Check out the new design

Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. * - Tippudi firooji ɗii


Firo maanaaji Simoore: Simoore Gaafir   Aaya:
قَالُوْۤا اَوَلَمْ تَكُ تَاْتِیْكُمْ رُسُلُكُمْ بِالْبَیِّنٰتِ ؕ— قَالُوْا بَلٰی ؕ— قَالُوْا فَادْعُوْا ۚ— وَمَا دُعٰٓؤُا الْكٰفِرِیْنَ اِلَّا فِیْ ضَلٰلٍ ۟۠
40.50. நரகத்தின் பாதுகாவலர்கள் நிராகரிப்பாளர்களுக்கு மறுப்புக் கூறுவார்கள்: “உங்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளோடும் ஆதாரங்களோடும் உங்களிடம் வரவில்லையா?” நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “ஆம். அவர்கள் எங்களிடம் தெளிவான ஆதாரங்களோடும் சான்றுகளோடும் வந்து கொண்டிருந்தார்கள்.” அவர்களைக் கண்டிக்கும்விதமாக அந்தக் காவலர்கள் கூறுவார்கள்: “நீங்களே பிரார்த்தனை செய்யுங்கள். நாங்கள் நிராகரிப்பாளர்களுக்காக பரிந்துபேச மாட்டோம். நிராகரிப்பாளர்களின் பிரார்த்தனைகள் வீணானவையே. ஏனெனில் அவர்களது நிராகரிப்பின் காரணமாக அவர்களிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
Faccirooji aarabeeji:
اِنَّا لَنَنْصُرُ رُسُلَنَا وَالَّذِیْنَ اٰمَنُوْا فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَیَوْمَ یَقُوْمُ الْاَشْهَادُ ۟ۙ
40.51. ஃபிர்அவ்னின் சம்பவத்தையும் அவனுக்கும் அவனைப் பின்பற்றியோருக்கும் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நேர்ந்த கதியை அல்லாஹ் குறிப்பிட்ட பிறகு தூதர்கள் மற்றும் நம்பிக்கையாளர்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் கிடைத்த வெற்றியைக் குறித்து குறிப்பிடுகிறான். அவன் கூறுகிறான்: நிச்சயமாக நாம் நம் தூதர்களுக்கும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கைகொண்டவர்களுக்கு இவ்வுலகில் அவர்களின் ஆதாரங்களை மேலோங்கச் செய்தும் எதிரிகளுக்கு எதிராக அவர்களை வலுப்படுத்தியும் உதவி புரிகின்றோம். மறுமை நாளில் அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்தும் உலகில் அவர்களை எதிர்த்தோரை நரகில் நுழைவித்தும் உதவிபுரிகின்றோம். இது சத்தியவாதிகள், நபிமார்கள் மற்றும் வானவர்கள் தாங்கள் எடுத்துரைத்து விட்டதற்கும் சமூகங்கள் அதனை பொய்ப்பித்ததற்கும் சாட்சி கூறியபிறகு நிகழக்கூடியதாகும்.
Faccirooji aarabeeji:
یَوْمَ لَا یَنْفَعُ الظّٰلِمِیْنَ مَعْذِرَتُهُمْ وَلَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوْٓءُ الدَّارِ ۟
40.52. நிராகரித்தும் பாவங்கள் புரிந்தும் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்ட அநியாயக்காரர்களுக்கு அவர்கள் அநீதிக்கு கூறும் காரணங்கள் எந்தப் பயனையும் அளிக்காத நாளே அந்நாளாகும். அந்த நாளில் அவர்கள் அல்லாஹ்வின் அருளைவிட்டும் தூரமாக்கப்படுவார்கள். அவர்கள் மறுமையில் சந்திக்கும் வேதனைமிக்க தண்டனையால் தீய இருப்பிடத்தைப் பெறுவார்கள்.
Faccirooji aarabeeji:
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْهُدٰی وَاَوْرَثْنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ الْكِتٰبَ ۟ۙ
40.53. நாம் மூஸாவுக்கு இஸ்ராயீலின் மக்கள் சத்தியத்தின்பால் நேர்வழி பெறும் ஞானத்தை வழங்கினோம். இஸ்ராயீலின் மக்கள் தலைமுறை தலைமுறையாக பெற்றுக்கொள்ளும் வேதமாக நாம் தவ்ராத்தை ஆக்கினோம்.
Faccirooji aarabeeji:
هُدًی وَّذِكْرٰی لِاُولِی الْاَلْبَابِ ۟
40.54. சத்தியத்தின்பால் வழிகாட்டியாகவும் நல்லறிவுடையோருக்கு நினைவூட்டலாகவும் வழங்கினோம்.
Faccirooji aarabeeji:
فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّاسْتَغْفِرْ لِذَنْۢبِكَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِالْعَشِیِّ وَالْاِبْكَارِ ۟
40.55. -தூதரே!- உம் சமூகத்தினர் உம்மை பொய்ப்பிப்பதையும் அவர்களால் நீர் சந்திக்கும் துன்பங்களையும் பொறுமையுடன் சகித்துக் கொள்வீராக. நிச்சயமாக உமக்கு உதவிசெய்வதாக, வலுப்படுத்துவதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதி சந்தேகமற்ற உண்மையாகும். உம்முடைய பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக. காலையிலும் மாலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக.
