Check out the new design

Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano * - Indice Traduzioni


Traduzione dei significati Sura: Al-A‘râf   Versetto:
وَاِذْ قَالَتْ اُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُوْنَ قَوْمَا ۙ— ١للّٰهُ مُهْلِكُهُمْ اَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِیْدًا ؕ— قَالُوْا مَعْذِرَةً اِلٰی رَبِّكُمْ وَلَعَلَّهُمْ یَتَّقُوْنَ ۟
7.164. தூதரே! அவர்களில் ஒரு கூட்டம் இத்தீமையை விட்டும் அவர்களைத் தடுத்து அவர்களை எச்சரித்த சந்தர்ப்பத்தை நினைவு கூறுவீராக! அப்போது அவர்களைப் பார்த்து வேறோரு குழுவினர் கூறினார்கள்: “இவர்களுக்கு ஏன் அறிவுரை வழங்குகிறீர்கள்? இவர்களுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் இவர்களை அழித்துவிடுவான் அல்லது மறுமை நாளில் இவர்களுக்கு கடுமையான தண்டனை அளிப்பான்.” அறிவுரை கூறுபவர்கள் கூறினார்கள்: “எங்களின் இந்த அறிவுரையின் நோக்கம், எமக்கு ஏவப்பட்ட நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் காரியத்தை விட்டதற்காக அல்லாஹ் தண்டித்துவிடாமல் இருக்க, அதனைச் செய்து அல்லாஹ்விடம் காரணம் கூற வேண்டும் என்பதற்காகவும் அறிவுரையினால் அவர்கள் பயனடைந்து பாவங்களை விட்டொழிப்பதற்காகவும்தான்.”
Esegesi in lingua araba:
فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖۤ اَنْجَیْنَا الَّذِیْنَ یَنْهَوْنَ عَنِ السُّوْٓءِ وَاَخَذْنَا الَّذِیْنَ ظَلَمُوْا بِعَذَابٍۭ بَىِٕیْسٍ بِمَا كَانُوْا یَفْسُقُوْنَ ۟
7.165. பாவிகள் தமக்கு அறிவுரை கூறுவோர் ஞாபகமூட்டியதைப் புறக்கணித்து, தவிர்ந்து கொள்ளாத போது தீமையைத் தடுத்த கூட்டத்தினரை வேதனையிலிருந்து நாம் காப்பாற்றி சனிக்கிழமையில் மீன்பிடித்து வரம்புமீறிக் கொண்டிருந்தவர்களை, அவர்கள் அல்லாஹ்வுக்கு அடிபணியாமல் பாவங்களில் நிலைத்திருந்ததனால் கடுமையான வேதனையால் தண்டித்தோம்.
Esegesi in lingua araba:
فَلَمَّا عَتَوْا عَنْ مَّا نُهُوْا عَنْهُ قُلْنَا لَهُمْ كُوْنُوْا قِرَدَةً خٰسِىِٕیْنَ ۟
7.166. அவர்கள் கர்வத்தினாலும் பிடிவாதத்தினாலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு வரம்புமீறி, அறிவுரை பெறாத போது "பாவிகளே நீங்கள் இழிந்த குரங்குகளாக ஆகிவிடுங்கள்." என நாம் கூறினோம். நாம் நாடியவாறு அவர்கள் மாறிவிட்டனர். ” நாம் ஏதேனும் ஒன்றை செய்ய நாடினால் ‘ஆகு’ என்றுதான் கூறுவோம். அது ஆகிவிடும்.
Esegesi in lingua araba:
وَاِذْ تَاَذَّنَ رَبُّكَ لَیَبْعَثَنَّ عَلَیْهِمْ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ مَنْ یَّسُوْمُهُمْ سُوْٓءَ الْعَذَابِ ؕ— اِنَّ رَبَّكَ لَسَرِیْعُ الْعِقَابِ ۖۚ— وَاِنَّهٗ لَغَفُوْرٌ رَّحِیْمٌ ۟
7.167. தூதரே! மறுமை நாள் வரை இந்த உலக வாழ்வில் யூதர்களை இழிவுபடுத்துவோரை அவர்கள் மீது சாட்டிக்கொண்டே இருப்போம் என்ற சந்தேகமற்ற தெளிவான அல்லாஹ்வின் பிரகடனத்தை நினைவுகூர்வீராக. தூதரே! உம் இறைவன் தன் கட்டளைக்கு மாறாகச் செயல்படக்கூடியவர்களை கடுமையாக தண்டிக்கக்கூடியவன். சில வேளை இவ்வுலகிலேயே அவர்களுக்குத் தண்டனை அளித்துவிடுகிறான். ஆயினும் அவன் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
Esegesi in lingua araba:
وَقَطَّعْنٰهُمْ فِی الْاَرْضِ اُمَمًا ۚ— مِنْهُمُ الصّٰلِحُوْنَ وَمِنْهُمْ دُوْنَ ذٰلِكَ ؗ— وَبَلَوْنٰهُمْ بِالْحَسَنٰتِ وَالسَّیِّاٰتِ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
