Check out the new design

ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន * - សន្ទស្សន៍នៃការបកប្រែ


ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់អាំងកាពូត   អាយ៉ាត់:
وَیَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِ ؕ— وَلَوْلَاۤ اَجَلٌ مُّسَمًّی لَّجَآءَهُمُ الْعَذَابُ ؕ— وَلَیَاْتِیَنَّهُمْ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
29.53. -தூதரே!- இணைவைப்பாளர்கள் நீர் எச்சரிக்கும் வேதனையை விரைவாக வேண்டுகிறார்கள். அவர்களைத் தண்டிப்பதற்கு முந்தாத, பிந்தாத ஒரு நேரத்தை அல்லாஹ் நிர்ணயித்திருக்காவிட்டால் அவர்கள் வேண்டும் வேதனை வந்திருக்கும். அது அவர்கள் எதிர்பார்க்காதபோது திடீரென அவர்களிடம் வந்தே தீரும்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
یَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِ ؕ— وَاِنَّ جَهَنَّمَ لَمُحِیْطَةٌ بِالْكٰفِرِیْنَ ۟ۙ
29.54. நீர் எச்சரித்த அந்த வேதனைக்கு அவர்கள் அவசரப்படுகிறார்கள். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கு வாக்களித்த நரகமானது அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். அவர்கள் அதன் வேதனையிலிருந்து தப்பியோட முடியாது.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
یَوْمَ یَغْشٰىهُمُ الْعَذَابُ مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ اَرْجُلِهِمْ وَیَقُوْلُ ذُوْقُوْا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
29.55. அவர்களுக்கு மேலிருந்தும் அவர்களின் கால்களுக்குக் கீழிருந்தும் வேதனை அவர்களைச் விரிப்பாக சூழ்ந்துகொள்ளும் நாளில் அவர்களைக் கண்டிக்கும் விதமாக அல்லாஹ் அவர்களிடம் கூறுவான்: “நீங்கள் செய்து கொண்டிருந்த இணைவைப்பான, பாவமான காரியங்களுக்குக் கூலியாக இவ்வேதனையை அனுபவியுங்கள்.”
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
یٰعِبَادِیَ الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنَّ اَرْضِیْ وَاسِعَةٌ فَاِیَّایَ فَاعْبُدُوْنِ ۟
29.56. என்னை நம்பிய அடியார்களே! என்னை வணங்கி நிலைபெற்று இருக்க முடியாத இடங்களிலிருந்து புலம்பெயர்ந்து செல்லுங்கள். நிச்சயமாக என்னுடைய பூமி விசாலமானது. எனவே என்னை மட்டுமே வணங்குங்கள். எனக்கு இணையாக யாரையும் ஆக்கிவிடாதீர்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
كُلُّ نَفْسٍ ذَآىِٕقَةُ الْمَوْتِ ۫— ثُمَّ اِلَیْنَا تُرْجَعُوْنَ ۟
29.57. மரண பயம் உங்களை புலம்பெயர்வதை விட்டும் தடுத்துவிட வேண்டாம். ஒவ்வொரு உயிரும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். பின்னர் விசாரணைக்காகவும் கூலிபெறுவதற்காகவும் மறுமை நாளில் நம்மிடம் மட்டுமே நீங்கள் திரும்பிவர வேண்டும்
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُبَوِّئَنَّهُمْ مِّنَ الْجَنَّةِ غُرَفًا تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ— نِعْمَ اَجْرُ الْعٰمِلِیْنَ ۟ۗۖ
29.58. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவன் பக்கம் நெருக்கி வைக்கும் நற்செயல்களில் ஈடுபட்டவர்களை நாம் சுவனத்தில் உயர்வான இல்லங்களில் குடியமர்த்துவோம். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அங்கு அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்களுக்கு அழிவு ஏற்படாது. அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு செயல்படக்கூடியவர்களுக்கு வழங்கப்படும் இந்தக் கூலி சிறப்பானதாகும்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
الَّذِیْنَ صَبَرُوْا وَعَلٰی رَبِّهِمْ یَتَوَكَّلُوْنَ ۟
29.59. அவர்கள் வழிப்படுவதிலும் பாவத்தை விட்டும் விலகியிருப்பதிலும் பொறுமையைக் கடைப்பிடித்தார்கள். அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு செயல்படக்கூடியவர்களுக்கு வழங்கப்படும் கூலி சிறப்பானதாகும். தங்கள் இறைவனை மட்டுமே தங்களின் எல்லா விவகாரங்களிலும் சார்ந்திருப்பார்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَكَاَیِّنْ مِّنْ دَآبَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا ۖۗؗ— اَللّٰهُ یَرْزُقُهَا وَاِیَّاكُمْ ۖؗ— وَهُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
