Check out the new design

કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - તામિલ ભાષામાં અલ્ મુખતસર ફી તફસીરિલ્ કુરઆનીલ્ કરીમ કિતાબનું અનુવાદ * - ભાષાંતરોની અનુક્રમણિકા


શબ્દોનું ભાષાંતર સૂરહ: યાસિન   આયત:
وَمَاۤ اَنْزَلْنَا عَلٰی قَوْمِهٖ مِنْ بَعْدِهٖ مِنْ جُنْدٍ مِّنَ السَّمَآءِ وَمَا كُنَّا مُنْزِلِیْنَ ۟
36.28. அவரை பொய்ப்பித்து கொலை செய்த அந்த சமூகத்தை அழிப்பதற்கு வானத்திலிருந்து வானவர்களின் ஒரு படையை இறக்கவில்லை. முன்சென்ற சமுதாயங்களை அழித்த போதும் வானவர்களை நாம் இறக்குவோராக இருக்கவில்லை. அவர்களின் விவகாரம் நம்மிடத்தில் அதைவிட எளிதானது. எனவே தண்டிக்கும் வானவர்களை இறக்காமல் வானத்திலிருந்து ஒரு பெரும் சப்தத்தை இறக்கி அவர்கள் அழியவேண்டுமென நாம் முடிவுசெய்திருந்தோம்.
અરબી તફસીરો:
اِنْ كَانَتْ اِلَّا صَیْحَةً وَّاحِدَةً فَاِذَا هُمْ خٰمِدُوْنَ ۟
36.29. அவரது சமுதாயத்தின் அழிவின் வரலாறு நாம் அவர்கள் மீது அனுப்பிய ஒரு சப்தம் மாத்திரமே. அதனால் அவர்கள் அனைவரும் செத்து மடிந்தார்கள். அவர்களில் யாரும் எஞ்சியிருக்கவில்லை. அவர்கள் எரிந்து பின்னர் அணைந்த நெருப்பைப் போன்று அடையாளமில்லாமல் ஆகிவிட்டார்கள்.
અરબી તફસીરો:
یٰحَسْرَةً عَلَی الْعِبَادِ ۣۚ— مَا یَاْتِیْهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟
36.30. பொய்ப்பித்த அடியார்களின் மீது ஏற்பட்ட இழப்பே! மறுமை நாளில் அவர்கள் வேதனையைக் காணும்போதும் வருத்தப்படுவார்கள். இதற்கான காரணம், உலகில் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வரும் ஒவ்வொரு தூதரையும் அவர்கள் பரிகாசமும் கேலியும் செய்து கொண்டிருந்ததாகும். எனவேதான் அவர்கள் அல்லாஹ்வின் விடயத்தில் செய்த குறைகளுக்காக மறுமை நாளில் கைசேதப்படுவதே அவர்களது முடிவாகும்.
અરબી તફસીરો:
اَلَمْ یَرَوْا كَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنَ الْقُرُوْنِ اَنَّهُمْ اِلَیْهِمْ لَا یَرْجِعُوْنَ ۟
36.31. தூதர்களைப் பரிகாசம் செய்யும் இந்த பொய்ப்பிப்பவர்கள் தங்களுக்கு முந்தைய சமூகங்களைக் கொண்டு படிப்பினை பெறவில்லையா? அவர்கள் மரணித்துவிட்டார்கள். இனி மீண்டும் உலகத்தின் பக்கம் ஒருபோதும் திரும்ப மாட்டார்கள். மாறாக தாங்கள் செய்த செயல்களின் பக்கம் அவர்கள் சென்றுவிட்டார்கள். அவற்றிற்கேற்ப அல்லாஹ் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
અરબી તફસીરો:
وَاِنْ كُلٌّ لَّمَّا جَمِیْعٌ لَّدَیْنَا مُحْضَرُوْنَ ۟۠
36.32. மறுமை நாளில் அனைத்து சமூகங்களும் விதிவிலக்கின்றி மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்ட பிறகு அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்கப்படுவதற்காக நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள்.
અરબી તફસીરો:
وَاٰیَةٌ لَّهُمُ الْاَرْضُ الْمَیْتَةُ ۖۚ— اَحْیَیْنٰهَا وَاَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ یَاْكُلُوْنَ ۟
36.33. மறுமையில் மீண்டும் எழுப்பப்படுவதை பொய்ப்பிப்பவர்களுக்கு அது உண்மையே என்பதற்கான ஒரு சான்றுதான் இந்த வரண்ட பூமியாகும். அதன் மீது நாம் வானத்திலிருந்து மழை பொழியச் செய்து அதில் பலவகையான தாவரங்களையும் மனிதர்கள் உண்பதற்காக தானியங்களையும் விளையச் செய்கின்றோம். மழையை இறக்கி தாவரங்களை முளைக்கச் செய்வதன் மூலம் இந்த பூமியை உயிர்ப்பித்தவன் இறந்தவர்களை உயிர்ப்பித்து, எழுப்புவதற்கு ஆற்றலுடையவன்.
અરબી તફસીરો:
وَجَعَلْنَا فِیْهَا جَنّٰتٍ مِّنْ نَّخِیْلٍ وَّاَعْنَابٍ وَّفَجَّرْنَا فِیْهَا مِنَ الْعُیُوْنِ ۟ۙ
