ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - ಅನುವಾದಗಳ ವಿಷಯಸೂಚಿ


ಅರ್ಥಗಳ ಅನುವಾದ ಶ್ಲೋಕ: (21) ಅಧ್ಯಾಯ: ಸೂರ ಯೂನುಸ್
وَاِذَاۤ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِّنْ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُمْ اِذَا لَهُمْ مَّكْرٌ فِیْۤ اٰیَاتِنَا ؕ— قُلِ اللّٰهُ اَسْرَعُ مَكْرًا ؕ— اِنَّ رُسُلَنَا یَكْتُبُوْنَ مَا تَمْكُرُوْنَ ۟
10.21. இணைவைப்பாளர்களுக்கு ஏற்பட்ட பஞ்சத்திற்கும் ஏழ்மைக்கும் பிறகு மழை, செழிப்பு ஆகிய அருள்களை அவர்கள் அனுபவிக்குமாறு செய்தால் அவர்களோ நம்முடைய சான்றுகளை நிராகரித்து சூழ்ச்சி செய்கிறார்கள். -தூதரே!- இந்த இணைவைப்பாளர்களிடம் நீர் கூறுவீராக: “சூழ்ச்சியிலும், உங்களை விட்டுப் பிடிப்பதிலும், தண்டிப்பதிலும் அல்லாஹ் மிக விரைவானவன். நீங்கள் செய்யும் சூழ்ச்சிகளை உங்களைக் கண்காணிக்கும் வானவர்கள் எழுதுகிறார்கள். எதுவும் அவர்களை விட்டுத் தப்பிவிட முடியாது எனும் போது எவ்வாறு அவர்களின் படைப்பாளனை விட்டுத் தப்பிவிட முடியும்? உங்களின் சூழ்ச்சிகளுக்கு அல்லாஹ் தண்டனை வழங்குவான்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
ಈ ಪುಟದಲ್ಲಿರುವ ಶ್ಲೋಕಗಳ ಉಪಯೋಗಗಳು:
• الله أسرع مكرًا بمن مكر بعباده المؤمنين.
1. நம்பிக்கை கொண்ட தன் அடியார்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்பவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்வதில் அல்லாஹ் விரைவானவன்.

• بغي الإنسان عائد على نفسه ولا يضر إلا نفسه.
2. மனிதன் செய்யக்கூடிய அநியாயம் அவனுக்கே கேடாக அமையும். அவன் அதன் மூலம் தனக்குத்தானே அநீதி இழைத்துக் கொள்கிறான்.

• بيان حقيقة الدنيا في سرعة انقضائها وزوالها، وما فيها من النعيم فهو فانٍ.
3. விரைவாக அழிந்து விடும் என்ற இவ்வுலகத்தைப் பற்றிய உண்மை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதிலுள்ள இன்பங்களும் அழிபவையே.

• الجنة هي مستقر المؤمن؛ لما فيها من النعيم والسلامة من المصائب والهموم.
4. ஒரு முஃமினுடைய தங்குமிடம் சுவர்க்கமே. ஏனெனில் அங்குதான் இன்பங்களும், சோதனைகள் மற்றும் கவலைகள் ஆகியவற்றிலிருந்து ஈடேற்றமும் உள்ளது.

 
ಅರ್ಥಗಳ ಅನುವಾದ ಶ್ಲೋಕ: (21) ಅಧ್ಯಾಯ: ಸೂರ ಯೂನುಸ್
ಅಧ್ಯಾಯಗಳ ವಿಷಯಸೂಚಿ ಪುಟ ಸಂಖ್ಯೆ
 
ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - ಅನುವಾದಗಳ ವಿಷಯಸೂಚಿ

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

ಮುಚ್ಚಿ