Check out the new design

Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. * - Teburin Bayani kan wasu Fassarori


Fassarar Ma'anoni Sura: Aal'Imran   Aya:
هُنَالِكَ دَعَا زَكَرِیَّا رَبَّهٗ ۚ— قَالَ رَبِّ هَبْ لِیْ مِنْ لَّدُنْكَ ذُرِّیَّةً طَیِّبَةً ۚ— اِنَّكَ سَمِیْعُ الدُّعَآءِ ۟
3.38. வழக்கத்திற்கு மாறாக அல்லாஹ் மர்யமுக்கு உணவளித்ததைக் கண்ட ஸகரிய்யா அவன் தனக்கும் - இந்த தள்ளாத வயதிலும், மனைவி மலடியாக இருந்தபோதும் - ஒரு குழந்தையை வழங்குவான் என்று நம்பிக்கை வைத்தார். “என் இறைவனே! தூய்மையான ஒரு ஆண்மகனை எனக்குத் தந்தருள்வாயாக. நிச்சயமாக நீ உன்னிடம் பிரார்த்திப்பவர்களின் பிரார்த்தனையை செவியேற்கக்கூடியவன்; அவர்களின் நிலையை நன்கறிந்தவன்” என்று பிரார்த்தனை செய்தார்.
Tafsiran larabci:
فَنَادَتْهُ الْمَلٰٓىِٕكَةُ وَهُوَ قَآىِٕمٌ یُّصَلِّیْ فِی الْمِحْرَابِ ۙ— اَنَّ اللّٰهَ یُبَشِّرُكَ بِیَحْیٰی مُصَدِّقًا بِكَلِمَةٍ مِّنَ اللّٰهِ وَسَیِّدًا وَّحَصُوْرًا وَّنَبِیًّا مِّنَ الصّٰلِحِیْنَ ۟
3.39. அவர் தமது தொழுகைமாடத்திலே நின்று வணங்கிக் கொண்டிருந்தபோது வானவர்கள் அவரை அழைத்து, “அல்லாஹ் உமக்கு ஒரு ஆண்குழந்தையைக் கொண்டு நற்செய்தி கூறுகிறான். அவரது பெயர் ‘யஹ்யா’வாகும். அவர் அல்லாஹ்வின் வார்த்தையை உண்மைப்படுத்தக்கூடியவராக இருப்பார். (அல்லாஹ்வின் வார்த்தையால் பிரத்யேகமான முறையில் படைக்கப்பட்ட ஈஸா அலை அவர்களையே இது குறிக்கின்றது) யஹ்யா கல்வியிலும் வணக்க வழிபாட்டிலும் தம் சமூக மக்களுக்குத் தலைவராக இருப்பார்; பெண்களை விட்டும் விலகியவராக, தம் இச்சைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டவராக, இறைவழிபாட்டில் தம்மை முழுமையாக அர்ப்பணித்தவராக இருப்பார். நல்லோர்களில் உள்ள தூதராகவும் இருப்பார்.
Tafsiran larabci:
قَالَ رَبِّ اَنّٰی یَكُوْنُ لِیْ غُلٰمٌ وَّقَدْ بَلَغَنِیَ الْكِبَرُ وَامْرَاَتِیْ عَاقِرٌ ؕ— قَالَ كَذٰلِكَ اللّٰهُ یَفْعَلُ مَا یَشَآءُ ۟
3.40. வானவர்களின் நற்செய்தியைக் கேட்ட ஸகரிய்யா, “என் இறைவா! எனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும்? நானோ தள்ளாத வயதை அடைந்துவிட்டேன். என் மனைவியே பிள்ளைபெறாத மலடியாக இருக்கிறாளே!? என்று ஆச்சரியமாகக் கேட்டார். அதற்கு அல்லாஹ் கூறினான்: உங்களது தள்ளாத வயதிலும், மலடியான மனைவிலும் யஹ்யாவை பிறக்கச்செய்வதற்கு உதாரணம் வழக்கத்திற்கு மாறாக தான் நாடியவற்றைப் படைப்பதாகும். ஏனெனில் அவன் ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன். தனது ஞானத்திற்கும் அறிவுக்கும் ஏற்றவாறு நாடியதைச் செய்கிறான்.
Tafsiran larabci:
قَالَ رَبِّ اجْعَلْ لِّیْۤ اٰیَةً ؕ— قَالَ اٰیَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَةَ اَیَّامٍ اِلَّا رَمْزًا ؕ— وَاذْكُرْ رَّبَّكَ كَثِیْرًا وَّسَبِّحْ بِالْعَشِیِّ وَالْاِبْكَارِ ۟۠
3.41. “என் இறைவா! என் மனைவி என் மூலம் கர்ப்பமாக இருக்கிறாள் என்பதற்கு என்னிடம் ஒரு அடையாளத்தை ஏற்படுத்து” என்று ஸகரிய்யா வேண்டினார். “அதற்கான அடையாளம், உமக்கு எந்த தீங்கும் நேராமலேயே உம்மால் மூன்று இரவும், பகலும் மக்களுடன் சைகை மூலமாகவே அன்றி பேசமுடியாது. பகலின் முற்பகுதியிலும் பிற்பகுதியிலும் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூர்ந்து அவனது தூய்மையைப் பறைசாற்றுவீராக” என்று அல்லாஹ் கூறினான்.
Tafsiran larabci:
وَاِذْ قَالَتِ الْمَلٰٓىِٕكَةُ یٰمَرْیَمُ اِنَّ اللّٰهَ اصْطَفٰىكِ وَطَهَّرَكِ وَاصْطَفٰىكِ عَلٰی نِسَآءِ الْعٰلَمِیْنَ ۟
3.42. தூதரே! வானவர்கள் மர்யமிடம் பின்வருமாறு கூறியதை நினைவுகூர்வீராக: “உம்முடைய நல்ல பண்புகளின் காரணமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்து குறைகளிலிருந்து உம்மைத் தூய்மைப்படுத்தியுள்ளான். உம் காலத்தில் வாழும் உலகிலுள்ள எல்லா பெண்களைக் காட்டிலும் அல்லாஹ் உம்மைச் சிறப்பித்துள்ளான்.
Tafsiran larabci:
یٰمَرْیَمُ اقْنُتِیْ لِرَبِّكِ وَاسْجُدِیْ وَارْكَعِیْ مَعَ الرّٰكِعِیْنَ ۟
3.43. மர்யமே! நீண்ட நேரம் நின்று தொழுவீராக, உம் இறைவனுக்காக சிரம்பணிவீராக, அவனைக் குனிந்து வணங்கும் நல்லடியார்களுடன் சேர்ந்து நீரும் குனிந்து வணங்குவீராக.
Tafsiran larabci:
ذٰلِكَ مِنْ اَنْۢبَآءِ الْغَیْبِ نُوْحِیْهِ اِلَیْكَ ؕ— وَمَا كُنْتَ لَدَیْهِمْ اِذْ یُلْقُوْنَ اَقْلَامَهُمْ اَیُّهُمْ یَكْفُلُ مَرْیَمَ ۪— وَمَا كُنْتَ لَدَیْهِمْ اِذْ یَخْتَصِمُوْنَ ۟
3.44. தூதரே! மேலே கூறப்பட்ட ஸகரிய்யா மற்றும் மர்யமைப் பற்றிய செய்திகள் மறைவான செய்திகளாகும். நாமே இவற்றை உமக்கு அறிவிக்கின்றோம். மர்யமை யார் பராமரிப்பது? என்ற விஷயத்தில் ஏற்பட்ட போட்டியால் அவர்களிலுள்ள அறிஞர்களும் நல்லவர்களும் சீட்டு குலுக்கி அவர்களது எழுதுகோல்களை போட்டபோது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. சீட்டு குலுக்கிப்போடப்பட்டபோது ஸகரிய்யாவின் எழுதுகோலே வென்றது.
Tafsiran larabci:
اِذْ قَالَتِ الْمَلٰٓىِٕكَةُ یٰمَرْیَمُ اِنَّ اللّٰهَ یُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ ۙۗ— اسْمُهُ الْمَسِیْحُ عِیْسَی ابْنُ مَرْیَمَ وَجِیْهًا فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِیْنَ ۟ۙ
3.45. தூதரே! பின்வரும் சம்பவத்தையும் நினைவுகூர்வீராக: “வானவர்கள் மர்யமிடம் கூறினார்கள், “அல்லாஹ் உமக்கு ஒரு மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகிறான். அவர் தந்தையின்றி, அல்லாஹ்வின் வார்த்தையான ‘குன்’- ‘ஆகிவிடு’ என்பதைக்கொண்டு படைக்கப்படுவார். அவரது பெயர் ஈசா இப்னு மர்யம் ஆகும். அவர் இவ்வுலகிலும் மறுவுலகிலும் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவராக இருப்பார். அல்லாஹ்வுக்கு நெருக்கமானவராக இருப்பார்.
Tafsiran larabci:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• عناية الله تعالى بأوليائه، فإنه سبحانه يجنبهم السوء، ويستجيب دعاءهم.
1. அல்லாஹ் தன் நேசர்களின்பால் தனிக்கவனம் செலுத்துகிறான். தீமைகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறான்; அவர்களின் பிரார்த்தனையை அங்கீகரிக்கிறான்.

