ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

அல்இன்பிதார்

external-link copy
1 : 82

اِذَا السَّمَآءُ انْفَطَرَتْ ۟ۙ

(யுக முடிவில்) வானம் பிளந்துவிடும் போது, info
التفاسير: |

external-link copy
2 : 82

وَاِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ ۟ۙ

இன்னும் நட்சத்திரங்கள் விழுந்து சிதறும் போது, info
التفاسير: |

external-link copy
3 : 82

وَاِذَا الْبِحَارُ فُجِّرَتْ ۟ۙ

இன்னும் கடல்கள் பிளக்கப்ப(ட்)டு (ஒன்றோடு ஒன்று கலக்கப்படு)ம் போது, info
التفاسير: |

external-link copy
4 : 82

وَاِذَا الْقُبُوْرُ بُعْثِرَتْ ۟ۙ

இன்னும் சமாதிகள் புரட்டப்படும்போது (அதில் உள்ளவர்கள் உயிரோடு எழுப்பப்படும்போது), info
التفاسير: |

external-link copy
5 : 82

عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَاَخَّرَتْ ۟ؕ

ஓர் ஆன்மா, தான் முற்படுத்தியதையும் (-முன்னர் செய்ததையும்), பிற்படுத்தியதையும் (-இறுதியாக செய்ததையும்) அறியும். info
التفاسير: |

external-link copy
6 : 82

یٰۤاَیُّهَا الْاِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِیْمِ ۟ۙ

மனிதனே! கண்ணியவானாகிய உன் இறைவனைப் பற்றி உன்னை ஏமாற்றியது எது? info
التفاسير: |

external-link copy
7 : 82

الَّذِیْ خَلَقَكَ فَسَوّٰىكَ فَعَدَلَكَ ۟ۙ

(அவன்தான்) உன்னைப் படைத்தான்; இன்னும் உன்னைச் சீர்செய்தான்; இன்னும் உன்னை (தான் விரும்பிய உருவத்திற்கு) திருப்பினான். info
التفاسير: |

external-link copy
8 : 82

فِیْۤ اَیِّ صُوْرَةٍ مَّا شَآءَ رَكَّبَكَ ۟ؕ

எந்த உருவத்தில் நாடினானோ (அதில்) உன்னைப் பொறுத்தினான். info
التفاسير: |

external-link copy
9 : 82

كَلَّا بَلْ تُكَذِّبُوْنَ بِالدِّیْنِ ۟ۙ

அவ்வாறல்ல, மாறாக, கூலி கொடுக்கப்படுவதை (விசாரணை நாளை)பொய்ப்பிக்கிறீர்கள். info
التفاسير: |

external-link copy
10 : 82

وَاِنَّ عَلَیْكُمْ لَحٰفِظِیْنَ ۟ۙ

நிச்சயமாக (உங்கள் செயல்களை கண்காணித்து பதிவு செய்கிற வானவக்) காவலர்கள் உங்களிடம் இருக்கிறார்கள். info
التفاسير: |

external-link copy
11 : 82

كِرَامًا كٰتِبِیْنَ ۟ۙ

(அவர்கள்,) கண்ணியமானவர்கள், எழுதுபவர்கள். info
التفاسير: |

external-link copy
12 : 82

یَعْلَمُوْنَ مَا تَفْعَلُوْنَ ۟

நீங்கள் செய்வதை அவர்கள் அறிகிறார்கள் (பிறகு அதைப் பதிகிறார்கள்). info
التفاسير: |

external-link copy
13 : 82

اِنَّ الْاَبْرَارَ لَفِیْ نَعِیْمٍ ۟ۙ

நிச்சயமாக நல்லோர் ‘நயீம்’ என்ற சொர்க்கத்தில்தான் இருப்பார்கள். info
التفاسير: |

external-link copy
14 : 82

وَاِنَّ الْفُجَّارَ لَفِیْ جَحِیْمٍ ۟ۙ

நிச்சயமாகத் தீயோர் ’ஜஹீம்’ என்ற நரகத்தில்தான் இருப்பார்கள். info
التفاسير: |

external-link copy
15 : 82

یَّصْلَوْنَهَا یَوْمَ الدِّیْنِ ۟

கூலி (வழங்கப்படும்) நாளில் அதில் (நரக நெருப்பில்) எரிவார்கள். info
التفاسير: |

external-link copy
16 : 82

وَمَا هُمْ عَنْهَا بِغَآىِٕبِیْنَ ۟ؕ

இன்னும் அவர்கள் அதிலிருந்து மறைபவர்களாக (தூரமாகக் கூடியவர்களாக) இல்லை. (நரகத்திலிருந்து அவர்களால் தப்ப முடியாது.) info
التفاسير: |

external-link copy
17 : 82

وَمَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الدِّیْنِ ۟ۙ

இன்னும் (நபியே!) கூலி நாள் (விசாரணை நாள், தீர்ப்பு நாள்) என்ன(வென்று) உமக்கு அறிவித்தது எது? info
التفاسير: |

external-link copy
18 : 82

ثُمَّ مَاۤ اَدْرٰىكَ مَا یَوْمُ الدِّیْنِ ۟ؕ

பிறகு, கூலி நாள் என்ன(வென்று) உமக்கு அறிவித்தது எது? info
التفاسير: |

external-link copy
19 : 82

یَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَیْـًٔا ؕ— وَالْاَمْرُ یَوْمَىِٕذٍ لِّلّٰهِ ۟۠

ஓர் ஆன்மா, (வேறு) ஓர் ஆன்மாவுக்கு எதையும் உரிமை பெறாத நாள் (அது). அதிகாரம் அந்நாளில் அல்லாஹ்விற்கே! info
التفاسير: |