7.168. அவர்கள் ஒற்றுமையாக இருந்தபின்னர் நாம் அவர்களை பூமியில் பல பிரிவினராகப் பிரித்து சிறு சிறு கூட்டமாகச் சிதறடித்துவிட்டோம். அவர்களில் அல்லாஹ்வின் கடமைகளையும் அடியார்களின் கடமைகளையும் நிறைவேற்றும் நல்லவர்களும் இருக்கிறார்கள்; நடுநிலையாளர்களும் இருக்கிறார்கள். பாவங்கள் செய்து தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக்கொண்ட வரம்புமீறியவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு இலகுவைக் கொண்டும் கஷ்டத்தைக் கொண்டும் நாம் அவர்களைச் சோதித்தோம்.
Esegesi in lingua araba:
فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ وَّرِثُوا الْكِتٰبَ یَاْخُذُوْنَ عَرَضَ هٰذَا الْاَدْنٰی وَیَقُوْلُوْنَ سَیُغْفَرُ لَنَا ۚ— وَاِنْ یَّاْتِهِمْ عَرَضٌ مِّثْلُهٗ یَاْخُذُوْهُ ؕ— اَلَمْ یُؤْخَذْ عَلَیْهِمْ مِّیْثَاقُ الْكِتٰبِ اَنْ لَّا یَقُوْلُوْا عَلَی اللّٰهِ اِلَّا الْحَقَّ وَدَرَسُوْا مَا فِیْهِ ؕ— وَالدَّارُ الْاٰخِرَةُ خَیْرٌ لِّلَّذِیْنَ یَتَّقُوْنَ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟
7.169. இவர்களுக்குப் பின்னர் தீயவர்கள் இவர்களின் வாரிசுகளானார்கள். அவர்கள் தங்கள் முன்னோர்களிடமிருந்து தவ்ராத்தைப் பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் அதனைப் படித்தார்கள். ஆனால் அதன்படி செயல்படவில்லை. அல்லாஹ்வின் வேதத்தை திரிப்பதற்காகவும் அல்லாஹ் இறக்காததன்படி தீர்ப்பளிக்கவும், அற்ப ஆதாயத்தை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டார்கள். இவ்வாறு செய்து விட்டு அல்லாஹ் தங்கள் பாவங்களை மன்னித்துவிடுவான் என்று ஆசைகொண்டார்கள். அவர்கள் உலகின் அற்ப ஆதாயம் கிடைக்கும் போது மீண்டும் மீண்டும் அதனைப் பெற்றுக் கொண்டார்கள். வேதத்தை திரிக்காமல், மாற்றாமல் அல்லாஹ்வின் மீது உண்மை கூற வேண்டும் என்று அல்லாஹ் இவர்களிடம் ஒப்பந்தங்களையும் வாக்குறுதிகளையும் பெறவில்லையா? அவர்கள் அறியாமையினால் வேத்ததின்படி செயல்படாமல் இருக்கவில்லை. மாறாக அறிந்துகொண்டே அவ்வாறு செய்தார்கள். வேதத்திலுள்ளதை அவர்கள் கற்றார்கள், அறிந்து கொண்டார்கள். எனவே அவர்களது பாவம் மிகக் கடுமையானது. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அழியக்கூடிய இவ்வுலக இன்பங்களைவிட நிலையான மறுமையும் அதன் நிரந்தர இன்பங்களுமே சிறந்தவையாகும். அற்ப ஆதாயத்தைப் பெற்றுக்கொள்ளும் இவர்கள், அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு மறுமையில் அல்லாஹ் தயார்படுத்தியுள்ளவை மிகச்சிறந்ததும் நிலையானதும் ஆகும் என்பதைச் சிந்திக்க மாட்டார்களா?
Esegesi in lingua araba:
وَالَّذِیْنَ یُمَسِّكُوْنَ بِالْكِتٰبِ وَاَقَامُوا الصَّلٰوةَ ؕ— اِنَّا لَا نُضِیْعُ اَجْرَ الْمُصْلِحِیْنَ ۟
7.170. வேதத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டு அதன்படி செயல்பட்டு தொழுகையை அதற்குரிய நேரங்கள், நிபந்தனைகள், வாஜிபுகள் மற்றும் சுன்னத்துகளுடன் முறையாக நிறைவேற்றுபவர்களுக்கு அல்லாஹ் அவர்களின் செயல்களுக்கான கூலியை வழங்கிடுவான். நற்செயல் புரிபவர்களின் கூலியை அவன் வீணாக்க மாட்டான்.
Esegesi in lingua araba:
Alcuni insegnamenti da trarre da questi versi sono:
• إذا نزل عذاب الله على قوم بسبب ذنوبهم ينجو منه من كانوا يأمرون بالمعروف وينهون عن المنكر فيهم.
1. ஒரு சமூகத்தினர் செய்த பாவங்களின் காரணமாக அல்லாஹ்வின் வேதனை அவர்கள் மீது இறங்கினால் அவர்களில் நன்மையை ஏவி தீமையைத் தடுத்தவர்கள் காப்பாற்றப்படுவார்கள்.

