クルアーンの対訳 - クルアーン簡潔注釈(タミル語対訳)

ஆலஇம்ரான்

本章の趣旨:
إثبات أن دين الإسلام هو الحق ردًّا على شبهات أهل الكتاب، وتثبيتا للمؤمنين.
வேதக்காரர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்குமுகமாகவும், விசுவாசிகளை உறுதிப்படுத்தும் விதமாகவும் இஸ்லாம் மார்க்கமே சத்தியமானது என்பதை நிரூபித்தல் info

external-link copy
1 : 3

الٓمَّٓ ۟ۙۚ

3.1. الم இவை தனித்தனியான எழுத்துகளாகும். அல்பகரா அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் இதேபோன்று வந்துள்ளது. இந்த அத்தியாயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது போன்ற எழுத்துக்களைக் கொண்டே அல்குர்ஆன் உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்ற எழுத்துக்களைக் கொண்டுதான் அரபிகளும் தமக்கு மத்தியில் உரையாடுகின்றனர். அப்படியிருந்தும் இந்த குர்ஆனைப் போன்றதைக் கொண்டு வரமுடியாத அரபிகளின் இயலாமையைச் சுட்டிக்காட்டுவதே இதன் நோக்கமாகும். info
التفاسير:
本諸節の功徳:
• أقام الله الحجة وقطع العذر عن الخلق بإرسال الرسل وإنزال الكتب التي تهدي للحق وتحذر من الباطل.
1. மக்களுக்கு நேர்வழிகாட்டி அசத்தியத்தை விட்டும் அவர்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் தூதர்களை அனுப்பி, வேதங்களையும் இறக்கி ஆதாரத்தை நிலைநாட்டிவிட்டான். எனவே படைப்புகளில் யாரும் சாக்குப்போக்குக் கூற முடியாது. info

• كمال علم الله تعالى وإحاطته بخلقه، فلا يغيب عنه شيء في الأرض ولا في السماء، سواء كان ظاهرًا أو خفيًّا.
உ2. அல்லாஹ்வின் அறிவு பரிபூரணமானது, அவன் தன் படைப்புகளைக் குறித்து முழுமையாக அறிந்தவன். வானத்திலும் பூமியிலும் வெளிரங்கமான மறைவான எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. info

• من أصول أهل الإيمان الراسخين في العلم أن يفسروا ما تشابه من الآيات بما أُحْكِم منها.
3. ஆழ்ந்த அறிவுள்ள விசுவாசிகள் தெளிவான வசனங்களைக் கொண்டு கருத்து மயக்கமுள்ள வசனங்களுக்கு விளக்கமளிப்பார்கள். info

• مشروعية دعاء الله تعالى وسؤاله الثبات على الحق، والرشد في الأمر، ولا سيما عند الفتن والأهواء.
4. நேர்வழியில் நிலைத்திருப்பதையும், காரியத்தில் தெளிவையும் அல்லாஹ்விடம் கேட்கவேண்டும், குறிப்பாக குழப்பங்களும் மனோ இச்சைகளும் மேலோங்கும் காலகட்டத்தில். info