Check out the new design

Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na Taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Sura: Al'nahl   Aya:
یَوْمَ تَاْتِیْ كُلُّ نَفْسٍ تُجَادِلُ عَنْ نَّفْسِهَا وَتُوَفّٰی كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
16.111. -தூதரே!- ஒவ்வொரு மனிதனும் தனக்காக வாதிடும் அந்த நாளை நினைவு கூர்வீராக. அவன் அந்த நாளின் கடுமையினால் வேறு எவருக்காகவும் வாதாட மாட்டான். ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த நன்மை தீமைக்கேற்ப முழுமையாக கூலி வழங்கப்படும். நன்மைகள் குறைக்கப்பட்டோ, தீமைகள் அதிகரிக்கப்பட்டோ அவர்கள் மீது அநீதி இழைக்கப்பட மாட்டாது.
Tafsiran larabci:
وَضَرَبَ اللّٰهُ مَثَلًا قَرْیَةً كَانَتْ اٰمِنَةً مُّطْمَىِٕنَّةً یَّاْتِیْهَا رِزْقُهَا رَغَدًا مِّنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِاَنْعُمِ اللّٰهِ فَاَذَاقَهَا اللّٰهُ لِبَاسَ الْجُوْعِ وَالْخَوْفِ بِمَا كَانُوْا یَصْنَعُوْنَ ۟
16.112. அல்லாஹ் ஒரு ஊரை - மக்காவை - உதாரணமாகக் கூறுகிறான். மக்காவைச் சுற்றியுள்ள மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் அச்சத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும் போது அங்கு வசிப்பவர்களோ அச்சமின்றி பாதுகாப்பாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கான வாழ்வாதாரம் எல்லா இடங்களிலிருந்தும் இலகுவாகக் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவர்களோ அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் நன்றி கெட்டத்தனமாக நடந்துகொண்டார்கள். எனவே அவர்கள் பொய்பித்து நிராகரித்ததன் காரணமாக அல்லாஹ் அவர்களை அவர்களின் உடம்பில் மெலிவை ஏற்படுத்தும் கடும் பசியாலும் கடும் பயத்தாலும் தண்டித்தான். அவர்கள் அசய்துகொண்டிருந்த நிராகரிப்பான காரியங்களினால் பசியும், பயமும் அவர்கள் அணியும் ஆடையைப் போல் அவர்களுக்கு ஆகிவிட்டன.
Tafsiran larabci:
وَلَقَدْ جَآءَهُمْ رَسُوْلٌ مِّنْهُمْ فَكَذَّبُوْهُ فَاَخَذَهُمُ الْعَذَابُ وَهُمْ ظٰلِمُوْنَ ۟
16.113. மக்காவாசிகளிடம் உண்மையானவர், நம்பிக்கையானவர் என்ற நற்பெயர் பெற்ற ஒரு தூதர் அவர்களிடம் வந்தார். அவர்தான் முஹம்மத். இறைவன் அவருக்கு இறக்கியதில் அவரை அவர்கள் நிராகரித்துவிட்டார்கள். எனவே அல்லாஹ் அவர்களை பசியாலும், பயத்தாலும் தண்டித்தான். அவர்கள் அல்லாஹ்வுக்கு மற்றவர்களை இணையாக்கி அவனுடைய தூதரை பொய்பித்து அழிவிற்கான காரணிகளைத் தேடி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள்.
Tafsiran larabci:
فَكُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ حَلٰلًا طَیِّبًا ۪— وَّاشْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ اِنْ كُنْتُمْ اِیَّاهُ تَعْبُدُوْنَ ۟
16.114. -அடியார்களே!- அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அனுமதிக்கப்பட்ட தூய்மையான உணவுகளை உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வுக்கு யாரையும் இணையாக்காமல் அவனை மட்டுமே வணங்கக்கூடியவர்களாக இருந்தால் அவன் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு அவை அல்லாஹ்வின் புறத்திலிருந்துள்ளது என ஏற்றுக்கொள்வதன் மூலமும் அவற்றை அவனது திருப்பொருத்தத்தில் செலவளிப்பதன் மூலமும் நன்றி செலுத்துங்கள்.
Tafsiran larabci:
اِنَّمَا حَرَّمَ عَلَیْكُمُ الْمَیْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِیْرِ وَمَاۤ اُهِلَّ لِغَیْرِ اللّٰهِ بِهٖ ۚ— فَمَنِ اضْطُرَّ غَیْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
