وه‌رگێڕانی ماناكانی قورئانی پیرۆز - وەرگێڕاوی تامیلی - عمر شریف * - پێڕستی وه‌رگێڕاوه‌كان

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

وه‌رگێڕانی ماناكان سوره‌تی: سورەتی الزخرف   ئایه‌تی:

ஸூரா அஸ்ஸுக்ருப்

حٰمٓ ۟ۚۛ
ஹா மீம்.
تەفسیرە عەرەبیەکان:
وَالْكِتٰبِ الْمُبِیْنِ ۟ۙۛ
(சொல்லாலும் கருத்தாலும்) தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக!
تەفسیرە عەرەبیەکان:
اِنَّا جَعَلْنٰهُ قُرْءٰنًا عَرَبِیًّا لَّعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟ۚ
நிச்சயமாக நாம் இதை அரபிமொழியில் ஓதப்படுகிற குர்ஆனாக ஆக்கினோம், நீங்கள் சிந்தித்து புரிய வேண்டும் என்பதற்காக.
تەفسیرە عەرەبیەکان:
وَاِنَّهٗ فِیْۤ اُمِّ الْكِتٰبِ لَدَیْنَا لَعَلِیٌّ حَكِیْمٌ ۟ؕ
நிச்சயமாக நம்மிடம் (இருக்கின்ற அல்லவ்ஹுல் மஹ்ஃபூள் என்ற) தாய் புத்தகத்தில் பதியப்பட்டுள்ள இ(ந்த வேதமான)து மிக உயர்ந்ததும், மகா ஞானமுடையதும் ஆகும்.
تەفسیرە عەرەبیەکان:
اَفَنَضْرِبُ عَنْكُمُ الذِّكْرَ صَفْحًا اَنْ كُنْتُمْ قَوْمًا مُّسْرِفِیْنَ ۟
ஆக, நீங்கள் எல்லை மீறி குற்றம் புரிகிற மக்களாக இருக்க, உங்களை விட்டும் தண்டனையை அகற்றி (உங்களை நாங்கள் தண்டிக்காமல்) விடுவோமா? (நீங்கள் இந்த குர்ஆனைக் கொண்டு நேர்வழி பெறாமல், எல்லை மீறி குற்றம் புரிகிற மக்களாக இருப்பதால் இந்த குர்ஆனை தொடர்ந்து இறக்குவதை நாம் விட்டுவிடுவோமா?)
تەفسیرە عەرەبیەکان:
وَكَمْ اَرْسَلْنَا مِنْ نَّبِیٍّ فِی الْاَوَّلِیْنَ ۟
முன்னோரில் நாம் எத்தனையோ நபிமார்களை அனுப்பினோம்.
تەفسیرە عەرەبیەکان:
وَمَا یَاْتِیْهِمْ مِّنْ نَّبِیٍّ اِلَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟
அவர்களிடம் நபி எவரும் வருவதில்லை, அவர்கள் அவரை கேலி செய்பவர்களாக இருந்தே தவிர.
تەفسیرە عەرەبیەکان:
فَاَهْلَكْنَاۤ اَشَدَّ مِنْهُمْ بَطْشًا وَّمَضٰی مَثَلُ الْاَوَّلِیْنَ ۟
ஆக, (உம்மை ஏற்க மறுக்கின்ற) இவர்களைவிட வலிமையால் மிக பலமான (அ)வர்களை நாம் அழித்தோம். இன்னும், முன்னோரின் உதாரணம் (-தண்டனை இவர்களின் கண் முன்) சென்றிருக்கிறது.
تەفسیرە عەرەبیەکان:
وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَیَقُوْلُنَّ خَلَقَهُنَّ الْعَزِیْزُ الْعَلِیْمُ ۟ۙ
வானங்களையும் பூமியையும் யார் படைத்தான் என்று (நபியே!) நீர் அவர்களிடம் கேட்டால், “மிகைத்தவன், நன்கறிந்தவன் (-அல்லாஹ்) அவற்றைப் படைத்தான்” என்று நிச்சயமாக அவர்கள் (பதில்) கூறுவார்கள்:
تەفسیرە عەرەبیەکان:
الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ مَهْدًا وَّجَعَلَ لَكُمْ فِیْهَا سُبُلًا لَّعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟ۚ
அவன் உங்களுக்கு பூமியை விரிப்பாக ஆக்கினான். இன்னும், அதில் உங்களுக்கு பல பாதைகளை ஏற்படுத்தினான், (அவற்றின் மூலம்) நீங்கள் (உங்களுக்குத் தேவையான இடங்களுக்கு) சரியான பாதையில் (இலகுவாக) செல்வதற்காக.
تەفسیرە عەرەبیەکان:
وَالَّذِیْ نَزَّلَ مِنَ السَّمَآءِ مَآءً بِقَدَرٍ ۚ— فَاَنْشَرْنَا بِهٖ بَلْدَةً مَّیْتًا ۚ— كَذٰلِكَ تُخْرَجُوْنَ ۟
இன்னும், அவன் வானத்தில் இருந்து மழையை ஓர் அளவோடு இறக்கினான். ஆக, இறந்து (-காய்ந்து) போன பூமியை நாம் அதன் மூலம் உயிர்ப்பிக்கிறோம். இவ்வாறுதான் நீங்கள் (இறந்த பின்னர் பூமியில் இருந்து மீண்டும் நீங்கள் உயிர்ப்பிக்கப்பட்டு) வெளியாக்கப்படுவீர்கள்.
تەفسیرە عەرەبیەکان:
وَالَّذِیْ خَلَقَ الْاَزْوَاجَ كُلَّهَا وَجَعَلَ لَكُمْ مِّنَ الْفُلْكِ وَالْاَنْعَامِ مَا تَرْكَبُوْنَ ۟ۙ
இன்னும், அவன் (படைப்புகளில் உள்ள) ஜோடிகள் எல்லாவற்றையும் படைத்தான் (-படைப்புகள் எல்லாவற்றையும் ஆண், பெண் என்று ஜோடி ஜோடியாகப் படைத்தான்). இன்னும், கப்பல்களிலும், கால்நடைகளிலும் நீங்கள் எதில் பயணம் செய்வீர்களோ அதை உங்களுக்காக ஏற்படுத்திக் கொடுத்தான்.
