ការបកប្រែអត្ថន័យគួរអាន - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - សន្ទស្សន៍នៃការបកប្រែ


ការបកប្រែអត្ថន័យ អាយ៉ាត់: (112) ជំពូក​: សូរ៉ោះអាល់ហ្ពាក៏រ៉ោះ
بَلٰی ۗ— مَنْ اَسْلَمَ وَجْهَهٗ لِلّٰهِ وَهُوَ مُحْسِنٌ فَلَهٗۤ اَجْرُهٗ عِنْدَ رَبِّهٖ ۪— وَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟۠
2.112. அல்லாஹ்வுக்காக வேண்டி என்ற உளத்தூய்மையுடன் அவனுடைய தூதர் கொண்டு வந்துள்ளதைப் பின்பற்றி தனது வணக்கத்தை சீரான முறையில் செய்பவர்கள்தாம் சொர்க்கம் செல்வார்கள். இத்தகைய மக்கள் எந்த கூட்டத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரியே. அவர்களின் இறைவன் அவர்களுக்கான கூலியை வழங்கிடுவான். மறுமையில் அவர்கள் அச்சம்கொள்ள மாட்டார்கள்; உலகில் இழந்தவற்றிற்காகவும் கவலைகொள்ள மாட்டார்கள். இத்தகைய பண்புகள் முஹம்மது நபியின் வருகைக்குப்பின் முஸ்லிம்களிடம் மாத்திரமே காணப்படும்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
ក្នុង​ចំណោម​អត្ថប្រយោជន៍​នៃអាយ៉ាត់ទាំងនេះក្នុងទំព័រនេះ:
• أن الأمر كله لله، فيبدل ما يشاء من أحكامه وشرائعه، ويبقي ما يشاء منها، وكل ذلك بعلمه وحكمته.
1. அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வின் வசமே உள்ளது. அவன் தன்னுடைய மார்க்கத்தில் தான் விரும்பியவற்றை மாற்றுகிறான், தான் விரும்பியவற்றை நிலைத்திருக்கச் செய்கிறான். அனைத்தும் அவனுடைய அறிவு மற்றும் ஞானத்தின் பிரகாரமே நடக்கின்றன.

• حَسَدُ كثيرٍ من أهل الكتاب هذه الأمة، لما خصَّها الله من الإيمان واتباع الرسول، حتى تمنوا رجوعها إلى الكفر كما كانت.
2. ஈமானைக் கொண்டும் தூதரைப் பின்பற்றுவதைக் கொண்டும் அல்லாஹ் இந்த சமூகத்தை சிறப்பித்த காரணத்தால், வேதக்காரர்களில் பெரும்பாலோர் இந்த சமூகத்தின் மீது பொறாமை கொண்டுள்ளனர். அதனால் இந்த முஸ்லிம் சமூகம் தங்களின் முந்தைய நிலையான நிராகரிப்புக்கே திரும்பிவிட வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தார்கள்.

 
ការបកប្រែអត្ថន័យ អាយ៉ាត់: (112) ជំពូក​: សូរ៉ោះអាល់ហ្ពាក៏រ៉ោះ
សន្ទស្សន៍នៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យគួរអាន - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - សន្ទស្សន៍នៃការបកប្រែ

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

បិទ