Check out the new design

ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន * - សន្ទស្សន៍នៃការបកប្រែ


ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាលីអុិមរ៉ន   អាយ៉ាត់:
رَبَّنَاۤ اٰمَنَّا بِمَاۤ اَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِیْنَ ۟
3.53. அதேபோன்று அந்த ஹவாரியீன்கள், “எங்கள் இறைவா! நீ இறக்கிய இன்ஜீலின்மீது நாங்கள் நம்பிக்கைகொண்டு ஈசாவைப் பின்பற்றினோம். உன்மீதும் உன் தூதர்கள்மீதும் நம்பிக்கைகொண்டு சத்தியத்திற்கு சாட்சி கூறுவோருடன் எங்களையும் ஆக்குவாயாக.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَمَكَرُوْا وَمَكَرَ اللّٰهُ ؕ— وَاللّٰهُ خَیْرُ الْمٰكِرِیْنَ ۟۠
3.54. இஸ்ராயீலின் மக்களில் நிராகரித்தவர்கள் ஈசாவைக் கொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்தார்கள். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து அவர்களைத் தம் வழிகேட்டிலேயே விட்டுவிட்டான். அவன் வேறு ஒரு மனிதனை தோற்றத்தில் ஈசாவைப்போல் ஆக்கினான். அல்லாஹ் மிகச் சிறந்த சூழ்ச்சியாளன். எதிரிகளுக்கு சூழ்ச்சி செய்வதில் அவனை மிகைத்த யாரும் கிடையாது.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
اِذْ قَالَ اللّٰهُ یٰعِیْسٰۤی اِنِّیْ مُتَوَفِّیْكَ وَرَافِعُكَ اِلَیَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِیْنَ كَفَرُوْا وَجَاعِلُ الَّذِیْنَ اتَّبَعُوْكَ فَوْقَ الَّذِیْنَ كَفَرُوْۤا اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ ۚ— ثُمَّ اِلَیَّ مَرْجِعُكُمْ فَاَحْكُمُ بَیْنَكُمْ فِیْمَا كُنْتُمْ فِیْهِ تَخْتَلِفُوْنَ ۟
3.55. அல்லாஹ் அவர்களின் விஷயத்தில் சூழ்ச்சி செய்தான். அவன் ஈசாவிடம் கூறினான்: “ஈசாவே! மரணிக்கச் செய்யாமல் உம்மை நான் கைப்பற்றுவேன். உம் உடலையும் ஆன்மாவையும் என் பக்கம் உயர்த்துவேன். உம்மை நிராகரித்தவர்களின் அழுக்குகளிலிருந்து உம்மைத் தூய்மைப்படுத்துவேன். அவர்களை விட்டும் உம்மை தூரமாக்குவேன். முஹம்மதின்மீது நம்பிக்கை கொள்வது உட்பட சத்திய மார்க்கத்தில் உம்மைப் பின்பற்றியவர்களை உம்மை நிராகரித்தவர்களைவிட ஆதாரத்தைக் கொண்டும் கண்ணியத்தைக் கொண்டும் மறுமை நாள்வரை மேலோங்கச் செய்வேன். பின்பு மறுமையில் நீங்கள் என்னிடத்தில்தான் வரவேண்டும். அப்போது நீங்கள் கருத்துவேறுபாடுகொண்ட விஷயங்களில் உங்களிடையே சத்தியத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
فَاَمَّا الَّذِیْنَ كَفَرُوْا فَاُعَذِّبُهُمْ عَذَابًا شَدِیْدًا فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؗ— وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟
3.56. உம்மையும் நீர் கொண்டுவந்த சத்தியத்தையும் நிராகரித்தவர்களை இவ்வுலகில் கொலை செய்யப்படுதல், கைதிகளாகப் பிடிக்கப்படுதல், இழிவுபடுத்தப்படுதல் போன்ற வேதனைகளைக் கொண்டும் மறுவுலகில் நரக வேதனையைக் கொண்டும் வேதனை செய்வேன். வேதனையிருந்து அவர்களைப் பாதுகாக்கக்கூடிய உதவியாளர்கள் யாரும் அவர்களுக்கு இருக்க மாட்டார்கள்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
وَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَیُوَفِّیْهِمْ اُجُوْرَهُمْ ؕ— وَاللّٰهُ لَا یُحِبُّ الظّٰلِمِیْنَ ۟
3.57. உம்மீதும் நீர் கொண்டுவந்த சத்தியத்தின்மீதும் நம்பிக்கைகொண்டு, தொழுகை, ஸகாத், நோன்பு போன்ற நற்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அல்லாஹ் அவர்கள் சம்பாதித்தவற்றுக்கான முழுமையான கூலியை குறைவின்றி வழங்கிடுவான். (இது முஹம்மது நபியின் தூதுத்துவத்திற்கு முன்னால் ஈசாவைப் பின்பற்றியவர்கள் தொடர்பான செய்தியாகும். அந்த ஈசாதான் முஹம்மது நபியைக் குறித்து நற்செய்தி கூறினார்) அல்லாஹ் அநியாயக்காரர்களை விரும்ப மாட்டான். மிகப் பெரிய அநியாயம், அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்குவது மற்றும் அவனுடைய தூதர்களை நிராகரிப்பதாகும்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
ذٰلِكَ نَتْلُوْهُ عَلَیْكَ مِنَ الْاٰیٰتِ وَالذِّكْرِ الْحَكِیْمِ ۟
3.58. நாம் உமக்கு எடுத்துரைக்கும் ஈசாவைக் குறித்த செய்திகள் உம்மீது இறக்கப்பட்ட வேதம் உண்மையென நிரூபிக்கும் தெளிவான சான்றுகளாகும். அது இறையச்சமுடையோருக்கு நினைவூட்டலாகும்; அசத்தியம் அண்டமுடியாத அளவு உறுதியானதாகும்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
اِنَّ مَثَلَ عِیْسٰی عِنْدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَ ؕ— خَلَقَهٗ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟
3.59. தாய்தந்தையின்றி மண்ணிலிருந்து அல்லாஹ் ஆதமைப் படைத்ததுபோன்றே ஈசாவையும் படைத்துள்ளான். அவன் அவரிடம், ‘நீ மனிதனாக ஆகிவிடு’ என்று கூறினான். அவன் நாடியது போல் ஆகிவிட்டார். ஆதம் தாயும் தந்தையுமின்றி படைக்கப்பட்டுள்ள ஆதம் மனிதரே என ஏற்றுக்கொண்டோர், தந்தையின்றி மாத்திரம் படைக்கப்பட்டதை வைத்து ‘ஈசா இறைவன்’ என்பதை எவ்வாறு வாதிட முடியும்?
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
اَلْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُنْ مِّنَ الْمُمْتَرِیْنَ ۟
3.60. ஈசாவைக்குறித்து உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதே சந்தேகமற்ற உண்மையாகும். எனவே நீர் சந்தேகம் கொள்வோரில் ஒருவராகி விடாதீர். நீர் கூறுகின்ற சத்தியத்தில் உறுதியாக நிலைத்திருப்பீராக.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
فَمَنْ حَآجَّكَ فِیْهِ مِنْ بَعْدِ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ اَبْنَآءَنَا وَاَبْنَآءَكُمْ وَنِسَآءَنَا وَنِسَآءَكُمْ وَاَنْفُسَنَا وَاَنْفُسَكُمْ ۫— ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَلْ لَّعْنَتَ اللّٰهِ عَلَی الْكٰذِبِیْنَ ۟
3.61. தூதரே! உம்மிடம் ஈசாவைக்குறித்து சரியான அறிவு வந்தபின்னரும் அவர் அல்லாஹ்வின் அடியார் இல்லை என்று உம்மிடம் வாதம் செய்யும் நஜ்ரான் பிரதேசத்தைச் சேர்ந்த கிறித்தவர்களிடம் நீர் கூறும்: “வாருங்கள், எங்களின் பிள்ளைகளையும் உங்களின் பிள்ளைகளையும், எங்களின் பெண்களையும் உங்களின் பெண்களையும், எங்களின் உயிர்களையும் உங்களின் உயிர்களையும் அழைத்து, நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து எங்களிலும் உங்களிலுமுள்ள பொய்யர்கள்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று அவனிடம் மன்றாடி பிரார்த்தனை செய்வோம்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
ក្នុង​ចំណោម​អត្ថប្រយោជន៍​នៃអាយ៉ាត់ទាំងនេះក្នុងទំព័រនេះ:
• من كمال قدرته تعالى أنه يعاقب من يمكر بدينه وبأوليائه، فيمكر بهم كما يمكرون.
1. அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு எதிராக, அவனுடைய நேசர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்பவர்களை அல்லாஹ் தண்டிப்பது அவனின் பரிபூரண சக்தியில் உள்ளதாகும் அவர்கள் சூழ்ச்சி செய்வது போன்று அல்லாஹ்வும் அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறான்.