• يجب الحذر من عذاب الله؛ فإنه قد يكون رهيبًا في الدنيا، كما فعل سبحانه بطائفة من بني إسرائيل حين مَسَخَهم قردة بسبب تمردهم.
2. அல்லாஹ்வின் வேதனையை விட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இஸ்ராயீலின் மக்கள் பாவங்களில் நிலைத்திருந்ததனால் குரங்குகளாக உருமாற்றப்பட்டது போல இவ்வுலகிலேயே தண்டனை பயங்கரமாக அமையலாம்.

• نعيم الدنيا مهما بدا أنه عظيم فإنه قليل تافه بجانب نعيم الآخرة الدائم.
3. இஸ்ராயீலின் மக்களின் மீது அல்லாஹ் வறுமையையும் இழிவையும் விதித்துவிட்டான். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்களின் அநியாயம் மற்றும் வழிகேட்டின் காரணமாக அவர்களுக்கு வேதனையை சுவைக்கச் செய்யக்கூடியவர்களை அனுப்புவான் என்பதையும் தெரிவித்துவிட்டான்.

• أفضل أعمال العبد بعد الإيمان إقامة الصلاة؛ لأنها عمود الأمر.
3. உலக இன்பங்கள் எத்துணை பெரியதாக தோன்றினாலும் மறுமையின் இன்பங்களோடு ஒப்பிடும்போது அவை அற்ப சொற்ப இன்பங்கள்தாம்.

• كتب الله على بني إسرائيل الذلة والمسكنة، وتأذن بأن يبعث عليهم كل مدة من يذيقهم العذاب بسبب ظلمهم وانحرافهم.
4. ஒரு அடியான் ஈமான் கொண்ட பிறகு செய்யும் மிகச் சிறந்த செயல் தொழுகையை நிலைநாட்டுவதேயாகும். அதுதான் இஸ்லாத்தின் தூணாகும்.

 
Traduzione dei significati Sura: Al-A‘râf
Indice delle Sure Numero di pagina
 
Traduzione dei Significati del Sacro Corano - Traduzione tamil dell'Abbreviata Esegesi del Nobile Corano - Indice Traduzioni

Emesso dal Tafseer Center per gli Studi Coranici.

Chiudi