تەفسیرە عەرەبیەکان:
لِتَسْتَوٗا عَلٰی ظُهُوْرِهٖ ثُمَّ تَذْكُرُوْا نِعْمَةَ رَبِّكُمْ اِذَا اسْتَوَیْتُمْ عَلَیْهِ وَتَقُوْلُوْا سُبْحٰنَ الَّذِیْ سَخَّرَ لَنَا هٰذَا وَمَا كُنَّا لَهٗ مُقْرِنِیْنَ ۟ۙ
அவற்றின் முதுகுகளில் நீங்கள் ஸ்திரமாக அமர்வதற்காகவும்; பிறகு அவற்றின் மீது நீங்கள் ஸ்திரமாக அமரும்போது உங்கள் இறைவனின் அருட்கொடையை நீங்கள் நினைவு கூர்வதற்காகவும்; “இதை எங்களுக்கு வசப்படுத்தி தந்தவன் மகா தூயவன். நாங்கள் இதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கவில்லை.”
تەفسیرە عەرەبیەکان:
وَاِنَّاۤ اِلٰی رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ ۟
“இன்னும், நிச்சயமாக நாங்கள் (எங்கள் மரணத்திற்குப் பின்) எங்கள் இறைவனின் பக்கம் திரும்பக் கூடியவர்கள் ஆவோம்” என்று நீங்கள் கூறுவதற்காகவும் (அவன் உங்களுக்கு இந்த வாகனங்களை ஏற்படுத்திக் கொடுத்தான்).
تەفسیرە عەرەبیەکان:
وَجَعَلُوْا لَهٗ مِنْ عِبَادِهٖ جُزْءًا ؕ— اِنَّ الْاِنْسَانَ لَكَفُوْرٌ مُّبِیْنٌ ۟ؕ۠
இன்னும், அவனது அடியார்களில் சிலரை (-வானவர்களை) அவர்கள் அவனுக்கு குழந்தைகளாக ஆக்கிவிட்டனர். நிச்சயமாக மனிதன் மிகத் தெளிவான மகா நன்றி கெட்டவன் ஆவான்.
تەفسیرە عەرەبیەکان:
اَمِ اتَّخَذَ مِمَّا یَخْلُقُ بَنٰتٍ وَّاَصْفٰىكُمْ بِالْبَنِیْنَ ۟
அவன், தான் படைத்தவற்றில் பெண் பிள்ளைகளை (தனக்கு) எடுத்துக் கொண்டானா, உங்களுக்கு ஆண் பிள்ளைகளை தேர்ந்தெடுத்(துக்கொடுத்)தானா?
تەفسیرە عەرەبیەکان:
وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِمَا ضَرَبَ لِلرَّحْمٰنِ مَثَلًا ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ كَظِیْمٌ ۟
அவர்களில் ஒருவருக்கு - அவர் ரஹ்மானுக்கு எதை தன்மையாக விவரித்தாரோ அதைக் கொண்டு - நற்செய்தி கூறப்பட்டால் அவரது முகம் கருப்பாக மாறிவிடுகிறது. இன்னும், அவர் துக்கப்படுகிறார். (இணைவைக்கின்ற மனிதன் தனக்கு பெண் பிள்ளையை விரும்புவதில்லை. ஆனால், அல்லாஹ்விற்கு பெண் பிள்ளைகள் இருப்பதாக கற்பனை செய்கிறான்.)
تەفسیرە عەرەبیەکان:
اَوَمَنْ یُّنَشَّؤُا فِی الْحِلْیَةِ وَهُوَ فِی الْخِصَامِ غَیْرُ مُبِیْنٍ ۟
யார் ஆபரணங்களில் (அவை அணிவிக்கப்பட்டு) வளர்க்கப்படுகிறாரோ, இன்னும் அவர் வாதிப்பதில் தெளிவற்றவராக இருக்கிறாரோ அவரையா அல்லாஹ் தனக்கு பிள்ளைகளாக எடுத்துக்கொள்வான்? (பலவீனமான படைப்பாகிய பெண்களையா அல்லாஹ்விற்கு பிள்ளைகள் என்று கூறுகிறீர்கள்?)
تەفسیرە عەرەبیەکان:
وَجَعَلُوا الْمَلٰٓىِٕكَةَ الَّذِیْنَ هُمْ عِبٰدُ الرَّحْمٰنِ اِنَاثًا ؕ— اَشَهِدُوْا خَلْقَهُمْ ؕ— سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَیُسْـَٔلُوْنَ ۟
இன்னும், ரஹ்மானின் அடியார்களாகிய வானவர்களை (அல்லாஹ்வின்) பெண்(பிள்ளை)களாக இவர்கள் ஆக்கிவிட்டனர். அ(ந்த வான)வர்கள் படைக்கப்பட்டதை இவர்கள் (அங்கு பிரசன்னமாகி இருந்து) பார்த்தார்களா? (வானவர்களை பெண்கள் என்று கூறிய) இவர்களின் (இந்த) சாட்சி பதியப்படும். இன்னும், (அது பற்றி மறுமையில்) இவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
وَقَالُوْا لَوْ شَآءَ الرَّحْمٰنُ مَا عَبَدْنٰهُمْ ؕ— مَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ ۗ— اِنْ هُمْ اِلَّا یَخْرُصُوْنَ ۟ؕ
இவர்கள் கூறுகிறார்கள்: “ரஹ்மான் நாடியிருந்தால் நாம் அவர்களை (-அந்த சிலைகளை) வணங்கியிருக்க மாட்டோம்.” இவர்களுக்கு இதைப் பற்றி எந்த அறிவும் இல்லை. இவர்கள் கற்பனையாக பேசுகிறார்களே தவிர (உண்மை பேசுபவர்கள்) இல்லை.
تەفسیرە عەرەبیەکان:
اَمْ اٰتَیْنٰهُمْ كِتٰبًا مِّنْ قَبْلِهٖ فَهُمْ بِهٖ مُسْتَمْسِكُوْنَ ۟
(இவர்களின் கூற்றுகளுக்கு ஆதாரமாக) இதற்கு முன்னர் நாம் ஒரு வேதத்தை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோமா? ஆக, அவர்கள் அதை உறுதியாக பிடித்திருக்கிறார்களா? (அதன்படி செயல்படுகிறார்களா? அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லாமல் இருக்க எதன் அடிப்படையில் இவர்கள் பேசுகிறார்கள்?)
تەفسیرە عەرەبیەکان:
بَلْ قَالُوْۤا اِنَّا وَجَدْنَاۤ اٰبَآءَنَا عَلٰۤی اُمَّةٍ وَّاِنَّا عَلٰۤی اٰثٰرِهِمْ مُّهْتَدُوْنَ ۟
மாறாக, அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாம் எங்கள் மூதாதைகளை ஒரு கொள்கையில் கண்டோம். நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகள் மீதே வழி நடப்போம். (உமது மார்க்கத்தை நாங்கள் பின்பற்ற மாட்டோம்.)”
