કુરઆન મજીદના શબ્દોનું ભાષાંતર - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

પેજ નંબર:close

external-link copy
45 : 21

قُلْ اِنَّمَاۤ اُنْذِرُكُمْ بِالْوَحْیِ ۖؗ— وَلَا یَسْمَعُ الصُّمُّ الدُّعَآءَ اِذَا مَا یُنْذَرُوْنَ ۟

(நபியே!) கூறுவீராக: நான் உங்களை எச்சரிப்பதெல்லாம் வஹ்யின் மூலமாகத்தான். செவிடர்கள் எச்சரிக்கப்படும்போது (நேர்வழியின் சத்திய) அழைப்புக்கு செவிசாய்க்க மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
46 : 21

وَلَىِٕنْ مَّسَّتْهُمْ نَفْحَةٌ مِّنْ عَذَابِ رَبِّكَ لَیَقُوْلُنَّ یٰوَیْلَنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِیْنَ ۟

உமது இறைவனின் தண்டனையிலிருந்து ஒரு பகுதி அவர்களை அடைந்தால், “எங்கள் நாசமே! நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று கூறுவார்கள். info
التفاسير:

external-link copy
47 : 21

وَنَضَعُ الْمَوَازِیْنَ الْقِسْطَ لِیَوْمِ الْقِیٰمَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَیْـًٔا ؕ— وَاِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ اَتَیْنَا بِهَا ؕ— وَكَفٰی بِنَا حٰسِبِیْنَ ۟

மறுமை நாளில் நீதமான தராசுகளை நாம் வைப்போம். ஆகவே, எந்த ஓர் ஆன்மாவுக்கும் அறவே அநீதி இழைக்கப்படாது. (அது செய்த செயல்) கடுகின் விதை அளவு இருந்தாலும் அதை(யும்) நாம் கொண்டு வருவோம். விசாரிப்பவர்களாக நாமே போதுமானவர்கள். info
التفاسير:

external-link copy
48 : 21

وَلَقَدْ اٰتَیْنَا مُوْسٰی وَهٰرُوْنَ الْفُرْقَانَ وَضِیَآءً وَّذِكْرًا لِّلْمُتَّقِیْنَ ۟ۙ

திட்டவட்டமாக பிரித்தறிவிக்கக்கூடிய (சத்தியத்)தையும் வெளிச்சத்தையும் (-வேதத்தையும்) இறையச்சமுள்ளவர்களுக்குரிய அறிவுரையையும் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் நாம் கொடுத்தோம். info
التفاسير:

external-link copy
49 : 21

الَّذِیْنَ یَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَیْبِ وَهُمْ مِّنَ السَّاعَةِ مُشْفِقُوْنَ ۟

(அவர்கள்) எ(ப்படிப்பட்ட)வர்கள் என்றால் தங்கள் இறைவனை மறைவில் (-இவ்வுலக வாழ்க்கையில்) பயப்படுவார்கள். இன்னும் அவர்கள் மறுமையைப் பற்றி அஞ்சுவார்கள். info
التفاسير:

external-link copy
50 : 21

وَهٰذَا ذِكْرٌ مُّبٰرَكٌ اَنْزَلْنٰهُ ؕ— اَفَاَنْتُمْ لَهٗ مُنْكِرُوْنَ ۟۠

இது (-இந்த குர்ஆன்) அருள்மிகுந்த (பயன்தரக்கூடிய) ஓர் அறிவுரையாகும். நாம் இதை இறக்கினோம். நீங்கள் இதை (இந்த குர்ஆனை) மறுக்கின்றீர்களா? info
التفاسير:

external-link copy
51 : 21

وَلَقَدْ اٰتَیْنَاۤ اِبْرٰهِیْمَ رُشْدَهٗ مِنْ قَبْلُ وَكُنَّا بِهٖ عٰلِمِیْنَ ۟ۚ

(இதற்கு) முன்னர் இப்ராஹீமுக்கு அவருடைய நேர்வழியை நாம் கொடுத்தோம். அவரை நாம் நன்கறிந்தவர்களாக இருந்தோம். info
التفاسير:

external-link copy
52 : 21

اِذْ قَالَ لِاَبِیْهِ وَقَوْمِهٖ مَا هٰذِهِ التَّمَاثِیْلُ الَّتِیْۤ اَنْتُمْ لَهَا عٰكِفُوْنَ ۟

அவர் தனது தந்தைக்கும் தனது சமுதாயத்திற்கும் “நீங்கள் இதன்மீது நிலையாக (-பிடிவாதமாக) இருக்கின்ற இந்த உருவங்கள் (-சிலைகள்) என்ன?” என்று கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! info
التفاسير:

external-link copy
53 : 21

قَالُوْا وَجَدْنَاۤ اٰبَآءَنَا لَهَا عٰبِدِیْنَ ۟

அவர்கள் கூறினர்: “எங்கள் மூதாதைகளை அவற்றை வணங்குபவர்களாக” கண்டோம். info
التفاسير:

external-link copy
54 : 21

قَالَ لَقَدْ كُنْتُمْ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟

(இப்ராஹீம்) கூறினார்: “திட்டமாக நீங்களும் உங்கள் மூதாதைகளும் தெளிவான வழிகேட்டில் இருக்கின்றீர்கள்.” info
التفاسير:

external-link copy
55 : 21

قَالُوْۤا اَجِئْتَنَا بِالْحَقِّ اَمْ اَنْتَ مِنَ اللّٰعِبِیْنَ ۟

அவர்கள் கூறினர்: நீர் எங்களிடம் சத்தியத்தைக் கொண்டு வந்தீரா அல்லது விளையாட்டாக பேசுபவர்களில் நீரும் ஒருவரா? info
التفاسير:

external-link copy
56 : 21

قَالَ بَلْ رَّبُّكُمْ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ الَّذِیْ فَطَرَهُنَّ ۖؗ— وَاَنَا عَلٰی ذٰلِكُمْ مِّنَ الشّٰهِدِیْنَ ۟

அவர் கூறினார்: மாறாக, வானங்கள் இன்னும் பூமியின் இறைவன்தான் உங்களுக்கும் இறைவன் ஆவான். அவன்தான் அவற்றைப் படைத்தான். இதற்கு சாட்சி கூறுபவர்களில் நானும் ஒருவன். info
التفاسير:

external-link copy
57 : 21

وَتَاللّٰهِ لَاَكِیْدَنَّ اَصْنَامَكُمْ بَعْدَ اَنْ تُوَلُّوْا مُدْبِرِیْنَ ۟

அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்கள் சிலைகளுக்கு நிச்சயமாக நான் சதி செய்வேன், நீங்கள் (என்னிடமிருந்து) திரும்பிச் சென்ற பின்னர். info
التفاسير: