Check out the new design

Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Sura: Aal'Imran   Aya:
اِذْ هَمَّتْ طَّآىِٕفَتٰنِ مِنْكُمْ اَنْ تَفْشَلَا ۙ— وَاللّٰهُ وَلِیُّهُمَا ؕ— وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟
3.122. தூதரே! பின்வரும் சம்பவத்தை நினைவுபார்ப்பீராக: “பனூசலமா, பனூ ஹாரிசா என்ற இரு கூட்டத்தினரும் பலவீனமடைந்து நயவஞ்சகர்களோடு திரும்பிச் செல்ல நாடினார்கள். போர்புரிவதற்கு அவர்களை உறுதிப்படுத்தி, அவர்கள் நாடியதை விட்டும் திருப்பி அல்லாஹ்வே அவர்களுக்கு உதவிசெய்தான். நம்பிக்கையாளர்கள் எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வின்மீதே நம்பிக்கைவைக்க வேண்டும்.”
Tafsiran larabci:
وَلَقَدْ نَصَرَكُمُ اللّٰهُ بِبَدْرٍ وَّاَنْتُمْ اَذِلَّةٌ ۚ— فَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
3.123. பத்ருப்போரில் எண்ணிக்கையிலும் ஆயுதங்களிலும் ஏற்பட்ட பற்றாக்குறையினால் நீங்கள் பலவீனர்களாக இருந்தபோதும் இணைவைப்பாளர்களுக்கு எதிராக அல்லாஹ் உங்களுக்கு உதவிபுரிந்தான். அவன் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தும் பொருட்டு அவனையே அஞ்சுங்கள்.
Tafsiran larabci:
اِذْ تَقُوْلُ لِلْمُؤْمِنِیْنَ اَلَنْ یَّكْفِیَكُمْ اَنْ یُّمِدَّكُمْ رَبُّكُمْ بِثَلٰثَةِ اٰلٰفٍ مِّنَ الْمَلٰٓىِٕكَةِ مُنْزَلِیْنَ ۟ؕ
3.124. தூதரே! பத்ருப்போரில் இணைவைப்பாளர்களுக்கு உதவிப்படைகள் வந்ததை கேள்விப்பட்ட நம்பிக்கையாளர்களை நீர் உறுதிப்படுத்தி அவர்களிடம், “போரில் உங்களை பலப்படுத்துவதற்காக இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக்கொண்டு அல்லாஹ் உங்களுக்கு உதவிசெய்வது போதாதா?” எனக் கூறியதை நினைத்துப் பார்ப்பீராக.
Tafsiran larabci:
بَلٰۤی ۙ— اِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا وَیَاْتُوْكُمْ مِّنْ فَوْرِهِمْ هٰذَا یُمْدِدْكُمْ رَبُّكُمْ بِخَمْسَةِ اٰلٰفٍ مِّنَ الْمَلٰٓىِٕكَةِ مُسَوِّمِیْنَ ۟
3.125. நிச்சயமாக, இது உங்களுக்குப் போதுமானதுதான். உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து இன்னொரு உதவியைப் பற்றிய ஒரு நற்செய்தியும் உண்டு, நீங்கள் போர்க்களத்தில் பொறுமையாக இருந்து, அல்லாஹ்வை அஞ்சினால், உங்கள் எதிரிகளுக்கு உதவிப்படைகள் வந்து அவர்கள் உங்களை நோக்கி விரைந்து வந்தால், தமக்கும் தமது குதிரைகளுக்கும் வெளிப்படையான அடையாளமிட்டுக்கொண்ட ஐயாயிரம் வானவர்களைக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கு உதவிசெய்வான்.
Tafsiran larabci:
وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰی لَكُمْ وَلِتَطْمَىِٕنَّ قُلُوْبُكُمْ بِهٖ ؕ— وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ الْعَزِیْزِ الْحَكِیْمِ ۟ۙ
3.126. வானவர்களைக் கொண்டு உதவும் இந்த உதவியை அல்லாஹ் உங்கள் உள்ளங்கள் அமைதியடையக் கூடிய நன்மாராயமாகவே ஆக்கியுள்ளான். இல்லாவிட்டால் உண்மையில் வெற்றி என்பது இது போன்ற வெளிப்படையான காரணிகளை மட்டும் கொண்டு கிடைக்கமாட்டாது. உண்மையான வெற்றி அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. அவன் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தனது நிர்ணயத்திலும் சட்டமியற்றுவதிலும் அவன் ஞானம்மிக்கவன்.
Tafsiran larabci:
لِیَقْطَعَ طَرَفًا مِّنَ الَّذِیْنَ كَفَرُوْۤا اَوْ یَكْبِتَهُمْ فَیَنْقَلِبُوْا خَآىِٕبِیْنَ ۟
3.127. பத்ருப்போரில் உங்களுக்குக் கிடைத்த இந்த வெற்றியின் மூலம், நிராகரிப்பாளர்களில் ஒருபிரிவினரை அழிக்க வேண்டும் எனவும், ஒரு பிரிவினரை இழிவுபடுத்தி தோல்வியுறச் செய்து கோபமூட்டி தோல்வியுடனும் இழிவோடும் அவர்கள் திரும்பிச்செல்ல வேண்டும் என்பதையுமே அல்லாஹ் நாடினான்.
Tafsiran larabci:
لَیْسَ لَكَ مِنَ الْاَمْرِ شَیْءٌ اَوْ یَتُوْبَ عَلَیْهِمْ اَوْ یُعَذِّبَهُمْ فَاِنَّهُمْ ظٰلِمُوْنَ ۟
3.128. உஹதுப்போரில் இணைவைப்பாளர்களின் தலைவர்களினால் ஏற்பட்ட சம்பவங்களுக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் அவர்களை அழித்துவிடும்படி பிரார்த்தனை செய்தபோது அல்லாஹ் அவரிடம் கூறினான்: “உமக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் உங்களிடையே தீர்ப்பளிக்கும்வரை அல்லது அவர்களுக்குப் பாவமன்னிப்புக்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்வரை அல்லது அவர்கள் நிராகரிப்பில் நிலைத்திருந்து அவன் அவர்களுக்குத் தண்டனையளிக்கும்வரை பொறுமையாக இருப்பீராக. நிச்சயமாக அவர்கள் தண்டனைக்குரிய அநியாயக்காரர்களாவர்.
Tafsiran larabci:
وَلِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— یَغْفِرُ لِمَنْ یَّشَآءُ وَیُعَذِّبُ مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
3.129. வானங்களிலும் பூமியிலும் நிர்வகிக்கும் அதிகாரமும் படைக்கும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கே உரியது. தான் நாடிய அடியார்களின் பாவங்களை தன் கருணையால் அவன் மன்னித்துவிடுகிறான். தான் நாடியவர்களை தன் நீதியால் தண்டிக்கிறான். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை அவன் மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
Tafsiran larabci:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوا الرِّبٰۤوا اَضْعَافًا مُّضٰعَفَةً ۪— وَّاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟ۚ
3.130. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அறியாமைக்கால மக்கள் செய்துகொண்டிருந்ததுபோல நீங்கள் அளித்த கடனுக்கு பன்மடங்காக வட்டி வாங்குவதை தவிர்ந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்தவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். இதனால் நீங்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நீங்கள் விரும்பும் நன்மைகளைப் பெறலாம்.
Tafsiran larabci:
وَاتَّقُوا النَّارَ الَّتِیْۤ اُعِدَّتْ لِلْكٰفِرِیْنَ ۟ۚ
நற்காரியங்கள் புரிந்து தடுக்கப்பட்டவற்றைத் தவிர்ந்து உங்களுக்கும் தன்னை நிராகரித்தோர்களுக்கு அல்லாஹ் தயாரித்து வைத்துள்ள நரகிற்கும் இடையில் தடையை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
Tafsiran larabci:
وَاَطِیْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟ۚ
கட்டளைகளைச் செயல்படுத்தி தடுக்கப்பட்டவைகளை தவிர்ந்து அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள். இதனால் நீங்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் அருளைப் பெறலாம்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• مشروعية التذكير بالنعم والنقم التي تنزل بالناس حتى يعتبر بها المرء.
1. மனிதன் படிப்பினை பெறும் பொருட்டு மனிதர்களுக்கு நிகழும் அருட்கொடைகளையும் தண்டனைகளையும் நினைவூட்டுவது அனுமதிக்கப்பட்டதாகும்.

• من أعظم أسباب تَنَزُّل نصر الله على عباده ورحمته ولطفه بهم: التزامُ التقوى، والصبر على شدائد القتال.
2. அல்லாஹ்வின் உதவியும் கருணையும் அடியார்களுக்குக் கிடைப்பதற்கான முக்கியமான காரணிகள், தக்வாவைப் பற்றிப்பிடிப்பதும் போரில் ஏற்படும் கஷ்டங்களைப் பொறுமையாக எதிர்கொள்வதுமாகும்.

• الأمر كله لله تعالى، فيحكم بما يشاء، ويقضي بما أراد، والمؤمن الحق يُسَلم لله تعالى أمره، وينقاد لحكمه.
3. அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமே உள்ளது. அவன் தான் நாடியதைக் கட்டளையிடுகிறான், விதிக்கிறான். உண்மையான நம்பிக்கையாளன் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முழுமையாக அடிபணிவதோடு சட்டத்துக்கும் வழிப்படுவான்.

• الذنوب - ومنها الربا - من أعظم أسباب خِذلان العبد، ولا سيما في مواطن الشدائد والصعاب.
4. வட்டி போன்ற பாவங்கள் அடியானின் கைசேதத்திற்கு முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். அதிலும் குறிப்பாக தேவைப்படும் கடினமான சூழ்நிலைகளில் மனிதன் கைவிடப்படுகிறான்.

• مجيء النهي عن الربا بين آيات غزوة أُحد يشعر بشمول الإسلام في شرائعه وترابطها بحيث يشير إلى بعضها في وسط الحديث عن بعض.
5. உஹதுப் போர் சம்பந்தமான வசனங்களுக்கிடையில் வட்டியைத் தடைசெய்யும் வசனங்கள் இடம்பெற்றிருப்பது இஸ்லாமிய சட்டதிட்டங்களின் பரந்த தன்மையையும் அவை ஒன்றோடொன்று தொடர்புபட்டவை என்பதையும் சுட்டிநிற்கின்றது. எனவே தான் சில சட்டங்களைப் பேசும்போது மற்றும் சிலவற்றையும் இடையில் சுட்டிக்காட்டுகின்றது.

 
Fassarar Ma'anoni Sura: Aal'Imran
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Teburin Bayani kan wasu Fassarori

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa