Check out the new design

Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. * - Tippudi firooji ɗii


Firo maanaaji Simoore: Simoore Gaafir   Aaya:
وَیٰقَوْمِ مَا لِیْۤ اَدْعُوْكُمْ اِلَی النَّجٰوةِ وَتَدْعُوْنَنِیْۤ اِلَی النَّارِ ۟ؕ
40.41. என் சமூகமே! எனக்கு என்னவாயிற்று? அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நற்காரியம் செய்து உலக மற்றும் மறுமை வாழ்வின் இழப்பிலிருந்து காத்துக்கொள்ளுமாறு நான் உங்களை அழைக்கின்றேன். ஆனால் நீங்களோ அல்லாஹ்வை நிராகரித்து அவனுக்கு மாறுசெய்வதற்கு என்னை அழைப்பதன் மூலம் நரகில் நுழைவதற்கு என்னை அழைக்கின்றீர்கள்.
Faccirooji aarabeeji:
تَدْعُوْنَنِیْ لِاَكْفُرَ بِاللّٰهِ وَاُشْرِكَ بِهٖ مَا لَیْسَ لِیْ بِهٖ عِلْمٌ ؗ— وَّاَنَا اَدْعُوْكُمْ اِلَی الْعَزِیْزِ الْغَفَّارِ ۟
40.42. நான் அல்லாஹ்வை நிராகரித்து எனக்கு சரியான அறிவில்லாத ஒன்றை அவனுடன் இணைத்து வணங்குவதற்காக நீங்கள் உங்களின் அசத்தியத்தின் பக்கம் என்னை அழைக்கின்றீர்கள். யாவற்றையும் மிகைத்த, யாராலும் மிகைக்க முடியாத அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளுங்கள் என்று நான் உங்களை அழைக்கின்றேன். தன் அடியார்களை மிக அதிகமாக மன்னிப்பவன்.
Faccirooji aarabeeji:
لَا جَرَمَ اَنَّمَا تَدْعُوْنَنِیْۤ اِلَیْهِ لَیْسَ لَهٗ دَعْوَةٌ فِی الدُّنْیَا وَلَا فِی الْاٰخِرَةِ وَاَنَّ مَرَدَّنَاۤ اِلَی اللّٰهِ وَاَنَّ الْمُسْرِفِیْنَ هُمْ اَصْحٰبُ النَّارِ ۟
40.43. நிச்சயமாக நீங்கள் எதன்மீது உண்மையாக நம்பிக்கைகொண்டு வழிப்பட வேண்டும் என்று எனக்கு அழைப்பு விடுக்கின்றீர்களோ அதற்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் உண்மையாக அழைக்கப்படுவதற்கான எந்தத் தகுதியும் இல்லை. தன்னை அழைப்பவர்களுக்கு அது பதிலளிக்காது. திட்டமாக நாம் அனைவரும் அல்லாஹ்வின் பக்கமே திரும்ப வேண்டும். நிச்சயமாக நிராகரிப்பதிலும் பாவங்கள் புரிவதிலும் வரம்பு மீறுபவர்கள்தாம் நரகவாசிகளாவர். மறுமை நாளில் அவர்கள் அதிலே நிரந்தரமாக நுழைவார்கள்.”
Faccirooji aarabeeji:
فَسَتَذْكُرُوْنَ مَاۤ اَقُوْلُ لَكُمْ ؕ— وَاُفَوِّضُ اَمْرِیْۤ اِلَی اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ بَصِیْرٌ بِالْعِبَادِ ۟
40.44. அவரது அறிவுரையை அவர்கள் நிராகரித்துவிட்டார்கள். அவர் கூறினார்: “நான் உங்களுக்கு வழங்கிய அறிவுரைகளை நீங்கள் விரைவில் நினைவு கூறுவீர்கள். அவற்றை ஏற்றுக் கொள்ளாததற்காக வருத்தப்படுவீர்கள். நான் எனது விவகாரங்கள் அனைத்தையும் அல்லாஹ்விடமே ஒப்படைக்கின்றேன். நிச்சயமாக அல்லாஹ்வுக்கு தனது அடியார்களின் செயல்களில் எதுவும் அவனுக்கு மறைவாக இல்லை.”
Faccirooji aarabeeji:
فَوَقٰىهُ اللّٰهُ سَیِّاٰتِ مَا مَكَرُوْا وَحَاقَ بِاٰلِ فِرْعَوْنَ سُوْٓءُ الْعَذَابِ ۟ۚ
40.45. அவர்கள் அவரைக் கொல்ல நாடியபோது அவர்களின் தீய சூழ்ச்சிகளைவிட்டும் அல்லாஹ் அவரைப் பாதுகாத்தான். ஃபிர்அவ்னைச் சார்ந்தவர்களை மூழ்கடிக்கும் வேதனை சூழ்ந்துகொண்டது. அல்லாஹ் அவனையும் அவனது படையினர் அனைவரையும் இவ்வுலகிலேயே மூழ்கடித்தான்.
Faccirooji aarabeeji:
اَلنَّارُ یُعْرَضُوْنَ عَلَیْهَا غُدُوًّا وَّعَشِیًّا ۚ— وَیَوْمَ تَقُوْمُ السَّاعَةُ ۫— اَدْخِلُوْۤا اٰلَ فِرْعَوْنَ اَشَدَّ الْعَذَابِ ۟
40.46. அவர்கள் மரணித்த பிறகு காலையிலும் மாலையிலும் அவர்களின் மண்ணறைகளில் நெருப்பில் முன்னிறுத்தப்படுவார்கள். மறுமை நாளில் அவர்களிடம் கூறப்படும்: “ஃபிர்அவ்னைப் பின்பற்றியவர்களை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததனாலும் அல்லாஹ்வின் பாதையைவிட்டும் (மக்களைத்) தடுத்துக் கொண்டிருந்ததனாலும் கடுமையான வேதனையில் பிரவேசிக்கச் செய்யுங்கள்.”
Faccirooji aarabeeji:
وَاِذْ یَتَحَآجُّوْنَ فِی النَّارِ فَیَقُوْلُ الضُّعَفٰٓؤُا لِلَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ اَنْتُمْ مُّغْنُوْنَ عَنَّا نَصِیْبًا مِّنَ النَّارِ ۟
40.47. -தூதரே!- நரகவாசிகளில் பின்பற்றிய தொண்டர்களும் பின்பற்றப்பட்ட தலைவர்களும் ஒருவருக்கொருவர் தர்க்கித்துக் கொள்வதை நினைவுகூர்வீராக. பின்பற்றிய பலவீனமான தொண்டர்கள் பின்பற்றப்பட்ட கர்வம்கொண்ட தலைவர்களைப் பார்த்துக் கூறுவார்கள்: “நிச்சயமாக உலகில் நாங்கள் வழிகேட்டில் உங்களைத்தான் பின்பற்றிக் கொண்டிருந்தோம். அல்லாஹ்வின் வேதனையில் சிறிதளவையாவது எங்களுக்குப் பகரமாக நீங்கள் சுமந்து எங்களை விட்டும் விலக்கி வைப்பீர்களா?”
Faccirooji aarabeeji:
قَالَ الَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُلٌّ فِیْهَاۤ اِنَّ اللّٰهَ قَدْ حَكَمَ بَیْنَ الْعِبَادِ ۟
40.48. அதற்கு கர்வம் கொண்ட பின்பற்றப்பட்ட அந்த தலைவர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக நாம் -பின்பற்றிய, பின்பற்றப்பட்டு இருந்த அனைவரும்- நரகத்தில் ஒன்றுதான். ஒருவரும் மற்றவரின் மறுமையின் வேதனையிலிருந்து எதையும் சுமக்க மாட்டார். நிச்சயமாக அல்லாஹ் அடியார்களிடையே தீர்ப்பளித்துவிட்டான். ஒவ்வொருவருக்கும் தக்க தண்டனையையே அளித்துள்ளான்.
Faccirooji aarabeeji:
وَقَالَ الَّذِیْنَ فِی النَّارِ لِخَزَنَةِ جَهَنَّمَ ادْعُوْا رَبَّكُمْ یُخَفِّفْ عَنَّا یَوْمًا مِّنَ الْعَذَابِ ۟
40.49. வேதனைக்குள்ளாக்கப்படும் பின்பற்றிய, பின்பற்றப்பட்ட இரு சாராரும் நரகிலிருந்து வெளியேறி பாவமன்னிப்பு கோரி மீண்டும் உலகத்தின்பால் திரும்புவதில் நிராசையடைந்து நரகத்திற்கு பொறுப்பாக்கப்பட்ட காவலர்களைப் பார்த்துக் கூறுவார்கள்: “உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அவன் நிலையான இந்த வேதனையை ஒருநாளாவது எங்களைவிட்டுக் குறைக்கட்டும்.”
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• أهمية التوكل على الله.
1. அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பதன் முக்கியத்துவம்.

• نجاة الداعي إلى الحق من مكر أعدائه.
2. சத்தியத்தின் பக்கம் அழைக்கும் அழைப்பாளன் தன் எதிரிகளின் சூழ்ச்சிகளை விட்டும் பாதுகாக்கப்படுகிறான்.

• ثبوت عذاب البرزخ.
3. மண்ணறை வேதனை (பர்ஸஹ்) உண்டு என்பது உறுதியாகிறது.

• تعلّق الكافرين بأي سبب يريحهم من النار ولو لمدة محدودة، وهذا لن يحصل أبدًا.
4. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கேனும் தமக்கு நரகிலிருந்து விடுதலையளிக்கும் எந்த காரணியையாவது நிராகரிப்பாளர்கள் எடுத்துக்கொள்ளுதல். ஆனால் அது ஒரு போதும் முடியாது.

 
Firo maanaaji Simoore: Simoore Gaafir
Tippudi cimooje Tonngoode hello ngoo
 
Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. - Tippudi firooji ɗii

iwde e galle Firo jaŋdeeji Alkur'aana.

Uddude