Check out the new design

ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - ಅಲ್-ಮುಖ್ತಸರ್ ಫಿ ತಫ್ಸೀರಿಲ್ ಕುರ್‌ಆನಿಲ್ ಕರೀಮ್ - ತಮಿಳು ಅನುವಾದ * - ಅನುವಾದಗಳ ವಿಷಯಸೂಚಿ


ಅರ್ಥಗಳ ಅನುವಾದ ಅಧ್ಯಾಯ: ಫುಸ್ಸಿಲತ್   ಶ್ಲೋಕ:
اِنَّ الَّذِیْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَیْهِمُ الْمَلٰٓىِٕكَةُ اَلَّا تَخَافُوْا وَلَا تَحْزَنُوْا وَاَبْشِرُوْا بِالْجَنَّةِ الَّتِیْ كُنْتُمْ تُوْعَدُوْنَ ۟
41.30. நிச்சயமாக எங்கள் இறைவன் அல்லாஹ்தான். அவனைத் தவிர எங்களுக்கு வேறு இறைவன் இல்லை என்று கூறி அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி உறுதியாக இருந்தவர்களின் மீது அவர்கள் மரணிக்கும்வேளையில் வானவர்கள் இறங்கி அவர்களிடம் கூறுகிறார்கள்: “மரணத்தைக் கண்டோ அதற்குப்பின் நிகழப்போவதை எண்ணியோ அஞ்சாதீர்கள். உலகில் நீங்கள் விட்டுவிட்டு வந்ததற்காக கவலைப்படாதீர்கள். அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்ததற்காக உலகில் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுக்கொண்டிருந்த சுவனத்தைக் கொண்டு நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
نَحْنُ اَوْلِیٰٓؤُكُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَفِی الْاٰخِرَةِ ۚ— وَلَكُمْ فِیْهَا مَا تَشْتَهِیْۤ اَنْفُسُكُمْ وَلَكُمْ فِیْهَا مَا تَدَّعُوْنَ ۟ؕ
41.31. நாங்கள் உலக வாழ்க்கையில் உங்களின் உதவியாளர்கள். உங்களுக்கு நேரான வழியைக் காட்டி உங்களைப் பாதுகாத்துக்கொண்டிருந்தோம். மறுமையிலும் நாங்களே உங்களின் உதவியாளர்கள். உங்களுக்கு எங்களின் உதவி தொடர்ந்து இருந்துகொண்டிருக்கும். சுவனத்தில் உங்களின் மனம் விரும்பும் இன்பங்கள் அனைத்தும் கிடைக்கும். அங்கு நீங்கள் விரும்பிக் கேட்கும் அத்தனையும் கிடைக்கும்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
نُزُلًا مِّنْ غَفُوْرٍ رَّحِیْمٍ ۟۠
41.32. அது தன் பக்கம் திரும்பக்கூடிய அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடிய, அவர்களோடு மிகுந்த கருணையுடைய இறைவனிடமிருந்து உங்களுக்காக தயார்படுத்தப்பட்ட விருந்தாகும்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَی اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِیْ مِنَ الْمُسْلِمِیْنَ ۟
41.33. அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன் என்பதன் பக்கமும் அவனுடைய மார்க்கத்தின்படி செயல்படுவதன் பக்கமும் அழைத்து, அவன் விரும்பக்கூடிய நற்செயல்களில் ஈடுபட்டு “நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்களில் உள்ளவனாவேன்” என்று கூறுபவரைவிட அழகிய சொல் உடையவர் வேறுயாரும் இல்லை. அவை அனைத்தையும் செய்பவர்தான் மக்களில் சிறந்த வார்த்தையை பேசுபவர்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَلَا تَسْتَوِی الْحَسَنَةُ وَلَا السَّیِّئَةُ ؕ— اِدْفَعْ بِالَّتِیْ هِیَ اَحْسَنُ فَاِذَا الَّذِیْ بَیْنَكَ وَبَیْنَهٗ عَدَاوَةٌ كَاَنَّهٗ وَلِیٌّ حَمِیْمٌ ۟
41.34. அல்லாஹ்வை திருப்திப்படுத்தும் நன்மையான செயல்களும் அவனைக் கோபத்திற்குள்ளாக்கும் தீமையான செயல்களும் சமமாகாது. மக்களில் உமக்கு தீங்கிழைத்தவர்களை சிறந்த பண்பால் எதிர்கொள்வீராக. அப்போது முன்னர் உம்முடன் கடுமையான பகைமை கொண்டிருந்தவர்கூட -தீயதை நன்மையால் எதிர்கொள்ளும்- உம்முடைய இந்த செயலால் திட்டமாக நெருங்கிய நண்பரைப்போலாகி விடுவார்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَمَا یُلَقّٰىهَاۤ اِلَّا الَّذِیْنَ صَبَرُوْا ۚ— وَمَا یُلَقّٰىهَاۤ اِلَّا ذُوْ حَظٍّ عَظِیْمٍ ۟
41.35. மக்களால் தாம் சந்திக்கும் துன்பங்களையும் தொல்லைகளையும் பொறுமையுடன் சகித்துக்கொள்பவர்கள்தாம் சிறப்பிற்குரிய இந்த பண்பினைப் பெற பாக்கியம் பெறுவார்கள். பெரும் பாக்கியம் வழங்கப்பட்டவர்கள்தாம் பெரும் நன்மைகளை, பூரணமான பயன்களை உள்ளடக்கியுள்ள இந்த பண்பினைப் பெற பாக்கியம் பெறுவார்கள்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَاِمَّا یَنْزَغَنَّكَ مِنَ الشَّیْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِ ؕ— اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
41.36. ஷைத்தான் உமக்கு தீங்கினைக்கொண்டு ஊசலாட்டத்தை எப்போது ஏற்படுத்தினாலும் அல்லாஹ்வைப் பற்றிக்கொள்வீராக, அவனிடம் தஞ்சமடைந்து விடுவீராக. நிச்சயமாக நீர் கூறுவதை அவன் செவியேற்கக்கூடியவன்; உமது நிலையைக் குறித்து நன்கறிந்தவன்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
وَمِنْ اٰیٰتِهِ الَّیْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ ؕ— لَا تَسْجُدُوْا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوْا لِلّٰهِ الَّذِیْ خَلَقَهُنَّ اِنْ كُنْتُمْ اِیَّاهُ تَعْبُدُوْنَ ۟
41.37. இரவும் பகலும் அவை ஒன்றன்பின் ஒன்றாக வருவதும் சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் வல்லமையையும் அவன் ஒருவனே என்பதையும் அறிவிக்கும் சான்றுகளில் உள்ளவையாகும். -மனிதர்களே!- சூரியனுக்கோ, சந்திரனுக்கோ சிரம்பணியாதீர்கள். நீங்கள் உண்மையாகவே அவனை வணங்கக்கூடியவர்களாக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கு மட்டுமே சிரம்பணியுங்கள்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
فَاِنِ اسْتَكْبَرُوْا فَالَّذِیْنَ عِنْدَ رَبِّكَ یُسَبِّحُوْنَ لَهٗ بِالَّیْلِ وَالنَّهَارِ وَهُمْ لَا یَسْـَٔمُوْنَ ۟
41.38. அவர்கள் கர்வம் கொண்டு அவனை புறக்கணித்து படைப்பாளனான அல்லாஹ்வுக்கு சிரம்பணியவில்லையெனில் அல்லாஹ்விடம் இருக்கும் வானவர்கள் இரவிலும் பகலிலும் வணங்குவதை விட்டும் சோர்வடையாமல் அல்லாஹ்வைத் துதிசெய்துகொண்டும் புகழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.
ಅರಬ್ಬಿ ವ್ಯಾಖ್ಯಾನಗಳು:
ಈ ಪುಟದಲ್ಲಿರುವ ಶ್ಲೋಕಗಳ ಉಪಯೋಗಗಳು:
• منزلة الاستقامة عند الله عظيمة.
1. இஸ்லாத்தில் உறுதியாக இருப்பது அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுத் தரக்கூடியதாகும்.