تەفسیرە عەرەبیەکان:
وَكَذٰلِكَ مَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِیْ قَرْیَةٍ مِّنْ نَّذِیْرٍ اِلَّا قَالَ مُتْرَفُوْهَاۤ ۙ— اِنَّا وَجَدْنَاۤ اٰبَآءَنَا عَلٰۤی اُمَّةٍ وَّاِنَّا عَلٰۤی اٰثٰرِهِمْ مُّقْتَدُوْنَ ۟
இவ்வாறு, உமக்கு முன்னர் நாம் எச்சரிப்பாளர் எவரையும் ஓர் ஊரில் அனுப்பியபோதெல்லாம், அந்த ஊரில் உள்ள (செல்வந்தர்களாகிய) சுகவாசிகள் - “நிச்சயமாக நாம் எங்கள் மூதாதைகளை ஒரு கொள்கையில் கண்டோம். நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றி நடப்போம். (உமது மார்க்கத்தை நாங்கள் பின்பற்ற மாட்டோம்.)” என்றுதான் கூறி இருக்கிறார்கள். (ஆக, நபியே! முன்சென்ற மக்கள் தங்களது தூதர்களுக்கு கூறியதைத்தான் உமது மக்களும் கூறுகிறார்கள்.)
تەفسیرە عەرەبیەکان:
قٰلَ اَوَلَوْ جِئْتُكُمْ بِاَهْدٰی مِمَّا وَجَدْتُّمْ عَلَیْهِ اٰبَآءَكُمْ ؕ— قَالُوْۤا اِنَّا بِمَاۤ اُرْسِلْتُمْ بِهٖ كٰفِرُوْنَ ۟
(நமது தூதர்) கூறினார்: “நீங்கள் உங்கள் மூதாதைகளை எதன்மீது கண்டீர்களோ அதைவிட மிகச் சிறந்த நேர்வழியை நான் உங்களிடம் கொண்டு வந்தாலுமா (நீங்கள் என்னைப் பின்பற்ற மறுப்பீர்கள்)?” அதற்கு அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் எதைக் கொடுத்து அனுப்பப்பட்டீர்களோ (அது எதுவாக இருந்தாலும் சரி) அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிப்போம்.”
تەفسیرە عەرەبیەکان:
فَانْتَقَمْنَا مِنْهُمْ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِیْنَ ۟۠
ஆகவே, அவர்களிடம் நாம் பழிவாங்கினோம். ஆக, பொய்ப்பித்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று (நபியே!) நீர் கவனிப்பீராக!
تەفسیرە عەرەبیەکان:
وَاِذْ قَالَ اِبْرٰهِیْمُ لِاَبِیْهِ وَقَوْمِهٖۤ اِنَّنِیْ بَرَآءٌ مِّمَّا تَعْبُدُوْنَ ۟ۙ
இன்னும், (நபியே!) தனது தந்தைக்கும் தனது மக்களுக்கும் இப்ராஹீம் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக: “நீங்கள் வணங்குகின்ற அனைத்தையும் விட்டும் நிச்சயமாக நான் முற்றிலும் நீங்கியவன்,”
تەفسیرە عەرەبیەکان:
اِلَّا الَّذِیْ فَطَرَنِیْ فَاِنَّهٗ سَیَهْدِیْنِ ۟
“என்னைப் படைத்த (இறை)வனைத் தவிர. (அவனை மட்டுமே நான் வணங்குவேன்.) ஆக, நிச்சயமாக அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்.”
تەفسیرە عەرەبیەکان:
وَجَعَلَهَا كَلِمَةً بَاقِیَةً فِیْ عَقِبِهٖ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
இன்னும், இதை (-அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் இல்லை என்ற தூய கொள்கையை) தனது சந்ததிகளில் நீடித்து நிற்கின்ற ஒரு (கொள்கை) வாக்கியமாக அவர் ஆக்கினார், அவர்கள் (எல்லா தவறான கொள்கையிலிருந்து விலகி அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவதன் பக்கம்) திரும்ப வேண்டும் என்பதற்காக.
تەفسیرە عەرەبیەکان:
بَلْ مَتَّعْتُ هٰۤؤُلَآءِ وَاٰبَآءَهُمْ حَتّٰی جَآءَهُمُ الْحَقُّ وَرَسُوْلٌ مُّبِیْنٌ ۟
(இவர்களை நாம் உடனே அழிக்கவில்லை.) மாறாக, இவர்களுக்கும் இவர்களின் மூதாதைகளுக்கும் நாம் சுகமான வாழ்க்கையைக் கொடுத்தோம். இறுதியாக, உண்மையான வேதம் அவர்களிடம் வந்தது. இன்னும், தெளிவான தூதரும் அவர்களிடம் வந்தார்.
تەفسیرە عەرەبیەکان:
وَلَمَّا جَآءَهُمُ الْحَقُّ قَالُوْا هٰذَا سِحْرٌ وَّاِنَّا بِهٖ كٰفِرُوْنَ ۟
இன்னும், அவர்களிடம் உண்மையான வேதம் (அல்குர்ஆன்) வந்தபோது, “இது சூனியம்” என்றும் “நிச்சயமாக நாங்கள் இதை நிராகரிக்கக் கூடியவர்கள்” என்றும் கூறினார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
وَقَالُوْا لَوْلَا نُزِّلَ هٰذَا الْقُرْاٰنُ عَلٰی رَجُلٍ مِّنَ الْقَرْیَتَیْنِ عَظِیْمٍ ۟
இன்னும், “இந்த குர்ஆன் (மக்கா இன்னும் தாயிஃப் ஆகிய) இந்த இரண்டு ஊர்களில் உள்ள (வசதி படைத்த) ஒரு பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்க வேண்டாமா!” என்று அவர்கள் கூறுகிறார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
اَهُمْ یَقْسِمُوْنَ رَحْمَتَ رَبِّكَ ؕ— نَحْنُ قَسَمْنَا بَیْنَهُمْ مَّعِیْشَتَهُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَرَفَعْنَا بَعْضَهُمْ فَوْقَ بَعْضٍ دَرَجٰتٍ لِّیَتَّخِذَ بَعْضُهُمْ بَعْضًا سُخْرِیًّا ؕ— وَرَحْمَتُ رَبِّكَ خَیْرٌ مِّمَّا یَجْمَعُوْنَ ۟
அவர்கள் உமது இறைவனின் அருளை (தமது விருப்பப்படி) பங்கு வைக்கின்றனரா? நாம்தான் அவர்களுக்கு மத்தியில் அவர்களது வாழ்வாதாரத்தை இவ்வுலக வாழ்க்கையில் பங்குவைத்தோம். அவர்களில் சிலரை சிலருக்கு மேலாக (செல்வத்திலும் பதவியிலும்) தகுதிகளால் உயர்த்தினோம். காரணம், அவர்களில் சிலர் சிலரை (தங்களுக்கு) பணியாளராக எடுத்துக் கொள்வதற்காக. (இப்படி நாம் ஆக்கியதால் ஒருவர் மூலமாக ஒருவர் பயன் பெறுகிறார்.) உமது இறைவனின் (சொர்க்கம் என்ற மறுமை) அருள்தான் (இவ்வுலக செல்வங்களில்) அவர்கள் எதை சேகரிக்கிறார்களோ அதைவிட மிகச் சிறந்ததாகும்.
تەفسیرە عەرەبیەکان:
وَلَوْلَاۤ اَنْ یَّكُوْنَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً لَّجَعَلْنَا لِمَنْ یَّكْفُرُ بِالرَّحْمٰنِ لِبُیُوْتِهِمْ سُقُفًا مِّنْ فِضَّةٍ وَّمَعَارِجَ عَلَیْهَا یَظْهَرُوْنَ ۟ۙ
மக்கள் எல்லாம் (குஃப்ர் - நிராகரிப்பில் மாறிவிடுவார்கள், நிராகரிக்கின்ற) ஒரே ஒரு சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்று இல்லையெனில் ரஹ்மானை நிராகரிப்பவர்களுக்கு - அவர்களின் வீடுகளுக்கு வெள்ளியினால் ஆன முகடுகளையும் ஏணிகளையும் நாம் ஆக்கியிருப்போம். அவற்றின் மீது (-அந்த ஏணிகளின் மீது) அவர்கள் (தங்கள் வீட்டு மாடிகளுக்கு) ஏ(றி மக்கள் முன் தோன்)றுவார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
وَلِبُیُوْتِهِمْ اَبْوَابًا وَّسُرُرًا عَلَیْهَا یَتَّكِـُٔوْنَ ۟ۙ
இன்னும். அவர்களின் வீடுகளுக்கு வெள்ளியினால் ஆன கதவுகளையும் அவற்றின் மீது அவர்கள் சாய்ந்து படுக்கும்படியான கட்டில்களையும் நாம் ஆக்கியிருப்போம்.
تەفسیرە عەرەبیەکان:
وَزُخْرُفًا ؕ— وَاِنْ كُلُّ ذٰلِكَ لَمَّا مَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا ؕ— وَالْاٰخِرَةُ عِنْدَ رَبِّكَ لِلْمُتَّقِیْنَ ۟۠
இன்னும், (வெள்ளி மட்டுமல்ல,) தங்கத்தையும் (நாம் அவர்களுக்கு சொந்தமாக்கி இருப்போம்.) இவை எல்லாம் உலக வாழ்க்கையின் இன்பங்களே தவிர வேறு இல்லை. உமது இறைவனிடம் உள்ள மறுமை(யின் சொர்க்க வாழ்க்கை)யோ இறையச்சமுள்ளவர்களுக்கு இருக்கிறது.
تەفسیرە عەرەبیەکان:
وَمَنْ یَّعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمٰنِ نُقَیِّضْ لَهٗ شَیْطٰنًا فَهُوَ لَهٗ قَرِیْنٌ ۟
யார் ரஹ்மானை நினைவு கூர்வதை(யும் அவனுடைய வேதத்தையும்) புறக்கணிப்பாரோ (-அவனது அத்தாட்சிகளைப் பார்த்து நம்பிக்கை கொள்ள மறுப்பாரோ) அவருக்கு ஒரு ஷைத்தானை நாம் சாட்டிவிடுவோம். ஆக, அவன் அவருக்கு (இணைபிரியா) நண்பனாக ஆகிவிடுவான்.
تەفسیرە عەرەبیەکان:
وَاِنَّهُمْ لَیَصُدُّوْنَهُمْ عَنِ السَّبِیْلِ وَیَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ ۟
நிச்சயமாக இவர்கள் (-இந்த ஷைத்தான்கள்) அவர்களை (-இணைவைப்பவர்களை நேரான) பாதையில் இருந்து தடுக்கிறார்கள். இன்னும், அ(ந்த இணைவைப்ப)வர்கள் நிச்சயமாக தாங்கள் நேர்வழி நடப்பவர்கள்தான் என்று எண்ணுகிறார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
حَتّٰۤی اِذَا جَآءَنَا قَالَ یٰلَیْتَ بَیْنِیْ وَبَیْنَكَ بُعْدَ الْمَشْرِقَیْنِ فَبِئْسَ الْقَرِیْنُ ۟
இறுதியாக, (-ரஹ்மானின் நினைவை புறக்கணித்து வாழ்ந்த) அவன் நம்மிடம் வரும்போது, (தன்னை வழிகெடுத்த ஷைத்தானை நோக்கி) எனக்கு மத்தியிலும் உனக்கு மத்தியிலும் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட தூரம் இருக்க வேண்டுமே! என்று கூறுவான். அவன் (-ஷைத்தான்) மிகக் கெட்ட நண்பன் ஆவான்.
تەفسیرە عەرەبیەکان:
وَلَنْ یَّنْفَعَكُمُ الْیَوْمَ اِذْ ظَّلَمْتُمْ اَنَّكُمْ فِی الْعَذَابِ مُشْتَرِكُوْنَ ۟
நீங்கள் (இறைவனுக்கு இணைவைத்து) அநியாயம் செய்த காரணத்தால் நிச்சயமாக (வழிகெடுத்த) நீங்கள் (இன்னும், உங்களை பின்பற்றி வழிகெட்டவர்கள் எல்லோருமாக) தண்டனையில் இணைந்திருப்பது இன்றைய தினம் உங்களுக்கு அறவே பலனளிக்காது. (நரக தண்டனை உங்களுக்கு இடையில் பங்கிட்டுக் கொடுக்கப்படாமல், ஒவ்வொருவருக்கும் முழுமையான தண்டனை கொடுக்கப்படும்.)
تەفسیرە عەرەبیەکان:
اَفَاَنْتَ تُسْمِعُ الصُّمَّ اَوْ تَهْدِی الْعُمْیَ وَمَنْ كَانَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
ஆக, (அல்லாஹ்வின் வேத ஆதாரங்களை செவி ஏற்க முடியாமல் யாரை அல்லாஹ் செவிடர்களாகவும் அவனது அத்தாட்சிகளை பார்க்கமுடியாமல் யாரை அல்லாஹ் குருடர்களாகவும் ஆக்கிவிட்டானோ) அந்த செவிடர்களை நீர் செவி ஏற்க வைக்க முடியுமா? அல்லது அந்த குருடர்களையும் தெளிவான வழிகேட்டில் இருப்பவர்களையும் நீர் நேர்வழி செலுத்திட முடியுமா?
تەفسیرە عەرەبیەکان:
فَاِمَّا نَذْهَبَنَّ بِكَ فَاِنَّا مِنْهُمْ مُّنْتَقِمُوْنَ ۟ۙ
ஆகவே, (நபியே!) ஒன்று நிச்சயமாக உம்மை நாம் மரணிக்கச் செய்வோம். பிறகு, நிச்சயமாக நாம் அவர்களிடம் பழிவாங்குவோம்.
تەفسیرە عەرەبیەکان:
اَوْ نُرِیَنَّكَ الَّذِیْ وَعَدْنٰهُمْ فَاِنَّا عَلَیْهِمْ مُّقْتَدِرُوْنَ ۟
அல்லது, நாம் அவர்களுக்கு எச்சரித்ததை (-தண்டனையை) நாம் உமக்கு (உமது வாழ்நாளிலேயே) காண்பிப்போம். ஆக, நிச்சயமாக நாம் அவர்கள் மீது முழு ஆற்றல் உள்ளவர்கள் ஆவோம்!
تەفسیرە عەرەبیەکان:
فَاسْتَمْسِكْ بِالَّذِیْۤ اُوْحِیَ اِلَیْكَ ۚ— اِنَّكَ عَلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
ஆகவே, (நபியே!) உமக்கு வஹ்யி அறிவிக்கப்பட்ட(இந்த வேதத்)தை உறுதியாக பற்றிப்பிடிப்பீராக! நிச்சயமாக நீர் நேரான பாதையில் இருக்கிறீர்.
تەفسیرە عەرەبیەکان:
وَاِنَّهٗ لَذِكْرٌ لَّكَ وَلِقَوْمِكَ ۚ— وَسَوْفَ تُسْـَٔلُوْنَ ۟
நிச்சயமாக இ(ந்த வேதமான)து உமக்கும் உமது மக்களுக்கும் ஒரு (பெரிய) சிறப்பாகும். (இதன் படி நீங்கள் அமல் செய்தது பற்றி) உங்களிடம் விரைவில் விசாரிக்கப்படும்.
تەفسیرە عەرەبیەکان:
وَسْـَٔلْ مَنْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رُّسُلِنَاۤ اَجَعَلْنَا مِنْ دُوْنِ الرَّحْمٰنِ اٰلِهَةً یُّعْبَدُوْنَ ۟۠
(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நமது தூதர்க(ளின் சமுதாயத்தை சேர்ந்த உண்மை நம்பிக்கையாளர்க)ளை நீர் விசாரிப்பீராக! “ரஹ்மானை அன்றி வணங்கப்படுகின்ற (வேறு) தெய்வங்களை நாம் (அவர்களுக்கு) ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோமா?” என்று.
تەفسیرە عەرەبیەکان:
وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰی بِاٰیٰتِنَاۤ اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ فَقَالَ اِنِّیْ رَسُوْلُ رَبِّ الْعٰلَمِیْنَ ۟
திட்டவட்டமாக நாம் மூஸாவை ஃபிர்அவ்ன் இன்னும் அவனது பிரமுகர்களிடம் நமது அத்தாட்சிகளுடன் அனுப்பினோம். ஆக, (அவர்களை நோக்கி) அவர் கூறினார்: “நிச்சயமாக நான் (உங்களுக்கு அனுப்பப்பட்ட) அகிலங்களின் இறைவனுடைய தூதர் ஆவேன்.”
تەفسیرە عەرەبیەکان:
فَلَمَّا جَآءَهُمْ بِاٰیٰتِنَاۤ اِذَا هُمْ مِّنْهَا یَضْحَكُوْنَ ۟
ஆக, அவர்களிடம் அவர் நமது அத்தாட்சிகளுடன் வந்தபோது, அப்போது அவர்கள் அவற்றைப் பார்த்து (கேலியாக) சிரித்தார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
وَمَا نُرِیْهِمْ مِّنْ اٰیَةٍ اِلَّا هِیَ اَكْبَرُ مِنْ اُخْتِهَا ؗ— وَاَخَذْنٰهُمْ بِالْعَذَابِ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
அவர்களுக்கு நாம் ஓர் அத்தாட்சியைக் காண்பிக்க மாட்டோம், அது அதற்கு முன்பு வந்த அத்தாட்சியை விட பெரியதாக இருந்தே தவிர. இன்னும், நாம் அவர்களை தண்டனையால் பிடித்தோம், அவர்கள் (நம் பக்கம்) திரும்புவதற்காக.
تەفسیرە عەرەبیەکان:
وَقَالُوْا یٰۤاَیُّهَ السّٰحِرُ ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَ ۚ— اِنَّنَا لَمُهْتَدُوْنَ ۟
அவர்கள் கூறினார்கள்: “ஓ மந்திரவாதியே! (-ஓ அறிஞரே! உமது இறைவன்) உம்மிடம் செய்த உடன்படிக்கையை (-கேட்டு; அல்லது, இந்த தண்டனையை நீக்குமாறு) உமது இறைவனிடம் எங்களுக்காக நீர் பிரார்த்திப்பீராக! நிச்சயமாக நாங்கள் நேர்வழி பெறுவோம்.”
تەفسیرە عەرەبیەکان:
فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الْعَذَابَ اِذَا هُمْ یَنْكُثُوْنَ ۟
ஆக, அவர்களை விட்டும் நாம் தண்டனையை அகற்றும்போது அப்போது அவர்கள் (மூஸாவிற்குக் கொடுத்த வாக்கை) முறித்து விடுகிறார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
وَنَادٰی فِرْعَوْنُ فِیْ قَوْمِهٖ قَالَ یٰقَوْمِ اَلَیْسَ لِیْ مُلْكُ مِصْرَ وَهٰذِهِ الْاَنْهٰرُ تَجْرِیْ مِنْ تَحْتِیْ ۚ— اَفَلَا تُبْصِرُوْنَ ۟ؕ
இன்னும், ஃபிர்அவ்ன் தனது மக்களை அழைத்தான்: “என் மக்களே! எகிப்துடைய ஆட்சி எனக்கு சொந்தமானதாக இல்லையா? இந்த ஆறுகள் (என்னைச் சுற்றி) எனக்கு முன்னால் ஓடுகின்றன. ஆக, நீங்கள் (இவற்றை) உற்று நோக்கவில்லையா?” என்று கூறினான்.
تەفسیرە عەرەبیەکان:
اَمْ اَنَا خَیْرٌ مِّنْ هٰذَا الَّذِیْ هُوَ مَهِیْنٌ ۙ۬— وَّلَا یَكَادُ یُبِیْنُ ۟
இந்த பலவீனமானவரை விட, தெளிவாக பேசமுடியாதவரை விட நான் சிறந்தவன்தானே?
تەفسیرە عەرەبیەکان:
فَلَوْلَاۤ اُلْقِیَ عَلَیْهِ اَسْوِرَةٌ مِّنْ ذَهَبٍ اَوْ جَآءَ مَعَهُ الْمَلٰٓىِٕكَةُ مُقْتَرِنِیْنَ ۟
ஆக, அவர் மீது தங்கத்தினால் ஆன காப்புகள் அணிவிக்கப்பட வேண்டாமா? அல்லது, வானவர்கள் அவருடன் சேர்ந்தவர்களாக (நம்மிடம்) வர வேண்டாமா!
تەفسیرە عەرەبیەکان:
فَاسْتَخَفَّ قَوْمَهٗ فَاَطَاعُوْهُ ؕ— اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِیْنَ ۟
ஆக, அவன் தனது மக்களை (மிகவும்) அற்பமாகக் கருதினான். ஆக, அவர்கள் அவனுக்கு கீழ்ப்படிந்தனர். நிச்சயமாக அவர்கள் பாவிகளான மக்களாக இருந்தனர்.
تەفسیرە عەرەبیەکان:
فَلَمَّاۤ اٰسَفُوْنَا انْتَقَمْنَا مِنْهُمْ فَاَغْرَقْنٰهُمْ اَجْمَعِیْنَ ۟ۙ
ஆக, அவர்கள் நம்மை கோபமூட்டவே நாம் அவர்களிடம் பழிவாங்கினோம். ஆகவே, அவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.
تەفسیرە عەرەبیەکان:
فَجَعَلْنٰهُمْ سَلَفًا وَّمَثَلًا لِّلْاٰخِرِیْنَ ۟۠
ஆக, அவர்களை (நிராகரிப்பாளர்களுக்கு) முன்னோடிகளாகவும் மற்றவர்களுக்கு படிப்பினையாகவும் நாம் ஆக்கினோம்.
تەفسیرە عەرەبیەکان:
وَلَمَّا ضُرِبَ ابْنُ مَرْیَمَ مَثَلًا اِذَا قَوْمُكَ مِنْهُ یَصِدُّوْنَ ۟
மர்யமின் மகன் ஓர் உதாரணமாக விவரிக்கப்பட்டபோது, அப்போது உமது மக்கள் அதன் காரணமாக பதறிப்போய் கூச்சல் போடுகிறார்கள். (கிறித்தவர்கள் ஈஸாவை வணங்குவது போன்று முஹம்மதை நாம் வணங்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார் போலும் என்று பேச ஆரம்பித்தனர்.)
تەفسیرە عەرەبیەکان:
وَقَالُوْۤا ءَاٰلِهَتُنَا خَیْرٌ اَمْ هُوَ ؕ— مَا ضَرَبُوْهُ لَكَ اِلَّا جَدَلًا ؕ— بَلْ هُمْ قَوْمٌ خَصِمُوْنَ ۟
அவர்கள் கூறினார்கள்: “எங்கள் கடவுள்கள் சிறந்தவர்களா? அல்லது அவர் (முஹம்மத்) சிறந்தவரா? (எங்கள் கடவுள்களே சிறந்தவை. எனவே, நாங்கள் அவற்றையே வணங்குவோம்.)” தர்க்கம் செய்வதற்காகவே தவிர அவரை (-ஈஸாவை) அவர்கள் உமக்கு உதாரணமாக பேசவில்லை. மாறாக, அவர்கள் (எப்போதுமே) வாக்குவாதம் செய்யக்கூடிய மக்கள் ஆவர்.
تەفسیرە عەرەبیەکان:
اِنْ هُوَ اِلَّا عَبْدٌ اَنْعَمْنَا عَلَیْهِ وَجَعَلْنٰهُ مَثَلًا لِّبَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ
(ஈஸா) அவர்மீது நாம் அருள் புரிந்த ஓர் அடியாராகவே தவிர அவர் (கடவுளோ, கடவுளின் மகனோ இல்லை.) இன்னும், நாம் அவரை இஸ்ரவேலர்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்கினோம்.
تەفسیرە عەرەبیەکان:
وَلَوْ نَشَآءُ لَجَعَلْنَا مِنْكُمْ مَّلٰٓىِٕكَةً فِی الْاَرْضِ یَخْلُفُوْنَ ۟
இன்னும், நாம் நாடினால் (உங்களை அழித்துவிட்டு) உங்களுக்குப் பதிலாக வானவர்களை இந்த பூமியில் (ஒரு தலைமுறைக்கு பின்னர் ஒரு தலைமுறையாக) வசிப்பவர்களாக ஆக்கியிருப்போம்.
تەفسیرە عەرەبیەکان:
وَاِنَّهٗ لَعِلْمٌ لِّلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُوْنِ ؕ— هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟
(நபியே! அவர்களை நோக்கி கூறுவீராக!) “நிச்சயமாக அவர் (-ஈஸா) மறுமையின் அடையாளம் ஆவார். ஆகவே, அ(ந்த மறுமை நிகழ்வ)தில் நீங்கள் அறவே சந்தேகிக்காதீர்கள். இன்னும், என்னை பின்பற்றுங்கள்! இது, நேரான பாதையாகும்.”
تەفسیرە عەرەبیەکان:
وَلَا یَصُدَّنَّكُمُ الشَّیْطٰنُ ۚ— اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟
“இன்னும், ஷைத்தான் (இந்த நேரான பாதையை விட்டு) உங்களை தடுத்துவிட வேண்டாம். நிச்சயமாக அவன் உங்களுக்கு தெளிவான எதிரி ஆவான்.”
تەفسیرە عەرەبیەکان:
وَلَمَّا جَآءَ عِیْسٰی بِالْبَیِّنٰتِ قَالَ قَدْ جِئْتُكُمْ بِالْحِكْمَةِ وَلِاُبَیِّنَ لَكُمْ بَعْضَ الَّذِیْ تَخْتَلِفُوْنَ فِیْهِ ۚ— فَاتَّقُوا اللّٰهَ وَاَطِیْعُوْنِ ۟
தெளிவான அத்தாட்சிகளுடன் ஈஸா வந்தபோது அவர் கூறினார்: “திட்டமாக நான் உங்களிடம் ஞான(மிகுந்த வேத)த்தை கொண்டுவந்துள்ளேன். இன்னும், நீங்கள் எதில் கருத்து வேற்றுமை கொள்கிறீர்களோ அதில் (சரியான) சிலவற்றை உங்களுக்கு விவரிப்பதற்காகவும் வந்துள்ளேன். ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்!”
تەفسیرە عەرەبیەکان:
اِنَّ اللّٰهَ هُوَ رَبِّیْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ ؕ— هٰذَا صِرَاطٌ مُّسْتَقِیْمٌ ۟
“நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனையே வணங்குங்கள்! இது, நேரான பாதையாகும்.”
