કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - ભાષાંતરોની અનુક્રમણિકા


શબ્દોનું ભાષાંતર આયત: (27) સૂરહ: અલ્ અઅરાફ
یٰبَنِیْۤ اٰدَمَ لَا یَفْتِنَنَّكُمُ الشَّیْطٰنُ كَمَاۤ اَخْرَجَ اَبَوَیْكُمْ مِّنَ الْجَنَّةِ یَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِیُرِیَهُمَا سَوْاٰتِهِمَا ؕ— اِنَّهٗ یَرٰىكُمْ هُوَ وَقَبِیْلُهٗ مِنْ حَیْثُ لَا تَرَوْنَهُمْ ؕ— اِنَّا جَعَلْنَا الشَّیٰطِیْنَ اَوْلِیَآءَ لِلَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ ۟
7.27. ஆதமுடைய மக்களே! பாவங்களை அலங்கரித்துக் காட்டி வெட்கத்தலங்களை மறைக்கும் வெளிரங்கமான ஆடையையோ தக்வா எனும் ஆடையையோ விட்டுவிடுமாறு ஷைத்தான் பாவத்தை உங்களுக்கு அலங்கரித்து ஏமாற்றிவிட வேண்டாம். தடுக்கப்பட்ட மரத்திலிருந்து உண்பதை அலங்கரித்துக் காட்டி உங்களின் தந்தையையும் தாயையும் அவன் ஏமாற்றி அதன் விளைவாக சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி அவர்களின் மறைவிடங்கள் வெளிப்பட்டன. ஷைத்தானும் அவனுடைய சந்ததிகளும் உங்களைப் பார்க்கிறார்கள். உங்களால் அவர்களைப் பார்க்க முடியாது. எனவே அவனிடமிருந்தும் அவனுடைய சந்ததிகளிடமிருந்தும் எச்சரிக்கையாக இருங்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு நாம் ஷைத்தானை நேசர்களாக ஆக்கியுள்ளோம். நற்செயல்கள் புரியும் நம்பிக்கையாளர்கள் மீது அவன் ஆதிக்கம் செலுத்த முடியாது.
અરબી તફસીરો:
આયતોના ફાયદાઓ માંથી:
• من أَشْبَهَ آدم بالاعتراف وسؤال المغفرة والندم والإقلاع - إذا صدرت منه الذنوب - اجتباه ربه وهداه. ومن أَشْبَهَ إبليس - إذا صدر منه الذنب بالإصرار والعناد - فإنه لا يزداد من الله إلا بُعْدًا.
1. பாவம் நிகழ்ந்தவுடன் ஆதம் அலை அவர்களைப் போல் ஒப்புக்கொண்டு மன்னிப்பு வேண்டி வருந்தி அதனை விட்டும் விலகிக் கொள்பவரை அவனது இறைவன் தேர்ந்தெடுத்து வழிகாட்டுவான். இப்லீஸைப் போல் பாவத்திலேயே தொடர்ந்து பிடிவாதமாக இருப்பவர் அல்லாஹ்வை விட்டும் மென்மேலும் தூரமாகிச் செல்வார்.

• اللباس نوعان: ظاهري يستر العورةَ، وباطني وهو التقوى الذي يستمر مع العبد، وهو جمال القلب والروح.
2. இரண்டு வகையான ஆடைகள் இருக்கின்றன. ஒன்று, அடியானின் மறைவிடங்களை மறைக்கக்கூடிய வெளிப்படையான ஆடை. இரண்டு, அடியானுடன் தொடராக இருக்கக்கூடிய, தக்வா என்னும் மறைமுக ஆடை. அதுவே உள்ளம் மற்றும் ஆன்மாவின் அழகாகும்.

• كثير من أعوان الشيطان يدعون إلى نزع اللباس الظاهري؛ لتنكشف العورات، فيهون على الناس فعل المنكرات وارتكاب الفواحش.
3. ஷைத்தானின் உதவியாளர்களில் பெரும்பாலோர், மறைவிடங்கள் தெரிவதற்காக வெளிப்படையான ஆடையைக் களைவதன்பால் அழைப்பு விடுக்கிறார்கள். இதனால் மானக்கேடான, தீய காரியங்களில் ஈடுபடுவது மக்களுக்கு சர்வ சாதாரணமாகிவிடுகிறது.

• أن الهداية بفضل الله ومَنِّه، وأن الضلالة بخذلانه للعبد إذا تولَّى -بجهله وظلمه- الشيطانَ، وتسبَّب لنفسه بالضلال.
4. நேர்வழி, அல்லாஹ்வின் அருள் மற்றும் கிருபையினால் கிடைப்பதாகும். வழிகேடு, அடியான் தனது அறியாமை மற்றும் அக்கிரமத்தினால் ஷைத்தானுடன் நேசம்கொண்டு வழிகேட்டுக்குத் தானாகவே காரணமாகும் போது அல்லாஹ் அவனைக் கைவிடுவதன் மூலம் ஏற்படும் விளைவாகும்.

 
શબ્દોનું ભાષાંતર આયત: (27) સૂરહ: અલ્ અઅરાફ
સૂરહ માટે અનુક્રમણિકા પેજ નંબર
 
કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - ભાષાંતરોની અનુક્રમણિકા

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

બંધ કરો