29.60. தமது உணவை சேமித்து வைக்கவோ, சுமந்து செல்லவோ சக்தியற்ற உயிரினங்கள் அனைத்திற்கும் -அவை அதிகமானவை- உங்களுக்கும் அல்லாஹ்வே உணவளிக்கிறான். எனவே பசிக்குப் பயந்து புலம் பெயராமல் இருக்க உங்களுக்கு அனுமதியில்லை. அவன் உங்களின் பேச்சுகளை செவியேற்கக்கூடியவன்; உங்களின் எண்ணங்களையும் செயல்களையும் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَیَقُوْلُنَّ اللّٰهُ ۚ— فَاَنّٰی یُؤْفَكُوْنَ ۟
29.61. -தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம், “வானங்களைப் படைத்தது யார்? பூமியைப் படைத்தது யார்? மாறி மாறி வரும் சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தித் தந்தவன் யார்?” என்று நீர் கேட்டால், “அல்லாஹ்தான் அவற்றைப் படைத்தான்” என்று கூறுவார்கள். பின்னர் எவ்வாறு அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளாமல் அவனை விடுத்து பலனளிக்கவோ, தீங்களிக்கவோ சக்தியற்ற சிலைகளை வணங்குகிறார்கள்?
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
اَللّٰهُ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَیَقْدِرُ لَهٗ ؕ— اِنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟
29.62. அல்லாஹ் தான் அறிந்த ஒரு நோக்கத்தின்படி தன் அடியார்களில் தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை அதிகமாகவும், தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகின்றான். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனுக்கு மறைவானதல்ல. தனது அடியார்களுக்குப் பொருத்தமான ஏற்பாடுகளும் அவனை விட்டு மறையாது.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ نَّزَّلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَحْیَا بِهِ الْاَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَیَقُوْلُنَّ اللّٰهُ ؕ— قُلِ الْحَمْدُ لِلّٰهِ ؕ— بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْقِلُوْنَ ۟۠
29.63. -தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம், “வானத்திலிருந்து மழையை இறக்கி அதன் மூலம் வறண்ட பூமியை செழிப்பாக்கியவன் யார்?” என்று நீர் கேட்டால், “வானத்திலிருந்து மழையை இறக்கி பூமியை செழிப்பாக்கியவன் அல்லாஹ்தான்” என்று நிச்சயம் கூறுவார்கள். -தூதரே!- நீர் கூறுவீராக: “உங்களுக்கு எதிராக ஆதாரத்தை வெளிப்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.” அவர்களில் பெரும்பாலானோர் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்பதே நிதர்சனம். அவர்கள் விளங்கியிருந்தால் பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற சிலைகளை அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கியிருக்க மாட்டார்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
ក្នុង​ចំណោម​អត្ថប្រយោជន៍​នៃអាយ៉ាត់ទាំងនេះក្នុងទំព័រនេះ:
• استعجال الكافر بالعذاب دليل على حمقه.
1. நிராகரிப்பாளன் வேதனையை விரைவாக வேண்டுவது அவனது முட்டாள்தனத்தின் அடையாளமாகும்.

• باب الهجرة من أجل سلامة الدين مفتوح.
2. மார்க்கத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்காக புலம்பெயர்வதன் வாயில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

• فضل الصبر والتوكل على الله.
3. பொறுமை மற்றும் அல்லாஹ்வையே சார்ந்திருப்பதன் சிறப்பு.

• الإقرار بالربوبية دون الإقرار بالألوهية لا يحقق لصاحبه النجاة والإيمان.
4. வணக்கத்தில் ஒருமைப்படுத்துவதை ஏற்காது இறைவல்லமையில் ஒருமைப்படுத்துவதை ஏற்றுக்கொள்பவருக்கு பாதுகாப்பும் ஈமானும் சாத்தியமில்லை.

 
ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាល់អាំងកាពូត
សន្ទស្សន៍នៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន - សន្ទស្សន៍នៃការបកប្រែ

ត្រូវបានចេញដោយមជ្ឈមណ្ឌល តាហ្វសៀរនៃការសិក្សាគម្ពីគួរអាន

បិទ