• بيان المعتقد الصحيح الواجب في شأن عيسى عليه السلام، وبيان موافقته للعقل فهو ليس بدعًا في الخلقة، فآدم المخلوق من غير أب ولا أم أشد غرابة والجميع يؤمن ببشريته.
2. ஈசா (அலை) அவர்களின் விடயத்தில் வைக்க வேண்டிய சரியான நம்பிக்கையும் அது பகுத்தறிவுக்கு ஒத்துவரக்கூடியது என்பதையும் தெளிவுபடுத்தல். அவர்கள் மாத்திரமே வினோதமான படைப்பல்ல. மாறாக தாய் தந்தையின்றி படைக்கப்பட்ட ஆதம் அலை அவர்கள் தான் மிகவும் ஆச்சரியமிக்க படைப்பாகும். அப்படியிருந்தும் அவரை யாரும் இறைவனாகக் கருதாமல் மனிதராகவே பார்க்கின்றனர்.

• مشروعية المُباهلة بين المتنازعين على الصفة التي وردت بها الآية الكريمة.
3. முரண்பட்டுக் கொள்வோருக்கிடையில் மேற்கூறிய வசனத்தில் குறிப்பிட்ட விதத்தில் அழிவுச்சத்தியம் செய்வது அனுமதிக்கப்பட்டதாகும்.

 
ការបកប្រែអត្ថន័យ ជំពូក​: អាលីអុិមរ៉ន
សន្ទស្សន៍នៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិលលើការអធិប្បាយសង្ខេបអំពីគម្ពីគួរអាន - សន្ទស្សន៍នៃការបកប្រែ

ត្រូវបានចេញដោយមជ្ឈមណ្ឌល តាហ្វសៀរនៃការសិក្សាគម្ពីគួរអាន

បិទ