કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - ભાષાંતરોની અનુક્રમણિકા


શબ્દોનું ભાષાંતર આયત: (45) સૂરહ: આલિ ઇમરાન
اِذْ قَالَتِ الْمَلٰٓىِٕكَةُ یٰمَرْیَمُ اِنَّ اللّٰهَ یُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ ۙۗ— اسْمُهُ الْمَسِیْحُ عِیْسَی ابْنُ مَرْیَمَ وَجِیْهًا فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِیْنَ ۟ۙ
3.45. தூதரே! பின்வரும் சம்பவத்தையும் நினைவுகூர்வீராக: “வானவர்கள் மர்யமிடம் கூறினார்கள், “அல்லாஹ் உமக்கு ஒரு மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகிறான். அவர் தந்தையின்றி, அல்லாஹ்வின் வார்த்தையான ‘குன்’- ‘ஆகிவிடு’ என்பதைக்கொண்டு படைக்கப்படுவார். அவரது பெயர் ஈசா இப்னு மர்யம் ஆகும். அவர் இவ்வுலகிலும் மறுவுலகிலும் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவராக இருப்பார். அல்லாஹ்வுக்கு நெருக்கமானவராக இருப்பார்.
અરબી તફસીરો:
આયતોના ફાયદાઓ માંથી:
• عناية الله تعالى بأوليائه، فإنه سبحانه يجنبهم السوء، ويستجيب دعاءهم.
1. அல்லாஹ் தன் நேசர்களின்பால் தனிக்கவனம் செலுத்துகிறான். தீமைகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறான்; அவர்களின் பிரார்த்தனையை அங்கீகரிக்கிறான்.

• فَضْل مريم عليها السلام حيث اختارها الله على نساء العالمين، وطهَّرها من النقائص، وجعلها مباركة.
2. உலகிலுள்ள பெண்கள் அனைவரைக் காட்டிலும் அல்லாஹ் மர்யமைத் தேர்ந்தெடுத்துள்ளான்; குறைகளிலிருந்து அவரைத் தூய்மைப்படுத்தி, பாக்கியம்மிக்கவராக அவரை ஆக்கியுள்ளான்.

• كلما عظمت نعمة الله على العبد عَظُم ما يجب عليه من شكره عليها بالقنوت والركوع والسجود وسائر العبادات.
3. அடியானின் மீது அல்லாஹ்வின் அருட்கொடைகள் அதிகரிக்கும் அளவு நின்றுவணங்குதல், ருகூஃ, ஸுஜுத், ஏனைய வணக்கங்கள் ஆகியவற்றின் மூலம் நன்றிசெலுத்துவதும் அவன்மீது கடமையாகி விடுகிறது.

• مشروعية القُرْعة عند الاختلاف فيما لا بَيِّنة عليه ولا قرينة تشير إليه.
4. தெளிவான ஆதாரங்கள் இல்லாத விடயங்களில் கருத்துவேறுபாடு கொள்ளும் போது சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொள்ளலாம்.

 
શબ્દોનું ભાષાંતર આયત: (45) સૂરહ: આલિ ઇમરાન
સૂરહ માટે અનુક્રમણિકા પેજ નંબર
 
કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - ભાષાંતરોની અનુક્રમણિકા

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

બંધ કરો