Check out the new design

Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil * - Daftar isi terjemahan


Terjemahan makna Surah: Al-Qaṣaṣ   Ayah:
قَالَ اِنَّمَاۤ اُوْتِیْتُهٗ عَلٰی عِلْمٍ عِنْدِیْ ؕ— اَوَلَمْ یَعْلَمْ اَنَّ اللّٰهَ قَدْ اَهْلَكَ مِنْ قَبْلِهٖ مِنَ الْقُرُوْنِ مَنْ هُوَ اَشَدُّ مِنْهُ قُوَّةً وَّاَكْثَرُ جَمْعًا ؕ— وَلَا یُسْـَٔلُ عَنْ ذُنُوْبِهِمُ الْمُجْرِمُوْنَ ۟
28.78. காரூன் கூறினான்: “நிச்சயமாக என் அறிவால், ஆற்றலால்தான் இந்த செல்வங்களெல்லாம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. நான் இதற்குத் தகுதியானவன்தான்.” காரூனைவிட அதிக செல்வங்களும் பலமும் உடைய எத்தனையோ சமூகங்களை அல்லாஹ் அழித்துள்ளான் என்பதை அவன் அறியவில்லையா? அவர்களின் செல்வங்களோ ஆற்றலோ அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை. குற்றவாளிகளின் பாவங்களைக் குறித்து அல்லாஹ் அறிந்துவைத்திருப்பதால் அறியவேண்டும் என்று அவர்களிடம் கேட்கப்படமாட்டார்கள். கண்டிக்கும் விதமாகவே அவர்களிடம் கேள்வி கேட்கப்படும்.
Tafsir berbahasa Arab:
فَخَرَجَ عَلٰی قَوْمِهٖ فِیْ زِیْنَتِهٖ ؕ— قَالَ الَّذِیْنَ یُرِیْدُوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا یٰلَیْتَ لَنَا مِثْلَ مَاۤ اُوْتِیَ قَارُوْنُ ۙ— اِنَّهٗ لَذُوْ حَظٍّ عَظِیْمٍ ۟
28.79. அவன் தன் முழு அலங்காரத்துடன் ஆடம்பரமாக வெளிப்பட்டான். உலக வாழ்வின் அலங்காரத்தை விரும்பிய அவனது தோழர்கள் கூறினார்கள்: “உலக அலங்காரங்களில் காரூனுக்கு வழங்கப்பட்டது போன்று எங்களுக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டுமே! நிச்சயமாக அவன் பெரும் பாக்கியசாலி.”
Tafsir berbahasa Arab:
وَقَالَ الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ وَیْلَكُمْ ثَوَابُ اللّٰهِ خَیْرٌ لِّمَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًا ۚ— وَلَا یُلَقّٰىهَاۤ اِلَّا الصّٰبِرُوْنَ ۟
28.80. கல்வியறிவு வழங்கப்பட்டவர்கள் காரூனின் அலங்காரத்தைக் கண்டபோது, அவனது தோழர்களின் ஏங்குதலைச் செவியுற்றபோது கூறினார்கள்: “உங்களுக்குக் கேடுதான். அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிபவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் வழங்கும் கூலி காரூனுக்கு வழங்கப்பட்ட உலக அலங்காரத்தைவிட சிறந்ததாகும். அழியக்கூடிய இவ்வுலக இன்பங்களை விட அல்லாஹ்விடம் இருக்கும் நிலையான இன்பங்களைத் தேர்ந்தெடுத்த பொறுமையாளர்களே இந்த வார்த்தையைக் கூறுவதற்கும் அதன்படி செயல்படுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுவார்கள்.
Tafsir berbahasa Arab:
فَخَسَفْنَا بِهٖ وَبِدَارِهِ الْاَرْضَ ۫— فَمَا كَانَ لَهٗ مِنْ فِئَةٍ یَّنْصُرُوْنَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ ؗۗ— وَمَا كَانَ مِنَ الْمُنْتَصِرِیْنَ ۟
28.81. பின்னர் அவனைத் தண்டிக்கும்பொருட்டு அவனையும் அவனது வீட்டையும் அதிலுள்ளோருடன் சேர்த்து பூமியில் புதையச் செய்துவிட்டோம். அல்லாஹ்வைத் தவிர அவனுக்கு உதவி செய்யக்கூடிய எந்தக் கூட்டமும் இருக்கவில்லை. அவனால் தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ளக்கூடியவனாகவும் இருக்கவில்லை.
Tafsir berbahasa Arab:
وَاَصْبَحَ الَّذِیْنَ تَمَنَّوْا مَكَانَهٗ بِالْاَمْسِ یَقُوْلُوْنَ وَیْكَاَنَّ اللّٰهَ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَیَقْدِرُ ۚ— لَوْلَاۤ اَنْ مَّنَّ اللّٰهُ عَلَیْنَا لَخَسَفَ بِنَا ؕ— وَیْكَاَنَّهٗ لَا یُفْلِحُ الْكٰفِرُوْنَ ۟۠
28.82. புதைவதற்கு முன்னால் அவனைப்போன்று செல்வந்தனாகவும் அலங்காரம் மிக்கவனாகவும் ஆக வேண்டுமே என்று ஏங்கியவர்கள் கைசேதப்பட்டு படிப்பினை பெற்றவர்களாக கூறலானார்கள்: “நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக வழங்குகிறான். அவர்களில் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகின்றான் என்பதை நாம் அறியவில்லையா? நாங்கள் கூறியதற்காக எங்களைத் தண்டிக்காமல் திட்டமாக அல்லாஹ் எங்கள் மீது அருள்புரியவில்லையெனில் காரூன் புதைக்கப்பட்டது போன்று நாமும் புதைக்கப்பட்டிருப்போம். நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றிபெற மாட்டார்கள். மாறாக ஈருகிலும் நிச்சயமாக அவர்களின் முடிவு இழப்பாகவே அமையும்.
Tafsir berbahasa Arab:
تِلْكَ الدَّارُ الْاٰخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِیْنَ لَا یُرِیْدُوْنَ عُلُوًّا فِی الْاَرْضِ وَلَا فَسَادًا ؕ— وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِیْنَ ۟
28.83. நாம் நிலையான அந்த மறுமையின் வீட்டை பூமியில் சத்தியத்தை நம்பிக்கை கொள்வதை விட்டும் அதனை பின்பற்றுவதை விட்டும் கர்வம் கொள்ளவோ, அதில் குழப்பம் செய்யவோ விரும்பாதவர்களுக்கு இன்பமும் கண்ணியமும் உள்ள வீடாக ஆக்கியுள்ளோம். அருட்கொடைகள் நிறைந்த சுவனமும், அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அங்கு கிடைக்கும் அல்லாஹ்வின் திருப்தியுமே புகழத்தக்க முடிவாகும்.
Tafsir berbahasa Arab:
مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ خَیْرٌ مِّنْهَا ۚ— وَمَنْ جَآءَ بِالسَّیِّئَةِ فَلَا یُجْزَی الَّذِیْنَ عَمِلُوا السَّیِّاٰتِ اِلَّا مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
28.84. மறுமை நாளில் யார் -தொழுகை, ஸகாத், நோன்பு, போன்ற ஏனைய- நன்மைகளைக் கொண்டு வருவாரோ அவருக்கு அந்த நன்மைகளை விட சிறந்த கூலி உண்டு. அவரது நன்மைக்கு பத்து மடங்கு கூலி வழங்கப்படும். யார் -நிராகரிப்பு, வட்டி உண்ணுதல், விபச்சாரம், மற்றும் ஏனைய- தீமையைக் கொண்டுவருவாரோ எவ்வித அதிகரிப்புமின்றி அவர்கள் செய்த தீய செயல்களுக்கேற்பவே அவர்களுக்குத் தண்டனையளிக்கப்படும்.
Tafsir berbahasa Arab:
Beberapa Faedah Ayat-ayat di Halaman Ini:
• كل ما في الإنسان من خير ونِعَم، فهو من الله خلقًا وتقديرًا.
1. மனிதனிடம் இருக்கின்ற நன்மைகள், அருட்கொடைகள் அனைத்தும் அல்லாஹ்வினால் படைக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்டதாகும்.

