وه‌رگێڕانی ماناكانی قورئانی پیرۆز - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - پێڕستی وه‌رگێڕاوه‌كان


وه‌رگێڕانی ماناكان ئایه‌تی: (112) سوره‌تی: سورەتی الأنعام
وَكَذٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِیٍّ عَدُوًّا شَیٰطِیْنَ الْاِنْسِ وَالْجِنِّ یُوْحِیْ بَعْضُهُمْ اِلٰی بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُوْرًا ؕ— وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوْهُ فَذَرْهُمْ وَمَا یَفْتَرُوْنَ ۟
6.112. இந்த இணைவைப்பாளர்களின் எதிர்ப்பைக் கொண்டு நாம் உம்மை சோதித்தது போலவே உமக்கு முன்னர் எல்லா தூதர்களையும் சோதித்தோம். அவர்களில் ஒவ்வொருவருக்கும் குழப்பக்கார மனிதர்களிலிருந்தும் ஜின்களிலிருந்தும் எதிரிகளை ஏற்படுத்தினோம். அந்த எதிரிகள் ஒருவர் மற்றவருக்கு ஊசலாட்டத்தை ஏற்படுத்தினார்கள். மக்களை ஏமாற்றுவதற்காக அசத்தியத்தை அலங்கரித்துக் காட்டினார்கள். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடினான். அவர்களையும் அவர்கள் இட்டுக்கட்டும் அசத்தியத்தையும் நிராகரிப்பையும் விட்டுவிடுவீராக. அவர்களைப் பொருட்படுத்தாதீர்.
تەفسیرە عەرەبیەکان:
سوودەکانی ئایەتەکان لەم پەڕەیەدا:
• يجب أن يكون الهدف الأعظم للعبد اتباع الحق، ويطلبه بالطرق التي بيَّنها الله، ويعمل بذلك، ويرجو عَوْن ربه في اتباعه، ولا يتكل على نفسه وحوله وقوته.
1. சத்தியத்தைப் பின்பற்றுவதே அடியானுடைய முக்கிய இலக்காக இருக்க வேண்டும். அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ள வழிகளில் அதனைத் தேட வேண்டும். அதன்படி செயல்பட வேண்டும். அதனைப் பின்பற்றுவதற்கு அல்லாஹ்வின் உதவியையே அடியான் எதிர்பார்க்க வேண்டும். தன் மீதோ தன் ஆற்றலின் மீதோ சார்ந்திருக்கக்கூடாது.

• من إنصاف القرآن للقلة المؤمنة العالمة إسناده الجهل والضلال إلى أكثر الخلق.
2. படைப்புகளில் பொரும்பாலானவர்கள் அறியாமையிலும் வழிகேட்டிலும் உள்ளனர் என குர்ஆன் குறிப்பிடுவதன் மூலம் அறிவுள்ள சிறுபான்மையினரான முஃமின்களுக்கு நீதி வழங்கியுள்ளது.

• من سنّته تعالى في الخلق ظهور أعداء من الإنس والجنّ للأنبياء وأتباعهم؛ لأنّ الحقّ يعرف بضدّه من الباطل.
3. தூதர்களுக்கும் அவர்களைப் பின்பற்றுபவர்களுக்கும் மனித, ஜின் இனத்திலிருந்து எதிரிகள் உருவாவது படைப்பினங்களில் அல்லாஹ்வின் வழிமுறையாகும். ஏனெனில் சத்தியம், அதற்கு எதிரான அசத்தியத்தைக் கொண்டே அறியப்படுகிறது.

• القرآن صادق في أخباره، عادل في أحكامه،لا يُعْثَر في أخباره على ما يخالف الواقع، ولا في أحكامه على ما يخالف الحق.
4. குர்ஆன் தான் வழங்கும் செய்திகளில் உண்மையானது, சட்டங்களில் நீதியானது. அதன் செய்திகளில் நிதர்சனத்திற்கு மாற்றமானதையோ அதன் சட்டங்களில் சத்தியத்திற்கு மாற்றமானதையோ காணமுடியாது.

 
وه‌رگێڕانی ماناكان ئایه‌تی: (112) سوره‌تی: سورەتی الأنعام
پێڕستی سوره‌ته‌كان ژمارەی پەڕە
 
وه‌رگێڕانی ماناكانی قورئانی پیرۆز - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - پێڕستی وه‌رگێڕاوه‌كان

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

داخستن