Check out the new design

કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - તામિલ ભાષામાં અલ્ મુખતસર ફી તફસીરિલ્ કુરઆનીલ્ કરીમ કિતાબનું અનુવાદ * - ભાષાંતરોની અનુક્રમણિકા


શબ્દોનું ભાષાંતર સૂરહ: અલ્ મુલ્ક   આયત:

அல்முல்க்

સૂરતના હેતુઓ માંથી:
إظهار كمال ملك الله وقدرته؛ بعثًا على خشيته، وتحذيرًا من عقابه.
அல்லாஹ்வை அஞ்சும்படி ஆர்வமூட்டுவதற்காகவும் அவனது தண்டனையிலிருந்து எச்சரிக்கை செய்வதற்காகவும் அவனின் ஆட்சியதிகாரம் மற்றும் வல்லமையின் பரிபூரணத்துவத்தை வெளிப்படுத்தல்.

تَبٰرَكَ الَّذِیْ بِیَدِهِ الْمُلْكُ ؗ— وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرُ ۟ۙ
67.1. அல்லாஹ்வின் நன்மைகள் அதிகரித்துவிட்டன. அவன் கைவசம் மட்டுமே ஆட்சியதிகாரம் உள்ளது. அவன் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன். அவனை எதுவும் இயலாமையில் ஆழ்த்திவிடாது.
અરબી તફસીરો:
١لَّذِیْ خَلَقَ الْمَوْتَ وَالْحَیٰوةَ لِیَبْلُوَكُمْ اَیُّكُمْ اَحْسَنُ عَمَلًا ؕ— وَهُوَ الْعَزِیْزُ الْغَفُوْرُ ۟ۙ
67.2. மனிதர்களே! உங்களில் சிறந்த முறையில் செயல்படுபவர்கள் யார் என்பதைச் சோதிப்பதற்காகவே அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்துள்ளான். அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக்கூடியவன்.
અરબી તફસીરો:
الَّذِیْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ طِبَاقًا ؕ— مَا تَرٰی فِیْ خَلْقِ الرَّحْمٰنِ مِنْ تَفٰوُتٍ ؕ— فَارْجِعِ الْبَصَرَ ۙ— هَلْ تَرٰی مِنْ فُطُوْرٍ ۟
67.3. அவனே ஏழு வானங்களையும் படைத்தான். ஒவ்வொரு வானமும் தனக்கு மேலுள்ளதை தொடாமல் அடுக்கடுக்காக இருக்கின்றன. -பார்க்கக்கூடியவனே!- அல்லாஹ் படைத்தவற்றில் எந்த ஏற்றத்தாழ்வையும் பொருத்தமின்மையையும் காணமாட்டாய். மீண்டும் பார். நீ ஏதேனும் ஓட்டை அல்லது வெடிப்பைக் காண்கிறாயா? அதனை நீ ஒருபோதும் காணமுடியாது. நிச்சயமாக உறுதியான, மிகச்சிறந்த படைப்புகளாகவே நீ அவற்றைக் காண்பாய்.
અરબી તફસીરો:
ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَیْنِ یَنْقَلِبْ اِلَیْكَ الْبَصَرُ خَاسِئًا وَّهُوَ حَسِیْرٌ ۟
67.4. பின்னர் மீண்டும் மீண்டும் உன் பார்வையை செலுத்திப் பார். வானத்தைப் படைத்ததில் உன் பார்வை எந்த குறைபாட்டையும் காணாமல், பார்த்துக் களைத்துப் போனவையாக இழிவடைந்து உன் பக்கம் திரும்பும்.
અરબી તફસીરો:
وَلَقَدْ زَیَّنَّا السَّمَآءَ الدُّنْیَا بِمَصَابِیْحَ وَجَعَلْنٰهَا رُجُوْمًا لِّلشَّیٰطِیْنِ وَاَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِیْرِ ۟
67.5. நாம் கீழ் வானத்தை பிரகாசமான நட்சத்திரங்களைக் கொண்டு அலங்கரித்துள்ளோம். அந்த நட்சத்திரங்களை திருட்டுத்தனமாக ஒட்டுக்கேட்கும் ஷைத்தான்களை நோக்கி எறியப்படும் தீப்பந்தங்களாகவும் ஆக்கினோம். அவை அந்த ஷைத்தான்களை எறித்துவிடுகிறது. மறுமையில் கொழுந்து விட்டெரியும் நரக வேதனையை நாம் அவர்களுக்காக தயார்படுத்தி வைத்துள்ளோம்.
અરબી તફસીરો:
وَلِلَّذِیْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ ؕ— وَبِئْسَ الْمَصِیْرُ ۟
67.6. தங்கள் இறைவனை நிராகரித்தவர்களுக்கு மறுமை நாளில் எரிந்துகொண்டிருக்கும் நரக வேதனை காத்திருக்கின்றது. அவர்கள் திரும்பும் இடம் மிகவும் மோசமான திரும்புமிடமாகும்.
અરબી તફસીરો:
اِذَاۤ اُلْقُوْا فِیْهَا سَمِعُوْا لَهَا شَهِیْقًا وَّهِیَ تَفُوْرُ ۟ۙ
67.7. அவர்கள் நரகத்தில் வீசப்பட்டால் பானை கொதிப்பது போன்று கொதித்துக் கொண்டிருக்கும் பயங்கரமான கர்ஜனையை அதில் செவியுறுவார்கள்.
અરબી તફસીરો:
تَكَادُ تَمَیَّزُ مِنَ الْغَیْظِ ؕ— كُلَّمَاۤ اُلْقِیَ فِیْهَا فَوْجٌ سَاَلَهُمْ خَزَنَتُهَاۤ اَلَمْ یَاْتِكُمْ نَذِیْرٌ ۟
67.8. அது தன்னில் பிரவேசிப்பவர்களின் மீதுள்ள கடுமையான கோபத்தால் தனித்தனியாகிவிடுவது போலத் தோன்றும். அதற்குரியவர்களில் ஒரு கூட்டம் அதில் எறியப்படும்போதெல்லாம் அங்கு நியமிக்கப்பட்டுள்ள வானவர்கள் அவர்களிடம் பரிகாசமாக கேட்பார்கள்: “உலகில் அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு அச்சுறுத்தக்கூடிய ஒரு தூதர் உங்களிடம் வரவில்லையா?”
અરબી તફસીરો:
قَالُوْا بَلٰی قَدْ جَآءَنَا نَذِیْرٌ ۙ۬— فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللّٰهُ مِنْ شَیْءٍ ۖۚ— اِنْ اَنْتُمْ اِلَّا فِیْ ضَلٰلٍ كَبِیْرٍ ۟
67.9. நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “ஆம். அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு அச்சுறுத்தக்கூடிய தூதர் எங்களிடம் வந்தார். நாங்கள் அவரைப் பொய்ப்பித்தோம். நாங்கள் அவரிடம் கூறினோம்: “அல்லாஹ் எந்த வஹியையும் இறக்கவில்லை. -தூதர்களே!- நீங்கள் சத்தியத்தைவிட்டும் தெளிவான வழிகேட்டில் இருக்கின்றீர்கள்.”
અરબી તફસીરો:
وَقَالُوْا لَوْ كُنَّا نَسْمَعُ اَوْ نَعْقِلُ مَا كُنَّا فِیْۤ اَصْحٰبِ السَّعِیْرِ ۟
67.10. மேலும் நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “நாங்கள் பயன்பெறும் நோக்கத்துடன் அதனை செவியேற்றிருந்தால் அல்லது அசத்தியத்திலிருந்து சத்தியத்தைப் பிரித்துப் பார்ப்பவர்களைப் போன்று அதனை விளங்கியிருந்தால் நாங்கள் நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம். மாறாக நாங்கள் தூதர்களின்மீது நம்பிக்கைகொண்டு அவர்கள் கொண்டுவந்ததை உண்மைப்படுத்தி சுவனவாசிகளில் ஆகியிருப்போம்.
અરબી તફસીરો:
فَاعْتَرَفُوْا بِذَنْۢبِهِمْ ۚ— فَسُحْقًا لِّاَصْحٰبِ السَّعِیْرِ ۟
67.11. அவர்கள் தாங்கள் நிராகரித்ததையும் பொய்ப்பித்ததையும் ஒத்துக்கொள்வார்கள். அவர்கள் நரகத்திற்கு உரியவர்களாகிவிடுவார்கள். ஆகவே நரகவாசிகள் (அல்லாஹ்வின் அருளைவிட்டும்) தூரமாகட்டும்.
અરબી તફસીરો:
اِنَّ الَّذِیْنَ یَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَیْبِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِیْرٌ ۟
67.12. நிச்சயமாக அல்லாஹ்வை தனது தனிமைகளின் போது அஞ்சுவர்களுக்கு பாவமன்னிப்பும் சுவனம் என்னும் மகத்தான கூலியும் உண்டு.
અરબી તફસીરો:
આયતોના ફાયદાઓ માંથી:
• في معرفة الحكمة من خلق الموت والحياة وجوب المبادرة للعمل الصالح قبل الموت.
1. மரணமும் வாழ்வும் படைக்கப்பட்டதன் நோக்கத்தை அறிந்துகொள்வது மரணத்திற்கு முன் நற்செயல்களில் விரைந்து ஈடுபடுவதன் அவசியத்தை உணர்த்தும்.

• حَنَقُ جهنم على الكفار وغيظها غيرةً لله سبحانه.
2. அல்லாஹ்வுக்காக கொண்ட ரோஷத்தினால் நிராகரிப்பாளர்களுக்கு எதிராக நரகத்தின் ரோசமும் கோபமும்.

• سبق الجن الإنس في ارتياد الفضاء وكل من تعدى حده منهم، فإنه سيناله الرصد بعقاب.
3. விண்வெளிக்கு மனிதனுக்கு முன் ஜின்கள் சென்றுவிட்டன. அவர்களில் யார் தனக்குரிய எல்லையைத் தாண்டுவாரோ கண்காணிப்பில் உள்ளோரின் தண்டனையை அவை பெற்றுக்கொள்ளும்.

• طاعة الله وخشيته في الخلوات من أسباب المغفرة ودخول الجنة.
4. தனிமையில் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு அஞ்சுவது பாவமன்னிப்புக்கும் சுவனம் நுழைவதற்குமான காரணமாகும்.

 
શબ્દોનું ભાષાંતર સૂરહ: અલ્ મુલ્ક
સૂરહ માટે અનુક્રમણિકા પેજ નંબર
 
કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - તામિલ ભાષામાં અલ્ મુખતસર ફી તફસીરિલ્ કુરઆનીલ્ કરીમ કિતાબનું અનુવાદ - ભાષાંતરોની અનુક્રમણિકા

તફસીર લિદ્ દિરાસતીલ્ કુરઆનિયહ કેન્દ્ર દ્વારા પ્રકાશિત.

બંધ કરો