ការបកប្រែអត្ថន័យគួរអាន - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - សន្ទស្សន៍នៃការបកប្រែ


ការបកប្រែអត្ថន័យ អាយ៉ាត់: (11) ជំពូក​: សូរ៉ោះអាន់នីសាក
یُوْصِیْكُمُ اللّٰهُ فِیْۤ اَوْلَادِكُمْ ۗ— لِلذَّكَرِ مِثْلُ حَظِّ الْاُنْثَیَیْنِ ۚ— فَاِنْ كُنَّ نِسَآءً فَوْقَ اثْنَتَیْنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَ ۚ— وَاِنْ كَانَتْ وَاحِدَةً فَلَهَا النِّصْفُ ؕ— وَلِاَبَوَیْهِ لِكُلِّ وَاحِدٍ مِّنْهُمَا السُّدُسُ مِمَّا تَرَكَ اِنْ كَانَ لَهٗ وَلَدٌ ۚ— فَاِنْ لَّمْ یَكُنْ لَّهٗ وَلَدٌ وَّوَرِثَهٗۤ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ ۚ— فَاِنْ كَانَ لَهٗۤ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنْ بَعْدِ وَصِیَّةٍ یُّوْصِیْ بِهَاۤ اَوْ دَیْنٍ ؕ— اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ لَا تَدْرُوْنَ اَیُّهُمْ اَقْرَبُ لَكُمْ نَفْعًا ؕ— فَرِیْضَةً مِّنَ اللّٰهِ ؕ— اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا حَكِیْمًا ۟
4.11. உங்கள் பிள்ளைகளின் அநந்தர விஷயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்: அவர்களிடையே சொத்து பங்கிடப்படும்போது மகனுக்கு இரண்டு மகள்களின் பங்குகள் தரப்பட வேண்டும். இறந்தவருக்கு ஆண்பிள்ளைகள் அல்லாமல் இரண்டிற்கு மேற்பட்ட பெண் பிள்ளைகள் மட்டும் இருந்தால் அவர் விட்டுச்சென்ற சொத்தில் மூன்றில் இரண்டுபங்கு அவர்களுக்குத் தரப்பட வேண்டும். அவருக்கு ஒரு பெண்பிள்ளை மட்டும் இருந்தால் அவர் விட்டுச்சென்றவற்றில் பாதி அவளுக்குத் தரப்பட வேண்டும். இறந்தவருக்கு ஆண்பிள்ளையோ பெண்பிள்ளையோ இருந்தால் தாய், தந்தையர் இருவருக்கும் தனித்தனியாக ஆறில் ஒருபங்கு தரப்பட வேண்டும். இறந்தவருக்குக் குழந்தைகள் இல்லாமல் தாய், தந்தையர் மட்டுமே வாரிசுகளாக இருந்தால் அவரது தாய்க்கு மூன்றில் ஒருபங்கும் மீதமுள்ளதை தந்தைக்கும் அளித்துவிட வேண்டும். இறந்தவருக்கு இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சகோதரர்களோ சகோதரிகளோ இருந்தால் தாய்க்கு ஆறில் ஒருபங்கை அளித்துவிட்டு மீதமுள்ளதை தந்தைக்கு அளித்துவிட வேண்டும். சகோதரர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. இந்தப் பங்கீடு இறந்தவர் செய்த மரண சாசனத்தையும் அவரது கடனையும் நிறைவேற்றிய பிறகுதான் இருக்க வேண்டும். அவர் செய்த மரண சாசனம் அவர் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் ஒரு பங்கைத் தாண்டிவிடக்கூடாது. அல்லாஹ் உங்களுக்குப் பங்கீட்டை இவ்வாறு அமைத்துள்ளான். உங்களின் பிள்ளைகள், தந்தையர் ஆகியோரில் யார் இவ்வுலகிலும் மறுவுலகிலும் அதிகப் பயன்களை அளிக்கக்கூடியவர்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். நீங்கள் உங்கள் வாரிசுகளில் சிலரின்மீது நல்லெண்ணம் வைத்து சொத்துகள் அனைத்தையும் அவருக்கு எழுதிவிடலாம். சிலர்மீது தவறான எண்ணத்தால் அவர்களுக்கு எதுவும் தராமல் போகலாம். ஆனால் நிலமை தலைகீழாக இருக்கலாம். இவை அனைத்தையும் சரியாக அறிந்தவன் அல்லாஹ்வே. எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. எனவே தான் மேற்சொன்னவாறு அநந்தரத்தைப் பங்குவைத்துள்ளான். இவ்வாறு செய்வதை அவன் தன் அடியார்கள்மீது கடமையாக்கியுள்ளான். அவன் அனைத்தையும் அறிந்தவன். அடியார்களுக்கு நன்மைதரக்கூடிய எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. தான் வழங்கும் சட்டங்களில், நிர்வகிப்பதில் அவன் ஞானம்மிக்கவன்.
តាហ្វសៀរជាភាសា​អារ៉ាប់ជាច្រេីន:
ក្នុង​ចំណោម​អត្ថប្រយោជន៍​នៃអាយ៉ាត់ទាំងនេះក្នុងទំព័រនេះ:
• دلت أحكام المواريث على أن الشريعة أعطت الرجال والنساء حقوقهم مراعية العدل بينهم وتحقيق المصلحة بينهم.
1. மார்க்கம் நீதியாகவும் நலவுகளை ஏற்படுத்தும் விதத்திலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமைகளை வழங்கியுள்ளது என்பதைப் பாகப்பிரிவினை சட்டதிட்டங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

• التغليظ الشديد في حرمة أموال اليتامى، والنهي عن التعدي عليها، وعن تضييعها على أي وجه كان.
2. அநாதைகளுடைய செல்வங்களை அனுபவிப்பது கடுமையாகத் தடைசெய்யப்பட்டதாகும். அவற்றை வரம்புமீறி உண்ணுதல், எவ்விதத்திலும் அதனை வீணாக்கிவிடுவது ஆகியவையும் தடைசெய்யப்பட்டவையாகும்.

• لما كان المال من أكثر أسباب النزاع بين الناس تولى الله تعالى قسمته في أحكام المواريث.
3. பணத்தின் மூலமே மக்களுக்கு மத்தியில் அதிக பிரச்சினையை ஏற்படுத்துவதன் காரணமாகத்தான் வாரிசுரிமைச் சட்டத்தில் அல்லாஹ் அதனைப் பங்கிடுவதை தானே பொறுப்பேற்றுள்ளான்.

 
ការបកប្រែអត្ថន័យ អាយ៉ាត់: (11) ជំពូក​: សូរ៉ោះអាន់នីសាក
សន្ទស្សន៍នៃជំពូក លេខ​ទំព័រ
 
ការបកប្រែអត្ថន័យគួរអាន - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - សន្ទស្សន៍នៃការបកប្រែ

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

បិទ