Faccirooji aarabeeji:
اِنَّ الَّذِیْنَ یُجَادِلُوْنَ فِیْۤ اٰیٰتِ اللّٰهِ بِغَیْرِ سُلْطٰنٍ اَتٰىهُمْ ۙ— اِنْ فِیْ صُدُوْرِهِمْ اِلَّا كِبْرٌ مَّا هُمْ بِبَالِغِیْهِ ۚ— فَاسْتَعِذْ بِاللّٰهِ ؕ— اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْبَصِیْرُ ۟
40.56. நிச்சயமாக அல்லாஹ்வின் சான்றுகளைப் பொய்யாக்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ்விடமிருந்து வந்த, எந்த ஆதாரமுமின்றி அவற்றில் தர்க்கம் செய்பவர்களை அவ்வாறு செய்யத் தூண்டுவது அவர்களிடம் காணப்படும் சத்தியத்தின் மீது கொண்ட கர்வமும், மேலாதிக்க எண்ணமுமாகும். ஆனாலும் சத்தியத்தை மிகைக்க வேண்டுமென அவர்கள் நினைப்பதை அவர்களால் அடைய முடியாது. -தூதரே!- அல்லாஹ்வை உறுதியாக பற்றிக்கொள்வீராக. நிச்சயமாக அவன் தன் அடியார்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன், அவர்களின் செயல்களைப் பார்க்கக்கூடியவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
Faccirooji aarabeeji:
لَخَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَكْبَرُ مِنْ خَلْقِ النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟
40.57. பிரமாண்டமான, விசாலமான வானங்களையும் பூமியையும் படைப்பது மனிதர்களைப் படைப்பதைவிட மிகப் பெரியதாகும். பிரமாண்டமான அவையிரண்டையும் படைத்தவன் இறந்தவர்களுக்கு கூலி கொடுப்பதற்காக, அவர்களை விசாரிப்பதற்காக அவர்களின் அடக்கஸ்த்தலங்களிலிருந்து மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பும் ஆற்றலுடையவன். ஆயினும் மக்களில் பெரும்பாலானோர் அறிய மாட்டார்கள். அதனைக்கொண்டு படிப்பினை பெற மாட்டார்கள். தெளிவாக இருந்தும் அதனை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்குரிய ஆதாரமாகக் கொள்ளமாட்டார்கள்.
Faccirooji aarabeeji:
وَمَا یَسْتَوِی الْاَعْمٰی وَالْبَصِیْرُ ۙ۬— وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَلَا الْمُسِیْٓءُ ؕ— قَلِیْلًا مَّا تَتَذَكَّرُوْنَ ۟
40.58. பார்வையுடையோரும் பார்வையற்றோரும் சமமாக மாட்டார்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதர்களை உண்மைப்படுத்தி நற்செயல்கள் புரிந்தவர்களும் தீயநம்பிக்கை மற்றும் பாவங்களினால் தீய செயல்புரிந்தவர்களும் சமமாகமாட்டார்கள். நீங்கள் மிகக் குறைவாகவே அறிவுரை பெறுகிறீர்கள். நீங்கள் அறிவுரை பெற்றிருந்தால் இரு பிரிவினருக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அறிந்து அல்லாஹ்வின் திருப்தியை நாடி நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிய முயற்சி செய்பவர்களாக ஆகியிருப்பீர்கள்.
Faccirooji aarabeeji:
Ina jeyaa e nafoore aayeeje ɗee e ngol hello:
• نصر الله لرسله وللمؤمنين سُنَّة إلهية ثابتة.
1. தன் தூதர்களுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் உதவி செய்வது இறைவனின் உறுதியான வழிமுறையாகும்.

• اعتذار الظالم يوم القيامة لا ينفعه.
2. மறுமை நாளில் அநியாயக்காரன் கூறும் சாக்குப்போக்கினால் அவனுக்கு எந்தப் பயனும் இல்லை.

• أهمية الصبر في مواجهة الباطل.
3. அசத்தியத்தை எதிர்கொள்ளும்போது பொறுமையாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் தெளிவாகிறது.

• دلالة خلق السماوات والأرض على البعث؛ لأن من خلق ما هو عظيم قادر على إعادة الحياة إلى ما دونه.
4. வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பது மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்கான ஆதாரமாக கூறப்பட்டுள்ளது. ஏனெனில் பிரமாண்டமானவற்றைப் படைத்தவன் அதனை விடச் சிறியவற்றிற்கு மீண்டும் உயிர்வழங்குவதற்கு ஆற்றல் உள்ளவன்.

 
Firo maanaaji Simoore: Simoore Gaafir
Tippudi cimooje Tonngoode hello ngoo
 
Firo maanaaji al-quraan tedduɗo oo - Eggo e ɗemngal Taamil wonande deftere Firo Alkur'aana raɓɓinaango. - Tippudi firooji ɗii

iwde e galle Firo jaŋdeeji Alkur'aana.

Uddude