• كرامة الله لعباده المؤمنين وتولِّيه شؤونهم وشؤون مَن خلفهم.
2. நம்பிக்கைகொண்ட தனது அடியார்களை அல்லாஹ் கௌரவப்படுத்தி, அவர்களது காரியங்களையும் அவர்களுக்குப் பின்னால் விட்டுச்செல்வோரின் காரியங்களையும் பொறுப்பேற்கிறான்.

• مكانة الدعوة إلى الله، وأنها أفضل الأعمال.
3. அல்லாஹ்வின்பால் மக்களை அழைப்பதன் சிறப்பும் அது மிகச்சிறந்த செயல் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

• الصبر على الإيذاء والدفع بالتي هي أحسن خُلُقان لا غنى للداعي إلى الله عنهما.
4. துன்பங்களை பொறுமையுடன் சகித்துக் கொள்வது, தீமையை நன்மையால் எதிர்கொள்வது அல்லாஹ்வின்பால் அழைக்கும் அழைப்பாளனுக்கு இன்றியமையாத இரு பண்புகளாகும்.

 
ಅರ್ಥಗಳ ಅನುವಾದ ಅಧ್ಯಾಯ: ಫುಸ್ಸಿಲತ್
ಅಧ್ಯಾಯಗಳ ವಿಷಯಸೂಚಿ ಪುಟ ಸಂಖ್ಯೆ
 
ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - ಅಲ್-ಮುಖ್ತಸರ್ ಫಿ ತಫ್ಸೀರಿಲ್ ಕುರ್‌ಆನಿಲ್ ಕರೀಮ್ - ತಮಿಳು ಅನುವಾದ - ಅನುವಾದಗಳ ವಿಷಯಸೂಚಿ

ಪ್ರಕಾಶನ - ಕುರ್‌ಆನ್ ತಫ್ಸೀರ್ ಸ್ಟಡಿ ಸೆಂಟರ್

ಮುಚ್ಚಿ