تەفسیرە عەرەبیەکان:
فَاخْتَلَفَ الْاَحْزَابُ مِنْ بَیْنِهِمْ ۚ— فَوَیْلٌ لِّلَّذِیْنَ ظَلَمُوْا مِنْ عَذَابِ یَوْمٍ اَلِیْمٍ ۟
ஆக, (வழிகெட்ட) பிரிவினர்கள் தங்களுக்கு மத்தியில் (ஈஸாவின் விஷயத்தில்) தர்க்கித்தனர். ஆக, மிகவும் வலி தரக்கூடிய நாளுடைய தண்டனையினால் அநியாயக்காரர்களுக்கு நாசம் உண்டாகட்டும்.
تەفسیرە عەرەبیەکان:
هَلْ یَنْظُرُوْنَ اِلَّا السَّاعَةَ اَنْ تَاْتِیَهُمْ بَغْتَةً وَّهُمْ لَا یَشْعُرُوْنَ ۟
அவர்கள் உணராமல் இருக்கின்ற நிலையில் மறுமை அவர்களிடம் திடீரென்று வருவதைத் தவிர அவர்கள் எதிர்பார்க்கிறார்களா?
تەفسیرە عەرەبیەکان:
اَلْاَخِلَّآءُ یَوْمَىِٕذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ اِلَّا الْمُتَّقِیْنَ ۟ؕ۠
இறையச்சமுள்ளவர்களைத் தவிர நண்பர்கள் எல்லாம் அந்நாளில் அவர்களில் சிலர், சிலருக்கு எதிரிகளாக இருப்பார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
یٰعِبَادِ لَا خَوْفٌ عَلَیْكُمُ الْیَوْمَ وَلَاۤ اَنْتُمْ تَحْزَنُوْنَ ۟ۚ
(இறையச்சமுள்ள) என் அடியார்களே! இன்று உங்களுக்கு பயமில்லை. இன்னும் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்.
تەفسیرە عەرەبیەکان:
اَلَّذِیْنَ اٰمَنُوْا بِاٰیٰتِنَا وَكَانُوْا مُسْلِمِیْنَ ۟ۚ
(என் அடியார்கள்) எத்தகையோர் என்றால் அவர்கள் நமது வசனங்களை நம்பிக்கை கொண்டனர். இன்னும், அவர்கள் (நமக்கு முற்றிலும் பணிந்து நடக்கின்ற) முஸ்லிம்களாக இருந்தார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
اُدْخُلُوا الْجَنَّةَ اَنْتُمْ وَاَزْوَاجُكُمْ تُحْبَرُوْنَ ۟
நீங்களும் உங்கள் மனைவிகளும் (ஈமான் கொண்ட உங்களைப் போன்றவர்கள் எல்லோரும்) சொர்க்கத்தில் நுழையுங்கள். (அதில்) நீங்கள் மகிழ்விக்கப்படுவீர்கள்!
تەفسیرە عەرەبیەکان:
یُطَافُ عَلَیْهِمْ بِصِحَافٍ مِّنْ ذَهَبٍ وَّاَكْوَابٍ ۚ— وَفِیْهَا مَا تَشْتَهِیْهِ الْاَنْفُسُ وَتَلَذُّ الْاَعْیُنُ ۚ— وَاَنْتُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟ۚ
தங்கத்தினால் ஆன தட்டுகளுடனும், குவளைகளுடனும் அவர்களை சுற்றி வரப்படும். இன்னும், அதில் (அவர்களது) மனங்கள் விரும்புகின்றவையும் கண்கள் இன்புறுகின்றவையும் அவர்களுக்கு உண்டு. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பீர்கள்.
تەفسیرە عەرەبیەکان:
وَتِلْكَ الْجَنَّةُ الَّتِیْۤ اُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
இதுதான், நீங்கள் செய்துகொண்டிருந்த நன்மைகளின் காரணமாக உங்களுக்கு சொந்தமாக்கி வைக்கப்பட்ட சொர்க்கமாகும்.
تەفسیرە عەرەبیەکان:
لَكُمْ فِیْهَا فَاكِهَةٌ كَثِیْرَةٌ مِّنْهَا تَاْكُلُوْنَ ۟
உங்களுக்கு அதில் அதிகமான (-வகை வகையான) பழங்கள் உண்டு. அவற்றில் இருந்து நீங்கள் (மனமாற) உண்பீர்கள்.
تەفسیرە عەرەبیەکان:
اِنَّ الْمُجْرِمِیْنَ فِیْ عَذَابِ جَهَنَّمَ خٰلِدُوْنَ ۟ۚ
நிச்சயமாக குற்றவாளிகள் நரகத்தின் தண்டனையில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
لَا یُفَتَّرُ عَنْهُمْ وَهُمْ فِیْهِ مُبْلِسُوْنَ ۟ۚ
அவர்களை விட்டும் தண்டனை குறைக்கப்படாது. இன்னும், அவர்கள் அ(ந்த தண்டனைகள் குறைக்கப்படும் என்ப)தில் நம்பிக்கை இழந்திருப்பார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
وَمَا ظَلَمْنٰهُمْ وَلٰكِنْ كَانُوْا هُمُ الظّٰلِمِیْنَ ۟
நாம் அவர்களுக்கு அநியாயம் செய்யவில்லை. எனினும், அவர்கள்தான் முற்றிலும் அநியாயக்காரர்களாக இருந்தார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
وَنَادَوْا یٰمٰلِكُ لِیَقْضِ عَلَیْنَا رَبُّكَ ؕ— قَالَ اِنَّكُمْ مّٰكِثُوْنَ ۟
இன்னும், “மாலிக்கே! உமது இறைவன் எங்களை அழித்துவிடட்டும்!” என்று கூறி அவர்கள் (நரகத்தின் காவலாளியான மாலிக்கை) அழைப்பார்கள். அவர் (அப்போது உடனே பதில் தராமல், ஆயிரம் ஆண்டுகள் கழித்து பதில்) கூறுவார்: “நீங்கள் (இதில் நிரந்தரமாக) தங்குவீர்கள்! (உங்களுக்கு இங்கு மரணமில்லை)”
تەفسیرە عەرەبیەکان:
لَقَدْ جِئْنٰكُمْ بِالْحَقِّ وَلٰكِنَّ اَكْثَرَكُمْ لِلْحَقِّ كٰرِهُوْنَ ۟
திட்டவட்டமாக நாம் உங்களிடம் உண்மையைக் கொண்டு வந்தோம். என்றாலும், உங்களில் அதிகமானவர்கள் இந்த உண்மையை வெறுக்கிறீர்கள்.
تەفسیرە عەرەبیەکان:
اَمْ اَبْرَمُوْۤا اَمْرًا فَاِنَّا مُبْرِمُوْنَ ۟ۚ
(இந்த உண்மைக்கு எதிராக) ஒரு காரியத்தை அவர்கள் முடிவு செய்து விட்டார்களா? நிச்சயமாக நாங்கள்தான் (அவர்களை இழிவுபடுத்தும் காரியத்தை) முடிவு செய்யப்போகிறோம்.