• أهل العلم هم أهل الحكمة والنجاة من الفتن؛ لأن العلم يوجه صاحبه إلى الصواب.
2. ஞானமுடையவர்களும் குழப்பங்களிலிருந்து தப்பியவர்களுமே கல்வியறிவு பெற்றவர்களாவர். ஏனெனில் கல்வி மனிதனுக்கு சரியான பாதையைக் காட்டுகிறது.

• العلو والكبر في الأرض ونشر الفساد عاقبته الهلاك والخسران.
3.பெருமை, கர்வம், குழப்பம் ஏற்படுத்தல் என்பவற்றின் முடிவு அழிவும் நஷ்டமுமாகும்.

• سعة رحمة الله وعدله بمضاعفة الحسنات للمؤمن وعدم مضاعفة السيئات للكافر.
4. நம்பிக்கையாளனுக்கு நன்மைகளை இரட்டிப்பாக்கி நிராகரிப்பாளனுக்கு தீமைகளை இரட்டிப்பாக்காமை அல்லாஹ்வின் அருளின் விசாலத்தன்மையும் நீதமுமாகும்.

 
Terjemahan makna Surah: Al-Qaṣaṣ
Daftar surah Nomor Halaman
 
Terjemahan makna Alquran Alkarim - Terjemahan Al-Mukhtaṣar fī Tafsīr Al-Qur`ān Al-Karīm ke bahasa Tamil - Daftar isi terjemahan

Diterbitkan oleh Markaz Tafsīr Li Ad-Dirasāt Al-Qur`āniyyah.

Tutup