16.115. முறையாக அறுக்கப்படாமல் செத்தவை, வழிந்தோடிய இரத்தம், பன்றியின் அனைத்து உறுப்புகள், அல்லாஹ் அல்லாதவற்றிற்காக பலிகொடுக்கப்பட்டவை ஆகியவற்றை அல்லாஹ் உங்களுக்கு தடைசெய்துள்ளான். இது விருப்பத் தேர்வு உள்ள சமயத்தில் தடுக்கப்பட்டவையாகும். ஆனால் யாரேனும் மேற்கூறப்பட்டவற்றை நிர்ப்பந்தத்தினால் தடைசெய்யப்பட்டதில் விருப்பமின்றியும், தேவையான அளவை மீறாமலும் உண்டுவிட்டால் அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பாளன், அவ்வாறு உண்டுவிட்டவர்களை மன்னிக்கக்கூடியவன். அவன் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளன். எனவேதான் நிர்ப்பந்தமான சமயத்தில் அவற்றை அனுமதித்துள்ளான்.
Tafsiran larabci:
وَلَا تَقُوْلُوْا لِمَا تَصِفُ اَلْسِنَتُكُمُ الْكَذِبَ هٰذَا حَلٰلٌ وَّهٰذَا حَرَامٌ لِّتَفْتَرُوْا عَلَی اللّٰهِ الْكَذِبَ ؕ— اِنَّ الَّذِیْنَ یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ لَا یُفْلِحُوْنَ ۟ؕ
16.116. -இணைவைப்பாளர்களே!- அல்லாஹ் தடைசெய்யாததை தடைசெய்து, அவன் அனுமதித்ததை தடைசெய்து அல்லாஹ்வின் மீது புனைந்து இட்டுக்கட்டும் நோக்கத்தில் “இது அனுமதிக்கப்பட்டது, இது தடைசெய்யப்பட்டது” என்று கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவோர் வெற்றிபெறவோ அச்சத்திலிருந்து தப்பவோ முடியாது.
Tafsiran larabci:
مَتَاعٌ قَلِیْلٌ ۪— وَّلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
16.117. அவர்கள் இவ்வுலகில் தங்கள் மன இச்சைகளைப் பின்பற்றுவதனால் அவர்களுக்கு அற்ப இன்பங்கள்தான் கிடைக்கும். ஆனால் மறுமை நாளில் வேதனைமிக்க தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
Tafsiran larabci:
وَعَلَی الَّذِیْنَ هَادُوْا حَرَّمْنَا مَا قَصَصْنَا عَلَیْكَ مِنْ قَبْلُ ۚ— وَمَا ظَلَمْنٰهُمْ وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟
16.118. குறிப்பாக யூதர்கள் மீது நாம் உமக்கு ஏற்கனவே எடுத்துக்கூறியவற்றைத் தடைசெய்திருந்தோம். (பார்க்க, அல்அன்ஆம் என்ற அத்தியாயத்தின் 146 வது வசனம்) நாம் அவற்றைத் தடைசெய்து அவர்கள்மீது அநீதி இழைக்கவில்லை. ஆனால் அவர்கள்தாம் தமக்குத் தாமே அநீதி இழைத்து தண்டனைக்கான காரணிகளைத் தேடிக் கொண்டார்கள். நாம் அவர்களின் அநியாயத்திற்குத்தான் தண்டனை வழங்கினோம். அவர்களைத் தண்டிக்கும்பொருட்டே நாம் அவர்கள் மீது அவற்றைத் தடைசெய்தோம்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• الجزاء من جنس العمل؛ فإن أهل القرية لما بطروا النعمة بُدِّلوا بنقيضها، وهو مَحْقُها وسَلْبُها ووقعوا في شدة الجوع بعد الشبع، وفي الخوف والهلع بعد الأمن والاطمئنان، وفي قلة موارد العيش بعد الكفاية.
1. செயலுக்கேற்பவே கூலி வழங்கப்படும். அந்த ஊர்வாசிகள் அருட்கொடைகளுக்கு (நன்றி செலுத்தாமல்) கர்வம் கொண்டபோது அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வயிறு நிறைய உணவு, அமைதி, நிம்மதி, பாதுகாப்பு, செழிப்பான வாழ்க்கை ஆகியவை கடுமையான பசி, பயம், வருமானப் பற்றாக்குறை மிகுந்த வாழ்க்கையாக மாற்றப்பட்டு, அழிக்கப்பட்டு விட்டது.

• وجوب الإيمان بالله وبالرسل، وعبادة الله وحده، وشكره على نعمه وآلائه الكثيرة، وأن العذاب الإلهي لاحقٌ بكل من كفر بالله وعصاه، وجحد نعمة الله عليه.
2. அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கைகொள்வதும் அவனை மட்டுமே வணங்குவதும் அவன் நம் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதும் கட்டாயக் கடமையாகும். அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள், அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படுபவர்கள், அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்த மறுப்பவர்கள் ஆகியவர்களைத்தான் இறைவேதனை தாக்கும்.

• الله تعالى لم يحرم علينا إلا الخبائث تفضلًا منه، وصيانة عن كل مُسْتَقْذَر.
3. அல்லாஹ் தன் அருளின் காரணமாகவும் அறுவருக்கத்தக்கவற்றை விட்டும் பாதுகாப்பதற்காகவுமே நம்மீது தீயவைகளை மாத்திரம் தடைசெய்துள்ளான்.

 
Fassarar Ma'anoni Sura: Al'nahl
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na Taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Teburin Bayani kan wasu Fassarori

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa