللّٰهِ تُحْشَرُوْنَ ۟
3.158. நீங்கள் எப்படி மரணித்தாலும் அல்லது அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டாலும் அவன் பக்கமே நீங்கள் அனைவரும் திரும்ப வேண்டும். உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்கிடுவான்.
Faccirooji aarabeeji:
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ ۚ— وَلَوْ كُنْتَ فَظًّا غَلِیْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ ۪— فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِی الْاَمْرِ ۚ— فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُتَوَكِّلِیْنَ ۟
3.159. தூதரே! அல்லாஹ்வின் பெரும் அருளினால்தான் உம் தோழர்களுடன் மென்மையான முறையில் நடந்துகொள்கிறீர். சொல்லிலும் செயலிலும் நீர் கடுமையானவராக, கடினமனம் கொண்டவராக இருந்திருந்தால் உம்மை விட்டு அவர்கள் விலகிச் சென்றிருப்பார்கள். அவர்கள் உமக்குச் செய்த குறைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவீராக. அவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருவீராக. ஆலோசனை தேவைப்படும் விவகாரங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக. ஆலோசனைக்குப் பின் ஏதேனும் விஷயத்தில் நீர் உறுதிகொண்டுவிட்டால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தவராக அதனைச் செயல்படுத்துவீராக. தன்மீது முழுமையாக நம்பிக்கை வைப்பவர்களை அல்லாஹ் நேசிக்கிறான், அவர்களுக்கு வழிகாட்டுகிறான். அவர்களைப் பலப்படுத்துகிறான்.
Faccirooji aarabeeji:
اِنْ یَّنْصُرْكُمُ اللّٰهُ فَلَا غَالِبَ لَكُمْ ۚ— وَاِنْ یَّخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِیْ یَنْصُرُكُمْ مِّنْ بَعْدِهٖ ؕ— وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟
3.160. அல்லாஹ் தனது உதவியினால் உங்களைப் பலப்படுத்தினால் உலகிலுள்ள அனைவரும் ஒன்றுசேர்ந்தாலும் யாராலும் உங்களை மிகைக்க முடியாது. அவன் உங்களுக்கு உதவாது கைவிட்டுவிட்டால் அதற்குப் பிறகு யாராலும் உங்களுக்கு உதவிசெய்ய முடியாது. உதவி அல்லாஹ்வின் கையில்தான் உள்ளது. நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின்மீதே முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும். வேறுயாரையும் முழுமையாக நம்பியிருக்கக் கூடாது.
Faccirooji aarabeeji:
وَمَا كَانَ لِنَبِیٍّ اَنْ یَّغُلَّ ؕ— وَمَنْ یَّغْلُلْ یَاْتِ بِمَا غَلَّ یَوْمَ الْقِیٰمَةِ ۚ— ثُمَّ تُوَفّٰی كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
3.161. போர்ச் செல்வங்களில் எதனையும் எடுத்து மோசடி செய்வது இறைத்தூதர்களில் எவருக்கும் உகந்த காரியம் அல்ல. அல்லாஹ் பிரத்யேகமாக அவருக்கென அனுமதித்ததைத் தவிர. உங்களில் போர்ச் செல்வங்களில் மோசடி செய்பவர்கள் மறுமைநாளில் அம்பலப்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். படைப்பினங்களுக்கு முன்னால் தான் செய்த மோசடியோடு அவன் வருவான். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்தவற்றுக்கான கூலி குறைவின்றி முழுமையாக வழங்கப்படும். அவர்களின் தீமைகள் அதிகரிக்கப்பட்டோ நன்மைகள் குறைக்கப்பட்டோ அவர்கள்மீது அநீதி இழைக்கப்பட மாட்டாது.
Faccirooji aarabeeji:
اَفَمَنِ اتَّبَعَ رِضْوَانَ اللّٰهِ كَمَنْ بَآءَ بِسَخَطٍ مِّنَ اللّٰهِ وَمَاْوٰىهُ جَهَنَّمُ ؕ— وَبِئْسَ الْمَصِیْرُ ۟
3.162. நம்பிக்கை கொள்ளுதல், நற்செயல் புரிதல் போன்ற அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுத்தரக்கூடிய விஷயங்களைப் பின்பற்றியவர்களும் அவனை நிராகரித்து தீய காரியங்கள் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள். அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிவிட்டார்கள். அவர்களின் தங்குமிடம் நரகமாகும்.அது மிகவும் மோசமான தங்குமிடமாகவும் திரும்புமிடமாகவும் இருக்கின்றது.
Faccirooji aarabeeji:
هُمْ دَرَجٰتٌ عِنْدَ اللّٰهِ ؕ— وَاللّٰهُ بَصِیْرٌ بِمَا یَعْمَلُوْنَ ۟
3.163. அவ்விரு கூட்டத்தினரும் இவ்வுலகிலும் மறுமையிலும் அல்லாஹ்விடத்தில் பலவித தரத்தையுடைவர்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்கேற்ப அவன் கூலி வழங்குவான்.
Faccirooji aarabeeji:
لَقَدْ مَنَّ اللّٰهُ عَلَی الْمُؤْمِنِیْنَ اِذْ بَعَثَ فِیْهِمْ رَسُوْلًا مِّنْ اَنْفُسِهِمْ یَتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِهٖ وَیُزَكِّیْهِمْ وَیُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ ۚ— وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
3.164. அல்லாஹ் நம்பிக்கையாளர்கள்மீது அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பி அருள் புரிந்திருக்கிறான். அவர் குர்ஆனை அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார். ஷிர்க்கிலிருந்தும் தீய குணங்களிலிருந்தும் அவர்களைத் தூய்மைப்படுத்துகின்றார். குர்ஆனையும் சுன்னாவையும் அவர்களுக்குப் போதிக்கின்றார். இந்த தூதர் வருவதற்கு முன்னால் அவர்கள் தெளிவான வழிகேட்டில் இருந்தார்கள்.
Faccirooji aarabeeji:
اَوَلَمَّاۤ اَصَابَتْكُمْ مُّصِیْبَةٌ قَدْ اَصَبْتُمْ مِّثْلَیْهَا ۙ— قُلْتُمْ اَنّٰی هٰذَا ؕ— قُلْ هُوَ مِنْ عِنْدِ اَنْفُسِكُمْ ؕ— اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
3.165. நம்பிக்கையாளர்களே! உஹதுப்போரில் உங்களுக்கு தோல்வி ஏற்பட்டு உங்களில் சிலர் இறந்ததனால் உங்களுக்கு ஏற்பட்ட துன்பத்தின் போது - பத்ருப் போரில் உங்களின் எதிரிகளில் இறந்தவர்களும் கைதிகளும் இருமடங்காகும். -: “நாங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தும் அல்லாஹ்வின் தூதர் எங்களிடையே இருந்தும் எங்களுக்கு எவ்வாறு துன்பம் ஏற்பட்டது?” என்று நீங்கள் கேட்கிறீர்கள். தூதரே! நீர் கூறுவீராக: இது உங்களால் ஏற்பட்ட துன்பங்களேயாகும். நீங்கள் ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொண்டீர்கள், தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டீர்கள். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவன். தான் நாடியவர்களுக்கு அவன் உதவி செய்கிறான். தான் நாடியவர்களை கைவிட்டுவிடுகிறான்.
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• النصر الحقيقي من الله تعالى، فهو القوي الذي لا يحارب، والعزيز الذي لا يغالب.
1. உண்மையான உதவி அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. அவனை எதிர்க்க முடியாதளவு வல்லமைமிக்கவன், அவன் யாவற்றையும் மிகைத்தவன், யாராலும் அவனை மிகைத்துவிட முடியாது.

