Traduzione dei Significati del Sacro Corano - TRADUZIONE TAMIL dell’Esegesi Sintetica del Nobile Corano

external-link copy
114 : 3

یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ وَیَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَیَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَیُسَارِعُوْنَ فِی الْخَیْرٰتِ ؕ— وَاُولٰٓىِٕكَ مِنَ الصّٰلِحِیْنَ ۟

3.114. அவர்கள் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் உறுதியான நம்பிக்கைகொள்கிறார்கள்; நன்மையான விஷயங்களைச் செய்யத் தூண்டுகிறார்கள்; தீயவற்றை விட்டும் தடுக்கிறார்கள்; நன்மையான செயல்களின்பால் விரைந்து சிறப்புமிக்க காலங்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த பண்புகளை உடையவர்கள்தாம் சிறந்த எண்ணமும் செயல்களும் உடைய அல்லாஹ்வின் நல்லடியார்களாகும். info
التفاسير:
Insegnamenti tratti dai versetti:
• أعظم ما يميز هذه الأمة وبه كانت خيريتها - بعد الإيمان بالله - الأمر بالمعروف والنهي عن المنكر.
1. நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதே ஈமானுக்கு அடுத்ததாக இந்த சமூகம் பெற்றுள்ள மிகப்பெரும் சிறப்பம்சமாகும். அதன் மூலமே ஏனைய சமூகங்களை விட்டும் தனித்துவிளங்குகின்றது. info

• قضى الله تعالى بالذل على أهل الكتاب لفسقهم وإعراضهم عن دين الله، وعدم وفائهم بما أُخذ عليهم من العهد.
2. வேதக்காரர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தைப் புறக்கணித்ததனாலும் அவனிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததனாலும் அவர்களின்மீது அல்லாஹ் இழிவை விதித்துவிட்டான். info

• أهل الكتاب ليسوا على حال واحدة؛ فمنهم القائم بأمر الله، المتبع لدينه، الواقف عند حدوده، وهؤلاء لهم أعظم الأجر والثواب. وهذا قبل بعثة النبي محمد صلى الله عليه وسلم.
3. வேதக்காரர்கள் அனைவரும் சமமானவர்கள் அல்ல. நபியவர்களின் வருகைக்கு முன்னால் அவர்களிலும் அல்லாஹ்வின் கட்டளையைப் பின்பற்றி மார்க்க வரம்புகளைப் பேணி அவனுடைய மார்க்கத்தைப் பின்பற்றக்கூடியவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு மிகப்பெரும் கூலியும் வெகுமதியும் உண்டு. info