external-link copy
37 : 33

وَاِذْ تَقُوْلُ لِلَّذِیْۤ اَنْعَمَ اللّٰهُ عَلَیْهِ وَاَنْعَمْتَ عَلَیْهِ اَمْسِكْ عَلَیْكَ زَوْجَكَ وَاتَّقِ اللّٰهَ وَتُخْفِیْ فِیْ نَفْسِكَ مَا اللّٰهُ مُبْدِیْهِ وَتَخْشَی النَّاسَ ۚ— وَاللّٰهُ اَحَقُّ اَنْ تَخْشٰىهُ ؕ— فَلَمَّا قَضٰی زَیْدٌ مِّنْهَا وَطَرًا زَوَّجْنٰكَهَا لِكَیْ لَا یَكُوْنَ عَلَی الْمُؤْمِنِیْنَ حَرَجٌ فِیْۤ اَزْوَاجِ اَدْعِیَآىِٕهِمْ اِذَا قَضَوْا مِنْهُنَّ وَطَرًا ؕ— وَكَانَ اَمْرُ اللّٰهِ مَفْعُوْلًا ۟

எவர் மீது அல்லாஹ் அருள் புரிந்தானோ இன்னும் நீர் அருள் புரிந்தீரோ அவருக்கு, “உன் மனைவியை உன்னுடன் வைத்துக்கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!” என்று நீர் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! அல்லாஹ் வெளிப்படுத்தக்கூடியவனாக உள்ள ஒன்றை உமது உள்ளத்தில் நீர் மறைக்கிறீர். மக்களை பயப்படுகின்றீர். அல்லாஹ்தான், அவனை நீர் பயப்படுவதற்கு மிகத் தகுதியானவன். சைது அவளிடம் தேவையை முடித்துவிட்டபோது, -நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது வளர்ப்புப் பிள்ளைகளின் மனைவிகள் விஷயத்தில், அவர்களிடம் (-அந்த மனைவிகளிடம்) அவர்கள் (-அந்த வளர்ப்புப் பிள்ளைகள்) தேவையை முடித்துவிட்டபோது (அப்பெண்களை வளர்ப்புப் பிள்ளைகளின் தந்தைகள் திருமணம் முடித்துக் கொள்வதில்) சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காக- அவளை உமக்கு நாம் மணமுடித்து வைத்தோம். அல்லாஹ்வின் காரியம் (கண்டிப்பாக) நடக்கக்கூடியதாக இருக்கின்றது. info
التفاسير: |

அல்அஹ்ஸாப்