تەفسیرە عەرەبیەکان:
اَمْ یَحْسَبُوْنَ اَنَّا لَا نَسْمَعُ سِرَّهُمْ وَنَجْوٰىهُمْ ؕ— بَلٰی وَرُسُلُنَا لَدَیْهِمْ یَكْتُبُوْنَ ۟
நாம் அவர்களின் இரகசிய பேச்சையும் அவர்கள் கூடி (ஒன்றாக)ப் பேசுவதையும் செவியுற மாட்டோம் என்று அவர்கள் எண்ணுகிறார்களா? ஏன் இல்லை, நமது (வானவத்) தூதர்கள் அவர்களிடம் இருந்தவர்களாக (அவர்கள் தனிமையில்; அல்லது, சபையில் பேசுகின்ற அனைத்தையும்) பதிவு செய்கிறார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
قُلْ اِنْ كَانَ لِلرَّحْمٰنِ وَلَدٌ ۖۗ— فَاَنَا اَوَّلُ الْعٰبِدِیْنَ ۟
(நபியே!) கூறுவீராக! “ரஹ்மான் – பேரருளாளனாகிய அல்லாஹ்விற்கு குழந்தை இருக்குமேயானால் (அதை) வணங்குபவர்களில் முதலாமவனாக நான் இருந்திருப்பேன்.”
تەفسیرە عەرەبیەکان:
سُبْحٰنَ رَبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ رَبِّ الْعَرْشِ عَمَّا یَصِفُوْنَ ۟
வானங்கள் இன்னும் பூமியின் அதிபதி, அர்ஷுடைய அதிபதி(யாகிய அவன்) அவர்கள் வர்ணிக்கின்ற (இந்த பொய்யான) வர்ணிப்புகளை விட்டும் மிகப் பரிசுத்தமானவன்.
تەفسیرە عەرەبیەکان:
فَذَرْهُمْ یَخُوْضُوْا وَیَلْعَبُوْا حَتّٰی یُلٰقُوْا یَوْمَهُمُ الَّذِیْ یُوْعَدُوْنَ ۟
ஆகவே, (நபியே!) அவர்களை விடுங்கள்! அவர்கள் (தங்கள் பொய்களில்) மூழ்கட்டும், (தங்கள் உலக வாழ்க்கையில்) விளையாடட்டும்! இறுதியாக, அவர்கள் எச்சரிக்கப்படுகின்ற அவர்களது (தண்டனையின்) நாளை அவர்கள் சந்திப்பார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
وَهُوَ الَّذِیْ فِی السَّمَآءِ اِلٰهٌ وَّفِی الْاَرْضِ اِلٰهٌ ؕ— وَهُوَ الْحَكِیْمُ الْعَلِیْمُ ۟
அவன் வானத்திலும் வணங்கப்படும் இறைவனாக, பூமியிலும் வணங்கப்படும் இறைவனாக இருக்கிறான். அவன்தான் மகா ஞானவான், நன்கறிந்தவன் ஆவான்.
تەفسیرە عەرەبیەکان:
وَتَبٰرَكَ الَّذِیْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ۚ— وَعِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ ۚ— وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் ஆட்சி எவனுக்கு உரியதோ அ(ந்த இறை)வன் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்தானவன் ஆவான். இன்னும், அவனிடமே மறுமையின் அறிவு இருக்கிறது. இன்னும், அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
تەفسیرە عەرەبیەکان:
وَلَا یَمْلِكُ الَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِهِ الشَّفَاعَةَ اِلَّا مَنْ شَهِدَ بِالْحَقِّ وَهُمْ یَعْلَمُوْنَ ۟
அவனை அன்றி அவர்கள் எவர்களை அழைக்கிறார்களோ அவர்கள் (அல்லாஹ்விடம் யாருக்கும்) சிபாரிசு செய்வதற்கு உரிமை பெற மாட்டார்கள். ஆனால், எவர்கள் (அல்லாஹ்தான் வணக்கத்திற்குரியவன் என்ற) உண்மைக்கு - அவர்கள் (அதை) நன்கு அறிந்தவர்களாக - சாட்சி கூறினார்களோ (-அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனுக்கு எதையும் இணைவைக்காமல், சிபாரிசை அல்லாஹ்விடம் மட்டும் எதிர்பார்த்து இருந்தார்களோ) அவர்களுக்குத்தான் (வானவர்களும் நல்லவர்களும் அல்லாஹ்வின் அனுமதிகொண்டு) சிபாரிசு செய்வார்கள். (அவர்களை வணங்கியவர்களுக்கு அல்ல.)
تەفسیرە عەرەبیەکان:
وَلَىِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَهُمْ لَیَقُوْلُنَّ اللّٰهُ فَاَنّٰی یُؤْفَكُوْنَ ۟ۙ
அவர்களை யார் படைத்தான் என்று நீர் அவர்களிடம் கேட்டால், நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ்” என்று. (அப்படி இருக்க) அவர்கள் (அவனை வணங்குவதில் இருந்து) அவர்கள் எப்படி திருப்பப்படுகிறார்கள்!
تەفسیرە عەرەبیەکان:
وَقِیْلِهٖ یٰرَبِّ اِنَّ هٰۤؤُلَآءِ قَوْمٌ لَّا یُؤْمِنُوْنَ ۟ۘ
இன்னும், “என் இறைவா! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளாத மக்கள் ஆவார்கள்” என்ற அவருடைய (-தூதருடைய) கூற்றின் அறிவும் அவனிடம்தான் இருக்கிறது.
تەفسیرە عەرەبیەکان:
فَاصْفَحْ عَنْهُمْ وَقُلْ سَلٰمٌ ؕ— فَسَوْفَ یَعْلَمُوْنَ ۟۠
ஆகவே, (நபியே!) அவர்களை புறக்கணிப்பீராக! இன்னும், (அவர்களுக்கு) ஸலாம் கூறிவிடுவீராக! ஆக, அவர்கள் விரைவில் (அவர்களின் தண்டனையை) அறிவார்கள்.
تەفسیرە عەرەبیەکان:
 
وه‌رگێڕانی ماناكان سوره‌تی: سورەتی الزخرف
پێڕستی سوره‌ته‌كان ژمارەی پەڕە
 
وه‌رگێڕانی ماناكانی قورئانی پیرۆز - وەرگێڕاوی تامیلی - عمر شریف - پێڕستی وه‌رگێڕاوه‌كان

وەرگێڕاوی ماناکانی قورئانی پیرۆز بۆ زمانی تامیلی، وەرگێڕان: شيخ عمر شريف بن عبدالسلام.

داخستن