• لا تستوي في الدنيا حال من اتبع هدى الله وعمل به وحال من أعرض وكذب به، كما لا تستوي منازلهم في الآخرة.
2. அல்லாஹ்வின் வழிகாட்டுதலைப் பின்பற்றி அதன்படி செயல்பட்டவர்களும் அதனைப் புறக்கணித்து, நிராகரித்தவர்களும் மறுமைநாளில் எவ்வாறு அந்தஸ்தில் சமமாகமாட்டார்களோ அது போன்றே இவ்வுலகிலும் அவர்கள் சமமான நிலையில் இருக்கமாட்டார்கள்.

• ما ينزل بالعبد من البلاء والمحن هو بسبب ذنوبه، وقد يكون ابتلاء ورفع درجات، والله يعفو ويتجاوز عن كثير منها.
3.அடியானுக்கு நிகழும் சோதனைகள் அவனது பாவங்களின் வினைகளேயாகும். சில வேளை சோதனையுடன் அந்தஸ்துகளில் உயர்வும் கிடைக்கும். அல்லாஹ் பாவங்களில் பெரும்பாலானவற்றை மன்னித்துவிடுகிறான்.

 
Firo maanaaji Simoore: Simoore koreeji imraan
Tippudi cimooje Tonngoode hello ngoo
 
Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. - Tippudi firooji ɗii

iwde e galle Firo jaŋdeeji Alkur'aana.

Uddude