• فَضْل مريم عليها السلام حيث اختارها الله على نساء العالمين، وطهَّرها من النقائص، وجعلها مباركة.
2. உலகிலுள்ள பெண்கள் அனைவரைக் காட்டிலும் அல்லாஹ் மர்யமைத் தேர்ந்தெடுத்துள்ளான்; குறைகளிலிருந்து அவரைத் தூய்மைப்படுத்தி, பாக்கியம்மிக்கவராக அவரை ஆக்கியுள்ளான்.

• كلما عظمت نعمة الله على العبد عَظُم ما يجب عليه من شكره عليها بالقنوت والركوع والسجود وسائر العبادات.
3. அடியானின் மீது அல்லாஹ்வின் அருட்கொடைகள் அதிகரிக்கும் அளவு நின்றுவணங்குதல், ருகூஃ, ஸுஜுத், ஏனைய வணக்கங்கள் ஆகியவற்றின் மூலம் நன்றிசெலுத்துவதும் அவன்மீது கடமையாகி விடுகிறது.

• مشروعية القُرْعة عند الاختلاف فيما لا بَيِّنة عليه ولا قرينة تشير إليه.
4. தெளிவான ஆதாரங்கள் இல்லாத விடயங்களில் கருத்துவேறுபாடு கொள்ளும் போது சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொள்ளலாம்.

 
Fassarar Ma'anoni Sura: Aal'Imran
Teburin Jerin Sunayen Surori Lambar shafi
 
Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma. - Teburin Bayani kan wasu Fassarori

Wanda aka buga a Cibiyar Tafsiri da karatuttukan AlƘur'ani.

Rufewa