ការបកប្រែអត្ថន័យនៃគម្ពីរគួរអាន - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

அல்பஜ்ர்

external-link copy
1 : 89

وَالْفَجْرِ ۟ۙ

விடியற் காலையின் மீது சத்தியமாக! info
التفاسير: |

external-link copy
2 : 89

وَلَیَالٍ عَشْرٍ ۟ۙ

பத்து நாள்களின் மீது சத்தியமாக! info
التفاسير: |

external-link copy
3 : 89

وَّالشَّفْعِ وَالْوَتْرِ ۟ۙ

இரட்டையின் மீது சத்தியமாக! ஒற்றையின் மீது சத்தியமாக! info
التفاسير: |

external-link copy
4 : 89

وَالَّیْلِ اِذَا یَسْرِ ۟ۚ

இரவின் மீது சத்தியமாக! அது செல்லும் போது, (தீர்ப்பு நாள் வந்தே தீரும்). info
التفاسير: |

external-link copy
5 : 89

هَلْ فِیْ ذٰلِكَ قَسَمٌ لِّذِیْ حِجْرٍ ۟ؕ

இதில் அறிவுடையவருக்கு (பலன் தரும்) சத்தியம் இருக்கிறதா? info
التفاسير: |

external-link copy
6 : 89

اَلَمْ تَرَ كَیْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ ۟

ஆது சமுதாயத்துடன் உம் இறைவன் எவ்வாறு நடந்துகொண்டான் (என்பதை நபியே!) நீர் கவனிக்கவில்லையா? info
التفاسير: |

external-link copy
7 : 89

اِرَمَ ذَاتِ الْعِمَادِ ۟

(உயரமான) தூண்களுடைய இரம் (என்கிற ஆது சமுதாயம்). info
التفاسير: |

external-link copy
8 : 89

الَّتِیْ لَمْ یُخْلَقْ مِثْلُهَا فِی الْبِلَادِ ۟

அது போன்று (பலசாலியான சமுதாயம் உலக) நகரங்களில் (வேறு எங்கும்) படைக்கப்படவில்லை. info
التفاسير: |

external-link copy
9 : 89

وَثَمُوْدَ الَّذِیْنَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ ۟

இன்னும், பள்ளத்தாக்கில் பாறையைக் குடைந்(து வீடுகள் கட்டி வசித்)த ஸமூது சமுதாயத்தை (நீர் கவனிக்கவில்லையா?), info
التفاسير: |

external-link copy
10 : 89

وَفِرْعَوْنَ ذِی الْاَوْتَادِ ۟

இன்னும், ஆணிகளுடைய ஃபிர்அவ்னை (நீர் கவனிக்கவில்லையா?) (ஆணிகள்: இராணுவங்கள்) info
التفاسير: |

external-link copy
11 : 89

الَّذِیْنَ طَغَوْا فِی الْبِلَادِ ۟

(அவர்கள்) நகரங்களில் (பாவம் செய்வதில்) வரம்பு மீறினார்கள். info
التفاسير: |

external-link copy
12 : 89

فَاَكْثَرُوْا فِیْهَا الْفَسَادَ ۟

இன்னும் (அவர்கள்) அவற்றில் விஷமத்தை அதிகப்படுத்தினர். info
التفاسير: |

external-link copy
13 : 89

فَصَبَّ عَلَیْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ ۟ۚۙ

எனவே, உம் இறைவன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையை சுழற்றினான். info
التفاسير: |

external-link copy
14 : 89

اِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ ۟ؕ

நிச்சயமாக உம் இறைவன் எதிர்பார்க்குமிடத்தில் இருக்கிறான். info
التفاسير: |

external-link copy
15 : 89

فَاَمَّا الْاِنْسَانُ اِذَا مَا ابْتَلٰىهُ رَبُّهٗ فَاَكْرَمَهٗ وَنَعَّمَهٗ ۙ۬— فَیَقُوْلُ رَبِّیْۤ اَكْرَمَنِ ۟ؕ

ஆக மனிதன், அவனுடைய இறைவன் அவனைச் சோதித்து, அவனைக் கண்ணியப்படுத்தி அவனுக்கு அருட்கொடை புரியும்போது, “என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான்” எனக் கூறுகிறான். info
التفاسير: |

external-link copy
16 : 89

وَاَمَّاۤ اِذَا مَا ابْتَلٰىهُ فَقَدَرَ عَلَیْهِ رِزْقَهٗ ۙ۬— فَیَقُوْلُ رَبِّیْۤ اَهَانَنِ ۟ۚ

