លេខ​ទំព័រ:close

external-link copy
71 : 36

اَوَلَمْ یَرَوْا اَنَّا خَلَقْنَا لَهُمْ مِّمَّا عَمِلَتْ اَیْدِیْنَاۤ اَنْعَامًا فَهُمْ لَهَا مٰلِكُوْنَ ۟

நிச்சயமாக நாம் அவர்களுக்கு நமது கரங்கள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்ததை அவர்கள் (சிந்தித்து) பார்க்கவில்லையா? அவர்கள் அவற்றுக்கு உரிமையாளர்களாக இருக்கின்றார்கள். info
التفاسير: |

external-link copy
72 : 36

وَذَلَّلْنٰهَا لَهُمْ فَمِنْهَا رَكُوْبُهُمْ وَمِنْهَا یَاْكُلُوْنَ ۟

நாம் அவற்றை அவர்களுக்கு பணியவைத்தோம். அவற்றில் அவர்களின் வாகனங்களும் உண்டு. அவற்றில் இருந்து அவர்கள் புசிக்கவும் செய்கின்றார்கள். info
التفاسير: |

external-link copy
73 : 36

وَلَهُمْ فِیْهَا مَنَافِعُ وَمَشَارِبُ ؕ— اَفَلَا یَشْكُرُوْنَ ۟

இன்னும் அவர்களுக்கு இவற்றில் (-கால்நடைகளில் அதிகமான) பலன்களும் குடிபானங்களும் உள்ளன. (இவற்றை வழங்கிய அல்லாஹ்விற்கு) அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா? info
التفاسير: |

external-link copy
74 : 36

وَاتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اٰلِهَةً لَّعَلَّهُمْ یُنْصَرُوْنَ ۟ؕ

அல்லாஹ்வை அன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர் தாங்கள் உதவி செய்யப்படுவதற்காக. info
التفاسير: |

external-link copy
75 : 36

لَا یَسْتَطِیْعُوْنَ نَصْرَهُمْ وَهُمْ لَهُمْ جُنْدٌ مُّحْضَرُوْنَ ۟

அவர்கள் (-அந்த சிலைகள்) அவர்களுக்கு (-அவற்றை வணங்குகின்றவர்களுக்கு) உதவுவதற்கு சக்தி பெறமாட்டார்கள். அவர்கள் (சிலை வணங்கிகள்) அவர்கள் முன் (-சிலைகளுக்கு முன்) தயாராக இருக்கின்ற ராணுவமாக இருக்கின்றார்கள். (அந்த சிலைகளை பாதுகாக்கின்றனர்; அதற்கு யாரும் கெடுதி செய்தால் அதற்காக கொதித்து எழுகின்றனர்.) info
التفاسير: |

external-link copy
76 : 36

فَلَا یَحْزُنْكَ قَوْلُهُمْ ۘ— اِنَّا نَعْلَمُ مَا یُسِرُّوْنَ وَمَا یُعْلِنُوْنَ ۟

ஆகவே, அவர்களின் பேச்சு உம்மை கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக நாம் அவர்கள் மறைத்து பேசுவதையும் அவர்கள் வெளிப்படுத்தி பேசுவதையும் நன்கறிவோம். info
التفاسير: |

external-link copy
77 : 36

اَوَلَمْ یَرَ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ نُّطْفَةٍ فَاِذَا هُوَ خَصِیْمٌ مُّبِیْنٌ ۟

நிச்சயமாக நாம் அவனை (-மனிதனை) ஓர் இந்திரியத் துளியில் இருந்து படைத்துள்ளோம் என்பதை மனிதன் (சிந்தித்து) பார்க்கவில்லையா? ஆனால், அவனோ தெளிவாக தர்க்கம் செய்பவனாக இருக்கின்றான். info
التفاسير: |

external-link copy
78 : 36

وَضَرَبَ لَنَا مَثَلًا وَّنَسِیَ خَلْقَهٗ ؕ— قَالَ مَنْ یُّحْیِ الْعِظَامَ وَهِیَ رَمِیْمٌ ۟

அவன் நமக்கு ஓர் உதாரணத்தை விவரிக்கின்றான். தான் படைக்கப்பட்டதை அவன் மறந்துவிட்டான். அவன் கூறுகின்றான்: எலும்புகளை அவை மக்கிப்போன நிலையில் இருக்கின்ற போது யார் உயிர்ப்பிப்பான்? info
التفاسير: |

external-link copy
79 : 36

قُلْ یُحْیِیْهَا الَّذِیْۤ اَنْشَاَهَاۤ اَوَّلَ مَرَّةٍ ؕ— وَهُوَ بِكُلِّ خَلْقٍ عَلِیْمُ ۟ۙ

(நபியே!) கூறுவீராக! அவற்றை முதல் முறை உருவாக்கியவன்தான் அவற்றை (மறுமுறையும்) உயிர்ப்பிப்பான். இன்னும் அவன் எல்லா படைப்புகளையும் நன்கறிந்தவன் ஆவான். info
التفاسير: |

external-link copy
80 : 36

١لَّذِیْ جَعَلَ لَكُمْ مِّنَ الشَّجَرِ الْاَخْضَرِ نَارًا فَاِذَاۤ اَنْتُمْ مِّنْهُ تُوْقِدُوْنَ ۟

அவன் பசுமையான பச்சை மரத்தில் இருந்து உங்களுக்கு நெருப்பை ஏற்படுத்துகின்றான். அப்போது நீங்கள் அதில் நெருப்பை மூட்டிக் கொள்கிறீர்கள். info
التفاسير: |

external-link copy
81 : 36

اَوَلَیْسَ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِقٰدِرٍ عَلٰۤی اَنْ یَّخْلُقَ مِثْلَهُمْ ؔؕ— بَلٰی ۗ— وَهُوَ الْخَلّٰقُ الْعَلِیْمُ ۟

வானங்களையும் பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களை படைப்பதற்கு ஆற்றலுடையவனாக இல்லையா? ஏன் இல்லை! அவன்தான் மகா படைப்பாளன், நன்கறிந்தவன் ஆவான். info
التفاسير: |

external-link copy
82 : 36

اِنَّمَاۤ اَمْرُهٗۤ اِذَاۤ اَرَادَ شَیْـًٔا اَنْ یَّقُوْلَ لَهٗ كُنْ فَیَكُوْنُ ۟

அவன் எதையும் நாடினால் அவனது கட்டளை எல்லாம் அதற்கு ஆகு என்று அவன் கூறுவதுதான். அது ஆகிவிடும். info
التفاسير: |

external-link copy
83 : 36

فَسُبْحٰنَ الَّذِیْ بِیَدِهٖ مَلَكُوْتُ كُلِّ شَیْءٍ وَّاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟۠

எவனுடைய கரத்தில் எல்லாவற்றின் பேராட்சி இருக்கின்றதோ அவன் மகா பரிசுத்தமானவன். அவன் பக்கம்தான் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். info
التفاسير: |

யாஸீன்