36.34. நாம் மழையை இறக்கிய இந்த பூமியில் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்களை உருவாக்கினோம். அவற்றில் அவற்றுக்கு நீர்பாய்ச்சும் நீருற்றுகளையும் பீறிட்டு ஓடச் செய்தோம்.
અરબી તફસીરો:
لِیَاْكُلُوْا مِنْ ثَمَرِهٖ ۙ— وَمَا عَمِلَتْهُ اَیْدِیْهِمْ ؕ— اَفَلَا یَشْكُرُوْنَ ۟
36.35. அந்த தோட்டங்களின் கனிகளிலிருந்து அல்லாஹ் அளித்த அருட்கொடையை மனிதர்கள் உண்பதற்காகத்தான். அதில் அவர்களின் எந்த முயற்சியும் இருக்கவில்லை. இவையனைத்தும் அவர்களுக்கு அருட்கொடையாக அளித்த அல்லாஹ்வுக்கு, அவனை மட்டுமே வணங்கி, அவனுடைய தூதர்கள் மீது நம்பிக்கைகொண்டு அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
અરબી તફસીરો:
سُبْحٰنَ الَّذِیْ خَلَقَ الْاَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنْۢبِتُ الْاَرْضُ وَمِنْ اَنْفُسِهِمْ وَمِمَّا لَا یَعْلَمُوْنَ ۟
36.36. பல வகையான தாவரங்களையும் மரங்களையும் மனிதர்களையும் நீரிலும் நிலத்திலும் மனிதர்கள் அறியாத வேறுபல படைப்பினங்களையும் ஆண், பெண் என இணைகளாகப் படைத்த இறைவன் பரிசுத்தமானவன்.
અરબી તફસીરો:
وَاٰیَةٌ لَّهُمُ الَّیْلُ ۖۚ— نَسْلَخُ مِنْهُ النَّهَارَ فَاِذَا هُمْ مُّظْلِمُوْنَ ۟ۙ
36.37. அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதற்கான சான்றுகளில் ஒன்று: “நிச்சயமாக நாம் இரவிலிருந்து பகலைக் கழற்றி இரவு சென்று பகல் வருவதன் மூலம் நாம் வெளிச்சத்தைப் போக்கி விடுகின்றோம். பகல் சென்ற பிறகு இருளைக் கொண்டுவந்து விடுகின்றோம். மனிதர்கள் இருளில் நுழைந்துவிடுகிறார்கள்.”
અરબી તફસીરો:
وَالشَّمْسُ تَجْرِیْ لِمُسْتَقَرٍّ لَّهَا ؕ— ذٰلِكَ تَقْدِیْرُ الْعَزِیْزِ الْعَلِیْمِ ۟ؕ
36.38. அவர்களுக்கு அல்லாஹ்வின் ஒருமைக்கான சான்றுகளில் ஒன்றுதான்: இந்தச் சூரியன். அது தனக்கு நிர்ணயிக்கப்பட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதற்கு நிர்ணயிக்கப்பட்டதை அல்லாஹ்வே அறிவான். அது அதனை மீறாது. இது யாவற்றையும் மிகைத்த, அவனை யாரும் மிகைக்க முடியாத அறிந்தவனான அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட விதியாகும். தனது படைப்பினங்களின் எந்த விடயமும் அவனுக்கு மறைவானதல்ல”
અરબી તફસીરો:
وَالْقَمَرَ قَدَّرْنٰهُ مَنَازِلَ حَتّٰی عَادَ كَالْعُرْجُوْنِ الْقَدِیْمِ ۟
36.39. அவர்களுக்கு அல்லாஹ்வின் ஒருமைக்கான சான்றுகளில் ஒன்றுதான் இந்த சந்திரனாகும். நாம் அதற்கு ஒவ்வொரு இரவும் ஒரு நிலையை நிர்ணயித்துள்ளோம். அது சிறியதாகத் தொடங்கி பின்னர் பெரிதாகி பின்னர் காய்ந்து வளைந்து பழமையடைந்த மஞ்சள் நிற பேரீச்சங் குலைத் தண்டைப் போன்று சிறியதாகி விடுகிறது.
અરબી તફસીરો:
لَا الشَّمْسُ یَنْۢبَغِیْ لَهَاۤ اَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا الَّیْلُ سَابِقُ النَّهَارِ ؕ— وَكُلٌّ فِیْ فَلَكٍ یَّسْبَحُوْنَ ۟
36.40. சூரியன், சந்திரன், இரவு, பகல் ஆகிய சான்றுகள் அல்லாஹ்வின் நிர்ணயத்தைக்கொண்டு முடிவுசெய்யப்பட்டதாகும். அவை தமக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறாது. சூரியன், சந்திரனின் பாதையை மாற்ற அல்லது அதன் ஒளியைப் போக்க சந்திரனைப் பிடிக்க முடியாது. இரவு பகலின் நேரம் முடிவடைவதற்கு முன்னரே அதில் நுழைந்து அதனை முந்த முடியாது. வசப்படுத்தப்பட்டுள்ள இந்த படைப்பினங்களுக்கும் ஏனைய கோள்களுக்கும் அல்லாஹ்வின் நிர்ணயத்தினாலும் பாதுகாப்பினாலும் ஏற்படுத்தப்பட்ட பிரத்யேகமான பாதைகள் உள்ளன.
અરબી તફસીરો:
આયતોના ફાયદાઓ માંથી:
• ما أهون الخلق على الله إذا عصوه، وما أكرمهم عليه إن أطاعوه.
1.மக்கள் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தால் அவனிடம் இழிவுக்குரியோராகவும் அவனுக்கக் கட்டுப்பட்டால் மதிப்பிற்குரியோராகவும் ஆகிவிடுகின்றனர்.

• من الأدلة على البعث إحياء الأرض الهامدة بالنبات الأخضر، وإخراج الحَبِّ منه.
2. வறண்ட பூமி மழையைக் கொண்டு பசுமையான தாவரங்களாலும் அதிலிருந்து தானியங்களை முளைக்கச் செய்வதாலும் உயிர்ப்பிக்கப்படுவது, மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்கான ஆதாரங்களில் உள்ளதாகும்.

• من أدلة التوحيد: خلق المخلوقات في السماء والأرض وتسييرها بقدر.
3. வானிலும் பூமியிலும் படைப்பினங்களைப் படைத்து அவற்றை அளவோடு இயங்கச் செய்வது ஓரிறைக்கொள்கைக்கான ஆதாரங்களில் உள்ளதாகும்.

 
શબ્દોનું ભાષાંતર સૂરહ: યાસિન
સૂરહ માટે અનુક્રમણિકા પેજ નંબર
 
કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - તામિલ ભાષામાં અલ્ મુખતસર ફી તફસીરિલ્ કુરઆનીલ્ કરીમ કિતાબનું અનુવાદ - ભાષાંતરોની અનુક્રમણિકા

તફસીર લિદ્ દિરાસતીલ્ કુરઆનિયહ કેન્દ્ર દ્વારા પ્રકાશિત.

બંધ કરો