ஆக (இறைவன்), அவனைச் சோதித்து அவனுடைய வாழ்வாதாரத்தை அவன் மீது சுருக்கும்போது, “என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான்” எனக் கூறுகிறான். info
التفاسير: |

external-link copy
17 : 89

كَلَّا بَلْ لَّا تُكْرِمُوْنَ الْیَتِیْمَ ۟ۙ

அவ்வாறல்ல, மாறாக, நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவதில்லை. (அநாதைகளை கண்ணியமாக பராமரிப்பதில்லை). info
التفاسير: |

external-link copy
18 : 89

وَلَا تَحٰٓضُّوْنَ عَلٰی طَعَامِ الْمِسْكِیْنِ ۟ۙ

இன்னும் ஏழையின் உணவுக்கு (நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றவரை)த் தூண்டுவதில்லை. info
التفاسير: |

external-link copy
19 : 89

وَتَاْكُلُوْنَ التُّرَاثَ اَكْلًا لَّمًّا ۟ۙ

பிறருடைய சொத்தை (உங்கள் சொத்தோடு) சேர்த்துப் புசிக்கிறீர்கள். (பிறர் விட்டுச் சென்ற செல்வத்தை உரிமையின்றி உங்கள் செல்வத்தோடு சுருட்டிக் கொள்கிறீர்கள்.) info
التفاسير: |

external-link copy
20 : 89

وَّتُحِبُّوْنَ الْمَالَ حُبًّا جَمًّا ۟ؕ

இன்னும் செல்வத்தைக் கடுமையாக நேசிக்கிறீர்கள். info
التفاسير: |

external-link copy
21 : 89

كَلَّاۤ اِذَا دُكَّتِ الْاَرْضُ دَكًّا دَكًّا ۟ۙ

அவ்வாறல்ல, பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, info
التفاسير: |

external-link copy
22 : 89

وَّجَآءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا ۟ۚ

உம் இறைவன் வருவான், இன்னும் மலக்கு(கள்) அணி அணியாக (நிற்பார்கள்), info
التفاسير: |

external-link copy
23 : 89

وَجِایْٓءَ یَوْمَىِٕذٍ بِجَهَنَّمَ ۙ۬— یَوْمَىِٕذٍ یَّتَذَكَّرُ الْاِنْسَانُ وَاَنّٰی لَهُ الذِّكْرٰی ۟ؕ

அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும், அந்நாளில் மனிதன் நல்லறிவு பெறுவான், (அப்போது) நல்லறிவு அவனுக்கு எப்படி (பலன் தரும்)? info
التفاسير: |

external-link copy
24 : 89

یَقُوْلُ یٰلَیْتَنِیْ قَدَّمْتُ لِحَیَاتِیْ ۟ۚ

“என் (மறுமை) வாழ்வுக்காக நான் (நன்மைகளை) முற்படுத்தியிருக்க வேண்டுமே!” எனக் கூறுவான், info
التفاسير: |

external-link copy
25 : 89

فَیَوْمَىِٕذٍ لَّا یُعَذِّبُ عَذَابَهٗۤ اَحَدٌ ۟ۙ

அந்நாளில் அவனுடைய (-அல்லாஹ் வுடைய) வேதனையை(ப் போன்று) ஒருவனும் வேதனை செய்ய மாட்டான். (அல்லாஹ் பாவிகளை அவ்வளவு பயங்கரமாக வேதனை செய்வான்.) info
التفاسير: |

external-link copy
26 : 89

وَّلَا یُوْثِقُ وَثَاقَهٗۤ اَحَدٌ ۟ؕ

அவனுடைய (அல்லாஹ்வுடைய) கட்டு தலை(ப்போன்று) ஒருவனும் கட்ட மாட்டான். (பழுக்க சூடுகாட்டப்பட்ட சங்கிலிகளில் பாவிகளுடைய கைகள், கால்கள், கழுத்துகள் அந்தளவு கடுமையாகக் கட்டப்படும்.) info
التفاسير: |

external-link copy
27 : 89

یٰۤاَیَّتُهَا النَّفْسُ الْمُطْمَىِٕنَّةُ ۟ۗۙ

நிம்மதியடைந்த ஆன்மாவே! info
التفاسير: |

external-link copy
28 : 89

ارْجِعِیْۤ اِلٰی رَبِّكِ رَاضِیَةً مَّرْضِیَّةً ۟ۚ

திருப்தி பெற்றதாக, திருப்தி கொள்ளப்பட்டதாக உன் இறைவன் பக்கம் திரும்பு! info
التفاسير: |

external-link copy
29 : 89

فَادْخُلِیْ فِیْ عِبٰدِیْ ۟ۙ

இன்னும் என் அடியார்களில் சேர்ந்து விடு! info
التفاسير: |

external-link copy
30 : 89

وَادْخُلِیْ جَنَّتِیْ ۟۠

இன்னும் என் சொர்க்கத்தில் நுழைந்து விடு! info
التفاسير: |